புதன், 10 செப்டம்பர், 2014

நலம் தரும் குளியல்

 ‘எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம்’, இன்று தலையை விட்டு விட்டு உடலை மட்டும் கழுவும் கெட்ட பழக்கம் இன்று எங்கு பார்த்தாலும் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றிக் கழுவுவதால் வரும் துன்பங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
1.      சைனஸ், ஒற்றைத் தலைவலி,மைக்ரேன், அடுக்குத் தும்மல், மணத்தை உணரமுடியாத தன்மை, மூக்கு எலும்பு வளைதல் முதலியன.
உடலுக்கு மட்டும் நீர் விடும் போது உடல் சூடு முழுக்க தலைக்கு ஏறுகிறது. அதனால் தலையில் உள்ள வாயுக்கள் (கபால வாயு) சூட்டால் விரிவடைகிறது. இந்த பாதிப்பிலிருந்து காக்க, உடலது தற்காப்பு அமைப்பின் செயலால் தலை குளிர்விக்கப்படுவதால் காற்று குளிர்ந்து நீராக மாறி மண்டையோட்டில் உள்ள சைனஸ் பள்ளங்களில் தேங்குகிறது.
தொடர்ந்து இந்த செயல்பாடுகளால், தேங்கும் நீர் மற்றும் சளி கட்டியாவதால் சைனஸ் பகுதிகளில் ஏற்படும் வீக்கமும், வலிகளும் அதிகரிக்கின்றன. எக்ஸ்ரே படங்களில் மூக்கு எலும்பு வளைந்தது போல் தோற்றம் தருகிறது. நாற்றத்தை உணரமுடியாது போகிறது
என்றாவது தலைக்கு குளிக்கும் போதோ அல்லது உடல் சக்தி பெறும் போது உடல் தன்னை தூய்மைப் படுத்திக்கொள்ள மூக்கின் வழியாக நீராகவோ, தும்மலாகவோ, வெளியேற்ற முற்படுகிறது. இதை நாம் உடல் தன்னை குணப்படுத்திக் கொள்ளும் என அறியாத மருத்துவர்களது அறிவுரைப்படி தவறான சிகிச்சையால் தடுத்து விடுகிறோம்.
தேங்கும் நீரும், சளியும், மருந்துகளாலும், உடலைச் சூடாக்கும் சுடுநீர்க் குளியலும், உடலை அறியாதவர்களின் அறிவுரையும் நோயை அதிகமாக்குகிறது.

தலை முக்கியமாக கருதப்படுவதற்கு காரணம் தலையில் புலன் உறுப்புகள் அனைத்துக்கான தொடர்பு கருவிகளும் உள்ளன (கண், காது, மூக்கு) மேலும், மத்திய நரம்பு மண்டலமான மூளை தண்டுவடம் உள்ளதென அறிவோம். இவற்றை பாதுகாக்க உடல் அதிகமான சக்தியை செலவழிக்கிறது.
2.      கண்களில் சிவப்பு, எரிச்சல், பார்வை குறைவு, பித்த நோய்கள், மன நலக் கோளாறுகள்,
காமாலை, பாத வெடிப்பு, பெருவயிறு போன்றவை உண்டாகிறது.

