வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

சுகமாகும் நோய்கள் அனுபவ பகிர்வு-நுரையீரல் நோய்கள்- இளைப்பு, இரைப்பு, காசம், வரட்டிருமல், விடாத தொடர் தும்மல், தோல் நோய்கள்

நுரையீரல் நோய்கள்- இளைப்பு, இரைப்பு, காசம், வரட்டிருமல், விடாத தொடர் தும்மல், தோல் நோய்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரிஷி எனும் ஒருவர் தன் மனைவி, மகளுடன் வந்தார். தனது காலில் பாதங்களின் மேல்புறத்திலுருந்து முழங்கால்களின் அடிப்புறம் வரை நிறம் கருப்பாக மாறியிருந்ததையும், அரிப்பாகவும், நீர் வடியும் புண்ணாகவும் சில பகுதிகள் இருப்பதையும் காட்டினார். மேலும் கடும் முதுகு வலியாலும் அவதிப்பட்டார்.

 அரிப்பு குறையும் காலத்தில் மூச்சுத்திணரலுடன் கூடிய இரைப்பு அதிகமாவதாக கூறினார்.

 இது நுரையீரல் மற்றும் மண்ணீரல், சிறுநீரகங்களின் பலவீனத்தால் வருவது. பரபரப்புணர்வால் நுரையீரல் பாதிக்கப்படும். அதீத கவனத்தால் மண்ணீரல் பாதிக்கும். பயத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.

 இவருக்கு இது வந்த காரணம், இவரது வேலை; பகல் முழுவதும் சிறிய மோட்டார் சைக்கிளில் வெயிலில் சுற்றி கடைகளுக்கு இவர் வீட்டில் தயாரிக்கும் தின்பண்டங்களை வினியோகிப்பது - இரவில் தின்பண்டங்களைச் செய்து கட்டுவது.


தனக்கு முடியாமல் படுத்துவிட்டால், குடும்ப வருமானத்தில் பாதிப்பு வந்துவிடுமோ எனும் பயம் இவரது சிறுநீரகங்களை பாதித்தது. 

சுவைக்காமல் சாப்பிடுவது, வேலையில் அதீத கவனம், இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவது, இட்லி தோசை போன்ற உணவுகளையே வேலைச் சுருக்கத்துக்காக தினம் காலையும், இரவும் சாப்பிடுவது போன்றவை மண்ணீரல் பலவீனத்துக்கு காரணமாகியது.


இவரது மனைவி கர்ப்ப பை கோளாறுகளாலும், தலைவலி, கடும் தோள்பட்டை வலி, மலச்சிக்கல், கடும் சளியாலும், வயிற்று வலியாலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கால்களில் நீர்த் தேக்கத்தினால் வீக்கம் இருந்தது.

காரணம்; தலைக்கு குளிக்காமல் உடலுக்கு மட்டும் நீர் ஊற்றிக் கொள்வது இவரது அனைத்து உடல் கருவிகளையும் பாதித்து தலை நீரேற்றத்துக்கு காரணமானது.

 வேலை பார்க்கும் போது ஒருபக்கம் அதிக அழுத்தம் கொடுத்ததால் கைவலி அதிகம் ஆனது. உணவுப்பழக்கம், இரவு அதிகநேரம் விழிப்பது போன்றவை மலச்சிக்கல், வயிற்று வலி, மற்றும் கர்ப்ப பை கோளாறுகளுக்கு காரணமானது.

இவர்கள் மகள் நாளும் காலை எழுந்ததும் தொடர் தும்மல்களால் பாதிக்கப்பட்டிருந்தார். கடுமையான தலைவலி, ஏற்கனவே இதய நோய்க்காக ஆங்கில மருத்துவத்தில் மார்பிலிருந்து வயிறுவரை அறுவை செய்யப்பட்டிருந்தது.

 அதிக கோபம், படபடப்பு, தினமும் பள்ளியில் உடன் படிப்பவர்களுடன் சண்டை, கைகால் வலி, சிறுநீர்ப் பையில் கற்கள், மூலம், மலச்சிக்கல், உடல் எரிச்சல், கைகால் வலி என பல தொல்லைகள்.

 ஆனால், அந்த சிறுமி, தான் அப்போது படித்துவந்த 10 வகுப்புத் தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் வாங்க வேண்டும் என தன் விருப்பத்தை கூறி, கடுமையாக உழைத்துப் படித்தாலும் தேர்வு நேரத்தில் மறந்து விடுகிறது என்று கூறி அதை சரிசெய்ய வேண்டுமென்றாள்.

காரணம் இரவு 2 மணிவரை விழித்துப் படித்தது இதய உறை, முக்குழிவெப்ப பாதை, பித்தப்பை, கல்லீரல் போன்றவற்றை பலவீனமாக்கியிருந்தாள். இதனால் உடல் அதிக வெப்பமடைந்து தசை சோர்வும், மன, உடல் எரிச்சலும், ஞாபக மறதியும் அதிகமாகியிருந்தன. 

