நமது மரபுவழியாக முன்னோர்கள் ஆக்கித் தந்த நலவாழ்வுக்கான அறிவியலை மீண்டும் பழகி வாழ்வில் நலம் பெறுவோம்.
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014
திங்கள், 25 ஆகஸ்ட், 2014
இறைவழி மருத்துவ ஞானம் புரிதல்
இறை என்றால் என்ன?
அகிலங்களையெல்லாம் படைத்து, காத்து, அழித்து,
மறைத்து, அருளும் படைப்பாற்றலின் வழி. மனித அனுபவ அறிவுக்கு எட்டாதது. எளிதானது, மறைவானது,
நுட்பமானது, அன்பானது எல்லாம் வல்லது, எல்லாமாக இருப்பது, எதுவாகவும் இல்லாதிருப்பது.
இறைவழி என்றால் என்ன?
இறைவழி என்றால் என்ன?
இறைவழி என்பது, நமது தேவைகளைப் பெற இறைவனால் அனுமதிக்கப் பட்ட வழியில்; இறையச்சத்துடன் நன்மையை நாடுவது.
நோய்கள் என்றால் என்ன?
அழிவற்றதாகவும்,
அறிவுள்ளதாகவும், படைப்பாற்றல் உள்ளதாகவும், புதுப்பித்துக் கொள்ளக் கூடியதாகவும்,
ஐந்துமூலகங்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாயும் இறைவனால் உருவாக்கப்பட்டதே மனித உடலும்,
மனமும்.
ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களால் இறைவனை
மறந்து, தன்னை உணராததால் உண்டானதே பயம், கவலை, வெறுப்பு, சுயநலம், மறதி, சலனம், சோம்பல்
போன்ற ஏழு திரைகள். இவையே உடல் மற்றும் மனதில் பிணிகளை, தளைகளை உண்டாக்குகின்றது.
மனிதன் இயற்கையுடன் இயந்து வாழ வேண்டியவன். ஆனால், தன்உணர்வில்லாததால் இயற்கைக்கு அடிமையாகிறான்.
இந்த தளைகளை நீக்க உடல்-மனம் செய்யும் முயற்சியே
நோய்களாக அறியப்படுகிறது.
மருத்துவம் என்றால் என்ன?
நம்மைப் படைத்த படைப்பாற்றல் நம்முள் இருந்து; நம்மை உருவாக்கி, வளர்த்து, பாதுகாத்து வருகிறது அது நமது நலத்துக்குப் போதுமானது என்பதை உணர்த்துவதும். நோய்கள் நன்மைக்காகவே வருகின்றன அதைப் புரிந்து கொண்டு உடல் இயற்கைக்கு உதவுமாறு அறிவுறுத்துவதும், வழிகாட்டுவதும். விழிப்புணர்வின்றி அறியாமையில் உள்ள மனிதருக்கு தேவையாய் உள்ளது.
இந்த அறியாமையை நீக்கி, உடலையும் மனதையும் தூய்மையாக்கி அவர்களது ஆன்மாவை இறையாற்றலுடன் மீண்டும் தொடர்பு கொள்ள உதவுவதையே மருத்துவம் என்கிறோம்.
மருத்துவம் என்றால் என்ன?
நம்மைப் படைத்த படைப்பாற்றல் நம்முள் இருந்து; நம்மை உருவாக்கி, வளர்த்து, பாதுகாத்து வருகிறது அது நமது நலத்துக்குப் போதுமானது என்பதை உணர்த்துவதும். நோய்கள் நன்மைக்காகவே வருகின்றன அதைப் புரிந்து கொண்டு உடல் இயற்கைக்கு உதவுமாறு அறிவுறுத்துவதும், வழிகாட்டுவதும். விழிப்புணர்வின்றி அறியாமையில் உள்ள மனிதருக்கு தேவையாய் உள்ளது.
