வியாழன், 17 பிப்ரவரி, 2022

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

https://youtu.be/96Cf_Fi-bQk

புதன், 1 டிசம்பர், 2021

வாழ்வியல் அறிவர்

தமிழவேள் வணக்கங்கள்.

அகிலத்த்தில் என்னுடன் பயனிக்கும் அனைத்து உயிர்களுடைய நலமும் எனது நலத்துடன் தொடர்புள்ளது என அறிந்ததால் பகிர்கிறேன்.

எனது கடந்த முப்பத்தைந்து  ஆண்டு மருத்துவத் தொழிலில் நான்  கற்ற மூலிகை மருத்துவம் , சித்த மருத்துவம், வர்ம மருத்துவ பயிற்சி, அக்குபஞ்சர், ரிப்ளக்சியாலஜி, மலர் மருத்துவம்  தந்த அனுபவம் மற்றும் படிப்பறிவின் ஊடாக நான் கண்டறிந்த உண்மைகளை உங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.

விழிப்புணர்வுடன் கவணித்த போது மருந்துகள், பத்தியங்கள், நுட்பங்கள் ஆகியவற்றால் நோய்கள் கட்டுப்படுத்தப் படுவதை, தடுக்கப்படுவதை, நீக்கப்படுவதை கண்டேன்; ஆனால்,  மகிழ்ச்சி, நிம்மதி, நலவாழ்வு ஆரோக்கியம்  போன்றவை எட்டாக்கனியாகவே இருப்பதை கண்டேன். நோய்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும்  வளர்வதையே, அல்லது மீளாத் துயரில்  மனிதன் அழுந்திக்  கிடப்பதையே  காண்கிறேன்.

அதே நேரம் மருந்து மாத்திரைகளின் , நுட்பங்களின் உதவியின்றி பல வேளைகளில்  சுகம் பெறும் நிகழ்வுகளையும் பார்க்க முடிந்தது. இதற்கான  காரணங்களை ஆழமாகத் தேடி, சான்றோர்களின்  வாழ்வியலைச் சிந்தித்துணர்ந்த போது இயற்கை மற்றும் படைப்பாற்றலின்  வழிகளையும்  மனிதப் பிறவியின் நோக்கத்தையும் பற்றிய புரிதலைப் பெற்றேன்.

எனது இயற்கை மற்றும் இறை  குறித்த புரிதலுக்கு பின்,  மனிதர்களின் உடல், மனத் துன்பங்களை நீக்கவும் அவர்களது ஆன்மத் தூய்மை மற்றும் படைப்பாற்றலுடன் உள்ள தொடர்பை  மேம்படுத்தவும் நன்மையை நாடி வருவோர்க்கு நான் உதவுகிறேன். கடந்த 2002 முதல்  இந்த  இறைப்பணியினை நான் செய்து வருகிறேன்.

நாளுக்கு நாள் எனது இறை பற்றிய புரிதல் மேன்மை பெறுகிறது. எனது  இறை பற்றிய புரிதலால் பெற்ற ஆற்றலை கொண்டு தேடல் உள்ளவரை இறைவழி  வாழ்வியல் அறிவராக உயர்த்தவும்  செய்கிறேன்.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தன்னை  உணரவும், தன்னில் உயரவும்  தகுதியுள்ளவரே.
ஆன்மாவின் குற்றங்களை நீக்கி, மனதின் கேடுகளை களைந்து தன் மனதின் உண்மையான இயல்பை உணர்பவர், தன் இயல்பில்  வாழ்பவர்  வாழ்வியல் அறிவராக மேன்மை பெறுகிறார்.

தொடர...
தமிழவேள்
9345812080, 9444776208

வியாழன், 15 ஜூலை, 2021

இறைவழியில் சுகம் பெற ...

தமிழவேள் ஆகிய நான் இறைவழியில் சுகமளிப்பவன்.

