வெள்ளி, 31 டிசம்பர், 2010

நீங்களே இல்லாத போது நாங்கள் எப்படி இருப்போம்!!!?



அழகான விளம்பரத்தில் வரும் மாடல்களின் - நாங்கள் இருக்கிறோம் எனும் விளம்பரத்தைப் பார்க்கும் போது நீங்கள் இருக்கீங்கப்பா நாங்க இருப்போமா என என்னாதவர்கள் குறைவே அவர்களுடைய சிந்தனைக்காக நான் படித்ததை தருகிறேன்

பற்களைப் பேணும் முறை பற்றி இறைவழி மருத்துவர்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

நலமாய் வாழ-எளிய வழிகள் simple way to get - health



 




நமது நலன் காக்க பல நுட்பமான-எளிய வழிகள் பற்றிய ஞானங்களை படைப்பாற்றல் கருணையோடு மனிதனுக்கு வழங்கியுள்ளது. அவற்றுள் ஒன்று தான் சித்தர்கள் வளர்த்த வர்மம் எனும் அறிவியல்.
உடலில் உள்ள பல சத்திகளை –அவற்றின் இயக்க நுட்பங்களை மக்களுக்கு எளிய முறையில் விள்க்கிச் சென்றவர்கள் நம் முன்னோர்கள்.

அந்த நுட்பங்களின் அடிப்படையில் உருவானது தான் அழுத்தும் முறை சிகிச்சைகள்.
சில ஆண்டிகளுக்கு முன் தேவேந்திர ஓரா என்பவர் எழுதிய HEALTH IN YOUR HAND புத்தகத்தை படித்தேன். அதில் அழுத்த முறை சிகிச்சை பற்றிய சில பகுதிகள் சிறப்பாக இருப்பதை உணர்ந்து பயின்றேன்.

அழுத்த முறை சிகிச்சை பற்றிய அறிவு எளிய முறையில், நோய் அறிவதற்கும், அறிந்த நோயைத் தீர்ப்பதற்க்கும் உதவியது. எனது புரிதல் படி அதை தொடர்ந்து பயன் படுத்தியதில் சில நுட்பங்களை அறிய முடிந்த்து. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த படத்தில் உள்ளபடி,

    1. மூளை (BRAIN)
    2. மூளை நரம்புகள் (mental nerves)
    3. பிட்யூட்டரி (Pituitary gland)
    4. பீனியல் (pineal gland)
    5. தலை (head nerves)
    6. தொண்டை(throat)
    7. கழுத்துப் பகுதி (neck)
    8. தைராய்டு சுரப்பிகள் (thyroid glands)
    9. முதுகெலும்பு (spine)
    10. மூலம் (piles)
    11. புரஸ்த கோளங்கள் (prostate glands)
    12. ஆண் பிறப்புறுப்புகள் (penis)
    13. பெண் பிறப்புறுப்ப (vagina)
    14. கர்ப்ப பை (uterus)
    15. விதைப் பை, சிணை (testicles , ovaries)
    16. நிண நீர் சுரப்பிகள் (lymph glands)
    17. இடுப்பு, முழங்கால்கள் (hip, elbows)
    18. சிறுநீர் பை (urinary bladder)
    19. சிறு குடல் (Small Intestine)
    20. பெருங்குடல் (Large Intestine/colon)
    21. குடல் வால் (appendicitis)
    22. பித்தப் பை (gall bladeer)
    23. கல்லீரல் (liver)
    24. தோள் பகுதி (shoulder)
    25. கணையம் (pancreas)
    26. சிறு நீரகங்கள் (kidney) 
    27. வயிறு (stomach)
    28. அட்ரீனல் சுரப்பி (adrenal)
    29. உதர விதாணம் (solar plexus)
    30. நுரையீரல் (lungs)
    31. காதுகள் (ear)
    32. சக்தி தூண்டல் (energy)
    33. காது நரம்புகள் (ear narves)
    34. குளிர்ச்சி (cold)
    35. கண்கள் (eyes)
    36. இதயம் (heart)
    37. மண்ணீரல் (spleen)
    38. தைமஸ் சுரப்பிகள். (thymus glands)
     
இவற்றின் சத்தி தொடர்புக்கான இடங்களை மேலுள்ள உள்ளங்கையின் படங்களில் பார்க்கலாம்.