இந்த அறியாமையை நீக்கி, உடலையும் மனதையும் தூய்மையாக்கி அவர்களது ஆன்மாவை இறையாற்றலுடன் மீண்டும் தொடர்பு கொள்ள உதவுவதையே மருத்துவம் என்கிறோம்.
ஞானம் என்றால் என்ன?
இறைவனிடம் நன்மையை நாடுவோர்களுக்கு தன்னை உணரும்
புரிதலை அந்த படைப்பாற்றல் கொடுக்கிறது. இதுவே இறைஞானம் ஆகும்.
இறைவழி மருத்துவம் என்றால் என்ன?
இறைவன் அருளால் தன்னுணர்வு பெற்ற மனிதன் தன்
நன்மைக்கைகாகவும், பிற மனிதர்கள் - உயிர்களின் நலனுக்காகவும் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலிடம்
பொறுப்பேற்படுத்தி நன்மையை நாடுவதே இறைவழி மருத்துவம்.
இறைவழி மருத்துவம் எல்லோரும் செய்ய முடியுமா?
படிப்பு அல்லது பயிற்சி தேவையா?
இறைவனே
சுகமளிப்பவன்.
இறைவழி மருத்துவம் செய்ய படிப்போ அல்லது பயிற்சியோ
தேவையில்லை. தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்தவர்களும், சான்றோர்களால் உணர்த்தப் பெற்றவர்களும்
இறைவழியில் தனக்கும், பிறர்க்கும் சுகம் பெற முடியும்.
சான்றோர்கள் என்பவர் யார்?
இறைஞானங்களைப் பகிர்ந்து கொள்ள இறைவனால் அனுமதிக்கப்பட்டவர்கள்.
எனது எனும் தனிமை மாறி நான் எனும் முழுமைக்குள் வந்தவர்களின் புரிதலுக்கும், விழிப்புணர்வுக்கும், விடுதலை வேட்கைக்கும் தக்கவாறு இறைவன் இறைஞானங்களில்
மேல் நிலையைத் தருகிறான்.
தனது நான் என்பது இறைவன் படைத்த எல்லா படைப்புகளுடனும், அவற்றின் நன்மை, தீமைகளுடனும் சம்மந்தப் பட்டது என்பதை உணர்ந்தவர். தனது விடுதலை என்பது பிறரின், பிறிதின் விடுதலையோடு இணைந்தது என அறிந்தவர்கள்.
தனது நான் என்பது இறைவன் படைத்த எல்லா படைப்புகளுடனும், அவற்றின் நன்மை, தீமைகளுடனும் சம்மந்தப் பட்டது என்பதை உணர்ந்தவர். தனது விடுதலை என்பது பிறரின், பிறிதின் விடுதலையோடு இணைந்தது என அறிந்தவர்கள்.
மருந்துகளுடன் சேர்த்து இறைவழி மருத்துவம் எடுத்துக்
கொள்ளலாமா?
நமது சான்றோர்கள் நமது உணவையும், பழக்க வழக்கங்களையும்
உடலுக்கும், மனதுக்கும் நாம் வாழும் சூழலுக்கு தக அமைத்துள்ளனர். அவர்கள் நமக்களித்துள்ள
இயற்கையோடு இயந்து வாழும் ஞானங்களைக் கற்று பயில வேண்டும் இதுவே மருத்துவம். நமது அன்றாட உணவையே மருத்து என ஆக்கியுள்ளனர்.
நம்மைச் சுற்றியுள்ள மூலிகைகளை, தாதுக்களை நன்மையாக பயன்படுத்த கற்றுக் கொடுத்துள்ளார்கள். இவற்றை கற்று இறையச்சத்துடன் பயன்படுத்துவது நன்மை தரும்.
நம்மைச் சுற்றியுள்ள மூலிகைகளை, தாதுக்களை நன்மையாக பயன்படுத்த கற்றுக் கொடுத்துள்ளார்கள். இவற்றை கற்று இறையச்சத்துடன் பயன்படுத்துவது நன்மை தரும்.
