திங்கள், 14 பிப்ரவரி, 2011

எனது கருத்தொத்தவர்கள் எழுதியது உங்களுக்காக

இயற்கையை மனிதன் எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுக்கிறான்,.
விவசாயி ஏன் இவ்வளவு ஏழையாயாக இருக்கிறான் தெரிகிறதா.விவசாயி மனிதர்கள் வாழும் வகைக்கு பாடுபடும் வரையில் அவன் திருவள்ளுவர் மதிக்கும் வண்ணம்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அஃதின்றது 
உழன்றும் உழவே தலை.
என்று மனிதனை வாழ்விக்கும் வண்ணம்  இருந்தவன் சுய நலத்துக்காக உரம் பூச்சி மருந்து கீழ்க்காணும்  ரசாயனங்கள் என உபயோகிக்க ,உபயோகிக்க,மனிதனை வாழ்விக்கும் விவசாயம் மனிதனை கொல்கின்றது.
எனில் விவசாயி வாழ்வானா.

இன்றைய(02-08-2010) தினமலரில் வந்துள்ள செய்தி இது





நன்றி தினமலர்

நீங்கள் சாப்பிடும் திராட்சையை கொத்தோடு பல முறை பூச்சி மருந்தில் முக்கி
எடுக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.

எனது நண்பர் ஒருவர் இந்த திராட்சைகளை கழுவாமல் சாப்பிட்டு,இந்த நஞ்சின் பாதிப்பிற்கு ஆளாகி,  அதன் விளைவாக நீர்த்தடுப்பு உண்டாகி(URINARY ARREST,ETC)  அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்காளாகி அதற்கான மருந்தினை உட்கொண்ட பின் இன்று வரை அதன் சிரமம் அறவே நீங்காது அவஸ்தையுற்று வருகிறார்.
உரக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வேப்பம் பிண்ணாக்குஇயற்கை உரங்கள். 

           மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா குறைந்த அளவிலேயே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

             இருப்பினும் குறைந்த அளவிலான ரசாயன உரங்களின் பயன்பாடேதற்போது நமது இயற்கை வேளாண் விஞ்ஞானிகளால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஒருகாலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட டி.டி.டி.பி.எச்.சி. பூச்சிக்கொல்லி மருந்துகள்தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. காரணம்டி.டி.டி. மருந்தின் நச்சுக் கழிவுகள்தாய்ப்பாலில் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பல ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுகரைந்து போகாமல் தங்கி விடுவதேமோசமான விளைவுகளுக்குக் காரணம். எனவேதான் இயற்கை உரங்களைப் பயன்படுத்திஉடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காத தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.இயற்கை உரங்களின் பட்டியலில்நுண்ணுயிர் உரங்கள்மண்புழு உரங்கள்வேப்பம் பிண்ணாக்கு போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.

           இயற்கை உரங்களின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில்இயற்கை உரங்கள் என்ற பெயரில்பல போலிஉரங்கள் உலா வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.எள்ளுப் பிண்ணாக்குமணிலா பிண்ணாக்கு ஆகியவற்றில் வேப்பெண்ணெயைத் தெளித்துவேப்பம் பிண்ணாக்கு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.திரவ வடிவில் அசோஸ்பிபாஸ்போமிக்ஸ்பொட்டாஷ் ஆக்டிவாஜிங்க் ஆக்டிவேட்டர் போன்ற இயற்கை உரங்கள் கவர்ச்சிகரமான பொட்டலங்களில் உரக்கடைகளில் விற்பனைக்கு உள்ளன.

            பன்னாட்டு நிறுவனங்களும்உள்ளூரில் சிறிய அளவில் குடிசைத் தொழில்போல் பலரும் இந்த இயற்கை உரங்களைத் தயாரித்துபயிர் வளர்ச்சி உரங்கள்இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற பெயரில் விற்கிறார்கள். ஒரே இயற்கை உரம்பயிர்களுக்கு பல்வேறு சத்துகளை அளிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள்.இவற்றைத் தயாரிப்பதற்கான அனுமதியை பெறரூ.300 கட்டணம் செலுத்திவேளாண்மைப் பல்கைலக்கழகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.ரசாயன உரங்களுக்குத் தரக் கட்டுப்பாடு உள்ளது. அதற்கான சட்டங்களும் உள்ளன. நுண்ணுயிர் உரங்களில் ஒரு கிராமில் ஒரு மில்லியன் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும் என்று தரக் கட்டுப்பாடு உள்ளது. அதேபோல் மண்புழு உரங்கள்நகர கம்போஸ்டு உரங்களுக்கும் தரக் கட்டுப்பாடு உள்ளது. 