தலையில் ஏறும் சூட்டால் கண்களும்; அதனால் கல்லீரலும், பித்தப் பையும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
பிறந்த குழந்தைகளை எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டாததாலும், தினமும் தலைக்கு குளிக்காததாலும் குழந்தைகளுக்கு பித்தம் முற்றியதனால் மனநலம் பாதிப்பு விரைவில் வெளிப்படுகிறது. ஹபர் ஆக்டிவ் சைல்ட் எனப்படும் பாதிப்புக்கு உடலுக்கு மட்டும் குளிப்பதே முக்கிய காரணம்.
3.      நுரையீரல் பாதிப்பு, இளைப்பு, ஈளை, ஆஸ்துமா, காச நோய், கணைச் சூடு, உடல் மெலிவு, மூலம் பவுத்தரம், மலச்சிக்கல் போன்றவையும் ஏற்படும்.
மெலிந்து போன உடலமைப்பை உடைய குழந்தைகளை கணைச் சூடு தாக்கியுள்ளது என கூறுவர். உடலை குளிர்விக்கும் முறைகளை சீராக்கினால் சூடு குறைந்து உடல் தேறும். அதிக சூட்டால் பாதிக்கப்படும் உறுப்புகளில் முக்கியமானது நுரையீரலும், பெருங்குடலும். மூலம் பவுத்திரம் என்பது ஆசனவாய்ப் பகுதியில் மட்டும் ஏற்படும் நோயல்ல. வாயிலிருந்து உணவுக்குழாய், பெருங்குடல் அனைத்தும் சூடு மிகுந்து பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளமே மூலம், பவுத்திரம். இதற்கு முக்கிய காரணம் இரவில் தூக்கத்தை தவிர்ப்பது, அதிக பயனம், உடலுக்கு மட்டும் குளிப்பது போன்றவை ஆகும்.
4.      வயிற்றுப்புண், வாய்ப்புண், சீரணக் கொளாறுகள், சர்க்கரை நோய் எனப்படும் மதுமேகம் உட்பட்ட 21 வகை மேக நோய்கள், மூத்திர நோய்கள், மூத்திரப் பை மற்றும் சிறுநீரக கற்கள், பித்தப் பை கற்கள் உருவாகுதல், போன்றவற்றை உடலுக்கு மட்டும் குளிக்கும் பழக்கம் உருவாக்கும்.
5.      முகப் பருக்கள், முகத்தில் முடி முளைத்தல், தலையில் பொடுகு உருவாதல், பித்த நரை, உடல் எங்கும் முடி முளைத்தல், காலாணிகள், பித்த வெடிப்புகள்  ஆகியவையும் தலைக்கு குளிக்காமல் இருப்பதால் உருவாகும் நோய்களே.
6.      கர்ப்ப பை கட்டிகள், சிணை முட்டைகள் அழிதல், நீர்கட்டிகள், அதிக உதிரப் போக்கு, மாதவிடாய் இன்மை, பெண் மலடு, ஆண் மலடு, ஆண்மை குறைவு, விந்து நீர்த்துப் போதல், விந்து முந்துதல் என அனைத்து நோய்களுக்கும் மேலும், பால் விணை நோய்களுக்கும் தினமும் தலைக்கு குளிக்காமல் உடலை மட்டும் கழுவுவதே காரணம்.
7.      உடலில் தோன்றும் 4448 நோய்களுக்கும் ஐந்து மூலகங்களில் ஏற்படும் சீர்குலைவே காரணம். ஏதாவது ஓர் மூலகத்தில் பாதிப்பு வந்தாலும் அது அனைத்து மூலகங்களையும் பாதிக்கும்.
இதை கருத்தில் கொண்டே,
‘மிகினும் குறையினும் நோய் செய்யும் -நூலோர்             
வளி முதலாய் எண்ணிய மூன்று'.
-என்றார் தமிழ் அறிவர்.

‘கூழாக இருந்தாலும் குளித்துக் குடி’, சனி நீராடு’ என கூறியவர் நம் தமிழ் முதாட்டி ஔவை. எல்லா காலங்களிலும் குளிரக் குளிக்கவேண்டும் என நோயற்ற வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த நம் சான்றோர் வற்புறுத்துகின்றனர்.

ஆரோக்யமற்ற சூழல் ஏழை,பணக்காரன் என இல்லாது எல்லோர்க்கும் பொதுவாகி விட்டது. கருவுற்ற குழந்தையிலிருந்து, இளையவர், முதியவர் என எல்லோரும் நலக் குறைவால் நாளும் செத்துப் பிழைக்கிறார்கள். ஈட்டும் வருமானத்தில் பாதிக்கும் அதிகமாக மருந்து மாத்திரைகள், சோதனைகளில் கரைந்துவிடுகிறது.