இவற்றுக்கு அவ்வப்போது எடுத்த எதிர்முறைய மருத்துவம்[n1]  தொல்லைகளை அதிகமாக்கியிருந்தது. இதனால் நுரையீரலும், பெருங்குடலும் பாதிக்கப்பட்டு இருந்தது. குளியல் மற்றும் உணவுப்பழக்கம் சீரில்லாததால் வெட்டைத் தன்மையும் இவளது பெற்றோரைப்போல் இவளும் பாதிக்கப்பட்டிருந்தாள்.

முதலில் இவர்கள் மூவருக்கும் அவர்களது உடல் துன்பத்துக்கு காரணத்தை விளக்கி புரியவைத்தேன். பிறகு சித்தர்களின் குணமளிக்கும் முறையில் இறைவழிமருத்துவம்[n2]  மூலம் அவர்களின் வலிகளையும், மனச் சோர்வையும் நீக்கினேன்.

வலிநீங்கி புத்துணர்வும், நோய்கள் நீங்கி வாழ இறையாற்றலிடம் நன்றியுணர்வும், இறைவழிபாடு எனும் நமது அடிப்படைத் தேவைகளை விருப்பத்துடனும், இறையச்சத்துடனும் சுவைத்தால் நன்மையுண்டாகும் என்ற மனத்தெளிவும் பெற்றார்கள்.

அந்த சிறுமியை இரவு 7 மணிக்கு மேல் படிக்க வேண்டாம்-கண்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் இரவில் 8 மணிக்குள் தூங்கி பின் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிக்கும் படி கூறினேன். 

மூவரையும் காலையிலும் இரவிலும் உணவுக்கு முன் நன்கு குளிர தலைக்கு குளிக்கும் படி கூறினேன். 8 மணிக்குள் உணவை முடித்துக்கொள்ள சொன்னேன். 

சுவைத்து உண்ணுவதின் சிறப்பை – தேவையை கூறினேன்.

நான் அவ்வப்போது இவர்கள் உடலில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களுக்கு ஏற்ப குணமளிக்கும் மலர்களின் சாரத்தை பயன்படுத்தினேன். அவை,
 செம்பரத்தை மலர் சாரம் - கல்லீரல், பித்தப்பை, இதயம் முதலியவற்றில் வேலை செய்து, உடல் மன எரிச்சலை நீக்கும், மன துணிவைக் கொடுக்கும். இதய நோய்களை நீக்கி வலு சேர்க்கும்.

அசோகா மலர் சாரம் – கரப்ப பை சார்ந்த அனைத்து நோய்களையும் நீக்கி வலுவாக்கும்.

சீந்தில் –பவளம் சாரம் – நுரையீரலை தூய்மையாக்கி வலுப்படுத்தும். மண்ணீரலை வலுப்படுத்தும்.வேலிப்பருத்தியும், பிரண்டை உப்பும் வயிற்றுத் தொல்லைகளை, வாய்வுத் தொல்லைகளை நீக்கும்.

நிலவாகை மலர் சாரம் – மலக் கட்டை நீக்கும், தோல் நோய்களை தீர்க்கும்.
வெண்தாமரை குறிஞ்சி சாரம் - கல்வி ஞானத்தை உண்டாக்கும், நுரையீரல், இதயத்தில் வலு சேர்க்கும்.

அவர்கள் தங்கள் உடலுக்கு ஏற்புடையவழியில் தங்களை மாற்றிக் கொண்டதற்கேற்ப விரைவில் நலம் பெற்றார்கள்.

 அந்த பெண்ணும் தனது பள்ளியில் முதல் மாணவியாக நல்ல மதிப்பெண் பெற்று தேறினாள். 

மற்ற மாணவிகளுடன் இருந்த சண்டைகளெல்லாம் தீர்ந்து தனது அடுத்த பிறந்த நாளில் பல தோழிகளுடன் கொண்டாடும் போது இதை கூறி வியந்தாள்.

மீண்டும் சுகமாகும் நோய்கள் தொடர்ந்து பகிர்வோம்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி-93458 12080
thamizhavel.n@gmail.com






 [n1]அலோபதி மருத்துவம். இது உயிராற்றலுக்கு எதிரானது. உடலில் நோய்கள் வருவதற்கு காரணம் அறியாமல் அவற்றுடன் போராடி வாழ்நாள் முழுவதும் நோய்களைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவும் உதவுவது. குணமளித்தல் எனும் நிறைவின்றி சிகிச்சை எனும் நிலையிலேயே வைத்திருப்பது.



 [n2]தன்னில் பிறரைக்காணும் சித்தர்களின் முறை. எண்ணங்கள் மூலம் இறையாற்றலுடன் தொடர்பு கொண்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் குணம்பெறும் ஆற்றலைத் தூண்டி சுகமளிப்பது.
இது குணமளிப்பவர் மருத்துவர் எனும் நிலையிலிருந்து விலகி, இறையாற்றலை பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வது ஆகும்.

2 கருத்துகள்:

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.