இறைவழி மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறைவழி மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி இதழ் 2...

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

இயற்கை
இறைவனின் படைப்பில் இந்த அகிலங்கள் எல்லாம் அற்புதமான ஒத்திசைவில் இயங்கிக் கொண்டுள்ளன. ஐந்து மூலகங்களின் இயக்கத்தில் ஆன இயற்கை தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொண்டு சாந்தமாக வீற்றிருக்கிறது . எல்லாம் அமைதியாக, முறையாக செயலாற்றிக் கொண்டுள்ளது.
மனிதனின் ஆன்மா - இறைத் துளி
இந்நிலையில், படைப்பாற்றல் - இறைவன் தன் படைப்புகளைத் தானே அனுபவிக்கவும்,, தன்னை உணரவும், தனது அனைத்து ஆற்றலும் கொண்டதாக படைத்த இறைத்துளி தான் மனிதன்.
மனிதன் இறைவனின் குழந்தை. இறைவன் தனது மகிழ்ச்சிக்காக, விளையாட்டுக்காக பெற்ற குழந்தை, தனது அன்புக் குழந்தைக்காக அனைத்தையும் வழங்கி இருக்கிறது படைப்பாற்றல் - இறைவன்.
மனிதனை நெறிப்படுத்துவதற்காக, அவன் ஆன்மாவை இறையச்சம் உள்ளதாக, பணிவும், பொறுமையும், அன்பும், தூய்மையும்,, தைரியமும் முழுமையும், உள்ளதாக படைத்துள்ளார். ஆன்மா இறைத்துளி என்பதால் அழிவற்றது.
தனது மனிதக் குழந்தைக்காக எல்லாம் செய்த இறைவன், மனிதன் தனது எண்ணம் போல் வாழ சுதந்திரம் கொடுத்துள்ளான். மனிதக் குழந்தைகள் தங்களுக்குள் சாந்தமாகவும், சமாதானமாகவும், வாழவேண்டும் என்பது இறைவனின் விருப்பம்.
அதற்காகவே, அதற்கு கூட்டுவாழ்க்கை தேவையை உணர்த்த, பலவீனமான குழந்தைப் பருவத்தைக் கொடுத்துள்ளார். அது தவிர்க்க இயலாமல் கூட்டாக வாழ வேண்டியுள்ளது. பிற மனிதர்களுடனான அன்பும் , நேசமும், இயற்கையுடனான இயைந்து வாழ்தல் நெறியையும் மனிதனின் அடிப்படைத் தேவையாக்கியுள்ளது இறை.
உங்கள் கருத்தினை சொல்க. தொடர்வோம்.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி - 9345812080, 9444776208
மின்னஞ்சல்- thamizhavel.n@gmail.com
Like
Comment

Comments

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

அன்பினால் ஆயுதம் செய்க....

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

அன்பு - இறை

எல்லாம் அன்பின் செயல்.

அப்படி என்றால், நம்மில்  நடப்பில் இருக்கும் நல்லவை தீயவைக்கும் அன்பு தான் காரணமாகிறது.

இட்லரையும், புத்தரையும் உருவாக்கியது அன்பே.

அறத்துக்கே அன்பு சார்பென்ப - அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

மனமற்ற நிலையில் - முழுமையிலேயே அன்பு அமுதமாகிறது.

மனதின் கேடுகள்  அன்பை நஞ்சாக்குகிறது.

மலரின் மெல்லிது காமம் - சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

நுட்பமான  மனமும் அன்பை நஞ்சாக்கி விடும்.

மனம் நமக்கு இந்த சமூதாயம் வழங்கிய கேடே. நல்லது கெட்டது என நாம் பிரித்துப் பார்ப்பது எல்லாம் நாம் இந்த சமுதாயத்தில் இருந்து பெற்ற அளவுகோல்களின் அடிப்படையிலேயே.

உண்மை முழுமையானது. பிரிவில்லாதது. பிரிக்க முடியாதது. நம்முள் பிறக்கும் அன்பை - தூய எண்ணத்தை  மனம் பிளவுபடுத்தி கேடானதாக, சார்புள்ளதாக, தனிஉடமையாக்கி, எனது எனும் கேட்டை உருவாக்குகிறது.

உலகில் உடல் நோயாளிகளும்,  மன நோயாளிகளும், வன்முறையாளர்களும், அகிம்சாவாதிகளும், நாத்தீகவாதிகளும், ஆன்மீக வாதிகளும் மனதின் கேட்டாலேயே உருவாகிறார்கள். அவர்கள் இவ்வாறு சார்புடையவர்களானதற்கு, எனது எனும் தற்பெருமையே காரணம்.

எவ்வளவு மோசமானவர்களானாலும் அவர்கள் அவ்வாறானதற்கும், அதிலிருந்து நலம் பெறுவதற்கும்  அவர்களின் அடிப்படைத் தேவையான அன்பின் தேடலே காரணம் ஆகும்.

சார்புடைய மனதால் அன்பைத் தேடுபவர்கள் நஞ்சைப் பெறுகிறார்கள். முழுமையை உணர்ந்தவர்கள் அமுதத்தை பெறுகிறார்கள்.

பகிர்ந்து கொள்ளப்படாத - பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் அன்பு நஞ்சாகிறது.

இதுவரை உலகில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அனைத்து போர்களுக்கும் காரணம், விழிப்புணர்வற்ற மனிதர்களின் அன்பே.


விழிப்புணர்வுடன் கூடிய அன்பே நன்மை தரும் ஆயுதம். வெற்றி தரும் ஆயுதம். எல்லோரும் கையில் எடுக்க வேண்டிய ஆயுதம்.