இப்புள்ளிகளை மிக மென்மையாக அழுத்தித் தொடும் போது அவ்விடத்தில் வலி தோன்றுவது அந்த குறிப்பிட்ட பகுதியில்- உறுப்பில் உள்ள நலக் குறைவை காட்டுகிறது.

இந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் எந்தவிதமான துன்பங்கள்-நலக் குறைபாடுகள் இருப்பினும் அதற்கான சத்திப் புள்ளியை மிக மென்மையாகச் சில வினாடிகள் தொடுவதன் மூலம் அத் துன்பத்தை நீக்கிக் கொள்ள முடியும்.

குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து உடனடியாகவோ, சில நாட்களிலோ உடல் நலம் முழுமையாக கிடைக்கும் என்பது எனது பல ஆண்டு சோதனைகளின் முடிவு.

உதாரணமாக சில,

குடல் வால் (apandisis)



 

சில நாட்களுக்கு முன் 15 வயதுள்ள சிறுவனை, கடும் வலியுடன் அவனது பெற்றோர் கூட்டி வந்தனர்.

அவனுக்கு heகுடல் வால் (apandisis)
வீங்கிப் பழுத்து மோசமான நிலையில் (4 வது நிலை என்றனராம்) இருப்பதால், 'உடன் அறுவை செய்து நீக்க வேண்டும் இல்லையெனில் மிக கடுமையான விளைவுகள் ஏற்படும்' என ஆங்கில மருத்துவர்கள் கூறியதால், அறுவைக்கு நேரம் குறித்தவர்கள்; பக்கத்து வீட்டில் (இறைவழி மருத்துவம் பெற்று- அனுபவம் உள்ளவர்கள்) கூறியதைத் தட்டமுடியாமல் அவர்களின் வற்புறுத்தலுக்காக வந்திருந்தனர்.

அறுவைச் சிகிச்சை தான் ஒரே தீர்வு என நம்பி இருந்த அவர்களிடம், இது ஒரு எளிமையான விசயம் தான் எளிய மூலிகை மருந்துகளாலோ, வர்ம மருத்துவத்திலோ, குடல் வாலில் வரும் புண் எந்த நிலையில் இருந்தாலும் சரி செய்ய முடியும் என விள்க்கினேன்.

இது உடனே தோன்றிவிட்ட துன்பம் அல்ல. நீண்ட காலமாக இதற்கான துன்பங்கள் – வலிகள் மற்றும் பல வழிகளில் உடல் நமக்கு இந்த தொல்லை வரப் போவதை உணர்த்த முயலும் நீங்கள் சரியான விழிப்பு நிலையில் இல்லாத்தால் தான் இதை இந்த அளவு முற்ற விட்டிருக்கிறீர்கள் என விளக்கினேன்.

அந்த சிறுவனும் நீண்ட நாளாக விட்டு, விட்டு வயிற்றின் வலதுபுறம் வலி வந்ததாகவும் அவ்வப்போது ஆங்கில மருந்துகள், என்ன நோய் எனத் தெரியாமலேயே சாப்பிட்டு வந்த்தையும் சொன்னான்.

பிறகு கை அழுத்த முறைப்படி வலது கையில் உள்ள 21 ம் எண் குறிப்பிடும் பகுதியில் கடுமையான வலி இருக்கும் தொட்டுப் பார் என்றேன். தொட்டுப் பார்த்துவிட்டு நன்றாக ஊசியில் குத்துவது போல் வலியை உணர்வதாக கூறினான். இந்த இடத்தில் வலி நீண்ட காலத்துக்கு முன்பே இருந்து இருக்கும் ஒரு வர்ம மருத்துவரிடம்- அல்லது அக்குபஞ்சரிடம் சென்றிருந்தால் இது அப்பொழுதே தீர்க்கப் பட்டிருக்கும்.

