வெள்ளி, 25 செப்டம்பர், 2020

இதழ்-11 மலர் மருத்துவம் இறைவழி அறிவரின் பார்வையில் - தமிழவேள் நளபதி

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.

தன்னை உணர மலர்கள் செய்யும் உதவி

  

          மலர்களின் இயல்பு தனது வாரிசுகளுக்கு தன் முழுமையை  அகிலத்தின் நினைவகத்தில் விட்டுச் செல்வது ஆகும்.  மலர்களின் தூய்மையும்அழகும், மென்மையும் பார்ப்பவர்  தமது துன்பங்களை மறக்கச் செய்து அவர் உள் ஓர்  மலர்ச்சியை  ஏற்படுத்துகிறது.

 

ஒவ்வோர் மலரும்  நமக்குள் பல்வேறு நிலையிலான மலர்ச்சியை உண்டாக்குகின்றது என்பதை நமது மரபு வழி அறிவியல்  அறிந்து பயன்படுத்தி வருகிறது.

 

ஆன்மீக வழிபாட்டிலிருந்து போர்க்களம்  வரை பல்வேறு வகையான மலர்களை நம்மவர் அதன் தன்மை அறிந்து பயன்படுத்தினர்.

 

நமது மரபுவழி மருத்துவத்தில் மலர்களை  பயன்படுத்தி பல துன்பங்களை நீக்குதல் அறிவோம்.

 

இது போல்  இங்கிலாந்து நாட்டில் மலர்ந்த மலர்களின்  தன்மையை உணர்ந்த எட்வர்ட் பாட்ச் எனும்  இறையை உணர்ந்த அறிவர் மனித மனதின் கேடுகளை நீக்கி  இயல்பு நிலைக்கு திருப்ப  37 வகையான மலர்களையும், ஓர் பாறை நீரையும்  பயன் படுத்தி  வெற்றி பெற்று இருக்கிறார் , அவரது மலர்  தீர்வுகள்  மிக எளியது அற்புத கண்டுபிடிப்பு.  மனிதனுக்கு வரும் அனைத்து மனக் கேடுகளையும் களைவதால், மனிதன் நலமாக வாழ இந்த மலர் தீர்வுகள் போதும் என்பது  அவர் துணிபு.

 

இது பற்றி சற்று விளக்கமாக பார்க்கலாம் . மேலும், நமது மரபில் விளைந்த  மலர்களின்  பயனையும்  அனுபவங்களையும் இணைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.