புதன், 24 ஆகஸ்ட், 2016

மருந்தில்லா மருத்துவர்க்கு - நோக்கத்தில் கவணம் குறித்து

மரபுவழி நலவாழ்வு மையம் நோக்கமும், செயல்களும்
04 August 2016
09:38
நான் இறைவழி மருத்துவ ஞானத்தை பெற்ற பின் இது எல்லா மனிதர்களுக்கும் பயன்பட வேண்டும் என விரும்பினேன். எனது மதிப்புக்குரிய நண்பர்கள் பலரிடம் அவர்களுக்கும், அவர்கள் நண்பர்கள், குடும்பத்தினருக்கும் உள்ள உடல், மனத் தொல்லைகளை  நீக்கி சுகம் பெறும் வாய்ப்பு கொடுத்து பின், இறைவழி மருத்துவம் எல்லோர்க்கும் போய் சேர வேண்டும் எனும், என் விருப்பத்தை கூறினேன்.
பலர், நிறைந்த பாத்திரமாகவே இருந்தனர். சிலர் இதை வருவாய் தரும் வகையில் எப்படி மாற்றுவது என விதவிதமான யோசனை கூறினர். சிலர் தங்களை, தாங்கள் சார்ந்த அமைப்பை வளர்க்க, பயன்  படுத்தவிரும்பினர்.
பொது உடமை, தேச நலன், இன நலம், நாத்திகம், மக்கள் நலம்உடல் நலம், ஆன்மீகம் என பேசும் எனக்குப் பழக்கமுள்ள  அனைத்து நண்பர்களும் உண்மையில் தாங்கள் பேசுவதில் உறுதியாகவோ, திறந்த மனதுடையவர்களாகவோ இல்லை. தங்கள் தனித் தன்மையை தலைமையைப் பாதுகாப்பதிலும், பெருமையை வளர்க்கவும்தங்கள் இயலாமையை மறைக்கவும்  கிடந்து தத்தளிப்பவர்களாகவே கண்டேன்.

முழுமையின் - எளிமையும், தூய்மையும், நேர்மையும், அன்பும், மென்மையும் மனதின் பெருமைக்கு அடிமைகளான மனிதர்களை அஞ்ச வைப்பதாகவே உள்ளது.

மனம் மேலும், மேலும் சிக்கலையே விரும்புகிறது. மனம் பயன்படுத்தும் படிப்பறிவோ மனிதனை நல்லது, கெட்டதென கூறுபோட்டு விடுகிறது. மனிதனுக்கு - அவனையே எதிரியாக்கி விடுகிறது.
..........
மனிதனின் படிப்பறிவால்  அறிந்த - எளிமையும், தூய்மையும், நேர்மையும், அன்பும், மென்மையும், காதலும், தேசப்பற்றும், பக்தியும்  அவனது செறுக்குக்கு போர்வையாகவே உள்ளது.

 மனிதர்கள் மனதின் பெருமைக்கு அடிமையாகி, இறைவனுக்கு நன்றி மறந்தவர்களாகவே இருக்கின்றனர்.

பிச்சைக்காரர்களை இறைவன்  திருப்தி படுத்த இயலாது. கிடைத்ததை  பயன்படுத்தவும், மேம்படுத்ததவும் அறியாது மேலும், மேலும் தேடிக்கொண்டே இருப்பவர்கள் பிச்சைக்கார மன நிலையில் உள்ளவரே.

நன்றியுணர்வு நம்மை வெறுமையாக்கி விடும். முழுமையாக்கிவிடும். நம்மை எல்லாம் உடையவர்களாக மாற்றிவிடும். அதுவே இறையின் சாந்தமும், சமாதானமும் பெற்றுத் தரும் திறவுகோல்.

நான் உணர்ந்த - கற்ற இறைஞானங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மரபுவழி நலவாழ்வு மையத்தை உருவாக்கி இறைவழிமருத்துவம் மற்றும்  தமிழ் மரபுவழி மருத்துவம், மலர் மருத்துவம் ஆகியவற்றை தேவையுள்ளவர்க்கு சுகமளித்தும்,  தேடுபவர்களுக்கு கற்றுக் கொடுத்தும் வருகிறேன்.

மூன்று வழியில் மரபுவழி நலவாழ்வு மையம் நலவாழ்வை  பார்க்கிறது.

  1. உடலை - தன்னைத் தானே சுகப்படுத்திக் கூடியதாக, பாதுகாத்துக் கொள்ளும் அறிவுடையதாக இறைவன் படைத்துள்ளான்.
  2. மனம் - நன்மை தீமையைப் பிரித்துணரக்கூடியது, நன்மையை நாடுவதால் சுகமாக - செம்மையாகக் கூடியது.
  3.  ஆன்மா -  இறைஞானங்களைக் கோண்டு மனதை நெறிப்படுத்துவது. இறையுடன் உள்ள தொடர்பால் தன்னை சுகமாக்கி கொள்ளும்.

ஆன்மா, மனம், உடல் இவை மூன்றும் இணைந்ததே  மனிதனின் நான் எனும் இறைத்துளி.

மனிதனின் நான் தனது இயல்பான இறைத் தன்மையுடன் இருக்கும் போது மகிழ்வுடன் இருக்கும். எல்லாம் வல்லதாக இருக்கும். இறைவன் படைப்புகள் அனைத்தோடும் ஒத்தியைந்து சாந்தமும் சமாதானமும் மிக்கதாக இருக்கும். நானின் ஓர்மையுடன் கூடிய இருப்பே நலவாழ்வு.

படைப்பின் விளையாட்டால் - தன் படைப்பை சுவைக்கதன்னை தானே உணர  பிரிந்த இறைத்துளிகள் வாழ்வின் அனுபவத்துக்குப் பின் மீண்டும் இறையுடன் இணைவதே  வாழ்வெனும் பயனம்.