 நீங்கள், பல காலம் துன்பத்தில் இருந்து விடுபட பல்வேறு முயற்சி செய்தும் பலனின்றி, கடும்  உடல் வலியிலும், மன உழைச்சல்களிலும், பொருள் இழப்பினாலும், நொந்துபோய் இறுதியில் இதையும் முயன்று பார்ப்போம் என உதவி நாடி இங்கு வருகிறவர்கள்.,

எனது மரபுவழி நலவாழ்வு மையத்தில் இருந்து திரும்பும் போது உடல் வலிகளும் , மன துன்பங்களும்  இல்லாது மனதும் உடலும் லேசாகி மகிழ்வுடனும், தெளிவான இறை புரிதலுடனும் செல்வீர்கள் என உறுதியளிக்கிறேன்.  

 நான், இங்கு எனது மரபுவழி நலவாழ்வு மையத்தில்,  துயரரின் நோயைத் தடுப்பதற்கு, நோயை அழிப்பதற்கு அல்லது நோயை கட்டுப்படுத்துவதற்காக எந்த முயற்சியும்  எனது படிப்பறிவை பயன்படுத்தி செய்வதில்லை.

 துயரர் தங்களது உடனடி அல்லது நீண்டகால நோயிலிருந்து எளிதில் சுகம் பெற நான் வழி காட்டுகிறேன். நான் உடல், மன வலிகளில் இருந்து உங்களை விடுதலை செய்கிறேன். வாழ்வில் நம்பிக்கை கொடுக்கிறேன். உங்கள் உடல, மனத் துன்பங்களுக்கு முழுமையான தீர்வு தருகிறேன்.

 நான், உங்கள் நலவாழ்வுக்குள் நீங்கள் திரும்ப மென்மையான வழியில், சுகமான வழியில் அன்புடன் உங்களை அழைத்துச் செல்கிறேன். 

 நீங்கள் இங்கு வரும்போது, சுகம் பெற வேண்டும் என்ற விருப்பத்தோடும், தேவையோடும் வரவேண்டும். அப்போது தான், நான் இங்கு இறைவழியில்  உங்களுக்குப் பெற்றுத் தரும் சுகத்தை; நீங்கள் நன்றி உணர்வுடன் ஏற்றுக்கொள்ள முடியும், மகிழ்ச்சி கொள்ள முடியும். பெற்ற சுகத்தை கொண்டாட முடியும். 

 நான் நம் மரபின் அறிவியல் வழியில் உங்கள் உடல் இயல்புக்கு ஏற்ற பழக்க வழக்கங்களை உங்களுக்கு மீண்டும் கற்பிக்கிறேன். 

 நான் இயற்கைவழியில், உங்கள் மனதின் கேடுகளில் இருந்தும் உங்களுக்கு விடுதலை தருகிறேன். உங்கள் மனதின் இயல்பை திரும்ப பெற உதவுகிறேன். நான் உங்களுக்கு உங்களின் உயிர்த் தேவையான இறையாற்றலை,  இறை உணவைப் மீண்டும் பெறும் வழியை உணர்த்தி பின் சொல்லித்தருகிறேன். 

 நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் வாழ்நாள் முழுமையும் இனிதாய் வாழத் தேவையான விழிப்புணர்வையும், புரிதலையும் நான் மீண்டும் உங்களுக்கு தருகிறேன். 

 நான் இறைவழியில் இங்கு பெற்றுத் தரும் சுகத்தை, நீங்கள் வாழ்நாள் முழுதும் தக்கவைத்துக் கொள்ள வழி காட்டுகிறேன். 

 வருக...  இது ஓர் வாழ்வியல் பாதை. 

இறைவழியில் நம் மரபுவழி சான்றோர்கள், அறிவர்கள் வாழ்ந்து கற்ற நலவாழ்வுக்கான புரிதல்களை, இறை ஞானங்களை நம் நண்பர்கள், உறவுகள், வாரிசுகளின் நலத்துக்காக பகிர்ந்து, பழகிக் கொள்வோம்.