                    எனவே உரக் கட்டுப்பாடு அலுவலர்கள்அடிக்கடி உரக்கடைகளில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிதரம் குறைவாக இருந்தால் அத்தகைய உரங்களை தயாரித்தோர்விற்பனை செய்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.ஆனால் சந்தையில் விற்பனையாகும் ஏனைய இயற்கை உரங்களுக்கு எந்தத் தரக்கட்டுப்பாடும்அதற்கான சட்டங்களும் இல்லை என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். இதனால் விளம்பரங்களை நம்பி இந்த இயற்கை உரங்களை வாங்கிப் பயன்படுத்தினால் பாதிக்கப்படுவது விவசாயிதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குப்பையில் இருந்து  மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்து வரும் பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி இதுபற்றிக் கூறுகையில்,

            ""மாதம் முதல் டன்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறோம். காய்கறிச் செடிகளுக்கும்நிறுவனங்களில் புல்வெளிகள் அமைப்போரும் இந்த உரத்தை விரும்பி வாங்குகிறார்கள். அதிக அளவில் பயன்படுத்த இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.ஆனால் இயற்கை உரங்கள் என்ற பெயரில் பல டானிக்குகள்பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. புதுவை மாநிலத்தில் இத்தைகைய இயற்கை உரங்களை அதிகம் தயாரிப்பதாக அண்மையில் என்னை சந்தித்துத் தெரிவித்தனர். ஆனால் அவற்றின் தரம் பற்றி யாருக்கும் தெரியாது'' என்றார்.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

                  ""இயற்கை உரங்களுக்கு தரக் கட்டுப்பாடு சட்டங்கள் கொண்டுவர வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் அலுவலர்களின் பரிந்துரைப்படி விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடாவது இருக்க வேண்டும்'' என்றார் அவர்.

இதில் பெரிய அவஸ்தையாக அமெரிக்காவின் மான்சாண்டோ அதன் தற்கொலை விதைகளை அறிமுகப்படுத்த இந்திய விவசாயிகளையும் (விவசாய கல்லூரி பேராசிரியர்களையும்) அவர்களுக்கு சாதகமாக பேசி செயல்பட விலைக்கு வாங்கி வருகிறது.ஒரு முறை விதைத்து விளைந்து வரும் ,விதைகளை மறுமுறை விதைத்தால் விளையாது.

அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தபோதும் ,இந்தியா அசரவில்லை,ஏனெனில் விவசாயம் நமது முதுகெலும்பாக இருந்த்தது.எனவெ இந்தியாவின் மீது மறை முகமாக இந்த மலட்டு விதைகளை  விவசாயிகள் மூலம் ,விதைக்க ஏவி வருகிறது.

ஏற்கெனவே மலடாகி வரும் மனிதனுக்கு மலட்டு விதைகள்.இதில் ஏதாவது
மனிதனின் உற்பத்திக்கு பங்கம் வருமா,பாதகம் வருமா.இந்த பிரச்னை நாட்டுப்
பிரச்சினை அல்ல.எனது வீட்டுப் பிரச்சினை.நாளை எனது மருமகனோ,மகனோ ஆண்மை உள்ளவனாக இருப்பானா.இது இந்த மாதிரி விதைகளையும்,பூச்சி மருந்துகளையும்,உரங்களையும் போட்டு பயிர் செய்யும்
விவசாயிக்கும் உள்ள பிரச்சினை.



இதனுடன் மகரந்த்தச் சேர்க்கை உறும் எந்த தாவரமும் மலடாகும்.இத்தகைய
சித்த வைத்தியத்திற்கு மூலாதாரமாக  உள்ள தாவரங்களைக் குறி வைத்து  ஏவி உள்ள இந்த தந்திரமான போரை சித்தர்களின் நோக்கில் மிக கடுமையாகப்
பார்க்கிறார்கள்.

இவ்வளவுக்கும் காரணமாக உள்ள விவசாயிகள் அப்பிராணிகளாக(INNOCENT)
என்னால் மட்டுமல்ல ,சித்தர்களாலும் கருத்தப்படாததாலும் ,அவர்கள் தங்கள் நிலையில் சுயநலமில்லாது சரியாக செயல்படாவிட்டால் அவர்கள் சந்ததி மட்டுமல்ல இந்தியாவில் யாருடைய சந்ததியுமே எதிர்காலத்தில் இருக்காது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சித்தர்கள் சும்மா இருப்பார்களா.அவர்கள் தூண்டுதலினால் அல்லவோ இந்தக்கட்டுரையே

நன்றி

சாமீ அழகப்பன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.