புதன், 1 டிசம்பர், 2021

வாழ்வியல் அறிவர்

தமிழவேள் வணக்கங்கள்.

அகிலத்த்தில் என்னுடன் பயனிக்கும் அனைத்து உயிர்களுடைய நலமும் எனது நலத்துடன் தொடர்புள்ளது என அறிந்ததால் பகிர்கிறேன்.

எனது கடந்த முப்பத்தைந்து  ஆண்டு மருத்துவத் தொழிலில் நான்  கற்ற மூலிகை மருத்துவம் , சித்த மருத்துவம், வர்ம மருத்துவ பயிற்சி, அக்குபஞ்சர், ரிப்ளக்சியாலஜி, மலர் மருத்துவம்  தந்த அனுபவம் மற்றும் படிப்பறிவின் ஊடாக நான் கண்டறிந்த உண்மைகளை உங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.

விழிப்புணர்வுடன் கவணித்த போது மருந்துகள், பத்தியங்கள், நுட்பங்கள் ஆகியவற்றால் நோய்கள் கட்டுப்படுத்தப் படுவதை, தடுக்கப்படுவதை, நீக்கப்படுவதை கண்டேன்; ஆனால்,  மகிழ்ச்சி, நிம்மதி, நலவாழ்வு ஆரோக்கியம்  போன்றவை எட்டாக்கனியாகவே இருப்பதை கண்டேன். நோய்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும்  வளர்வதையே, அல்லது மீளாத் துயரில்  மனிதன் அழுந்திக்  கிடப்பதையே  காண்கிறேன்.

அதே நேரம் மருந்து மாத்திரைகளின் , நுட்பங்களின் உதவியின்றி பல வேளைகளில்  சுகம் பெறும் நிகழ்வுகளையும் பார்க்க முடிந்தது. இதற்கான  காரணங்களை ஆழமாகத் தேடி, சான்றோர்களின்  வாழ்வியலைச் சிந்தித்துணர்ந்த போது இயற்கை மற்றும் படைப்பாற்றலின்  வழிகளையும்  மனிதப் பிறவியின் நோக்கத்தையும் பற்றிய புரிதலைப் பெற்றேன்.

எனது இயற்கை மற்றும் இறை  குறித்த புரிதலுக்கு பின்,  மனிதர்களின் உடல், மனத் துன்பங்களை நீக்கவும் அவர்களது ஆன்மத் தூய்மை மற்றும் படைப்பாற்றலுடன் உள்ள தொடர்பை  மேம்படுத்தவும் நன்மையை நாடி வருவோர்க்கு நான் உதவுகிறேன். கடந்த 2002 முதல்  இந்த  இறைப்பணியினை நான் செய்து வருகிறேன்.

நாளுக்கு நாள் எனது இறை பற்றிய புரிதல் மேன்மை பெறுகிறது. எனது  இறை பற்றிய புரிதலால் பெற்ற ஆற்றலை கொண்டு தேடல் உள்ளவரை இறைவழி  வாழ்வியல் அறிவராக உயர்த்தவும்  செய்கிறேன்.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தன்னை  உணரவும், தன்னில் உயரவும்  தகுதியுள்ளவரே.
ஆன்மாவின் குற்றங்களை நீக்கி, மனதின் கேடுகளை களைந்து தன் மனதின் உண்மையான இயல்பை உணர்பவர், தன் இயல்பில்  வாழ்பவர்  வாழ்வியல் அறிவராக மேன்மை பெறுகிறார்.

தொடர...
தமிழவேள்
9345812080, 9444776208

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.