வெள்ளி, 29 அக்டோபர், 2010

நம்மைக் காத்துக் கொள்ள வழி

விருந்தும் மருந்தும் மூன்று நாள்


       உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றலுடையதாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காப்பு ஆற்றலின் நுட்பமான செயல்பாடுகளை, விழிப்புணர்வுடன் கவணித்து, உணர்ந்து உதவும் அறிவியலையே மருத்துவம் என்கிறோம்.

        நம் உடலில் கண்கள், காதுகள், நாக்கு, முடி, நகங்கள், உள்ளங்கால், உள்ளங்கை, தோல், நாடித்துடிப்பு, வாசியோட்டம், உமிழ்நீர், குரல் போன்றவைகள் நமது உடலின், மனதின் நிலையைத் தெளிவாக காட்டும் தன்மையுடையது.

       இதைவிட சிறந்த நோயறியும் கருவிகள் இல்லை. நோயுற்றவரின் வார்த்தைகளை பொறுமையாக கேட்டு அவரது உடல், மனம், மற்றும் பழக்கங்களை ஆராயும் மருத்துவருக்கு தன்னை நாடிவந்தோர்க்கு சுகம் பெறவழிகாட்டுவது மிக எளிதே.

       இந்த வழியில் மருத்துவருக்கு நோய்க்கான காரணம் அறிய நிமிடங்கள் போதும். நோய்க்குக் காரணம் அறியாத நிலையில் நோயைத்தடுப்பதோ, குணப்படுத்துவதோ, கட்டுப்படுத்துவதோ இயலாத காரியம்.

       ஒரு மருத்துவருக்கு, தங்களிடம் வருவோரின் துன்பத்தின் அடிப்படைக் காரணமறிந்து சுகமளிக்கவும், நம்பிக்கையூட்டி நலவாழ்வுக்கு வழிகாட்டவும் மூன்று நாட்கள் மிக அதிகமே

யாரோ வணிக நோக்கில் செய்து தரும் கருவிகளையும், அதன் அளவுக் குறிப்புகளையும், அடிப்படையற்ற கருத்துகளையும பயன்படுத்தினால் எந்த நொயையும் அறிய முடியாது. இந்த வகையில் நோயறிந்து! யாரோ வணிக நோக்கில் செய்து தரும் மருந்துகளை, வணிக முகவர்கள் தரும் சிற்ப்புச் சலுகைகளுக்காக மருந்தென்று எழுதிக் கொடுப்பவர்கள் தரகர்களாக மட்டுமே இருக்கலாம் - எப்படி மருத்துவர்களாக முடியும்? சிந்தியுங்கள்.

மருத்துவர்கள் என்போர் விழிப்புணர்வுடன் கூர்ந்து அறியும் ஆற்றலும், மனித நேயமும் மிக்கவர்களாக – நன்மை, தீமைகளை சிந்தித்து உணர்ந்து நன்மையை நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

       தமது பெருமைக்காகவும், அறியாமையிலும் கண்டதைச் சொல்லி வழிகெடுக்கும் சுற்றத்தாரை விட்டு விலகுவதும், தான் சிந்தித்து முடிவெடுப்பதும் நலம் விரும்புபவர் கடமை.

       பொறுமையாகவும், விழிப்புணர்வுடனும், நொயுற்றவர்க்கு உதவுவதும், நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதலாக இருப்பதுமே உடனிருப்போர் கடமை.

       நோய்க்குக் காரணம் புரியாது வாழ்நாள் முழுவதும் மருந்து கொடுப்பதோ, அறிவுரை கூறுவதோ மருத்துவர்க்கும் -மருத்துவ முறைக்கும் அழகல்ல.

       இவ்வாறு அறியாமையில் இருக்கும் ஒரு மருத்துவரையும் - மருத்துவ முறைகளையும் உடனிருப்போரையும் விட்டு விலகி, சரியான மருத்துவத்தை நாடிச் செல்வதே ஒருவர் தன் உடலையும், மனதையும், பணத்தையும், உயிரையும் காக்கும் ஒரே வழி.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

உங்கள் குழந்தைகளுக்காக நீங்களும் சிறிது யோசிக்கலாம்

Description: Description: Description: http://www.topnews.in/health/files/childhood_obesity.jpg
9 Promises Should Be Taken Before Choosing Software Field 
  
1)   I have already enjoyed my life in childhood 
 

  
  

 
2)
    I love tension 
 
 
Description: Description: Description: http://denytzock.files.wordpress.com/2009/09/high-tension-movie-poster-small1.jpg
 
  
  

3)
    I don’t want to spend time wid my friends 
 
Description: Description: Description: http://seaneill.com/wp-content/uploads/images/articles/fc/j3/friends.png
 
  
  

 
4)
    I love night duties 
Description: Description: Description: http://graphics8.nytimes.com/images/2008/12/05/health/chen_600.jpg
Description: Description: Description: http://www.medimanage.com/Images/tired%20working.jpg
  
  

5)
    I love to work on Sundays and holidays 
 
 
Description: Description: Description: http://www.cartoonstock.com/newscartoons/cartoonists/tcr/lowres/tcrn156l.jpg
  

 
6)
   I want to take revenge on myself 
Description: Description: Description: http://www.bharathreddy.info/wp-content/uploads/2010/02/stupid_question.jpg
  
  

7)
   I don’t want to get married b4 30 yrs of age 
Description: Description: Description: http://www.indianwomenshealth.com/UltimateEditorInclude/UserFiles/Marriage/MArriage_1.jpg
  
  

8)
   I want to study until my death 
 
 
Description: Description: Description: http://www.jonathan-guest.co.uk/images/book_rack_seat.jpg
AND FINALLY 
  

9)
   I don’t want hair on my head J 
 
 
 
Description: Description: Description: http://www.bartcop.com/head-rub-w.jpg
  

 Thanks and Regards,
PRINCE EDWIN DOSS M
Verizon Data Services (India)
VzB-ITCC (Provisioning & Activation)
Olympia Tech Park, 
No 1, SIDCO Industrial Estate, Guindy,Ch -32
+919629126100/princeedwindoss.x.manoharasundaradoss@verizon.com


நன்றி அவள் விகடன்- கிறங்க வைக்கும் கிராமத்துச் சமையல் தொகுப்பு











வெள்ளி, 22 அக்டோபர், 2010

பகுத்தறிபவர்கள் யார்?


ஆறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி பகுத்தறிவாளர்களுடன் ஓர் அனுபவம். அப்போது நான் கும்பகோனம் நகரில் இருந்தேன். எனது அப்பாவின் நண்பர் திரு.தமிழ்மணியிடம் எனது தம்பி லெனின் செங்கதிர் வேலை செய்து வந்தான். சில மாதங்களுக்கு முன் திரு. தமிழ்மணி மற்றும் அவரது குடும்பத்தில் சிலருக்கு சித்த மருந்துகளைக் கொண்டு மருத்துவம் பார்த்திருந்தேன்.

ஒரு நாள் திரு.தமிழ்மணியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. தனக்கு உடலில் மீண்டும் சிறிது தொல்லை இருப்பதாக கூறி மருந்து அனுப்ப வேண்டினார். அதற்கு நான் தற்போது மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை, பதிலாக சித்த மருத்துவத்தின் வேறு சில நுட்பங்களைப் பயன்படுத்துகிறேன். இது மிக எளிமையானது, நீங்கள் விரும்பினால் நேரில் வந்து விளக்கம் கூறிப் பிறகு உதவுகிறேன் என்றேன். சரி வாருங்கள் என்றார்.

பாண்டி பேருந்து நிறுதத்தில் இருந்து லெனினிடம் பேசினேன். மிதிவண்டி எடுத்துவருவதாக கூறினான். நான் நடந்து வந்து கொண்டிருப்பதாக கூறினேன். திரு. தமிழ்மணி அலுவலகத்தில் இருந்து சில நூறு அடிகள் தூரத்தில் மிதிவண்டியை உருட்டிவந்த லெனினைச் சந்தித்தேன்.

என்ன பை எடுத்து வரவில்லையா? எனக் கேட்டான். நான் தற்போது மருந்து கொடுப்பதில்லை என்றேன். சரி அக்குபங்சர் முறையில் வைத்தியம் செய்யப் போகிறாயா? என்றான். இல்லை என்றேன். அவர் வைத்தியத்துக்குத் தானே உன்னை வரச்சொன்னார்? என்றான்.

ஆமாம். ஆனால் நான் இப்போதெலெலாம் சித்த மருந்துகளையோ, அக்குப்பஙசரையோ பயன்படுத்துவதில்லை. நான என் மனதில் நினைத்தாலே பிறரின் உடல் துன்பங்கள் நீங்கிவிடுகிறது என்றேன்.

அதற்கு லெனின், என்ன சொல்கிறாய்? இவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியாது பேசுகிறாய் இவர் தீவிர நாத்திகர் இப்படி நீ கூறுவதைக் கேட்டால் என்னையும் சேர்த்து விரட்டி விடுவார் என்றான்.

அதற்கு நான் உனக்கு என்னைத் தெரியுமல்லவா. நான் மட்டும் என்ன கோவில், குளம் என அலைபவனா? என்னுள் உள்ள ஆற்றலை அறிந்தேன், பயன்படுத்துகிறேன் என்றேன்.

அப்படி என்றால் என்னைக் குணப்படுத்து, நீ பேசும் போது கழிப்பறையில் இருந்தேன், இரத்த மூலம் கடுமையான எரிச்சல் வலி அதனால் தான் நான் வரத் தாமதமாகி விட்டதென்றான். மிதிவண்டியை உருட்டிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.

சரி குணப்படுத்துகிறேன் என்ற நான், இப்போதே சரியாகி விட்டதென்றேன். உடன் மிதிவண்டியை கீழே போட்டுவிட்டு ரோட்டிலேயே குதிக்க ஆரம்பித்து விட்டான். இப்படியும் அப்படியுமாக, பரபரப்பாக நடந்தான் லெனின். என்ன நிகழ்ந்த்து எனக் கேட்டேன்.

என்ன ஆயிற்று எனக்கு? இவ்வளவு நேரம் கடும் எரிச்சலும், வலியுமாக அவதிப்படுத்திக் கொண்டிருந்த வலியும் எரிச்சலும் மறைந்து விட்டதே! உடல் ஏதோ புதிய சத்தி பெற்றது போல் உள்ளது என கூறி வியப்படைந்தான்.

வீடு வந்துவிட்டது. வீட்டில் அவனது துணைவி அமுதா வரவேற்றார். உடன் லெனின், எனக்கு என்ன செய்தாய் என தெரியவில்லை அமுதாவுக்கு கடும் பல்வலி அதைச் சரிசெய் பார்ப்போம் என்றான்.

ஏன் உனக்கு சரியாகும் போது அமுதாவுக்குச் சரியாகாதா அங்கும் சரியாகி விட்டதென்றேன். உடன் வலி நீங்கிச் சுகம் பெற்றார் அமுதா. அப்போது அங்கிருந்த சுரேஷ் என்ற நண்பரும் தனக்கு இருந்த மூலக் கடுப்பை சரி செய்து கொண்டார்.

அதன் பிறகு தான் திரு. தமிழ்மணி வீட்டுக்கு அழைத்துச் செல்ல லெனின் ஒப்புக் கொண்டான். வீட்டு வாசல் வரை வந்தவன் அண்ணன் ஏதோ சொல்கிறார். நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

திரு.தமிழ்மணியிடம், நானும் பகுத்தறிவு வழி குடும்பத்தில் வந்தவன் தான ஆனால், சில புரிதல்கள்-நீண்ட கால அனுபவங்கள் பயனாக, மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாத ஆற்றல்களை மருத்துவத்துக்குப் பயன்படுத்த துணிந்துள்ளேன் என கூறி மேலும் 30 நிமிடம் பலவாறாக விளக்க முயன்றேன்.

பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர் மருத்துவம் பெற சம்மதித்தார். சிறிது நேர அமைதிக்குப் பின் மருத்துவம் முடிந்த்து, என்ன உணர்கிறீர்கள் என்றேன்.

அவர் தான் எதையும் உணரவில்லை என்றும், தனது மனைவியையும் மகளையும் அனுப்புகிறேன் அவர்களுக்கு சிறிது உடல் நலக்குறைவு உள்ளது அதைச் சரி செய்யுங்கள் என்றார். மேலும், சில நிபந்தனைகளை கூறினார். அவர்களுடன் எதுவும் பேசவோ, தொடவோ கூடாது என்றார். நான் சம்மதித்தேன்.

முதலில் அவரது மனைவி வந்தார்கள் சில வினாடிக்கு பின் திரும்பிச் சென்றார். அவரது மகளும் வந்து சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்த திரு.தமிழ்மணி எனக்கு இதற்கு மேல் அடையாளம் தேவையில்லை என்று கூறி தனது மனைவி மிக கடுமையான தலைவலியின் துன்பத்தில் இருந்த்தாகவும் என்ன நடந்த்து என தெரியவில்லை, தற்போது வலி முழுமையாக நீங்கித் தாம் புத்துணர்வடைந்ததாகக் கூறியதாகச் சொன்னார். பல்வலியிலிருந்து விடுபட்ட அவரது மகள் அந்த அங்கிள் என்ன-எப்படிச் செய்தார் எனது பல்வலி எங்கே போயிற்று என கேட்டதாகக் கூறினார்.

