வியாழன், 2 பிப்ரவரி, 2012

வர்ம அனைத்து நாடுகள் மாநாடு கேட்க மகிழ்ச்சி தான்


விழிப்புணர்வற்ற முயற்சிகள் தீமையே தரும்


அன்பு ஆசானுக்கு,


தங்கள் மாணவன். தமிழவேள் வணக்கங்கள்


தாங்கள் வேத சத்தியை அறிந்தது பல்கலைக்கழகங்களில் அல்ல. உங்களைப்போன்ற சிறந்த மனிதரை எந்த பல்கலைக் கழகங்களும் உருவாக்க முடியாது. உங்களை உருவாக்கியவள் தங்கள் அன்னையே என்று அடிக்கடி கூறுவீர்களே..


வீட்டில் பெண்களிடம் இருந்த இருக்க வேண்டிய மருத்துவ அறிவை மருந்து வணிகர்கள் கையில் தருவது சரியா? இல்லை மீண்டும் மக்கள், தங்கள் மருத்துவத்தின் அறிவை திரும்ப பெற உதவுவது சரியா?


ஊர் பணத்தை பல இலட்சம் செலவு செய்து படித்த மருந்து வணிகர்கள் பிற மனிதர்களை அல்லது தன்னை ஒரு மனிதன் என நிணைப்பரா?

 படிப்பாளிகள் கையில் வர்ம மருத்துவம் மாட்டிக் கொண்டுள்ளது.சித்த மருத்துவத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் அதை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி ஒழித்து விட மட்டுமே உதவும்.


உடல் ஆற்றலைப்பற்றிய அடிப்படையை சிறிதும் அறியாது பயாஸ்கோப்பையும், உருப்பெருக்கியையும் வைத்துக்கொண்டு அழிவுக் கூத்தடிக்கும் வணிகர்களிடம் சான்றிதழ் வாங்கித் தான் வளர வேண்டிய கட்டாயத்தில் சித்த வர்ம மருத்துவம் இல்லை.


அது உங்களைப்போன்ற பல அறிஞர்களை உருவாக்கும் வித்தாற்றலுடன் தான் இருக்கிறது. இப்படி இருக்க...


நொண்டிப் பூணைக்கு புலி வேடமிட்டு அடுத்த நாட்டுக் காடுகளில் விட்டாலும் அதன் இயல்பு மாறாது.


சித்த மருத்துவத்தை மக்களிடம் இருந்து பிரித்து பல்கலைக்கழக பட்டப்படிப்பாக்கியதன் விளைவுகள் என்னவாயிற்று?


.ஒன்றுக்கும் ஆகாத ஆங்கில மருத்துவத்தினை தக்கவைக்கத் தனது மருத்துவத்தின் அடிப்படைஅறிவில்லாத அல்லோ-சித்த மருத்துவர்களை - தன் வியாபரத்துக்காக தனது வாழ்வின் மூலத்தை அழிக்கும் போலி மருந்து வணிகர்களாகத்தான் உருவாக்க முடிந்தது. 


ஆமாம்!! இனி மேல் அப்படிச் சொல்லக் கூடாது. ஏனெனில் போலி மருத்துவம் பார்க்கும் உரிமையை இவர்களும் போராடிப் பெற்று விட்டார்கள்.




இந்த நிலை நாளை வர்ம மருத்துவத்துக்கு வராதிருக்க அறிவை பரவலாக்குங்கள் மக்களிடம். வணிகர்களிடம் அல்ல.


வர்ம அனைத்து நாடுகள் மாநாடு கேட்க மகிழ்ச்சி தான் ஆனால் நடத்தும் முறை, அளவுகோள்கள், கலந்து கொள்பவர்கள், பயன்பெறுபவர் மக்களா? மக்களின் எதிரிகளா? 












2 கருத்துகள்:

  1. சரியாக சொன்னீர்கள்.....அறிவியல் என்பது எப்பொழுதும் மாறிக்கொண்டேயிருப்பது......ஒளியின் வேகம் தான் மிக அதிகம் என்பதே இறுதியாக இருந்தது . இப்பொழுது neutrino வந்துள்ளது....இதை போல நாளொரு மருந்தும் பொழுதொரு நோயும் கண்டு பிடித்ததை தவிர நவீன அறிவியல் வேறதையும் சாதிக்கவில்லை.....அதற்கு நமது உடல் நலம் தான் பகடைக்காயா. ???விழித்தெழுவோம்.....

    பதிலளிநீக்கு
  2. இன்றைய அரசாங்கங்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தையும் ஆங்கில மருத்துவம்போல நினைத்து சிலபஸ், பரிச்சை, மருந்து என பல விசயங்களிலும் வணிக மயமாக்கியதன் விளைவுதான் தங்களின் இந்த ஆதங்கம். இருந்தாலும் அரசுதான் நம் வாழ்வை தீர்மானிக்கும் முக்கிய காரணி என்பதால் இந்த சட்டத்துக்குள் எப்படி நமது பாரம்பரியம் மாறாமல் இந்த அறிவை கொண்டு செல்வது என ஒரு ஆய்வு மேற்கொண்டு அதை அரசாங்கம் மூலமே செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.