 இவண், 
தமிழவேள் நளபதி
 இறைவழி அறிவன் 
 கைபேசி; 93458 12080, 94447 76208

செவ்வாய், 25 மே, 2021

உயிர்த் தேவை

அறியாமை என்பது என்ன? புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளாமல் இருப்பது அறியாமை அல்ல.  தெரிந்த விஷயங்களைச் செய்யாமல் இருப்பதே அறியாமை. "கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தால்" அது அறியாமை.

இப்பொழுது கொடூரமான அறியாமையின் விளைவாக உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு தெரிந்த இயல்பான நலமாகும் வழிகளை மறந்து, எதற்கும் ஆகாத அயல் முறைகளை பின்பற்றி, விட்டில் பூச்சி போல துன்பத்தை, மரணத்தை தழுவுகிறார்கள்.

இன்று உலகமக்கள் மீண்டும் தங்கள் மரபுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உலகில் எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் அவர்கள், தங்களுக்கான உடல், மனதைச் சுகம் ஆக்கும் வழிகளைத் தேடிக் கற்று, சிறப்பாக கையாண்டு, தங்கள் மருத்துவ முறைகளாக உருவாக்கி தங்கள் வாரிசுகளுக்காக வைத்திருக்கின்றனர்.

மக்கள்பல காலமாக அனுபவித்து, நற்பலன் கண்டுவரும் மரபுவழி நலமாக்கும் மருத்துவங்கள் அனைத்தையும், தற்போதுள்ள கார்ப்பரேட் வணிக அலோபதி முறையால் வயிறுவளர்க்கும் கேடானவர்கள் மதிக்காமல், தங்கள் சூழ்ச்சிகளால் மக்களிடம் இருப்தை மறக்கடித்து, தனது தான்தோன்றித்தனமான, அறிவியல் பூர்வமற்ற அழிவு முறைகளை மனிதர்கள் அனைவர் மீதும் கட்டாயமாக்கி உள்ளனர்.

இதை மரபை அறியாத தலைவர்களும், பணம் சம்பாதிக்க மட்டும் தெரிந்த படிப்பாளிகளும், இயற்கையை அறியாத, இறையை அறியாத, உணர்வற்ற "எடுப்பார் கைப்பிள்ளையாக்கிய படித்த மருத்துவர்களும்" தன் உணர்வின்றி செய்து வருகிறார்கள்.

கண்ணுக்கு முன், அலோபதியுடைய கேடுகள் காரணமாக பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இறந்த பின்னும், இன்னும் சிந்திக்க தெரியாத கபோதிகளாக, விட்டில் பூச்சிகளாக  உள்ளனர்.

இந்நிலையில், தம்மைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் தமக்குத் தெரிந்த, நாம் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தாம் பயன்படுத்தி பழகிய மரபுவழி சுகம் பெறும் முறைகளை, மீண்டும் பயன்படுத்தி தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

இனி நவீனம் படித்தவனை நம்பி பயனில்லை என்பதை நாட்டின் பேரிழப்புகள் காட்டுகின்றன.

நமக்காக சிந்திப்பதாக உலக அரசுகள் கூறுவது கேலிக்கூத்து என்று எல்லாரும் உணர்ந்திருக்கிறோம்.

சரி; இப்பொழுது நாம் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

நமது மருத்துவ அறிவை நாம் பயன்படுத்துவது,  அதை மேம்படுத்திக் கொள்வது, நம்மை சுற்றியுள்ள, தேவையை உணர்ந்த அனைவருக்கும்  சொல்லிக்கொடுப்பது, இவையே  இப்பொழுது மிக முக்கியமான தேவையாக உள்ளது.

இங்கு தமிழ் மண்ணில் ஐந்தறைப்பெட்டி மேலும் மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அதில் உள்ள, மூலிகைப் பொருட்களை பயன்படுத்துவதை அனைவரும் அறிந்திருக்கிறோம். 