சுயநலத்துக்காக
இறையச்சமில்லாத, பெருமை பிடித்தாட்டும் மருத்துவர்கள் தரும் மருந்துகளை; விழிப்புணர்வில்லாமல்,
அறியாமையில் பெருமைக்காக உண்பதும், பரிந்துரைகளை கேட்பதும் கேடுதரும்.
இறைவழி மருத்துவம் செய்வதற்காக தியானம் அல்லது
வழிபாடு தேவையா?
தேவையில்லை. நமது உடலே நாம் உணரும் இறையின் இல்லம்.
நமது தேவைகளை – இறைவன் நமக்கு அளித்ததை, விருப்பத்துடன், இறையச்சத்துடன் சுவைப்பதே வழிபாடு.
இறையச்சம் என்பது தேவையா?
இறைவன் மாபெரும் கருணையாளன். நாம் அவன் தரும்
நன்மைகளை நன்றியுணர்வுடன் பெற்றுக் கொள்ளவேண்டும்.
பெருமையின் காரணமாக நாம் செய்யும் குற்றங்களை
நமக்கு அடையாளப்படுத்தி திருத்த; தேவைப்படும் போது சோதனைக்காளாக்குவது இறைவனே; உணர்ந்து
திருந்தும் போது மன்னித்து ஏற்றுக் கொள்வதும் இறையே.
நாம் அளவு மீறும் போது கொடுத்ததை திரும்ப எடுத்துக் கொள்வதும்
இறையே. நன்றியுடன் இறைவன் நமக்களித்த ஞானங்களைப் பயன்படுத்துவோம, மேலும் ஞானங்களுக்காக
இறையையே நாடுவோம்.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி.
கைபேசி 93458 12080, 94447 76208
thamizhavel.n@gmail.com
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
எனது இறைவழி மருத்துவ அனுபவத்தில் கடந்த சில மாதங்களில், பல
அற்புத மாற்றங்களை உணர்கிறேன். இறைவன் கருணையால்
இன்னும் பல இறை ஞானங்களை - நன்மைகளைப் பெற்றேன். அவற்றை பகிர்ந்து கொள்வோம்.
துவக்கத்தில் இறைவழி மருத்துவ நுட்பம் என்பது எனக்காக இறைவன்
தந்தது என்ற எண்ணம் இருந்தது அதை எனது வாழ்க்கைத் தேவைகளைப் பெறும் – பொருளீட்டும்
வழியாகப் பாவித்தேன். முன்பு, பல நபர்கள் சுகம் பெற காத்திருக்கும் போது, என் விருப்பப்படி
– எனது வருவாயை உறுதிப்படுத்திய பிறகு தான் தனித் தனியாக மருத்துவம் பார்ப்பது வழக்கம்.
எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தேர்ந்தெடுத்த நபருக்கு தனியே சுகம் கொடுக்க முடிந்தது.
ஆனால், இறைவனின் அருளால்,
என்னில் புதைந்துள்ள நான் எனும் இறையை வெளிப்படுத்தி அதனுடன் இணைக்கும் சித்தர்களின்
இறவாக் கலையின் முதல் பாடம் தான் எனக்கு அருளப்பெற்ற இறைவழி மருத்துவம் என தற்போது
உணர்கிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளாக நேரிலும், தொலைவிலும் உள்ளவர்க்கு இறைவழியில்
சுகமளித்து வருகிறேன். சுகத்தை பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும் எனக்குள் ஏற்படும்
ஆனந்த பரவசமும், புரிதலும் என்னை இன்பமான நெருப்பில் புடமிட்டு வந்தது. பல நேரங்களில்
எனது தவறுகளையும், பெருமையெனும் குற்றத்தையும் கருணையோடு மென்மையாக சுட்டிக்காட்டித்
திருத்தி, சரியான புரிதலை புகட்டினான் இறைவன்.