குடல் வால் பகுதியில் கழிவுகள் தேக்கத்தால் தான் இந்த நிலை இதை சரிசெய்ய அனுபவம் உள்ள பெரியோர் வாழைத்தண்டுச் சாற்றுடன் விளக்கெண்ணெய் கல்ந்து குடிக்கச் சொல்வார்கள். நாள் இடைவெளியில் ஒன்றிரண்டு முறை சாப்பிட்டாலே குடல் வாலில் தேங்கியிருந்த கழிவுப் பொருள் நீங்கிப் புண்ணும் ஆறி விடும்.

இறைவன் தேவை இல்லாமல் ஒன்றை படைப்பதில்லை. தனக்குத் தெரியாததை தேவை இல்லை என்று கூறும் முட்டாள் தனமான மனித அறிவை நம்பி அறுத்துப் போட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் ஊணமாகி அதன் பாதிப்புகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றேன்.

பின் இறைவழி மருத்துவ முறையில் வலியை நீக்கி விட்டு உள்ளங்கையில் உள்ள 21 எண் பகுதியை மென்மையாக சில விணாடிகள் காலையும் மாலையும் தொடும் படி கூறினேன். ஒரு வாரத்திற்குள் முழுமையான சுகம் பெற்றான் சிறுவன். அதற்கு மேல், அவன் கையில் 21ம் எண் பகுதியில், வயிற்றில் வலியோ துன்பமோ இல்லை. நண்மையை நாடுவோர்க்கு எவ்வளவு எளிய துன்பமற்ற வழிகள் உள்ளது பாருங்கள்!


 
புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய் (prostate glands)

 

இது பொதுவாக வயதான மனிதர்களுக்கு வரும் தொல்லை. இதை சதையடைப்பு அல்லது நீரடைப்பு என்பர். விந்துப் பை மற்றும் சிறுநீர் பையிலிருந்து வெளியேற்றும் குழாய்கள் சேரும் இடத்தருகே உள்ளது. இது விந்தையும் சிறுநீரையும் முறையாக வெளியாக்க உதவுகிறது. சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக சிறுநீர் பாதையை சூழ்ந்து காணப்படும் பரஸ்தகோளம் என்னும் புராஸ்டேட் கோளத்தின் வீக்கமே முதுமையில் தோன்றும் சிறுநீர் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. புராஸ்டேட் திரவத்தை தாங்கி, விந்து திரவத்துடன் இணைந்து, உறவின் போது சீராக வெளிப்படுவதற்கு உதவியாக இருக்கும் இந்த கோளங்கள் முதுமையின் காரணமாக சற்று பெருக்கின்றன. அத்துடன் இதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து, கடினமாகி வீக்கமடைந்து, ஆண்களின் சிறுநீர் வெளியேறும் பாதையை இறுக்கி பிடிக்கின்றன.







 

இதனால், சிறுநீர் பையில் நிறையும் சிறுநீரானது வெளியேற இயலாமல் சிறுநீர் பையின் உள்ளேயும், சிறுநீர் பாதையை நோக்கியும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துவதால் முதியவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால், புராஸ்டேட் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி சிறுநீர் பையில் முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் தங்கி விடுவதால், சில மணி நேரங்களில் பல முறை எழுகின்றனர். இதனால், அவர்கள் தூக்கம் கெடுவதுடன் சுற்றியுள்ளவர்களும் தொல்லையாகி அவர்களும் எரிச்சலடையும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த தொல்லைகள் மக்களால் கல்லடைப்பு, சதையடைப்பு (prostate glands) என்று கூறப்படுகின்றது. இதற்க்கு எத்தனையோ எளிய மூலிகை மருந்துகள் உள்ளன.



சிறு பீளை, மற்றும் சிறு நெருஞ்சில் செடிகளை வேருடன் பிடுங்கி நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக் கொள்க. இரண்டும் சேர்ந்த 100கிராம பொடிக்கு 10 கிராம் மிளகும், 10 கிராம் சீரகமும் பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். காலை, மாலை உணவுக்கு முன் 5கிராம் பொடியை 2 குவளை நீரிலிட்டு அரைக்குவளையாக காய்ச்சி வடித்துக் குடிக்க புரஸ்த கோளங்களின் வீக்கம், புண், புற்று நீங்கி சுகமடைவார்கள்.