ஐந்தறைப் பெட்டியில் உள்ள மூலிகைகள் ஐந்து மூலகங்களை சீராக்க உதவும்
ஐந்தறைப் பெட்டியில் நாம் தவறவிட்ட சில பொருட்கள் உள்ளன. அவற்றையும் உடனடியாக நம்ம அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் வாங்கி சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உயிர்காக்கும், சுகமளிக்கும், எளிமையாக  பயன்படுத்தும் நுட்பங்களை நம்வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளவேண்டும், பயன்படுத்த வேண்டும், மேலும், நம் வீட்டைச் சுற்றியுள்ள மூலிகைகளை மூலிகைகளைப் பற்றிய நமது அறிவைப் பயன்படுத்த வேண்டும், மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம்மை சுற்றியுள்ள நம் நாட்டு வைத்தியர்களை, வர்ம கலை அறிந்தவர்களை,  மதித்து அவர்களிடமிருந்து உயிர்காக்கும் "அடங்கல்" முறைகளை, எளிய மருத்துவ முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். 

மலர்த் தீர்வுகள் போன்ற இறை அருளை, இறைச்சத்தியை மீட்டுத்தரும் இறைஞானங்களை அனைவரும் கற்க வேண்டும்.

இறைவழி அறிவர்களுடனும், சுற்றியுள்ள சான்றோர்களுடனும் உள்ள உறவு எல்லா கேடுகளில் இருந்தும் நம்மை காக்கும்.

இந்த நேரத்தில்,  பணத்தாசையும்,கார்ப்பரேட் மாபியா கும்பலும் நம்மிடையே, நம்மவர் போல் உருவாக்கி உள்ள போலிகளையும், துரோகிகளையும் அடையாளம் கண்டு விலக்க-விலக வேண்டும்.
இவர்களை அடையாளம் காணும் வழி அவர்கள் வழிகாட்டுதல் நம் சுயசார்புக்கு இட்டுச்செல்ல உதவுமா, இல்லையா என்பது தீர்மாணிக்கட்டும்.

ஓர் அவசர நிலையில் எப்படி தன்னை காத்துக் கொள்வது என்பதை நம் மரபை அறிந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இன்னும் உள்ளது. இந்த சூழலில் இதை கற்கத் தவறி விட்டால் இனி என்றும் அது முடியாது.

நமது மரபுக்குத் திரும்புவது தற்போது உயிர்த் தேவையாகி விட்டது.
"தன் காலில் நிற்பது மட்டுமே" நமக்கு நல்வாழ்வை தரும்.

அன்புடன்,
தமிழவேள் நளபதி
இறைவழி அறிவர்
93458 12080, 94447 76208.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

இதழ்-11 மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

தன்னை உணர மலர்கள் செய்யும் உதவி

  

          மலர்களின் இயல்பு தனது வாரிசுகளுக்கு தன் முழுமையை  அகிலத்தின் நினைவகத்தில் விட்டுச் செல்வது ஆகும்.  மலர்களின் தூய்மையும்அழகும், மென்மையும் பார்ப்பவர்  தமது துன்பங்களை மறக்கச் செய்து அவர் உள் ஓர்  மலர்ச்சியை  ஏற்படுத்துகிறது.

 

ஒவ்வோர் மலரும்  நமக்குள் பல்வேறு நிலையிலான மலர்ச்சியை உண்டாக்குகின்றது என்பதை நமது மரபு வழி அறிவியல்  அறிந்து பயன்படுத்தி வருகிறது.

 

ஆன்மீக வழிபாட்டிலிருந்து போர்க்களம்  வரை பல்வேறு வகையான மலர்களை நம்மவர் அதன் தன்மை அறிந்து பயன்படுத்தினர்.

 

நமது மரபுவழி மருத்துவத்தில் மலர்களை  பயன்படுத்தி பல துன்பங்களை நீக்குதல் அறிவோம்.

 

இது போல்  இங்கிலாந்து நாட்டில் மலர்ந்த மலர்களின்  தன்மையை உணர்ந்த எட்வர்ட் பாட்ச் எனும்  இறையை உணர்ந்த அறிவர் மனித மனதின் கேடுகளை நீக்கி  இயல்பு நிலைக்கு திருப்ப  37 வகையான மலர்களையும், ஓர் பாறை நீரையும்  பயன் படுத்தி  வெற்றி பெற்று இருக்கிறார் , அவரது மலர்  தீர்வுகள்  மிக எளியது அற்புத கண்டுபிடிப்பு.  மனிதனுக்கு வரும் அனைத்து மனக் கேடுகளையும் களைவதால், மனிதன் நலமாக வாழ இந்த மலர் தீர்வுகள் போதும் என்பது  அவர் துணிபு.