இந்நிலை மாற, நம் பெரியவர்கள் வகுத்துக் கொடுத்த நோய் அணுகாவிதிகளைச் சிந்தித்து பின்; செய்து பழக்குவோம். நலவாழ்வை கொள்ளையடிக்கும் மருந்து வணிகர்களிடம் இருந்து  நமது குழந்தைகளையும் நமது ஆரோக்கியத்தையும் மீட்டு உயிரைக் காத்துக் கொள்வோம்.

 அன்பை மறவா, 
தமிழவேள் நளபதி

கைபேசி- 93458 12080













திங்கள், 1 செப்டம்பர், 2014

சர்க்கரை நோய்க்கான உணவு / உடல் நலம், மனநலத்துக்கான உணவு.


மனிதன் நலமாக வாழ அடிப்படையான தேவைகள். பசி. தாகம், தூக்கம், ஓய்வு, கழிவு நீக்கம், சக மனிதர்களுடனான உறவு, இயற்கையுடனான உறவு, விழிப்புணர்வு, புரிதல், அமைதி போன்றவையாம்.

பசி, தாகம் என்பன நமது உடல் மற்றும் மனதின் தேவையைக் குறிக்கும் உணர்வுகள் ஆகும்.

ஐந்து மூலகங்களால் ஆன நம் உடல் தனது நலத்துக்காக இந்த ஐந்து மூலகங்களையும் சீராக வைத்திருக்க வேண்டியுள்ளது. சுவையறிதல் எனும் ஆற்றல் இந்த மூலகத் தேவைகளை நமக்கு உணர்த்தி பொருந்திய உணவைத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவுகிறது.

சுவைகளின் பயன்.

இனிப்புச் சுவை மண் மூலகத்தை வலுவாக்குகிறது மண்ணீரல், வயிறு எனும்  சீரணத்துக்கான அடிப்படைக் கருவிகளை சீராக இயக்குகிறது. மன ஓர்மைக்கு காரணமாகிறது.

உவர்ப்புச் சுவை நீர் மூலகத்தை வலுவாக்குகிறது. மறு உற்பத்திக்கான கருவிகளான சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பையை சீராக இயக்குகிறது. மன தைரியத்தைக் கொடுக்கிறது.

கசப்புச் சுவை நெருப்பு மூலகத்தை வலுவாக்குகிறது. இதயம், சிறுகுடல், இதய உறை, வெப்ப கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியன சீராக இயங்க உதவுகிறது. மகிழ்வுக்கு காரணமாகிறது.

கார்ப்பு, துவர்ப்பு காற்று மூலகத்தை வலுவாக்குகிறது. நுரையீரலையும், பெருங்குடலையும் சீராக இயக்குகிறது.மன அமைதிக்கு காரணமாகிறது.

புளிப்புச் சுவை ஆகாய மூலகத்தை வலுவாக்குகிறது. கல்லீரல், பித்தப்பையை சீராக இயக்க உதவுகிறது. மன பொறுமைக்கு காரணமாகிறது.

மென்மை தேவை.

 பசியும் தாகமும் உடல் தேவையின் மெல்லிய நுட்பமான உணர்த்துதல். இதை விழிப்புணர்வுடன் அவதானித்து நமது தேவைகளை மென்மையாக நிறைவேற்றுதல் வேண்டும்.

உதாரணத்துக்கு,

இனிப்பு சுவை தேவை என உடல்மனம் கேட்கும் போது இரசாயன நஞ்சான சீனியை பயன்படுத்துவதா? இல்லை இயற்கையால் வந்த பனைவெல்லம், பழங்கள், தேன் பொன்ற நன்மை தருவதை பயன்படுத்துவதா?