மேலும் தனக்கு அப்போது வேலை இருப்பதால் மாலையில் அவசியம் தன்னை தனது அலுவலகத்தில் சந்திக்கும் படி கேட்டுக்கொண்டார்.

மாலை 7 மணிக்கு சந்தித்தோம். காலையில் என்னைச் சந்தித்தபோது தனது வயிற்றில் சிறிது இயல்பற்ற நிலை இருந்த்தாகவும், மன உடல் உழைச்சலாக இருந்த்தாகவும எனது சிகிச்சையில் சரியானதாகவும் கூறியவர், மேலும் தெளிவுபெறவே தன் மகள், மனைவிக்கு அளித்த மருத்துவம் உதவியதாக கூறினார். தனது மகிழ்சியையும், நன்றியையும் தெரிவித்தார். மேலும் இன்று நாள் முழுவதும் இதுவரை அனுபவித்திராத மனம் மற்றும் உடல் புத்துணர்வனுபவத்தைப்(some unuseal relaxiation) பெற்றதாக கூறினார்.

பிறகு தன் வாழ்வில் தான் சந்தித்த ஆன்மீகவாதிகள் பற்றியும், தனக்குள்ள அறிவுக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் பற்றியும் பேசினார். பலமுறை வரட்டுத்தனமாக பலரை விமர்சித்திருப்பதையும் நினைவுகூர்ந்தார். தனது பிடிவாதமான நாத்தீக நிலைபாட்டால் பல ஆன்மீக சுய அனுபவங்களை இழந்திருப்பதாக தான் தற்பொழுது உணர்வதாகவும் குறிப்பிட்டார்.

நான் எனக்குள்ளிருக்கும் ஆற்றலை உணருகிறேன். எனது தேவையை அது நிறைவேற்றுகிறது அறிவுப்பூர்வமாக என்னால் விளங்கிக்கொள்ள-விளக்கம் சொல்ல முடியவில்லை என்றேன். ஆனால், பிறருக்கு அந்த அனுபவத்தைக கொடுக்க முடிகிறது என்றேன்.

மிக மெதுவாக நீண்டகால அனுபவத்துக்குப் பின் நான் இந்த இறைவழி மருத்துவத்துக்குள் ( இறைவழி மருத்துவம் எனும் பெயர் சில ஆண்டுகளுக்குப் பின் நண்பர் சித்தர் பஸ்லூர் ரகுமான் அவர்களைச் சந்தித்த பின் அவர் அனுமதியுடன் பயன்படுத்துவது.) வந்தாலும் எனக்கு மிரட்சியாகத்தான் இருந்த்து. நான் அதுவரை எனது வாழ்க்கைத் தேவைக்காகச் செய்துவந்த சித்தமருத்துவம்- அக்குபஞ்சர் முறைகளை (பிறரைக் குணப்படுத்த இவை எனக்கு தேவைப்படவில்லை என்பதால்) கைவிட்டதால் எனக்குப் பொருளாதாரரீதியில் கடும் இழப்பே.

நான் எந்த மதத்தையோ, சாதியையோ, அமைப்புகளையோ சாராதவன் என்பதால், எதையாவது சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்ட மக்களுக்கு எனது மருத்துவமுறையை விளக்க முடியவில்லை. என்னைவிட என் மூலம் சுகம் பெற்றவர்கள், தான் பெற்ற இன்பம் தன்னைச் சார்ந்தோர் பெறவேண்டும் என விரும்பினாலும் அதைச் சரியான வார்த்தைகளில் விளக்கத் தெரியாத்தால் அவர்களுக்கும்-எனக்கும் உதவ முடியவில்லை.

இது குறித்து திரு.தமிழ்மணி கூறுகையில், மக்கள் பணம் கொடுத்துப பொருள் வாங்கியே பழக்கப்பட்டவர்கள். அவர்களை குணப்படுத்துவதை விட அவர்களைத் திருப்தி படுத்துவதையே விரும்புவர். எனவே, சிறிது அரிசி மாவையாவது குப்பகளில் அடைத்து கொடுத்து, சில நாள் சாப்பிடச் சொல்லி பின் உங்கள் மருத்துவத்தை கொடுத்தால் எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் உங்களுடைய பணத் தேவைகளும் பூர்த்தியாகும் என்றார். பொதுவாக எனது நலம் விரும்பிகள் கூறியது இது தான்.

தான் உணர்ந்த இறையை தனது மனித அறிவால் விள்க்க முயன்றவர்கள் தோல்வியே தற்போதய மதங்கள். இறையாற்றலை குறுக்கு வழிகளில் மனித அறிவால் பெறவோ, பயன்படுத்தவோ முடியாது. விழிப்புணர்வும், நல்ல சிந்தனையுமே நம்மை இறைவழியில் கொண்டு சேர்க்கும்.

பின் சில மாதங்கள் கழித்து திரு.தமிழ்மணி வீட்டுக்கு சென்றபோது அங்கு மூடநம்பிக்கை ஒழிப்பு சம்மந்தமான பயிற்சி முகாம் குறித்த துண்டறிக்கை ஒன்றைப் பார்த்தேன். அன்று அந்த முகாம் கடைசி நாள். நான் அதுவரை இது போன்ற பகுத்தறிபவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. அங்கு சென்றால் எனக்குள்ளிருக்கும் ஆற்றல் குறித்த எனது சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கலாம் என நினைத்ததால் திரு.தமிழ்மணியிடம் தெரிவித்தேன்.

அதற்கு அவர் நீங்கள் இது போன்ற கூட்டங்களுக்குச் செல்வது உங்களுக்கோ, உங்களால் அவர்களுக்கோ பயனில்லை. பொதுவாக இக் கூட்டங்களில் இருப்போர்-வருவோர் உண்மையைத் தேடுபவர்கள் இல்லை. வரட்டுத்தனமான அறிவியலில் மூடநம்பிக்கை உள்ளோர் எனக் கூறி, போய்ப் பயனில்லை என்றார்.

ஆனாலும் அக்கூட்டத்துக்குச் சென்றேன். ஹைதராபாத் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் திரு. தேவேந்திரநாத் என்பவர் நடத்திய நிகழ்சி. முடிவு நாள் 60 பேர் வரை இருக்கலாம். தெரு வித்தைக் காரர்களும் சில பூசாரிகளும் செய்யும் வித்தைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுத்து செய்முறை விளக்கம் செய்துகாட்டிக் கொண்டிருந்தார். கூட்டம் கைதட்டிக் கொண்டிருந்த்து.