 

இது பற்றி சற்று விளக்கமாக பார்க்கலாம் . மேலும், நமது மரபில் விளைந்த  மலர்களின்  பயனையும்  அனுபவங்களையும் இணைக்கிறேன்.

திங்கள், 21 செப்டம்பர், 2020

இதழ்-10 மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

மனக் கேடுகளை நீக்க எடுக்கும் தவறான முயற்சிகள்

 

          இந்நிலையில், மனதை கட்டுப்படுத்த படிப்பறிவைப் பயன்படுத்தி எடுக்கும் முயற்சிகள் போதுமான பலனைக் கொடுப்பதில்லை.

 

1.         நான் இந்த கேட்டை செய்யமாட்டேன் என தனக்குத் தானே  பலமுறை கூறிக் கொள்வதால்  பயனில்லை.

 

2.         கேட்டினை செய்யாமல் அடக்கி வைத்தல்.

 

3.         தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ளுதல். தன்னை தானே கண்டனம் மற்றும் விமர்சனம் செய்தல்  பயன்படாது.

 

4.         பாவ மன்னிப்புக் கோருதல்.

 

5.         பரிகாரம் செய்தல்

 

6.         உடலை வருத்திக் கொள்ளல்

 

7.         தியானம் செய்தல்

 

8.         யோகப் பயிற்சிகள்

 

மனநலம் பெற எளிய சரியான வழி

 

       இந்த சமூகம் ஊட்டி வளர்த்த நமது  போலியான அடையாளம்  தான்  மேற் சொன்ன கேடான குண இயல்புகள். இவை நமது உண்மையான நான் எனும் ஆளுமை வடிவத்திற்கு சம்மந்தம் இல்லாதவை. அதனால் தான், மேற்கண்ட குணக்கேடுகள் நமக்கு துன்பம் தருவதாக உள்ளது.

 

இறைத்துளியாகிய உண்மையான நான் எனும்  மனிதனின் ஆளுமை வடிவு இறையின் நற் பண்புகளைக் கொண்டதாக நலம் தருவதாக இருக்கிறது.

 

இந்த புரிதல் ஒன்று போதும்,  நமது குணக் கேடுகளில் இருந்து விடுபடலாம்.

 

நம் ஒவ்வொருவருக்கும் நமது குணக்கேடுகள்  மற்றும் அதன் பாதிப்புகள் பற்றிய உணர்வு  இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் , இந்த சமூகம் இது தான் வாழும் வழி என நமக்கு போதித்து  இந்த கேடுகளை மறைமுகமாகவும, நுட்பமாகவும், நேரடியாகவும் நம்மிடம் திணித்த வண்ணமே உள்ளது.

 

விழிப்படைந்த மாந்தர்  தனது நான் எனும் இறைத் தன்மையுள்ள ஆளுமை வடிவைப் பற்றி அறிந்த பின் ,  இந்த படிப்பறிவு தந்த போலியான அடையாளங்களைத் துறந்து தனது உண்மையான தன்மையை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

இந்த கேடான அடையாளங்கள் நானல்ல எனது உண்மையான இயல்பு இறை தான் என உணர்ந்த  மாத்திரத்தில்  குணக் கேடுகள் பலமிழந்து போய்விடும்.  இது வரை கேடான வழியில் செலவான நமது ஆற்றல்  உண்மையான ஆளுமை வடிவான நான் பலம் பெற உதவிடும். நம்மை விட்டு நோய்களும்  நீங்கிவிடும். நலவாழ்வு வரமாகும்.

 

விழிப்பற்ற நிலையில் அல்லது மதில் மேல் பூணைகளாய் இருப்போர்க்கு மலர் மருத்துவம் சிறந்த  வரமாயுள்ளது.