உவர்ப்பு தேவையில், இரசாயன சேர்க்கையான அயோடின் கலந்த உப்பு நல்லதா இல்லை இயற்கையால் விளைந்த உப்பு நல்லதா? என முடிவு செய்தல் வேண்டும்.

கசப்பின் தேவையில் மென்மையான அளவுள்ள சுண்டைக்காய், பாகல் போன்றவை போதும். சிறியாநங்கையோ, வேப்பந்தழையோ உணவல்ல.

 இரண்டாவதாக,

எவ்வளவு தேவை என அறியவும் சுவைத்தல் உதவுகிறது நாக்கில் தான் அளவையும் தரத்தையும் முடிவு செய்யமுடியும். வாயை மூடி கவணத்துடன்-சுவைத்து சாப்பிட்டால் தான் சுவை மற்றும் தேவையின் அளவு தெரியும். கவணமின்றி அள்ளி விழுங்கினால் உடலுக்கும் மனதுக்கும் சுமையாகும்-நஞ்சாகும்.

'சீரணம் விரல்களில் தொடங்கி நாக்கில் முடிகிறது'.

உணவு குறித்த பார்வையில் தற்போதய படிப்பறிவு மிக கேடானதாக விழிப்புணர்வின்றி உள்ளது.
பால், இட்லி, தோசை, வெண்ணெய், மைதா மாவு, கொழுப்பு நீக்கப்பட்ட உணவுகள், இரசாயனத்தால் தூய்மை படுத்தப்பட்ட உணவுகளும், நீரும். மெல்லிய கீரை  போன்றவற்றை மென்மையான உணவு என நம்பி கெடுகிறார்கள். இவற்றில் பெரும்பாலானதை நஞ்சென தவிர்த்தல் வேண்டும். பலவீனமான சீரணமுள்ளவர்கள் தொடவே கூடாது.

நெய், பழங்கள், பிஞ்சு காய்கறிகள், கொழுப்பு நீக்கப்படாத எண்ணெய், சிறு தானியங்கள் இயற்கை உணவுகள். தூயநீர் சூடாக்கப்படாமல் மண்பாணையில் குளிர்வித்துக் குடித்தல் நல்லது.

பசி, தாகம் அறிந்து பொருந்திய, தூய, எளிய உணவைத் தேர்ந்தெடுத்து படைப்பாற்றலுக்கு நன்றி உணர்வுடனும் அன்புடனும் உண்ண நலம் தரும்.

தூக்கம், ஓய்வு.
படைப்பாற்றல் நமக்கு எல்லாவற்றையும் தாராளமாகத் தந்துள்ளது மனிதன் ஒன்றும் பெரிதாக உழைக்கத் தேவையே இல்லை.

தான் எனும் அகம்பாவத்தாலும், விழிப்புணர்வற்ற சுயநலத்தாலும், அடிமை மனோபாவத்தாலும், இயற்கையையும் சக மனிதர்களையும் மென்மையாக அணுகத் தெரியாது; உறக்கத்துக்கும் ஓய்வுக்கும் நேரமின்றி உழைத்தே கெடுகிறான்.

மனிதன் நவீனஅறிவியல் உயர் தொழில் நுட்பம் என நினைக்கும் அனைத்தும் அவனுக்கும் இயற்கைக்கும் இடைவெளியை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலங்கினும் கேடான அடிமைத்தனத்தையும் அழிவையுமே மனிதனின் தற்பெருமைக்கு தன்டனையாக படைப்பாற்றல்  தந்துள்ளது.

ஏழை பணக்காரன் என வேறுபாடில்லாது துன்பத்தை தவிர எதையும் கொடுக்கவில்லை மனிதனின் இந்த இயற்கையின் மீதான தூய்ப்பு வெறி.