எனது எனும் மாயையால்; செய்யும் செயல்களின் விளைவும், தான் எனும் செறுக்கும் இறைவனிடமிருந்து பிறந்த நான்  துன்பம் அடைய காரணமாகிறது.

நன்மை, தீமைகளைப் பிரித்தறிய கொடுக்கப்பட்டதே பகுத்தறிவு. நான் இதில் நன்மையை நாடினால் நலம்.

இறைவன் நன்மைக்காக இறக்கும் எண்ணங்களை, வசதிக்காக நல்லது, கெட்டது என பிளவுண்ட மனதால் பிரித்துப் பார்த்தால்  முழுமைக்கு எதிரானவர்களாகி முரண்பாடுகளில் சிக்க வேண்டியுள்ளது.

அறியாமை, பயம், கவலை, வெறுப்பு, தனிமை, சுயநலம், விழிப்பிண்மை போன்ற மனதின் கேடுகளால் நானின் - ஆன்மாவின் இயல்புக்கு எதிராக மனம் செயல்படுகிறது.

இதை சரி செய்ய இறையருளால் தற்காப்பு அமைப்பு உடல், மன துன்பங்களை ஏற்படுத்துகிறது. இத் துன்பங்கள் மூலம் நமது தவறுகளை உணர்த்தவே, சரி செய்யவே, இறையன்பு விளைகிறது.

மனிதன் செறுக்கின் மிகுதியால், மனம் போன போக்கில் போய்,தன்னைச் சரிசெய்யவில்லை என்றால் இறையுடனான இடைவெளி அதிகரிப்பதால் அதற்கேற்ப மனிதனுக்குத் துன்பங்களும், வலிகளும், கேடுகளும் சூழ்கிறது.

தன்னை உணர்ந்த மனிதன் தனது மனதின் கேடுகளை நீக்கி இறைவழியில் தனது இயல்பை புதுப்பித்துக் கொண்டு, இறையச்சத்துடன் நலமாக வாழ்கிறான்.

பட்டும் தெளியாத அளவு மனதின் கேடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்க,  மன எண்ணங்களை சீராக்க இறைவன், எத்தனையோ வழிகளையும், மூலிகை மலர்களையும், நல்ல மீட்பர்களையும், கொடுக்கிறான்.

 எந்த வழியிலாவது தனது குழந்தைகளை நல்வழிப் படுத்த, தம்மிடம் மீட்க இறையாற்றல் விரும்புகிறது.

இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் வகுத்த வாழ்க்கை முறைகள், உடலைப் பேணவும், மனதை செம்மையாக்கவும், இறையை அடையவும் உதவுகின்றன.


தன்னை உணர்ந்து இன்புற்ற சித்தர்கள், மதில் மேல் பூணைகளாக நிற்கும் தேடுபவர்களுக்கு தாம் சென்ற வழியை காட்டவே மரபுவழி மருத்துவ-வாழ்க்கை நெறிகளை தொகுத்து அளித்துள்ளனர்.

தற்காலத்தில், மருந்தில்லா மருத்துவம் என பல மருத்துவ முறைகள் நன்மையை தேடுவோர்களிடம் பரவி வருகிறது. நல்லது தான்; ஆனால், மருந்தில்லா மருத்துவ முறை எனும் கருத்து பல தவறான புரிதல்களுக்கு உள்ளாகியுள்ளது.

தங்கள் சில்லரை நலன்களுக்காக சிலர்  இந்த கருத்தை அறிந்தோ, அறியாமலோ தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த போக்கு மனிதனின் தற்சார்புக்கான மக்கள் அறிவியலுக்கும் எதிராக போய் விடுகிறது.

நவீன அறிவியல் மருத்துவம் எனும் பேரில் மனிதர்களுக்கும், சூழலுக்கும் கேடாகி  பூமியின் உயிர்சூழல் இருப்புக்கே இடர் விளைக்கும் வணிகத்தை அடிப்படையாய் கொண்ட போலி மருத்துவ வணிகர்களிடமிருந்து மக்களை நல்வழி படுத்தவே மருந்தில்லா மருத்துவம் எனும் கருத்தை முன் வைத்தனர் நம் முன்னோர்கள்.

உடலைத் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள கூடிய அறிவுள்ளதாக இறைவன் படைத்துள்ளான்.  உடல் தன்னை சுகமாக வைத்துக்கொள்ளக் கூடிய சூழலை, விதிகளை, வாழ்க்கை முறைகளை கற்பிப்பதும், தவறும் போது உடலுக்கு சரிசெய்து கொள்ள உதவுவதும் தான் மருத்துவம்.

இதற்காகத்தான் நமது உணவையே மருந்தாகவும், பழக்க வழக்கங்களையே மருத்துவமாகவும் பழக்கினர்  நம் சான்றோர்கள். இதன் விரிவாகவே சித்த மருத்துவமும், சீன சித்தர்களின் தாவோக்களின் அறிவியலான சீனமருத்துவமும் உருவானது.

சித்த மருத்துவத்தினுடைய சிறப்பு உட்பிரிவே வர்ம மருத்துவம். சீன மருத்ததுவத்தின் உட்பிரிவே அக்குபஞ்சர் எனும் குத்தூசி மருத்துவம்.

அக்குபிரசர், ஆயுர்வேதம், ரிப்ளக்ஸாலஜி, காந்த மருத்துவம், தடவல் முறை, பிரமீடு, ரெய்கி, பிராணிக் ஹீலிங், சக்ரா ஹீலிங், கற்கள், மாந்திரிகம் என்பதெல்லாம்  மேற்கூறிய சித்தமருத்துவம், தாவோக்களின் சீன மருத்துவம், சூபிகளின் யுனானி மருத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிறந்த பகுதிகளே.