முடிவில் பேசிய பேராசிரியர் தேவேந்திரநாத் தான் இது போல பல ஆயிரம் கூட்டங்கள் நடத்தியிருப்பதாக கூறினார். மேலும் இது போன்ற மோசடிவித்தை தான் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, மற்றும் வர்மம், அக்குபஞ்சர் எல்லாம், எனக் குறிப்பிட்டு அதைச் செய்யும் மருத்துவர்களை குவாக்ஸ் (அடிப்படை அறிவற்றவர்கள்) என்றும் குறிப்பிட்டார். உண்மையான மருத்துவம் என்பது அலோபதி மட்டும் தான் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கும் அந்தக் கூட்டம் பலமாக கைதட்டியது. தாயையும், தாய்மொழியையும் கேவலப் படுத்தியவர்களைக் கைதட்டித் தலைவனாக்கிய சுயமரியாதை இல்லா கைதட்டிக் கூட்டம்.

இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்தாலும் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பியதால் எழுந்து கேட்டேன். நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விளக்கம் கூறுங்கள் என்றேன்.

நீங்கள் இப்போது குவாக்ஸ் என கேவலமாக குறிப்பிட்ட மருத்துவ முறைக்ள் தாம் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் அனுபவத்தில் வளர்ந்து இன்று வரை மக்களை நோயின்றி வாழவைத்து வருகின்றன.

நீங்கள் அறிவுப்பூர்வமானது என உயர்த்திப் பேசும் ஆங்கில- அலோபதி மருத்துவத்தால் ஏதாவது ஒரே ஒரு நோயையாவது குணப்படுத்த முடியுமா? அப்படி இருந்தால் அதற்காக மட்டுமாவது ஆங்கில மருத்துவத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.

பாவம், மனிதர் மேடையில் துடிதுடித்து விட்டார். அந்த கைதட்டிக் கூட்டத்தில் தன்னிடம் கேள்வி கேட்பவர் இருக்கமாட்டார்கள் என நிணைத்திருந்தார் போலும்.

ஆனால் நான் கேட்ட கேள்விக்கு ஆங்கில மருத்துவத்தில் பதில் இல்லாத்தால், அவர் கூறினார், என்ன இப்படிக் கேட்டுட்டீங்க நாங்க புற்று நோய்க்கெல்லாம் சிகிச்சை கொடுக்கிறோம் என்றார்.

ஆமாம். சிகிச்சை அளிக்கிறோம் என்ற பெயரில் அதிகத் துன்பத்தில் ஆழ்த்தி புற்று நோய்க்கு முந்திக்கொண்டு மருந்துகளால் கொல்கிறீர்கள் என்றேன். உனக்கு புற்றுநோயைப் பற்றி தெரியுமா? என்றார். செல்களின் முறையற்ற வளர்ச்சி- தேக்கம் தான் புற்றுநோய் என்றேன்.

என்ன இவ்வளவு எளிதாய் சொல்லி விட்டீர்கள் என்று கூறி தான் படித்த்தை சிறிது நேரம் ஆங்கிலத்தில் ஒப்பித்தார். நான் சொன்னதைத் தான் ஆங்கிலத்தில் சுற்றி வளைத்து பேசினீர்கள் எனது கேள்வி இதல்ல. யாரையாவது, எந்த நோயையாவது முழுமையாக ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா? என்பதே கேள்வி என்றேன்.

கூட்டம் என்ன சொல்வது என விழித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியுமா? என்ற எதிர்க் கேள்வி தான் அந்த மருத்துவ பேராசிரியரிடம் இருந்து வந்த்து.

என்னால் முடியும். செய்திருக்கிறேன். எங்கள் பாரம்பரிய மருத்துவங்கள் எவ்வளவு எளிமை என இங்கேயே நிரூபித்துக் காட்டுகிறேன் என்றேன். மேலும், இந்தக் கூட்டத்தில் உள்ள எவருக்கேனும் உடல் வலிகள்-தொல்லைகள் இருந்தால் கூறுங்கள் இங்கே அமர்ந்த படியே சரி செய்து காட்டுகிறேன் என்றேன்.

கூட்டமும், மேடையும் அமைதியாக இருந்தது. பிறகு, தேவேந்திர நாத் வலியைத் தீர்ப்பது பெரிய விசயமில்லை என்று கூறினார்.

வலியைத்தீர்ப்பது பெரிய விசயமில்லை என்றால் நீங்கள் ஏன் கடும் எதிர் விளைவுகளைக் கொடுக்க கூடிய மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டேன்.

கூட்டத்தில் பலவாறான சலசலப்பு. ஒரு இளைஞர் எழுந்து கூறினார். என் அக்காவுக்கு மூட்டுவலிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்தோம் 6 மாதம் கழித்து மீண்டும் வலி வந்துவிட்டது நாங்கள் அலோபதிக்கு திரும்பிட்டோம் என்றார். இதுபோலப் பேச்சுகள். தங்கள் பேராசிரியரை காக்க கூட்டத்தினர் தயாராயினர்.

அந்த நேரத்தில் ஒரு புத்திசாலி நபர், எலக்ட்ரானிக் இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியோடு வந்தார். நாங்கள் கருவியைத்தான் நம்புவோம். நீங்கள் பிரசரைக் குறைத்துக் காண்பியுங்கள் என்றது கூட்டம். ஒருவர் தனக்கு காலையிலிருந்தே பிரசர் அதிகமாக இருந்த்தாக கூறிச் சோதனைக்குத் தயாரென்றார்.

நான் இரத்த அழுத்தம் என்பது ஒரு நோயல்ல. தேவை கருதி இயங்குவது தான் இதயத்தின் இயல்பு எனக் கூறியதை யாரும் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தினர். நானும் இவர்களிடத்தில் இருந்து விலகினால் நல்லது என உணர்ந்தேன்.

பிறகு, நான் மருத்துவம் பார்த்த பின் எந்த அளவுக்கு இரத்த அழுத்தம் அப்போது தேவையோ அந்த அளவுக்குத் திரும்பும். எனவே, இந்த சோதனைக் கருவியிலும் மாற்றம் உறுதியாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும் எனவே சோதனைக்குச் சம்மதிக்கிறேன் என்றேன்.