தூக்கம், ஓய்வு மனிதனின் உடலையும் மனதையும் புதுப்பிக்கிறது. இரவுத் தூக்கத்தை பகல் தூக்கம் ஈடு செய்யாது.
இரவுத் தூக்கத்தை இழக்கும் மாணவர்களும், இளைஞர்களும் நடைபிணங்களாகவும், மனநோயாளிகளாகவும் மாறி வருகின்றனர். இந்த காரணத்தாலேயே அவர்களின் பெற்றோர்களும் நோயாளிகளாய் உள்ளனர்.

மக்களின் நலம் பேணும் பல நாடுகளில், மாலை 7 மணிக்கு மேல் அலுவலகங்களோ, கடைகளோ, குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ இயங்குவதில்லை. காலை 4.00 மணிக்கு மேல் உறங்குவதும் இல்லை. 7.00 மணிக்கு மேல் வீட்டில் தூங்குபவர்களும் அங்கில்லை.

இரவு விளக்கு வைக்கும் முன் உணவருந்திவிட்டு முன்னிரவில் படுங்கள், காலை கோழி கூப்பிட எழுந்து விடுங்கள் என நம் ஊர்ப் பெரியவர்கள் கூறுவது இன்னும் காதுகளில் மறையவில்லை. அவர்கள் வசதியில்லாமல் அப்படிக் கூறவில்லை. தனது ஞானங்களால் உணர்ந்த அறிவியல் உண்மையையே கூறினர். இரவு தூங்காத ஒரு ஆரோக்யமான நபரையும் நான் பார்த்ததில்லை.

நாம் ஓட்டு மொத்தமாக நலவாழ்வுக்கான விதிகளை மறந்துவிட்டு, நமது பிள்ளைகளுக்கும் மறைத்துவிட்டு அவர்களை அழிவுப் பாதையில் வேகமாக இழுத்துச் செல்கிறோம். 

நமது வருங்கால வாரிசுகளில் யாராவது நமது அறியாமையின்- பொறுப்பின்மையினால் ஏற்பட்டிருக்கும் அழிவில்  இருந்து பிழைத்திருந்தால்  நம்மை மன்னிக்க மாட்டார்கள். நான் இதை மிகையாக கூறவில்லை. நமது தமிழகத்தின் கடற்கரையோர இரசாயன ஆலைகள்- நவீன அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்களைப் பாருங்கள்; நமது வீட்டில் உள்ளவர்கள் உடல் நலத்தைப் பாருங்கள் புரியும்.

கழிவு வெளியேற்றம்

உண்வு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் கழிவு நீக்கம்.

உணவுண்பதும், நீரருந்துவதும், இரவுத் தூக்கமும், ஓய்வும், சக மனிதர்களிடம் கொள்ளும் நட்பும், உறவும் மன அமைதியும், புரிதலும் என எல்லாமே கழிவு வெளியேற்றத்துடன் தொடர்புடையது.

உடல் கழிவுகளை வெளியேற்றுதல் போலவே எண்ணங்களின் கழவுகளும் நீக்கப்பட வேண்டும். இவையனைத்தும் தூய்மையாகவும், எளிமையாகவும், மென்மையாகவும் இருந்தால் தான் கழிவு வெளியேற்றம் மென்மையாய் இருக்கும்.

 சக மனிதர்களுடனான உறவு, இயற்கையுடனான உறவு.
நமது நலமும் பிறர் நலமும் இயற்கை நலமும் பிரிக்க முடியாதது என உணர்தல் வேண்டும். பிற மனிதர் மற்றும் இயற்கையின் உறவில் மென்மையும், தூய்மையும், அன்பும், நன்றியும் வேண்டும்.

விழிப்புணர்வுடன் நமது தேவைகளை உணர்ந்தால் தான் படைப்பாற்றல் பற்றிய புரிதல் உண்டாகும். இந்த புரிதல் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அதற்கேற்ப அமைதி எனும் இறை அருள் கிடைக்கப் பெறும்.

 அன்புடன்,
தமிழவேள் நளபதி

 கை பேசி; 93458112080, 9444776208