மேலும், அனைத்து சிறு நீரக கொளாறுகளையும் இந்த மூலிகைகளை கொண்டு தீர்க்க முடியும்.

இங்கு உள்ளங்கையின் படத்தில் காட்டிய 11 ம் எண்ணுக்கான இடத்தில் வீக்கம் வலி இருப்பின் புரோஸ்டேட் சுரப்பியில் நலமற்ற தண்மை இருப்பதை உணரலாம்.

அந்த இடத்தினை காலை, மாலை சில விணாடிகள் மிக மென்மையாகத் தொடுவதன் மூலம் புரோஸ்டேட் தொல்லைகள் எதுவானாலும் மிக விரைவில் சீராகும்.


 

மூலத்துக்கு (piles)

 

மூல நோய் என்பது ஆசனவாய் பகுதியில் வெளிப்படுகிறது. ஆனால் இது ஒரு வெளிப்பாடே தவிர நோய் அங்கு மட்டும் இல்லை பெருங்குடல் பகுதி முழுவதுமே புண்ணாகி-சீர்கெட்டு இருக்கிறது என்பதின் அடையாளமே மூல நோயாகும்(ppills)pppr p. மேலும் உடல் முழுமையும் சீர்கேடு உள்ளது என கொள்ளலாம். இதைச் சரிசெய்ய

  1. அதிகாலையில், குளிர்ந்த நீரில், நாளும் தலைக்கு குளிக்கும் பழக்கம் வேண்டும்.
  2. வாரம் இரண்டுமுறை எண்ணெய் குளியல் தேவை
  3. நொறுக்குத் தீனி பழக்கத்தை விட வேண்டும். ( முறுக்கு, பிஸ்கட்) பதிலாக பழங்கள் பயன்படுத்தலாம்.
  4. இரவுத் தூக்கம் முக்கியமாக இரவு 9 முதல் 3 மணி வரை ஓய்வெடுத்தல் வேண்டும்
  5. புளிப்பு மற்றும் பச்சை மிளகாய், மிளகாய் காரத்தைக் குறைத்துக் கொள்க. மிளகு காரம் சேர்க்கலாம்.
  6. காலை, இரவு உணவு 7 மணி முதல் 9 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.
  7. தாகம் இல்லாத போது தண்ணீர் குடிக்க்க கூடாது. தாகத்தின் அளவறிந்து சுவைத்து குடித்தல் நல்லது.
  8. கருணைகிழங்கு சேர்த்துக் கொள்ளவும்.
  9. உணவில் நெய், நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
  10. இட்லி, தோசை போன்ற உணவை விட்டுவிட்டு நன்கு மென்று சாப்பிடக் கூடிய வகையில் உணவுகளை பயன்படுத்துக.
  11. உயிர் ஆற்றலை அழிப்பதையே மருத்துவமாக கொண்ட எதிர்முறைய மருந்துகளை எந்த சூழலிலும் பயன்படுத்தல் நலமன்று.
  12. பொதுவாக மேற்கண்ட பழக்கங்கள் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும். வந்த நோய்கள் அனைத்தையும் நீக்கி சுகமளிக்கும்.
வயிற்றில் இருந்து தான் பெருங்குடலிற்கு சத்தி கிடைக்கிறது எனவே மேறகண்ட பழக்கங்கள் மூல நோயை முழுமையாக களைய தேவை.

படத்தில் 10 ம் எண் குறிக்கும் இடத்தை அழுத்தும் போது வலி ஏற்படின் அது மூல நோய்க்கு அடையாளம் அங்கு மென்மையாக சில விணாடிகள் காலை மாலை தொடுவது மூல நோயை முழுமையாக நீக்கும்.

குப்பைமேணி எனும் மூலிகையை ஓர் கைப்பிடி அளவெடுத்து கால் லிட்டர் ஆமணக்கெண்ணெயில் வறுத்து எடுத்தெரிந்து விட்டு அந்த எண்ணையை 1 தேக்கரண்டி அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் மூலம், பவுந்தரம் போன்ற நோய்கள் நீங்கி உடல் நலம் பொறலாம்.