முதலில் மேடையில் அமரச் செய்து உடலில் சக்தி வேறுபாடு இருக்கும் போது உள்ளங்கால், உள்ளங்கைகளில் உள்ள உயர வித்தியாசத்தை அனைவர்க்கும் காட்டிவிட்டு பின் பிரசர் கருவியால் அளக்கச் செய்தேன். ஏதோ ஒரு அளவு காட்டியது கருவி. பின் கண்களை மூடித் திறக்கச் சொன்னேன் உடன் உடல் வித்தியாசம் சரியானது. இதைப்பார்த்த தேவேந்திர நாத் மற்றும் கூட்டத்தினர் சில் வினாடிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.

அந்த நேரத்தில் பிரசர் சோதனை செய்யப்பட்ட நபர் எழுந்து தான் இந்த உடல் சோதனையை நம்ப மாட்டேன் என்று கூறி ஒரே ஆர்பாட்டம் செய்து விட்டார். பிறகு அவருக்கு இரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டது. முன்பு அளந்த்தைவிட 12 அலகுகள் குறைந்தே இருந்த்து.

உடன் தேவேந்திர நாத் எழுந்து தனது அலோபதி முறையில் இயல்பானது என குறிப்பிட்ட அளவுக்குள் என்னால் இரத்த அழுத்தம குறைக்கப் படாத்தால் எனது மருத்துவம் தோல்வி எனக்கூறி உடன் நேரம் ஆகிவிட்டதாகவும் கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டார்.

கூட்டம் கலைந்து செல்லும் வரை யாரும் என்னிடம் பேசவில்லை. கடைசியில் இரத்த அழுத்த சோதனைக்கு தன்னை ஆட்படுத்திக்கொன்ட மனிதர் என்னீடம் வந்து, உங்கள் சிகிச்சையின் போது நான் எனது உடலில் மாற்றத்தை உணர்ந்தேன் தேவேந்திரநாத் க்கு அவர் மேடையில் அவமானமாகிவிடக் கூடாதென்பதற்காகவே, அப்படி நடந்து கொண்டேன் என்றார். இதை என்னிடம் சொல்லி யாருக்கும் பயனில்லை என்று அவரிடம் கூறி பேச்சை முடித்தேன்.

பகுத்தறிவுவாதிகள், அறிவியல்லாளர்கள், அறிவுஜீவிகள் என என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சிந்திக்கத் துணிவில்லாதவர்கள் மனிதர்களே அல்ல, செம்மறியாட்டுக் கூட்டம் தான்.






 

வியாழன், 21 அக்டோபர், 2010

தோழி வாசுகியின் பக்கங்கள்

நம்மாலும் மாற முடியும்...மாற்றவும் தான்............(வாசுகி)

இந்த இறை வழி / இயல் வழி  மருத்துவ முறைகளை பற்றி பேசினாலே....நிறைய நண்பர்கள் என்னை கேட்பதுண்டு....
  • அப்படி என்ன நாம் உலகையே மாற்றி விடவா முடியும்....
  • இந்த உலகத்தில் தானே வாழ்ந்தாக வேண்டும்...
  • உலகத்தோடு ஒத்து வாழ்ந்து விட்டு போக  வேண்டியது தான்
  • இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டியது தான் என்றெல்லாம்.....
உலகம், சமூகம் என்பதெல்லாம், சிறு துளி பேரு வெள்ளம் போல...சிறு சிறு எண்ணங்கள்  வலிமையான மாற்றத்தை கொண்டு வருவதை போல, சிறு சிறு மாற்றங்கள் நமது உடல் மற்றும் மன நலனில் உறுதியான மாற்றத்தை கொண்டு வரும் - கண்டிப்பாக. மெதுவாக இவற்றை கடை பிடித்தாலே, வாழ்வில் பெரும்பாலான மருத்துவ செலவுகளை தவிர்த்து விடலாம்.....
ஆனால் நாம் நினைத்தால் சிறிது சிறிதாக ஆனால் உறுதியாக நிறைய மாற்றங்களை கொண்டு வர முடியும். 
உதாரணத்திற்கு சில....
  1. சமையல் எண்ணெய் : காதி கிராமயோக் பவனில் அருமையான செக்கெண்ணை கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். அதெல்லாம் கசக்கும் என்று சொல்பவர்களுக்கு. பின்னால் புற்று நோய் வந்து அதற்கான வைத்தியம் பார்பவதை விட, இந்த மிக குறைவான கசப்பிற்கு  மிக விரைவில் பழகிக்கொள்ளலாம். (மற்ற பிற எண்ணெய்கள்  எல்லாமே பெட்ரோலிய பொருள்களை கொண்டு சுத்தம் செய்பவை . அதனால் புற்று நோய்கள் கூட வர வாய்ப்புண்டு). எனது வீட்டில் பெரியவர்களிடம் சிறிய முணுமுணுப்பு இருந்ததே தவிர  குழந்தைகள் ஒரு வித்தியாசத்தையும் உணர வில்லை.  மற்ற பிற எண்ணெய்கள்  எல்லாமே பெட்ரோலிய பொருள்களை கொண்டு சுத்தம் செய்பவை . அதனால் புற்று நோய்கள் கூட வர வாய்ப்புண்டு. 
  2. சோப்புகள்: கடைகளில் விற்கப்படும் "detergent " சோப்புகள் நமது கைகளுக்கு/தோலுக்கு   தீங்கானவை. (இந்த சோப்பை உபயோகபடுத்தினால்  ஏழு முறை கை கழுவ வேண்டுமாம்...தண்ணீர் செலவு வேறு....)அதற்கு மாற்றாக காதியில் விற்கும் நீம் பார் (Neem Bar) சோப்பை உபயோகபடுத்தலாம். இது detergent சோப்பை விட நன்றாகவே தோய்க்கும்.எனது மகனில் வெள்ளை சட்டையில் இருக்கும் அழுக்கை நீக்க இயற்கையான நல்ல வழி. எந்த வாஷிங் மிஷினிலும், எவ்வளவு detergent போட்டாலும் இந்த அழுக்கு அவ்வளவு சீக்கிரம் போகாது.   நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம். கடைசியில் வரும் துண்டு சோப்புகளை சேகரித்து செடிகளுக்கு மருந்து(இயற்கை) அடிக்கும்போது ஊற வைத்து / கரைத்து பயன்படுத்துவோம்....மருந்து செடிகளில் நன்றாக ஒட்டிக்கொள்ள  பயன்படும்.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
  3. வெள்ளை சர்க்கரை  :இப்பொழுதெல்லாம் வீட்டில்  வெள்ளை சர்க்கரையை அறவே தவிர்த்து வருகிறோம். விருந்தினர் வந்தாலும், கருப்பட்டி தேநீர் தான்.  உண்மையில் நிறைய பேருக்கு கருப்பட்டி தேநீர் தான் பிடிக்கிறது. போன வாரம் கோதுமை ரவையையும், பனங்கற்கண்டை  பொடித்தும் பயன்படுத்தி செய்த கேசரிக்கு நல்ல வரவேற்பு....வந்திருந்த புது மன தம்பதியர்க்கும் அதுவே விருந்து.  (நன்றி : எனது அலுவலக தோழிக்கு. அவளது கணவருடன் தென்னாப்பிரிக்கா சென்று வந்த போது அவள் வாங்கி வந்த "பிரவுன்" - சர்க்கரையையும் (ரசயானம் கொண்டு சுத்தப்படுத்தாத) , கோதுமை ரவையும் வைத்து அவள் செய்த கேசரிதான் எனக்கும் தூண்டுதல்...). இப்பகுதியை படிக்கும் வணிக நண்பர்கள், அதே போல சர்க்கரையை இங்கும் விற்பனைக்கு கொண்டு வந்தால் நலம்.
அதனால் நண்பர்களே, நாம் மாற்ற   வேண்டும் / மாற வேண்டும் என்று நினைத்தால் நிறையவே வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகள் வரும்பொழுது - பயன்படுத்தும் எண்ணம் மட்டுமே நாம் உருவாக்க வேண்டியது...
                                                                             ........இன்னும் தொடரும்..... 
அன்பில்,
          வாசுகி.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பிளாஸ்டிக் பயங்கரத்தை தடை செய்க!