 மக்கள் நலம் நாடும் மருத்துவர்கள்,  மருத்துவத்தை முழுமையாக கற்றுக் கொள்ள தொடர்ந்து மாணவனாக இருக்க வேண்டும். தனக்குத் தெரிந்த சில நுட்பங்கள் போதுமானது இதுவே முழுமையானது எனும் முடிபுக்கு வரவே கூடாது. இது அவர்களையும் அவர்களை நம்பி வருபவர்களையும் அழித்துவிடும்.

மூலிகைகளையும், தாதுக்களையும், உப்புக்களையும்,உயிரினங்களையும் என இறைவன் கொடுத்த அனைத்தினையும் கொண்டு உடல், மனதை சீராக்க அறிந்தவர்களே சிறந்த மருத்துவர்கள்.

 இவர்களிடம் இருந்த, நேர்மையும், உண்மையும், முழுமையும், இறைவனை பற்றிய புரிதலும் இவர்களை சித்தர்களாயும், தாவோக்களாகவும், சூபிகளாகவும், இறைத் தூதர் களாகவும் உயர்த்தியது.

இவர்களேஉண்மையான மருந்தில்லா மருத்துவர்கள். மற்றவர்கள் போலிகளும் நடிகர்களும் தான்.

இந்த உயர்நிலைக்கு வர தொடர்ந்து கற்க வேண்டும். தேங்குவதெல்லாம் அழுகி அழிந்து விடும். சான்றிதழுக்காகவோ, வருவாய்காகவோ ஒருவர் தனது முன்னேற்றத்தை வீணாக்கி விடவேண்டாம்.

உங்களை தற்சார்புள்ளவர்களாக மாற்ற உதவும் வகையில் மரபுவழி நலவாழ்வு மையத்தின் செய்ல்பாடுகள் அமையும்.

அதற்கு உதவ உங்கள் கருத்துகளை பதிய வேண்டுகிறேன்.

அன்பை மறவா,
 தமிழவேள் நளபதி
மரபுவழி நலவாழ்வு மையம்,
  1. அண்ணா தெரு, ஆவடி, சென்னை -600054.
கைபேசி; 9345812080, 9444776208, 7010560588

















செவ்வாய், 21 ஜூலை, 2015

இறையை உணர்ந்தவர்க்குள் உரையாடல்



நான் சுவைத்த இறையை – புரிதலை, இறைவழி அருள் பார்வை (தீட்சை) வழியாக தாமும் பெற்றுச் சுவைத்த இறைவழி அறிவர்கள்.  இறைவழியில் சுகம் பெற்றவர்கள் மற்றும் இறைத் தேடலில் உள்ளவர்களுக்காக எழுதுகிறேன். 
இறைவழி அருள் பார்வை வழியே கிடைத்த இறை ஞானத்தை மேம்படுத்திக் கொள்ளவும், நமது இறைஅருள் சத்தியை மேலும் சிறப்பாக பயன்படுத்தவும் மாதம்தோறும் நடக்கும் நமது பகிர்தல் கூட்டங்கள் உதவுகின்றன.
இறைவழி அருள் பார்வைக்கு பின் நமக்கு கிடைத்த நன்மைகள், நாம் பிறருக்கு சுகமளித்தது போன்ற பல்வேறுபட்ட இறைஅனுபவங்களை நமது வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் காண்பது குறித்து நமக்குள் பகிர்ந்து கொள்கிறோம். பிற இறை அறிவர்களின் பகிர்தலைக் கேட்கும் போது நாம் தவறவிட்ட, நம் வாழ்க்கை நிகழ்வுகளில் உள்ள இறை ஞானப் பாடங்கள் பற்றிய விழிப்புணர்வு வருகிறது. நமது தன்முனைப்பு குறைகிறது அதனால், நமது இறைவழியில் சுகமளிக்கும் ஆற்றல் மேன்மை பெறுகிறது.
இறைஅருள் சத்தி என்பது மனிதனாக பிறந்த அனைவருக்குள்ளும் உள்ளது, அவர் அவர்களது நன்மைக்காக இறை வழங்கியது. இது தான் நமது நலவாழ்வுக்கு  அடிப்படை. இந்த அடிப்படை ஆற்றல் நமது மனதின் தூய்மையால் மேம்படுகிறது. மனத் தூய்மையில்லாமையால் கெடுகிறது.
பெருமை, கோபம், பொறாமை, வெறுப்பு, சுயநலம், கண்டுகொள்ளாமை, பயம் போன்றவை மனதின் கேடுகள் ஆகும். இறைக்கு இணையாக தன்னை நினைக்கும் ஆணவம், அந்த ஆணவத்தால் நாம் செய்யும் செயல்கள், நன்மை தீமைகளை உணராத நிலை ஆகியவற்றால் நமது நான் எனும் ஆன்மா இறை அருள் சத்தியை இழக்கிறது.
பணிவு, அன்பு, பொறுமை, கருணை, தன்னுயிர் போல் பிறரை நேசித்தல், கனிவு, துணிவு ஆகியன மனதை தூய்மையாக்கும். எல்லாம் இறைச் செயல் என உணர்தல், நன்றி கூறல், முழுமையை சிந்தித்துணர்தல் ஆகியன இறை அருள் சத்தியை பெருக்கும் வழி.

