செவ்வாய், 11 ஜனவரி, 2011

மனிதன் மனிதனுக்குக் கொடுக்கும் இலவசமே எ ல்லா கேடுகளுக்கும் காரணம்

மனிதன் மனிதனுக்குக் கொடுக்கும் இலவசமே - எல்லாக் கேடுகளுக்கும் காரணம்.









ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் -எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய் ?
நான் கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கைய ஓட்ட முடியும் ?

அவர் சிரித்தபடி சொன்னார் - என்னை பார் 1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிவிடுவேன் .

நேரம் போகவில்லை என்றால் tv பார்பேன் .
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் போவேன்
உயர் சிகிச்சை பெற்றுடிவேன் ராஜ மரியாதையுடன் .

உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?

முதலாமவர் சிரித்தபடி யார் தெரியுமா ..?? தமிழ்நாட்டு குடிமகன்

என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் .

சமைப்பதற்கு gas அடுப்பு இலவசம்

பொழுதுபோக்கிற்கு இலவச Tv இலவச மின்சாரத்துடன்

குடும்பத்தோடு உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்...

எதற்காக உழைக்க வேண்டும் ..?

நான் கேட்டான்- உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன -?

பலமாக சிரித்தபடி சொன்னான்

மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவசம்
குழந்தைக்கு சத்துணவு இலவசம் , படிப்பு சீருடையுடன் மதிய உணவுடன் முட்டையும் இலவசம் , பாட புத்தகமுடன் பள்ளி செல்ல இலவச பஸ் பாசும் இலவசம்.
பெண் பருவமடைந்தால் திருமண உதவி தொகை 25000 இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,

தேவையென்றால் மாப்பிளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்

மகள் பிள்ளை பெற்றால் இதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்..

நான் எதற்காக உழைக்க வேண்டும்...??

வியந்து போனேன் நான் !!!

என் உயிர் தமிழகமே அவ்வளுவு காலம் தொடரும் இந்த நிலை ...??

இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு .. ஒன்று கையுட்டு மற்றொன்று பிச்சை ..

இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ..??

உழைக்காமல் உண்டு சோம்பேறியாய் போகிறாய் - இலவசம் நின்றால் உன் நிலைமை !!

உழைப்பவர் சேமிப்பை களவாட நீ துணிவாய்

இந்த நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்அமைதிபூங்கவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் ..

இன்னும் வெகு தொலைவில் இல்லை தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!
நாளைய தமிழகம் நம் கையில் !! உடன் பிறப்பே சிந்திப்பாய் !!! மனம்
வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!
நன்றி . பிரின்ஸ் எட்வின் தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.