நேற்றைய தினமணியில் வெளியான கட்டுரை....தங்களின் வலைப்பதிவிற்காக.....
X
Inbox
X

Reply

M Maheswari

 to me
show details 11:06 AM (1 hour ago)
நேற்றைய தினமணியில் வெளியான கட்டுரை....தங்களின் வலைப்பதிவிற்காக.....
 


First Published : 14 Oct 2010 12:00:00 AM IST

Last Updated :

சென்னை மாநகராட்சி முழுவதும் 20 மைக்ரான் தடிமனுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடந்த வாரம் சென்னை மேயர் அறிவித்திருப்பது வரவேற்புக்கு உரியது. ஆயினும், திடீரென்று வந்துள்ள இந்த அறிவிப்பை, ""மிகத் தாமதமாக வந்துள்ள மிகக் குறைந்தபட்ச நடவடிக்கை'' என்றும் விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.
 1999-ம் ஆண்டே, சென்னை மாநகராட்சி 20 மைக்ரான் பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றி, அதனடிப்படையில் தமிழக அரசிடம் உள்ளாட்சி சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கக்கேட்டு விண்ணப்பித்தது. பின்னர், திடக்கழிவு மேலாண்மை மூலமே மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களைப் பிரித்து விடுவோம் என்று நேற்றுவரை கூறி வந்துள்ளது மாநகராட்சி. இவ்வாறு பதினோரு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இப்பொழுதுதான் இப்பிரச்னையின் தீவிரத்தைச் சிறிதாவது உணரத் தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
 ஆனால், 20 மைக்ரான் தடிமன் எனும் அளவுகோல் ஒன்றுக்கும் உதவாது என்பதை நாம் உணர வேண்டும். மிக எளிதாக 21 மைக்ரான் அல்லது 24 மைக்ரான் என்று சான்றிதழ் வைத்துக்கொண்டு பிளாஸ்டிக் வியாபாரிகள் வண்ணமயமான, ஆனால் மிக ஆபத்தான மெல்லிய பைகளைத் தாராளமாகப் புழக்கத்தில்விட முடியும். மேலும், மிக மலிவான விலை என்பதால் 40 அல்லது 50 மைக்ரான்வரை கூட பிளாஸ்டிக் பைகளைப் பிரித்து காசாக்க முயல்வது, இன்றைக்கு சிறிதும் லாபமற்ற தொழில் என்றே கருதப்படுகிறது. அதனால்தான், யாரும் மிக மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களை ஆர்வமுடன் பிரித்துச் சேகரிக்க முன்வருவதில்லை.
 இக்காரணத்தின் அடிப்படையிலேயே, மேற்கு வங்கம், மும்பை, தில்லி, சண்டீகர் போன்ற இந்தியாவின் பல பகுதிகளில் 40 மற்றும் 50 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்கள் மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருள்களும் தடை செய்யப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
 தில்லி அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு கொண்டு வந்த தடையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும், பிளாஸ்டிக் நிறுவனங்களின் சங்கங்கள் மேல்முறையீடு செய்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னரே, அவர்களது வழக்கைத் தள்ளுபடி செய்து, பிளாஸ்டிக் தடையை தில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 இக்கட்டுரை ஆசிரியர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கீழ்க்கண்ட பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. பிளாஸ்டிக் நிறுவனங்கள் சார்பாக வைக்கப்பட்ட பல ஆவணங்களையும், வாதங்களையும், தெளிவாகக் கேட்டு உள்வாங்கிய பின்னர் வெளியிடப்பட்ட நீதிமன்றப் பரிந்துரையின் சாராம்சம் இதுதான்.
 சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் சுருக்கம் :-
 உதகமண்டலம் போன்ற ஒரு சில இடங்கள் தவிர, தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருள்கள் தடை செய்யப்படவில்லை. மத்திய அரசின் சட்டத்தைக்கூட இன்றுவரை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அமல்படுத்தவில்லை. தமிழகத்தின் எல்லாத் தெருக்களிலும் பிளாஸ்டிக் பைகள், டெட்ரோ பேக்குகள், கப்புகள் போன்றவை விசிறியடிக்கப்படுவதை எவரும் காணமுடியும். ஹோட்டல்களில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தங்களில், பிளாஸ்டிக்கில் உள்ள விஷக் கெமிக்கல்கள் கலந்து புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நிலத்தடி மண்ணும், நீரும் மாசுபடுவதுடன், செடிகளும், மரங்களும் வளர்வதைத் தடுக்கின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். சுற்றுச்சுழலுக்குப் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீங்குகளைக் கருதும்போது, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன.
 தமிழ்நாடு அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டமசோதா ஆறு ஆண்டுகள் ஆகியும் சட்டமாக்கப்படவில்லை. அப்பொழுதே செயல்பட்டிருந்தால் இந்த ஆறு ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓரளவுக்கு முறைப்படுத்தியிருக்க முடியும்.
 முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கமிட்டியின் சில பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகள், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கத் தொடங்கியுள்ளன.
 ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் தண்ணீர் விற்பனை செய்யப்படும் பெட் பாட்டில்களுக்குக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முடுக்கிவிட வேண்டும். மற்ற மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, முதற்கட்ட நடவடிக்கையாக 60 மைக்ரான் தடிமனுக்குக் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.
 சுத்தமான காற்று, நீர் போன்ற தனிமனிதர்களின் உரிமைகளையும், மரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வேண்டிய சுத்தமான நிலம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த பிளாஸ்டிக் தடைக்கான சட்டமசோதாகூட போதுமானதாக இருக்காது. ஆதலால், அதைவிடக் கடுமையான சட்டதிட்டங்களை விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்து, அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
 - சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2009.
 சென்னை உள்பட, தமிழகத்தில் பல நகராட்சிகளில் வெள்ள நீர் கால்வாய்கள் அடைத்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும், கழிவுநீர் பாதாளச் சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதற்கும், கொசுக்கள் பெருகி மர்மக்காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற பலநோய்கள் ஏற்படுவதற்கும், விசிறியடிக்கப்படும் பைகள், கப்புகள், ஸ்பன்கள் போன்றவைதான் முதன்மைக் காரணம்.
 அதுபோல, பெரிய ஹோட்டல்கள் முதல் தெருமுனை கையேந்தி பவன்கள் வரை உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பேக்கேஜிங்குகளில் அல்லது பைகளில் பார்சல் செய்து தருகிறார்கள். உணவுப் பொருள்களின் சூடு மற்றும் எண்ணெய்ப்பதத்தால், பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான பல வேதிப் பொருள்கள், ரசாயன சாயங்கள் மற்றும் காரீயம், ஆர்சனிக், நிக்கல், மெர்க்குரி போன்ற உலோகங்கள் உணவுடன் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இவ்வாறு உண்பது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டது. அதேபோல, மீந்துவிடும் உணவுடன் பிளாஸ்டிக் பைகளையும் கால்நடைகள் சேர்த்து விழுங்கிவிடுகின்றன.
 அதனால், நகர்ப்புறம் மட்டுமல்லாது கிராமங்களிலும்கூட மேய்ச்சலுக்குப் போகும் கால்நடைகள் மற்றும் கன்றுக்குட்டிகள், நூற்றுக்கணக்கில் தமிழகத்தில் இறந்து வருவது நடைமுறையாகிவிட்டது. பிளாஸ்டிக் பொருள்கள் கால்நடைகளின் குடலில் தங்கிவிடுவதால், அவை கறக்கும் பாலில் உண்டாகும் நச்சுத்தன்மையை ஆராய தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் முற்பட்டு வருகிறது.
 இவ்வளவு ஆபத்துகள் கொண்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்றவை தடை செய்யப்பட்டால், கணிசமான வேலை இழப்புகள் ஏற்படும் எனும் வாதம் மிகத் தவறானது. மாறாக, தையல் இலை, வாழை இலை, தாமரை இலை மற்றும் மட்டை, பாக்கு மட்டை, துணிப்பை, காகிதப்பை, சணல்பை என்று பல விதங்களில் இயற்கைக்கு உகந்த பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். அதிக அளவில் சுய உதவிக் குழுக்களுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு பெருகும். அதோடு, தமிழக விவசாயிகளுக்கும், இவ்வகை மூலப்பொருள்களை விளைவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
 150 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட வங்கதேசத்தில், இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டால், பொதுமக்களும் சரி, உணவு விடுதிகளும் சரி அவசியமான மாற்று வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்வார்கள்.
 இப்பொழுது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாரித்துள்ள மசோதாவின்படிகூட, 40 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் சட்டமசோதா கொண்டு வர உள்ளது. ஆக, சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.
 இனி, எதிர்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு, தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தச் சுற்றுக்சூழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவில், அரசியல் வேறுபாடுகளைப் புகுத்தாமல் இருப்பது அனைவரின் கடமையாகும். சென்னையின் மேயரும் சரி, தமிழக அரசும் சரி தொலைநோக்குப்
 பார்வையுடன் முடிவெடுப்பார்களா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

