வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

மரபுவழி நலவாழ்வு மையம்,

பதஞ்சலி நல மையம், மேடவாக்கம் மற்றும் மரபுவழி நலவாழ்வு மையம், ஆவடி
இணைந்து நடத்தும் நலவாழ்வுக்கான பயிற்சிகள்


 நோயற்ற வாழ்வுக்கான எளிய பாதைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். சில பத்தாண்டுகளாக நாம் அவ்விதிகளை மறந்து தவறான பாதையில் வெகுதூரம் வந்துவிட்டோம். விளைவு:

·         ஆரோக்யமுள்ள குழந்தைகள், சிறுவர், இளைஞர்களையும், உடல் வலி, மனத் துன்பம் இல்லாத நடுத்தர வயதினரையும் பார்க்க முடியவில்லை.
·         ‘முதியவர்களின் கடைசிக் காலம் நமது காலம் முழுவதும் நினைத்து மிகவும் வருந்தக்கூடியதாக உள்ளது.
·         நமது வருவாயில் பெரும் பங்கு நவீன மருத்துவச் சோதனைகளுக்கும், நிரந்தரத் தீர்வு தராத புதிய நோய்களைத் தரும் மருந்துகளுக்கான செலவுகளாக வீணாகிறது.
·         எவ்வளவு பணம் இருந்தாலும் நலம் தரும் நீரும், நஞ்சில்லாத சுவையான உணவும், மன நிம்மதியும், நல்ல நண்பர்களும் இல்லை.

இந்த நிலைமாற வேண்டும்

Ø சுகமான வாழ்வு பெற வழி என்ன? உடல் நலனும், மனநலனும் கொண்ட அழகான குழந்தைகளை வலியின்றி சுகமாகப் பெற்றுக் கொள்வது எப்படி?
Ø குழந்தைகள், பெற்றோர்களின் உடல், மனநலத்தைக் காப்பது எப்படி?
Ø பக்க விளைவில்லாத எளிய மருத்துவ முறைளை கற்றுக் கொள்ளது எப்படி?
Ø ஓய்வுக்கான, மகிழ்ச்சிக்கான நேரம் ஒதுக்குவது எப்படி?
Ø எளியவழிகளில் நலவாழ்வுக்கான பொருளீட்டுவது எப்படி?
Ø சேர்த்த பணத்தை நமது குடும்ப நலனுக்காகப் பயன்படுத்துவது எப்படி?
Ø நலவாழ்வினை பெற நினைப்பவர்களின் துணையை - உதவியைப் பெறுவது எப்படி?

என தேடும் நாம் மிக பலர்! நாம் நலவாழ்வுக்குத் தகுதியானவர்கள். நம்முடைய மகிழ்ச்சிக்கான பாதைகளை கண்டறியவும், ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டவும், பகிர்ந்து கொள்ளவும் உதவுவதே மரபுவழி நலவாழ்வு மையத்தின் நோக்கம்.

இடம: மரபுவழி நலவாழ்வு மையம், எண். 31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600 054

நேரம். காலை 10.00 முதல் 1.00 மாலை 4.30 முதல் 7.00

புதன், சனி தவிர மற்ற நாட்களில் முன் அனுமதி பெற்று வருக.

 கை பேசி எண்: 93458 12080,; 94447 76208.

மின்னஞ்சல்thamizhavel.n@gmail.com

வலைப்பதிவு:  http://siddhahealer.blogspot.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.