செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி இதழ் 2...

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

இயற்கை
இறைவனின் படைப்பில் இந்த அகிலங்கள் எல்லாம் அற்புதமான ஒத்திசைவில் இயங்கிக் கொண்டுள்ளன. ஐந்து மூலகங்களின் இயக்கத்தில் ஆன இயற்கை தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொண்டு சாந்தமாக வீற்றிருக்கிறது . எல்லாம் அமைதியாக, முறையாக செயலாற்றிக் கொண்டுள்ளது.
மனிதனின் ஆன்மா - இறைத் துளி
இந்நிலையில், படைப்பாற்றல் - இறைவன் தன் படைப்புகளைத் தானே அனுபவிக்கவும்,, தன்னை உணரவும், தனது அனைத்து ஆற்றலும் கொண்டதாக படைத்த இறைத்துளி தான் மனிதன்.
மனிதன் இறைவனின் குழந்தை. இறைவன் தனது மகிழ்ச்சிக்காக, விளையாட்டுக்காக பெற்ற குழந்தை, தனது அன்புக் குழந்தைக்காக அனைத்தையும் வழங்கி இருக்கிறது படைப்பாற்றல் - இறைவன்.
மனிதனை நெறிப்படுத்துவதற்காக, அவன் ஆன்மாவை இறையச்சம் உள்ளதாக, பணிவும், பொறுமையும், அன்பும், தூய்மையும்,, தைரியமும் முழுமையும், உள்ளதாக படைத்துள்ளார். ஆன்மா இறைத்துளி என்பதால் அழிவற்றது.
தனது மனிதக் குழந்தைக்காக எல்லாம் செய்த இறைவன், மனிதன் தனது எண்ணம் போல் வாழ சுதந்திரம் கொடுத்துள்ளான். மனிதக் குழந்தைகள் தங்களுக்குள் சாந்தமாகவும், சமாதானமாகவும், வாழவேண்டும் என்பது இறைவனின் விருப்பம்.
அதற்காகவே, அதற்கு கூட்டுவாழ்க்கை தேவையை உணர்த்த, பலவீனமான குழந்தைப் பருவத்தைக் கொடுத்துள்ளார். அது தவிர்க்க இயலாமல் கூட்டாக வாழ வேண்டியுள்ளது. பிற மனிதர்களுடனான அன்பும் , நேசமும், இயற்கையுடனான இயைந்து வாழ்தல் நெறியையும் மனிதனின் அடிப்படைத் தேவையாக்கியுள்ளது இறை.
உங்கள் கருத்தினை சொல்க. தொடர்வோம்.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி - 9345812080, 9444776208
மின்னஞ்சல்- thamizhavel.n@gmail.com
Like
Comment

Comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.