இறைவழி மருத்துவம் யாருக்கானது.


மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமையைப் பற்றிய இறையச்சத்தை நன்மையாக கருதி சிந்தித்துணர்ந்து நன்மையை நாடுபவர்களுக்கே இறைவழி மருத்துவம்.

திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம். படித்தவர்கள் பலர், திருக்குறளில் நலவாழ்வு பற்றிய இறைவழி மருத்துவ-சித்த மருத்துவ நுட்பங்கள் மிக எளிமையாக விளக்கப் படுகின்றது. உணர்ந்து பின் பற்றுபவர் மிகச் சிலரே.

தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியாததா திருக்குறள். நம் நாட்டில் மக்கள் பணத்தைப் பயன்படுத்தி மருத்துவ காப்பீடு என்ற பெயரில் நடப்பது என்ன?

எந்த ஒரு நோயையும் குணப்படுத்த வக்கில்லாத மருந்து-அறுவை வணிகத்துக்கு மக்கள் பணம் விரையமாகிறது. மக்களின் உயிரும் உடலும் பலியிடப் படுகிறது.

இந்திய அரசின் சட்டப்பிரிவு மருத்துவம் மற்றும் அழகு சாதனங்கள் பற்றிய சட்டம் செட்யூல் J 51 படி எயிட்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, ஆஸதுமா, கல்லீரல் சார்ந்த நோய்கள், கர்ப்ப பை சார்ந்த நோய்கள, போன்ற பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்க தடைகள் இருந்தும் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப் பணம் விளம்பரங்களாகவும், விழாக்களாகவும், கருவிகளாகவும் தடுப்பு மருந்துகளாகவும் வீண்டிக்கப் படுவதும், மனித நலத்துக்கு எதிரான வணிகர்களின் பைகள் நிரப்ப படுவதும் ஏன்?

நம் நாட்டின் பல்கலைக்கழகங்கள் மனித எதிரிகளை வெளிப்படுத்தாமல அவர்கள் கொள்ளைகளுக்கு ஆதரவாக இருக்க காரணம் தமது செயல்பாடுகளுக்கு பெரிய வணிகர்களின் நிதி உதவியைச் சார்ந்திருப்பது தான்.

மக்கள் நலவாழ்வு பற்றிச் சிந்திக்காமல் இருக்க அனைத்து வழிகளிலும் (தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் போன்ற அனைத்து ஊடகங்களும்) தடுக்கப் படுகின்றனர். அடிமைக்கல்வி முறை, அடிப்படைத் தேவைக்கே(உணவு, தண்ணீர், உடை, வீடு) இவற்றுக்கே தொட்டுக் கொள் துடைத்துக் கொள் என்ற நிலையில் மக்கள் வாழ்க்கை.

காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை உழைத்தால்த்தான்- படித்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் எனும் நிலையில் மக்கள் வாழ்க்கை.

இதை எல்லாம் மீறி சிந்திக்க வாய்ப்பு பெற்றோர்தான் நலவாழ்வைத் தேடி நலம் பெறுகிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் விழிப்படையும் போது தான் தனி மனித விடுதலை சாத்தியம். இதற்கே என் எழுத்தும் பேச்சும்.

நீங்கள் குறிப்பிட்டது போல் போலியான தற்போதய மருத்துவ முறைகளையும், மனித நேயமற்ற அறிவியலையும் பழம் பொருள் காட்சியகத்தில் வைக்க போதுமான அறிவியல் மற்றும் நூட்பங்களுக்கு குறைவில்லை இந்த உலகத்தில்-நம் நாட்டில்.

ஆனால் மக்கள் தம் நிலை உணர்ந்தவர்களாக இல்லை. நீண்ட நாளைய அடிமைக் கல்வி, வாழ்க்கை முறை, தூய்ப்பு வெறி, இதில் கிடைப்பதாக நிணைக்கும் சுகம், இது கூட இல்லாமல் போய்விடுமோ எனும் பயம், என எல்லாம் தான் மனிதனை நல வாழ்வில் இருந்து தடுக்கிறது.

சிறிது துணிவும், விழிப்புணர்வும் போதும் நலவாழ்வைப் பெற.

நீங்களும் சுவைக்கலாம் இறைவழியை.

நண்பர்களே, இறைவழி மருத்துவம் பற்றி கேட்டிருந்தீர்கள், எங்கு யார்,எப்படிச் செய்கிறார்கள்? என்பது வினா.
மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமைகளை நன்கு சிந்தித்துணர்ந்து நண்மையை நாடுவோர்க்கே, சித்த மருத்துவம், இறைவழி மருத்துவம் பயன்தரும்.

இறைவழி மருத்துவத்தை பலர் இயல்பாக்ப் பயன்படுத்துகிறார்கள். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு, எல்லாம் விரைவில் சுகமாகிவிடும், அமைதியாக இருங்கள், இறைவன் நன்மையுண்டாக்குவான் என்று கூறுபவர்கள் இறைவழி மருத்துவம் செய்தவர்களாகிறார்கள். பெருமைக்காக, அந்த மருத்துவமனைக்குப் போ, இந்த மருந்துகளைச் சாப்பிடு, என்று நிலமை தெரியாமல் பயத்தையும், பதட்டத்தையும் ஊட்டி மேலும் குழப்புபவர்கள் துன்பத்திலிருப்பவரை மேலும் துன்பப் படுத்துபவர்களே.

கண்ட டாக்டர்ட எல்லாம் போய் மேலும், மேலும் துன்பத்தை இழுத்துகிடாம வீட்டில பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுட்டு ஓய்வெடுங்க சரியாகிடும் என்று சொல்பவர்களும் இறைவழி மருத்துவர்கள் தான்.
திருவள்ளுவர் சிறந்த இறைவழி மருத்துவரே, மருந்து பற்றிய குறள்களில் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் சுவையுங்கள் மருந்து தேவையே இல்லை என எளிமையாக நலவாழ்வக்கான வழிகாட்டுகிறார்.

நான் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து எந்த ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தியதில்லை. என் குழந்தைகளுக்கு மருந்துகளோ,தடுப்பூசிகளோ போட்டது இல்லை. என் குடும்பத்தினரோ, நணபர்களோ அலோபதி பக்கம் திரும்பியதில்லை.

தனக்குள் இருக்கும் இறையாற்றல் தன்னை குணப்படுத்தப் போதுமானது என்ற உணர்வை இறைவழி மருத்துவம் மூலம் பெற்றவர் யாரும் மருந்துகள் என்று எதையும் உட்கொள்வதில்லை. மேலும் அவர்கள் பிற மனிதர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ என்னுவதில்லை, தமக்கு வெளியே இறைவனைத் தேடுவதில்லை. தனது அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து வாழ்க்கையைச் சுவைப்பதையே இறைவழிபாடாக செய்வதுவருவதினால் அவர்களால் பிறர்க்கும் துன்பமில்லை.
நண்பர் சித்தர். பஸ்லூர் ரகுமான் மற்றும் அவரால் இறைவழியில் இணைந்தோரும் பல ஆண்டுகளாக  மக்களுக்கு இறைவழியில் வழிகாட்டி வருகிறார்கள். தங்களின் அனுபவத்தையும், ஆங்கில மருத்துவத்தின் கேடுகளையும்  அவரது ஹெல்த் டைம் மாத இதழ் மூலமாகவும், கூட்டங்கள் நடத்துவதன் மூலமாகவும், தொலைக்காட்சி நிகழ்சி (6,30 வெள்ளிக் கிழமை மாலை) மூலமாகவும் வெளிப்படுத்தி மக்களிடம் 
விழிப்புணர்வைத் தூண்டிவருகிறார். அவரது மாணவர்கள், இறைவழிமருத்துவம் பெற்றவர்கள் யாரும் சாதி மதம், இனம், என வேறுபாடு பார்பதில்லை. விழிப்படைந்த மனிதர்களையும் சூழலையும் நேசிப்பவர்களாகவே பார்க்கிறேன்.
சித்தமருத்துவம் என்பது சாகாக் கலையைப் போதிக்கும் தமிழ் அறிவியலின் ஒரு சிறு பகுதியே. மனிதன் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை உணர்ந்து, கலந்து, அதன் தன்மைகள்ப் பெறும் முயற்சியே சாகாக் கலை. இதில் வெற்றிபெற்றவர்கள் சித்தர்கள்.
உலகெங்கும் சித்தர்கள் இருக்கிறார்கள்.சீனாவின் லாவோட்சு தொகுத்துத் தந்த தாவோ, ஜப்பான் கொரியாவில் ஜென்,கார்லோஸ் வெளிப்படுத்திய டான் ஜுவானின் வழிகள் –இவை போல...
தாவோ சித்தர்கள் போல சொன்னால், ‘சொல்லப்பட்ட தாவோ உண்மையானதல்ல’ இறைவழியை உணரத்தான் இயலும். வாய்ப்பிருந்தால் மரபுவழி நலவாழ்வு மையம் வாருங்கள். பிறருக்கு நான் இறைவழியில் சுகப்படுத்துவதைப் பாருங்கள் நீங்களும் சுவைக்கலாம் இறைவழியை.