 
கர்ப்ப பை கட்டிகளுக்கு- நோய்களுக்கு (uterus)


 

கர்ப்ப பை நலத்துக்கு மேலே கூறியுள்ள நோயணுகா விதிகள் மிக முக்கியம். இவ் விதிகளை மீறுபவர்களுக்கு கர்ப்ப பை நோய்கள் வருவது நிச்சயம்.

கர்ப்ப பை நோய்களை நீக்கி சுகப் படுத்த கீழ்காண்ட மூலிகைகள் சிறப்பானவை.


  1. கறிவேப்பிலை.

  2. அம்மான் பச்சரிசி.

  3. குப்பைமேனி.
  4. சிறு செறுபடை

  5. அருகம் புல்

 

இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்க. உடன் மிளகு, சீரகம் 10 ல் 1 பங்கு கலந்து பொடித்துக் கொள்க. இந்த கலவையை தேவையுள்ளவர்கள் மோரில் 1 தேக்கரண்டி கலந்து - அதிகாலை குளித்த பின் குடித்து வர, கர்ப்ப பை சார்ந்த நொயனைத்தும் தீரும்.

இங்கு உள்ளங்கை படத்தில் 11 முதல் 16 வரை உள்ள இடங்கள் மற்றும் 37 ஆகிய சத்தி தூண்டும் இடங்களை மிக மென்மையாக தூண்டுவது (முன்கூறிய முறைப்படி) மிக விரைவில் முழுமையான நலம் தரும்.

இதய நோய்கள் அனைத்துக்கும் (for heart)

இதயம் நமது உடலின் மிக சிறப்பான வலுவான கருவியாக இறைவன் வடிவமைத்துள்ளான். அது தன்னையும் காத்துக் கொண்டு மற்ற அனைத்து உறுப்புகளையும் காத்துக்கொள்ளத் தேவையான வலுவும், நுட்பங்களும் நிறைந்த்து.

தற்பொதய மருந்து வணிகம் இதயத்தை பற்றிய தேவையற்ற பயத்தையும், கருத்துக்களையும் மக்களிடம் திணித்து - அதனால் தான் பிழைக்கிறது. இரத்த அழுத்தம் என்பதை நோயாக்கியுள்ள எதிர்முறையம்; இதற்கான காரணமும் தீர்க்கும் வகையும் தெரியாத்தால்_ இதற்கான தான் kislமனிதர்களிடத்து மருத்துவம் செய்யத் தடையிருந்தும், கட்டுப்படுத்துகிறோம் என்று கதைவிட்டு அக்கதையை நம்புபவர்களிடம் அவர்கள் நலத்தை அழித்துக் காசுபண்ணிக் கொண்டிருக்கிறது.

ஆனால், என்ன கொடுமையென்றால் - நிறைய பேர் சிந்திக்க தயாராக இல்லாததால் அவர்கள் காட்டில் மழை தான்.

நாளும் ஓர் உளறல் எனும் தலைப்பில் நான் இணைத்துள்ள ஆங்கில மருத்துவரின் ஒப்புதல வாக்குமூலம் போன்ற செய்தி படித்திருப்பீர்கள். இல்லையெனில் படித்துப் பார்க்கவும்.

நிற்க, இதயத்தில் உண்மையாகவே ஒரு நோய் அல்லது பலவீனம் இருப்பின் அதை எளிய வழியில் சீராக்க உதவும் மூலிகைகள் சில.


 





  1. 1. செம்பரத்தை

  2. மருதம்பட்டை

  3. சீந்தில்

  4. தாமரை

  5. முளரி (ரோஜா)
  6. அமுக்காரா

  7. விஸ்ணு கரந்தை

  8. நீர் முள்ளி
  9. வேம்பு
என பல மூலிகைகள் இதயத்துக்கு வலிவு தரும்.

மேலே கூறியுள்ள மூலிகைகளில் 1 முதல் 7 வரை எடுத்து முறைப்படி சுத்தம் செய்து பொடியாக்கிக் கொள்க. உடன் அளவுப்படி திரிபலா, திரிகடுகு, அதிமதுரம், சிறு நாகப்பூ, கருவாப்பூ, சிறு மணகம் சேர்த்து செய்யும் சூரணங்கள், லேகியங்கள் இதயத்தை வலுப்படுத்தும்.