மனத் தூய்மையின்மையே :துன்பம் தந்து பின் மரணத்துக்கு இட்டுச் செல்லுகிறது. இறை அருள் சத்தி முழுமையாக நீங்கிய நிலையில் உடல் எனும் ஐந்து மூலகத்தின் மீது ஆன்மாவின் ஆளுமை இல்லாமல் போவதால் ஐந்து மூலகங்கள் கலைகின்றன உடல் அழிகிறது.
தூய்மையற்ற மனதினால் வந்த துன்பங்களைக் களைய அல்லது அடையாளப்படுத்தவே உடல் நோய் எனும் தற்காப்பு நடவடிக்கை எடுக்கிறது. நோய் வரும்போது விழித்துக்கொண்டு நமது தவறுகளைத் திருத்திக் கொண்டால் நோய்கள் சுகம் கொடுத்து விலகிப்போகின்றன. நோய்களை எதிராக நினைத்து தடுக்க, அழிக்க முனைந்தால் உடல் தன்னை பாதுகாக்க மேலும் பல நோய்களை உருவாக்கிக் கொள்கிறது, அதனால் நமது இறையருள் சத்தி சிதறடிக்கப்பட்டு வீணாகி அழிகிறது.
நம்மிடம் சுகம் பெற வருபவர்கள் நமது நன்மையை நாடும் இறைவழிபாட்டால் இறையருள் சத்தி பெற்று உடன் சுகம் பெறுகிறார்கள். பெற்ற சுகத்தை விழிப்புடன் அவதானித்து, இறைக்கு உணர்வுடன் நன்றி செலுத்துபவர்கள் மேலான சுகத்தை பெறுகிறார்கள். இவர்கள் இறையருளால் மனத்தூய்மைக்கான வழிகளைப் பெற்று தனது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்.
பெற்ற சுகத்தைக்கூட உணராத நிலையில் மன இறுக்கத்தில் இருப்பவர்கள் தனக்கு வலி நீங்கியதை ஏதோ மனித முயற்சியின் விளைவு அல்லது தான் செலவு செய்த பணத்தின் பலன் என நினைத்து அடுத்து எப்போது மருத்துவம் பெற வருவது என்பதில் நின்று விடுகிறார்கள் சிலர்.
தன்முனைப்பின் உச்சத்தில் நின்று சிந்தித்துணரும் ஆற்றலை இழந்தவர்களாய் இருப்பவர்கள் தாம் பெற்ற சுகத்தைக்கூட ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களாய், நன்றியற்றவர்களாய் இருக்கக் காண்கிறோம். 
சுகமளித்த பின் சிலர், அவர்கள் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டபின்னும் அவர்களை மனித அறிவின் கேடான சந்தேகம் விடுவதில்லை. தற்பெருமை விடுவதில்லை. தனது வணிக அறிவை மாற்றிக்கொள்வதில்லை. அவர்கள் தனது கேடான தீமையை நாடும் பழக்கத்தால் கெடுகிறார்கள்.
சிலர் தம் உடலின் தன்னறிவை மதிக்காமல்  பணம் மற்றும் வணிக அறிவையே பெரிதாக எண்ணித் தனது அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து அதனால் வரும் பெரும் துன்பத்தில் உழல்கிறார்கள்.
இறைவனே சுகமளிப்பவன். எல்லோரையும் சுகப்படுத்த வேண்டும் என வீணில் தன்முனைப்பு காட்டுவது நமக்கு நல்லதல்ல. இறைவழியில் இருந்து நெடுந்தூரம் விலகிச் செல்பவர்களை துரத்தித் திரிய வேண்டியதில்லை. மதவாதிகள் மற்றும் தலைவர்கள், படிப்பாளிகள், குருமார்கள், மருத்துவர்கள் ஆகியோரை இறைவனுக்கு இணையாக வைத்தவர்களை மாற்றுவது நமது வேலையல்ல. இவர்களாக - இறையருளால் தேடிவரும்போது அன்பான இறையை அவர்களுக்கு அடையாளங்காட்டுவோம். 
யாரையும், எதையும் எடைபோட, தீர்ப்புச் சொல்ல வல்லது முழுமையான இறைதான் என்பதை மறக்க வேண்டாம். பிற மனிதர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ நினைப்பது நல்லதல்ல.
மனந்திருந்தி நலவாழ்வை விரும்புபவர்களுக்கும், நன்மையைத் தேடுபவர்களுக்கும், வாழ நினைப்பவர்களுக்கும் இறை வழியில் சுகமளிப்பதன் மூலம் நாம் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்வோம். 

  நாம் இறைவழியில் சுகமளிக்கும் போது நமக்கு, பிறர் மூலம் நம் தவறுகளையும், மனதின் கேடுகளையும், அதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டி நாம் மனம் திரும்ப உதவுகிறான். மனம் திரும்பியவர்களை மன்னித்து சுகமளிப்பது நானே என சுகமளித்து, உள்அமைதி தருவது இறையே.
எல்லாம் இறைச் செயல் என்றதை உணர்ந்தவர்க்கு பலன் குறித்த எதிர்பார்ப்பு நீங்கி விடும். நடப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூறி மேலான புரிதலை வேண்டுதல் வேண்டும்.

