வியாழன், 15 ஜூலை, 2021

இறைவழியில் சுகம் பெற ...

தமிழவேள் ஆகிய நான் இறைவழியில் சுகமளிப்பவன்.

 நீங்கள், பல காலம் துன்பத்தில் இருந்து விடுபட பல்வேறு முயற்சி செய்தும் பலனின்றி, கடும்  உடல் வலியிலும், மன உழைச்சல்களிலும், பொருள் இழப்பினாலும், நொந்துபோய் இறுதியில் இதையும் முயன்று பார்ப்போம் என உதவி நாடி இங்கு வருகிறவர்கள்.,

எனது மரபுவழி நலவாழ்வு மையத்தில் இருந்து திரும்பும் போது உடல் வலிகளும் , மன துன்பங்களும்  இல்லாது மனதும் உடலும் லேசாகி மகிழ்வுடனும், தெளிவான இறை புரிதலுடனும் செல்வீர்கள் என உறுதியளிக்கிறேன்.  

 நான், இங்கு எனது மரபுவழி நலவாழ்வு மையத்தில்,  துயரரின் நோயைத் தடுப்பதற்கு, நோயை அழிப்பதற்கு அல்லது நோயை கட்டுப்படுத்துவதற்காக எந்த முயற்சியும்  எனது படிப்பறிவை பயன்படுத்தி செய்வதில்லை.

 துயரர் தங்களது உடனடி அல்லது நீண்டகால நோயிலிருந்து எளிதில் சுகம் பெற நான் வழி காட்டுகிறேன். நான் உடல், மன வலிகளில் இருந்து உங்களை விடுதலை செய்கிறேன். வாழ்வில் நம்பிக்கை கொடுக்கிறேன். உங்கள் உடல, மனத் துன்பங்களுக்கு முழுமையான தீர்வு தருகிறேன்.

 நான், உங்கள் நலவாழ்வுக்குள் நீங்கள் திரும்ப மென்மையான வழியில், சுகமான வழியில் அன்புடன் உங்களை அழைத்துச் செல்கிறேன். 

 நீங்கள் இங்கு வரும்போது, சுகம் பெற வேண்டும் என்ற விருப்பத்தோடும், தேவையோடும் வரவேண்டும். அப்போது தான், நான் இங்கு இறைவழியில்  உங்களுக்குப் பெற்றுத் தரும் சுகத்தை; நீங்கள் நன்றி உணர்வுடன் ஏற்றுக்கொள்ள முடியும், மகிழ்ச்சி கொள்ள முடியும். பெற்ற சுகத்தை கொண்டாட முடியும். 

 நான் நம் மரபின் அறிவியல் வழியில் உங்கள் உடல் இயல்புக்கு ஏற்ற பழக்க வழக்கங்களை உங்களுக்கு மீண்டும் கற்பிக்கிறேன். 

 நான் இயற்கைவழியில், உங்கள் மனதின் கேடுகளில் இருந்தும் உங்களுக்கு விடுதலை தருகிறேன். உங்கள் மனதின் இயல்பை திரும்ப பெற உதவுகிறேன். நான் உங்களுக்கு உங்களின் உயிர்த் தேவையான இறையாற்றலை,  இறை உணவைப் மீண்டும் பெறும் வழியை உணர்த்தி பின் சொல்லித்தருகிறேன். 

 நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் வாழ்நாள் முழுமையும் இனிதாய் வாழத் தேவையான விழிப்புணர்வையும், புரிதலையும் நான் மீண்டும் உங்களுக்கு தருகிறேன். 

 நான் இறைவழியில் இங்கு பெற்றுத் தரும் சுகத்தை, நீங்கள் வாழ்நாள் முழுதும் தக்கவைத்துக் கொள்ள வழி காட்டுகிறேன். 

 வருக...  இது ஓர் வாழ்வியல் பாதை. 

இறைவழியில் நம் மரபுவழி சான்றோர்கள், அறிவர்கள் வாழ்ந்து கற்ற நலவாழ்வுக்கான புரிதல்களை, இறை ஞானங்களை நம் நண்பர்கள், உறவுகள், வாரிசுகளின் நலத்துக்காக பகிர்ந்து, பழகிக் கொள்வோம்.

 இவண், 
தமிழவேள் நளபதி
 இறைவழி அறிவன் 
 கைபேசி; 93458 12080, 94447 76208

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.