கடந்த சில மாதங்களாக, இறைவழி நலவாழ்வு குறித்து நண்பர்களிடம்,
கூட்டங்களில், வகுப்புகளில் பேசும் போது கலந்து கொண்டவர்களில் பலர் தங்கள் நீண்டநாள்
உடல் மனத் துன்பங்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருக்கும் போதே நீங்கி சுகம் பெற்றதாக
தெரிவித்தனர்.
கூட்டமாக பல நூற்றுக்கணக்கான தேவையுள்ளவர்களுக்கு
ஒரே நேரத்தில் இறைவழியில் சுகத்தினை பகிர்ந்து கொள்ளவும் உடல், மன நோய்களை நீக்கவும்
முடிகிறது.
நேரில் ஒருமுறை சுகம் பெற்றவர் அனைவரும் தினமும் ஒரு குறிப்பிட்ட
நேரத்தில், எங்கிருந்தும் தொடர்புக் கருவிகள் இன்றி சுகத்தினைப் பெற முடிகிறது.
இறைவழி
மருத்துவ ஞானத்தைப் பகிர்தல்.
ஆரம்பம் முதலே, இறைவழி மருத்துவத்தில் சுகமடைந்த பலர் இதைக் கற்றுக் கொள்ள விரும்பி என்னிடம்
கேட்டுள்ளார்கள். நான் அவர்களிடம்; இந்த ஞானத்தை
எவரிடமும் இருந்து நான் கற்றுக்கொள்ளவில்லை
இது சித்தர்கள் வழியில் மருந்துகளை-மருத்துவத்தை இறையச்சத்துடன் செய்ததாலும், சக மனிதர்களை
நேசிப்பதாலும் எனக்கு இறைவன் கொடுத்த பரிசு. நீங்களும் உங்கள் தேவைகளை விருப்பத்துடனும்
இறையச்சத்துடனும், செய்து வாருங்கள் கிடைக்குமென்பேன்.
என்னால் கைமாற்றிக் கொடுக்க முடிந்தாலும் நீங்கள் பக்குவப்படாத
நிலையில் நீங்கள் உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கும் இடையே என்னை குருவாக நினைத்து நம்
இருவருக்குமே துன்பம் இழைத்துவிட வாய்ப்புண்டு. எனவே, பொறுமையாக இருங்கள் என்பேன்.
தகுதியில்லாதவர்களாய் நினைத்த சிலரிடம் அவர்கள் கொடுக்க முடியாத
தொகையை கட்டணமாகக் கேட்டு விலக்கி விடுவேன்.
தற்போதய புரிதல்களுக்குப் பின்;
தகுதியுள்ளவர்களுக்கு இறைவழி மருத்துவத்தை இறைவழியில் பகிர்ந்து
கொள்கிறேன். என் வழியாக இறைஞானத்தைப் பெற்ற நண்பர்கள் இறைவழி மருத்துவம் பார்ப்பதன்
போது அருவிஎன கொட்டும் இன்பத்தை, இறையின் பரவசத்தை என்னைப் போல நிறைவாக அனுபவிக்கிறார்கள்.
அவர்கள் புரிதல் உயர்நிலையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது. இதுவரை விழிப்புடன் இறையன்பைச் சுவைக்காதவர்களுக்கு
நான் எழுதுவது அதிகமாகத் தோன்றலாம்; ஆனால் எனக்கும், என்போல் உணர்ந்தவர்களுக்கும் தாமுணர்ந்த
இறை இன்பத்தை விளக்கத் தமிழும் இடம் தர முடியாது.
அன்பை மறவா.
தமிழவேள் நளபதி
கைபேசி 93458 12080, 94447 76208
மின் அஞ்சல் thamizhavel.n@gmail.com
வியாழன், 7 ஆகஸ்ட், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)