நாம், இறைவழியில் நலம் நாடிவருபவர்களுக்கு சுகமளிக்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வோர் விதமாக தங்களுக்கான இறை அனுபவத்தை பெறுகிறார்கள். நமக்கும் புதிது புதிதான புரிதல் இனிய இறை அனுபவங்கள் கிடைக்கிறது. இறைவழியில் சுகமளிப்பது ஒரு தொழிலாக இல்லாமல் அது ஓர் ஆன்மீக அனுபவமாக உள்ளது. நாம் இறைக்கு நன்றி கூறுவதன் மூலம் இதை சிறப்பாக்கி கொள்கிறோம்.
நமது வாழ்வின் ஒவ்வோர் தேவைகளையும் இறைவழியில் பெற விழிப்புணர்வும், புரிதலும் வேண்டும். இறைவழியில் சுகமளித்தல் எனும் சித்தியினைப் பெற்றது ஓர் அடையாளம் தான். நம்முள் இருக்கும் இறையை மனதின் தளைகளில் இருந்து விடுவித்து முழுமையாக அதனுடன் இயைந்து வாழ்தல் தான் தனி மனித விடுதலை. அல்லது ஞானமடைதல் என அழைக்கப்படுகிறது.
இதற்கு வழி இறையின் குணங்களை நான் பெறுவது தான். எதுவுமாக இல்லாது இருத்தல், எல்லாம் தாமென உணர்தல், முழுமையான அன்பு நிலை.
நேற்று எனக்காக, எனது மனைவி சொன்னது. அப்போது டைனமோ இம்பாசிபில் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். டைனமோ இது போன்ற செயல்கள் செய்ய காரணம் அவர் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை, எல்லோரிடமும் அன்பாக இருக்கிறார். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். தான் என்ற அகந்தை இல்லாமல் இருக்கிறார். செய்த செயல் மீது சொந்தம் பாராட்டாது இருக்கிறார். மனதில் எந்த குற்றமும் இல்லை அதன் காரணமாகவே அவர் இறையாற்றல் அதிகம் பெற்றிருக்கிறார் என்றாள். நீங்கள் இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்றாள். அவளது புரிதல் மிக சிறப்பாக இருக்கிறது.
பெண்கள் இயல்பாகவே ஞானத்துக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்.
அன்பை மறவா,

தமிழவேள் நளபதி






(ஞாபகத்துக்காக, வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஞாயிறு ஆவடி மரபுவழி நலவாழ்வு மையத்தில் நடக்கவுள்ள பகிர்தல் கூட்டத்துக்கு வருக. தேவையுள்ள புதியவர்களுக்குத் தெரிவியுங்கள்)

கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com


 








வெள்ளி, 29 மே, 2015

ஜூன் மாதம் இறைவழி ஞான பகிர்தல் நாள் - தமிழவேள்

வரும் ஜூன் 7 ஞாயிறு

 இறைவழி அறிவர்களின் பகிர்தல் மற்றும் தேவையுள்ளவர்களுக்கு இறைவழி மருத்துவ தீக்சை மரபவழி நலவாழ்வு மையம் ஆவடியில் நடைபெறும்.

புதியவர்கள் பதிவு செய்து கொள்ள; 9345812080, 9444776208.

அனைத்து இறைவழி அறிவர்களும் வந்து தங்கள் புரிதலை பகிர்ந்து கொள்க.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி.

சனி, 31 ஜனவரி, 2015

இரத்த அழுத்தம் – இரத்த கொதிப்பு நீங்க


        இரத்த அழுத்தம் – இரத்த கொதிப்பு நீங்க

இரத்த அழுத்தம் என்பது நோயா? 
இல்லை
இரத்த அழுத்தம் என்பது இதயத்தின் வலிமையைக் குறிக்கின்றதா?

ஆமாம். இதயம் வலுவாகச் செயல்படுவதையே குறிக்கிறது.

நன்மை தீமைகளை அறியும் இதயத்தை, நம் உடலையும், மனதையும் காக்கும் இதயத்தை இறையாற்றல் பலவீனமானதாக படைக்கவில்லை மிக நேர்த்தியாக, வலுவாகவே படைத்துள்ளது.

தன்னையும், தானிருக்கும் உடலையும், மனதையும் பாதுகாக்க, தொடந்து இயக்கத்தில் வைக்க, இதயத்தை அது தொடர்ந்து இயங்குகிற வகையில் இறைவன் முழுமையாக வடிவமைத்துள்ளான்.

அக, புற தேவைகளுக்காக, இதயம் தொடந்தும், தேவைக்கேற்பவும் வேலை செய்ய வேண்டியுள்ளது. மிக நுண்ணிய இரத்தக் குழாய்களைக்கூடதேவைக்கேற்ப இயக்குகிறது. தேவையான பாதையில், தேவையான வேகத்தில், தேவையானவற்றைக் கொண்டு சேர்ப்பது இதயத்தின் வேலையல்லவா!

இவ்வளவு வேகமாகவும், திறமையாகவும், இரத்தத்தின் மூலம் சத்தி, எண்ணம், உடல் கட்டுமானத்துக்கு அடிப்படையான செல்களுக்குத் தேவையான எரிசக்தி, என எல்லாவற்றையும் தாங்கி, தூக்கிச் செல்லும் இரத்தம், இரத்தக் குழாய்களில் பயனிக்கும். வேகத்தில் ஏற்படும் உராய்வைத் தவிர்க்கவும், இரத்தக்குழாய்களைக் காக்கவும்தான், கொழுப்பு இரத்தக் குழாய்களில் உள்ளது. இதை நீக்க முயல்வது, குறைக்க முயல்வது நல்லதல்ல.

கண்ணில் ஒரு தூசி விழுந்தால் விநாடிக்குள் கண்ணின் சிறு நரம்புகள், இரத்தக் குழாய்களைத் தூண்டி சிவக்கவைத்து கண்ணீரை வரவழைப்பது, பாதுகாப்பது இதயம் தானே! அதற்கு இரத்த அழுத்தம் எவ்வளவு தேவையென சொல்லித்தர படிப்பு, அறிவு உண்டா?

விநாடிகளில் உணர்வெழுச்சிகளால் உடல் பதறுகிறதே அதனால் வரும் பாதிப்புகளை சரி செய்ய இதயம் இயங்க படித்தவரிடமா வந்து கேட்டுக் கொண்டிருக்கும்?

இராஜா வாங்கிய தங்கக் கட்டில் கதையாகி விட்டதே வியாபாரிகளுக்கான மருத்துவ படிப்பு.

