சனி, 6 ஏப்ரல், 2024

தன்னை - இறையை உணர்தல்...

தமிழவேள் வணக்கம். 
 அன்பர்களே, 
 
நமது மரபில், எது ஒன்றைக் கற்றுக்கொண்டால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டதற்குச் சமமோ  அதை கற்றுக் கொடுப்பதற்கான ஆசிவக பள்ளிகள் - குருகுலவழிகளில் சாண்றோர்களால் நடத்தப் பட்டன. அரசர் முதல் அடிப்படை மக்கள் வரை  பேதமின்றி தன்னை  - இறையை உணர வாய்ப்புகள் இருந்தன. காலச் சூழலால்;  இன்றைய கல்வி, வசதிகளை மட்டுமே  தந்து வாழ்வைப்பறிக்கும் பணத்தேடலுக்கு மட்டுமே உதவுவதாகிப் போனது. 
 
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் மீண்டும் இறையை உணரும் தருணங்கள் - வாய்ப்புகள்  பல இறைவனால் அருளப்படுகிறது. இறை ஞானங்களை உணர்த்தும் சாண்றோர்கள் இல்லாததால் 
 இறையின் சுவையை உணராதவர்,  இறைத் தேடலில் ஈடுபடாமல் காலத்தை கடத்துகிறார். இவரது பிறவிப்பயனை உணராமல், இவ்வுலக வாழ்வின் மாயைகளில் தன்னிலை மறந்து சிக்கித் தவிக்கிறார். உடல், மன நோய்களில் சிக்கி தமக்கும் பிறருக்கும் பதராக அவர் வாழவு முடிகிறது. 
 
இவர்களது பொருள் சேர்ப்பு பிச்சைக்கார்களுக்கு கிடைத்த அறுசுவை உணவு போல யாருக்கும் பயன்படாது கெடுகிறது - அவர்கள் வாரிசுகளையும் கெடுக்கிறது. 
 
நான் உணர்ந்தறிந்த சித்தர்களின் வழியில், நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் இறைவழி மருத்துவம், மரபுவழி வாழ்வியல் என, தேடல் உள்ள பலருக்கு தன்னை உணரவும் , தனது மற்றும் பிற உயிர்களின்  உடல், மன துன்பங்களைத் தீர்ப்பதற்கும் வழிகாட்டி வருகிறேன். தனக்குள் உள்ள இறைத் தன்மையை உணர்ந்தவர் பிற உயிர்களுக்கும், சக மனிதருக்கும் நன்மையை நாடுபவராக, சுகமளிப்பவராக  வாழ்கிறார்கள் . இவர்களால் காலமும், இடமும் கடந்து நிகழ்காலத்தில் செயல்பட முடிகிறது. இவர்களால் அனைவருக்கும் நன்மையே... மகிழ்ச்சி... 
 
நான், தன்னை- இறையை உணரும் வித்தையை பலரும் பெற்று பயன் பெற விரும்புவதால், இன்னும் எளிய வழியில், தேடல் உள்ளவர்களுக்குச் சொல்லித்தர விரும்புகிறேன். அதற்காக ( 6 மாதம் பயிற்சி) வகுப்புகள் துவங்க உள்ளேன். 
 
இது வரை நான் பழகிய நண்பர்கள்,  கற்றவர்கள், இறைவழியில் சிகிச்சை பெற்றவர்,  நூல்வழி, வலைப்பூ, வாடஸ் அப், முகநூல்  வழி இறையாற்றல் குறித்த பதிவுகளைப் படித்தவர்கள், தினமும் இறையுடன் ஓர் நிமிட ஓன்றுகூடல் வழியாக இறையாற்றல் பகிர்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் இறைத் தேடலில் உள்ள அனைவரையும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அழைக்கிறேன். 
 
இந்த முயற்சி குறித்த ஆலோசனைகளையும், கலந்து கொள்ளும் விருப்பத்தையும், கருத்துகளையும் நலம் நாடும் நண்பர்கள், இறைவழி அறிவர்கள் மற்றும் அனைவரிடமும்  இருந்தும் வேண்டுகிறேன். எனது வாட்ஸ் அப் மற்றும் டெலகிராம் எண்  9444776208, 9345812080 க்கு விரிவாக தெரிவிக்கவும். வரும் 14.04.2024 ஞாயிறுக்குள்  உங்கள் பங்களிப்பை தருக. 
நன்றி... மகிழ்ச்சி... 
அன்பை மறவா,  
தமிழவேள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.