செவ்வாய், 25 மே, 2021

உயிர்த் தேவை

அறியாமை என்பது என்ன? புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளாமல் இருப்பது அறியாமை அல்ல.  தெரிந்த விஷயங்களைச் செய்யாமல் இருப்பதே அறியாமை. "கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தால்" அது அறியாமை.

இப்பொழுது கொடூரமான அறியாமையின் விளைவாக உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு தெரிந்த இயல்பான நலமாகும் வழிகளை மறந்து, எதற்கும் ஆகாத அயல் முறைகளை பின்பற்றி, விட்டில் பூச்சி போல துன்பத்தை, மரணத்தை தழுவுகிறார்கள்.

இன்று உலகமக்கள் மீண்டும் தங்கள் மரபுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உலகில் எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் அவர்கள், தங்களுக்கான உடல், மனதைச் சுகம் ஆக்கும் வழிகளைத் தேடிக் கற்று, சிறப்பாக கையாண்டு, தங்கள் மருத்துவ முறைகளாக உருவாக்கி தங்கள் வாரிசுகளுக்காக வைத்திருக்கின்றனர்.

மக்கள்பல காலமாக அனுபவித்து, நற்பலன் கண்டுவரும் மரபுவழி நலமாக்கும் மருத்துவங்கள் அனைத்தையும், தற்போதுள்ள கார்ப்பரேட் வணிக அலோபதி முறையால் வயிறுவளர்க்கும் கேடானவர்கள் மதிக்காமல், தங்கள் சூழ்ச்சிகளால் மக்களிடம் இருப்தை மறக்கடித்து, தனது தான்தோன்றித்தனமான, அறிவியல் பூர்வமற்ற அழிவு முறைகளை மனிதர்கள் அனைவர் மீதும் கட்டாயமாக்கி உள்ளனர்.

இதை மரபை அறியாத தலைவர்களும், பணம் சம்பாதிக்க மட்டும் தெரிந்த படிப்பாளிகளும், இயற்கையை அறியாத, இறையை அறியாத, உணர்வற்ற "எடுப்பார் கைப்பிள்ளையாக்கிய படித்த மருத்துவர்களும்" தன் உணர்வின்றி செய்து வருகிறார்கள்.

கண்ணுக்கு முன், அலோபதியுடைய கேடுகள் காரணமாக பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இறந்த பின்னும், இன்னும் சிந்திக்க தெரியாத கபோதிகளாக, விட்டில் பூச்சிகளாக  உள்ளனர்.

இந்நிலையில், தம்மைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் தமக்குத் தெரிந்த, நாம் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தாம் பயன்படுத்தி பழகிய மரபுவழி சுகம் பெறும் முறைகளை, மீண்டும் பயன்படுத்தி தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

இனி நவீனம் படித்தவனை நம்பி பயனில்லை என்பதை நாட்டின் பேரிழப்புகள் காட்டுகின்றன.

நமக்காக சிந்திப்பதாக உலக அரசுகள் கூறுவது கேலிக்கூத்து என்று எல்லாரும் உணர்ந்திருக்கிறோம்.

சரி; இப்பொழுது நாம் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

நமது மருத்துவ அறிவை நாம் பயன்படுத்துவது,  அதை மேம்படுத்திக் கொள்வது, நம்மை சுற்றியுள்ள, தேவையை உணர்ந்த அனைவருக்கும்  சொல்லிக்கொடுப்பது, இவையே  இப்பொழுது மிக முக்கியமான தேவையாக உள்ளது.

இங்கு தமிழ் மண்ணில் ஐந்தறைப்பெட்டி மேலும் மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அதில் உள்ள, மூலிகைப் பொருட்களை பயன்படுத்துவதை அனைவரும் அறிந்திருக்கிறோம். 

ஐந்தறைப் பெட்டியில் உள்ள மூலிகைகள் ஐந்து மூலகங்களை சீராக்க உதவும்
ஐந்தறைப் பெட்டியில் நாம் தவறவிட்ட சில பொருட்கள் உள்ளன. அவற்றையும் உடனடியாக நம்ம அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் வாங்கி சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உயிர்காக்கும், சுகமளிக்கும், எளிமையாக  பயன்படுத்தும் நுட்பங்களை நம்வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளவேண்டும், பயன்படுத்த வேண்டும், மேலும், நம் வீட்டைச் சுற்றியுள்ள மூலிகைகளை மூலிகைகளைப் பற்றிய நமது அறிவைப் பயன்படுத்த வேண்டும், மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம்மை சுற்றியுள்ள நம் நாட்டு வைத்தியர்களை, வர்ம கலை அறிந்தவர்களை,  மதித்து அவர்களிடமிருந்து உயிர்காக்கும் "அடங்கல்" முறைகளை, எளிய மருத்துவ முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். 

மலர்த் தீர்வுகள் போன்ற இறை அருளை, இறைச்சத்தியை மீட்டுத்தரும் இறைஞானங்களை அனைவரும் கற்க வேண்டும்.

இறைவழி அறிவர்களுடனும், சுற்றியுள்ள சான்றோர்களுடனும் உள்ள உறவு எல்லா கேடுகளில் இருந்தும் நம்மை காக்கும்.

இந்த நேரத்தில்,  பணத்தாசையும்,கார்ப்பரேட் மாபியா கும்பலும் நம்மிடையே, நம்மவர் போல் உருவாக்கி உள்ள போலிகளையும், துரோகிகளையும் அடையாளம் கண்டு விலக்க-விலக வேண்டும்.
இவர்களை அடையாளம் காணும் வழி அவர்கள் வழிகாட்டுதல் நம் சுயசார்புக்கு இட்டுச்செல்ல உதவுமா, இல்லையா என்பது தீர்மாணிக்கட்டும்.

ஓர் அவசர நிலையில் எப்படி தன்னை காத்துக் கொள்வது என்பதை நம் மரபை அறிந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இன்னும் உள்ளது. இந்த சூழலில் இதை கற்கத் தவறி விட்டால் இனி என்றும் அது முடியாது.

நமது மரபுக்குத் திரும்புவது தற்போது உயிர்த் தேவையாகி விட்டது.
"தன் காலில் நிற்பது மட்டுமே" நமக்கு நல்வாழ்வை தரும்.

அன்புடன்,
தமிழவேள் நளபதி
இறைவழி அறிவர்
93458 12080, 94447 76208.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.