இவர்கள் சொல்வதைக் கேட்டால் தொட்டிலில் இருந்து விழுந்த குழந்தையை ஓடித் தூக்க முடியுமா? பேருந்தில் ஓடி ஏற முடியுமா? மலச்சிக்கலில் கழிவை முக்கி வெளியேற்ற முடியுமா? உடலில் ஏற்பட்ட நோய்கள் எதற்காவது உதவ முடியுமா? இரத்த அழுத்தத்தைத் தடுத்தால் கேடுகள் எல்லாம் வளர்ந்து நாம் தான்ட நினைத்தாலும் முடியாத மரணக்கிணறாக மாறி விடும்.

யானையைப் பானையில் அடைக்கச் சொன்ன சுட்டிக்குழந்தையாக ப்பி பி என அழுது அடம்பிடிக்கிறார்களே மருத்துவர்கள் இவர்களை சமாதானப்படுத்த, நாம் நம் உயிரை இழக்க முடியுமா? இந்த படித்தவர்களைவிட அதைக்கேட்டு பயந்து நம்மை மருந்துண்ண கட்டாயப்படுத்தும் நமது குடும்பத்தாரிடம் இருந்து இறைவன் தான் காக்க வேண்டும் நம் இதயத்தை.

இப்பொழுதெல்லாம் இந்த மருந்துவர்கள் வீட்டில் உள்ளவர்களை மிரட்டிவிட்டால் தனது வியாபாரம் நன்றாக நடக்கும் என அறிந்து வைத்துள்ளனர். இந்த வேலையை அவர்களது நர்ஸ் கூலிகள் நன்றாகவே செய்கிறார்கள். மருத்துவமனை பக்கம் சென்று பாருங்கள் உலகமே வெறுத்துவிடும். கொஞ்சம் பணமுள்ள/பயந்த மனது ஆள் கிடைத்தால் சரி, முடிந்தது.

அறியாமையில் இருப்பவர்கள் மீது அன்பு செழுத்துபவர்களை – அவர்களின் அதிகாரத்துக்கு உட்படுபவர்களை மீட்கவே முடியாது.

வள்ளுவர் சொல்லும் மருந்தின் நான்காவது கூறாகிய உடனிருப்போரின் அறியாமைக்கும், பிடிவாதத்துக்கும் பலியாகி, வழி தெரிந்தும் உறவுகளை மறுத்து வாழத் தெரியாது, மனம் நொந்து இறப்போரது எண்ணிக்கை நமது நாட்டில் அதிகம்.

இரத்த அழுத்தம் என்பது நமது இதயத்தை மட்டுமல்லாது, உடலையும், மனதையும் காக்க இறையாற்றல் உதவுவதால் ஏற்படும் நல்ல விளைவு. இறைவனுக்கு நன்றி கூறி பொறுமையாக உடலின் மொழியை முயன்று கற்றுத் தெளிவோர்க்கு அது நல்ல பரிசு. பொறுமையாக இருந்தால் தான் வந்த வேலையை சீராக முடித்துவிட்டு சுகத்தை தந்து விலகும் அருமருந்து தான் இரத்த அழுத்தம்.

இரத்த கொதிப்பு

இது நல்லதல்ல. ஆனால், இதற்கும் மருந்து தீர்வல்ல. நல்ல புரிதல் தான் தீர்வு.

நாம், பிற மனிதரிடம் கொண்டுள்ள உறவில் மென்மையில்லாததால் வரும் நேரடி விளைவே இரத்த கொதிப்பு.

நமது உணர்வுகளுக்கும் நமது அறிவு மற்றும் நமக்கு நாமே இட்ட விலங்குகளுக்கும் இடையிலான பகை முரண்பாடே இரத்த கொதிப்புக்கு காரணம்.

இந்த சமூகத்தின் நெறிகள், சட்டங்கள், ஒழுக்கங்கள் எல்லாம் நம்மை நமக்கே பகைவனாக்கி, குற்ற உணர்வுள்ளவனாக்கி, கூனிக் குறுகி, சார்புள்ளவனாக மாற்றி நமது இயல்பை ஒடுக்கியுள்ளன. நமது இயல்பல்லாதனவற்றுடன் ஒத்துப் போக முடியாத நிலையில் ஏற்படும் மனக் கொதிப்பே, உடல் மறுப்பே இரத்த கொதிப்புக்கு காரணம்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என நம் சான்றோர் கூறிய சொல்; மனதில் பதிய, நலம் கிடைக்கும். நமது உலகத்தை நாம் தான் படைக்கிறோம். நம் வாழ்வின் இன்ப துன்பங்களுக்கு நாம் தான் முக்கிய காரணம். நாம் நமது இறைத் தன்மையை எப்படி வெளிப்படுத்துகின்றோமோ அப்படித் தான் அது செயல் படுகிறது.

நாம் நம் மீது பொதித்து வைத்துள்ள இந்த சமூக விலங்குகளை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறோமோ, விடுபட விரும்புகிறோமோ அவ்வாறே நமது வாழ்வு அமைகிறது.
முதலில் நோய் என்பது என்ன? என ஒரு புரிதலுக்கு வருவோம்.

நாம் நமது அடிப்படைத் தேவைகளான   தூக்கம், கழிவு வெளியேற்றம், குளியல், தாகம், பசி, விருப்பம், இயக்கம், ஓய்வு, அமைதி, சமாதானம், மென்மை, தூய்மை, அன்பு, உறவு மற்றும் நன்றி்யுணர்வு, இயற்கைச் சூழல் நலம் போன்றவற்றை படைப்பாற்றல் மிக சிறப்பாகத் தன் குழந்தைகளான மனிதர்களுக்கும் வழங்கியுள்ளது.

இறைவன் கொடுத்தவற்றை நன்றியுணர்வுடன் ஏற்று, வாழ்வை இனிமையாகப் பிற உயிர்களுடன் இணைந்து பகிர்ந்து கொண்டாடுவதே மனிதனின் கடமை.