இங்கு கொடுத்துள்ள படத்தில்,

8,28,30,36 ஆகிய இடங்களை மென்மையாக அழுத்திப்
பார்த்து வலியிருப்பின் மிக மென்மையாகத் தூண்டி வந்தாலே போதும்; எப்பேர்பட்ட இதய நோயாக இருந்தாலும் மிக விரைவில் குணம் ஆகும். பணச் செலவும், மனக் கவலையும் வேண்டாம்.

முதலில் நாம் நம்மைப் படைத்த படைப்பாற்றல் மீது நம்பிக்கை கொள்வோம். தான் படைத்த உயர்ந்த படைப்பாகிய மனிதனை இறைவன் நோயாளியாக படைக்கவில்லை. மனித அறிவாலேயே இறைவிதிகளுக்கு முரணாக சென்று நாம் துன்ப படுகின்றோம். இதை அடையாளப் படுத்தி நம்மை நல்வழிப்படுத்தவே நோய்களும், வறுமையும் நாம் மனந்திருந்தி இறைவிதிகளை முறைப்படி கொள்வோமேயானால் - உலகம் அழகானதே.

இறையாற்றலின் அடிப்படை விதிகள்.

படைப்பாற்றல் நமக்களித்திருக்கும் அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து எதற்காகவும தேவைகளைப் புறக்கணிக்காமல் இருத்தல் வேண்டும். (பசி, தாகம், ஓய்வு, உறக்கம், நல்ல நட்பு, உறவுகள் போன்றவை)

இரத்த அழுத்தம் எப்பொழுதும் நல்லதே இது நமது தேவைகளுக்காக (உடல் மனம்) இதயம் நன்கு இயங்குகிறது என காட்டுகிறது. இதை அளந்து பார்த்துக் கொண்டுருப்பது உடலியக்கத்தின் அடிப்படை புரியாதோரின் அறிவற்ற செயல்.

இரத்தக் கொதிப்பு என்பது தவறு தான். இது பிற மனிதர்களை உயர்வாகவோ - தாழ்வாகவோ மதிப்பதால் வரும் பெரும் தீங்கு. இதிலிருந்து விடுபட பிற மனிதர்களை அனைத்து வகையிலும் சமமாக நடத்திப் பழகுவோம். இரத்தக் கொதிப்பு எனும் இந்தச் சமூக நோய் நீங்கும்.

சரி நண்பர்களே, இப்பொழுது நிறுத்துகிறேன் உங்கள் தேவை அறிந்து பின், எழுதுகிறேன் - தொடர்ந்து. 
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
மரபுவழி நலவாழ்வு மையம்,
31.அண்ணா தெரு,
காந்தி நகர்,
ஆவடி, 
சென்னை-600054
தமிழ் நாடு, இந்தியா


கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com


 


 


 


 

 



       




 


 

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

தமிழரோடு தமிழில் பேசுவோம்

தமிழரோடு தமிழில் பேசுவோம்


ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம்,மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம்அலாஸ்காவின் பழங்குடி மக்களின்மொழிகளில் ஒன்றான "ஏயக்என்கின்ற மொழியை பேசத் தெரிந்தஉலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.

அவர் இறந்த தினத்தொடு  உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழிஅழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும்,யாருமே "ஏயக்மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும்பேசுவதும்தான் நாகரீகமாதும்தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள்."ஏயக்மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.



"
ஏயக்மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்"மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்மொழிஅழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளைமேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்"மொழிக்கான அகராதியையும்இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான்அந்த மொழி மீண்டும் உயிர் பெறும். ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்குஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன.உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின்பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்தமொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்துகிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும்அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடிமக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறுமொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறுமொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களேபேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப்பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம்பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால்பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது.கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது.ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும்வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வதுஇளந்தலைமுறை மொழியைகற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.

எத்தனையோ சொற்களைஅவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது.வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்இன்றைக்கு எழுத்தில்மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும்புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும்கற்பதற்கும்ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம்,தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான்.ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில்அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்கமுடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும்தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும்என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான்தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்.

நன்றி சிவ மூர்த்தி.




...