மனிதனுடைய நலத்துக்காக நன்மை தீமைகளைப் பிரித்துப் பார்க்கும் அறிவை - நன்மையை அறிந்து அந்த வழியில் வாழ உதவியாய் படைப்பாற்றல் வழங்கியுள்ளது.

 இறைவனின் கருணையால் மட்டுமே நாம் பெறமுடியும் இந்த அடிப்படைத் தேவைகளைத் தாராளமாகப் பெற்றவரே செல்வந்தர்கள். மற்றவர்கள் எல்லாம் பரம ஏழைகள் தான்.

மாயையால் தன்னை மறந்த மனிதன் படைப்பாற்றலிடம் நம்பிக்கையின்றி, தன்முனைப்போடு பிழைக்க முயல்கிறான். பிற மனிதரோடும் பிற உயிர்களோடும் இயற்கையோடும் ஒன்று பட்டுத் தூய்க்க வேண்டிய வாழ்வுக்கான செல்வங்களைத் தனியுடமையாகப் பெற விளைகிறான். பலனில்லா வீண் முயற்சிகளால் பயம், கோபம், சுயநலம்,வெறுப்பு,கண்டுகொள்ளாமை, வன்மம், பொறாமை போன்ற எண்ணங்களை வளர்த்து தனக்குத் தானே எதிரியாகிப் போய்விட்டான்.

 தனது அடிப்படைத்தேவைகளை மறந்து தான் உருவாக்கிய பணத்துக்கு தானே அடிமையாகி விட்டான். பணத்தால் தனது தேவைகள் எதையும் தரமுடியாது என உணர்ந்தாலும் அதைப்பெற தன்னையே இழந்து பரிதாபத்துகுரிய வறுமையில் வாடுகிறான்.
படைப்பாற்றலின் கொடையான அடிப்படைத் தேவைகளை நமது தற்பெருமையால் புறக்கணிக்கும் போது, அவற்றை பெறுவதற்கான தகுதியை இழக்கிறோம்.

ஆனால், பெருங்கருணை வடிவான படைப்பாற்றல் நமக்கு வறுமையையும், நோயையும் கொடுத்து நன்மையின் வழி நம்மைத் திருப்ப விரும்புகிறது. கடும் இயற்கை சீற்றங்களைக் காட்டி நம்மைத் தன் உணர்வுக்கு வரவழைக்க முயல்கிறது. நமது வாழ்வின் வழிகாட்டியான இறையச்சத்தை மீண்டும் மனிதன் மேற்கொள்ளத் தூண்டுகிறது.

மனம் திருந்தியவர்கள் தாங்களின் புரிதலுக்கேறப இறைச் செல்வங்களை பெற்று வாழ்கின்றனர். பிற மனிதர்களின் மீதுள்ள அன்பால் மற்வர்களும் இதை உணர புரிந்துகொள்ள படைப்பாற்றலின் வழியில் உதவுகிறார்கள்.

நமது அடிப்படைத் தேவைகளை, இறை எனும் பேராற்றலுக்கு நன்றியுள்ளவர்களாய் இறையச்சத்துடன் நன்மையென நாடிப்பெற்று; சக உயிர்களுடனும், பிற மனிதர்களுடனும் பகிர்ந்து வாழ்தலே இறைவழிபாடாகும்.

நமக்கு நமது அடிப்படைத் தேவைகளை உணர்த்துவதற்கும், அவற்றை சீராக்குவதற்கும் உடல் செய்யும் முயற்சியே பொதுவாக நோயாக கருதப் படுகிறது.

இந்த வகை புரிதலுடன் பார்த்தால் அனைத்து நோய்களும் நன்மைக்காகவே வருகின்றன.


நன்மையை நாடும் பகுத்தறிவு உள்ளவர்களே, நோயற்ற வாழ்வுடையவர்.

நம்மைப்போலத் தான் பிறரும் இந்த கேட்டில் கட்டுண்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்வோம்.நாம் அனுமதிக்காத வரை எந்த கேடும் நம்மை நெருங்காது. நம்மை கட்டிப்போடும் எந்த விலங்கோடும் சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அதே நேரத்தில் நாம் நேரடியாக பகைத்துக் கொள்ள வேண்டியதும் இல்லை. 

அறியாமையில் உள்ள சமூகத்தின் தாக்குதலை நேரடியாக முகத்தில் வாங்கத் தேவையில்லை. ஒத்த புரிதல் உள்ளவர்களிடம் நாம் நம்மைப் பகிர்ந்து கொள்வோம். மற்றவர்களை அவர்களும் மாறக் கூடியவர்கள் நமக்கு கிடைத்த வாய்ப்பு-புரிதல் தேவையுள்ளவர்கள் என்பதை உணர்ந்து கருணையுடன், நமது வாழ்வு அவர்களுக்கு விளக்காய் அமையும் படி வாழ்வோம்.

நமக்கு சரியான புரிதலும், அதை பிறருக்கு விளக்கும் தெளிவும் கிடைக்கும் வரை விதையாக காத்திருப்போம். நாம் நிற்க பழகிய பின்தான் பறக்க முடியும்.

பூமி முழுதும் விரிந்து பரவுங்கள், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வோன்றிலும் நாம் தொடர்புள்ளவர் என்பதை உணருங்கள். பிற உயிர்களிடமும் சக மனிதர்களிடமும் நன்றியுணர்வுடன் பழகுங்கள். உங்கள் உடல் மற்றும் உணர்வுகளை மதிக்க பழகுங்கள். இரத்த கொதிப்பு எனும் கேடு நீங்கி மனமும் உடலும் லேசாகும்.

அன்பை மறவா,
தமிழவேள்
கைபேசி 9345812080, 9444776208, 7010560588
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com