புதன், 21 மே, 2014

மேல் படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கவணத்துக்கு

மேல் படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் கவணத்துக்கு.
தற்பொது நீங்கள் எடுக்கப்போகும் முடிவு உங்கள் வாழ்க்கையின் திசையை முடிவு செய்யக் கூடியது.. நீங்கள் தேர்ந்தெடுத்த மேல்படிப்பு உங்களுக்கு கொடுக்கப்போவது என்ன?
எதன் அடிப்படையில் நீங்கள் உங்களுக்கான மேல்படிப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
உங்கள் விருப்பத்துக்காகவா? அறிவைப் பெருக்கவா?  வருமானத்துக்காகவா? மற்றவர்களின் நன்மைக்காகவா? கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப ஏதேனும் படிக்க வேண்டுமே என்றா?  பெருமைக்காகவா? பொழுது போக்குக்காகவா?
 இது குறித்து தெளிவான பார்வை நல்லது.
உங்கள் விருப்பம் 
இது எதன் மேல் கட்டப்பட்டது உங்கள் உடல் நலம், மனநலம், சூழல் நலம், மகிழ்ச்சி, பாதுகாப்பு, அமைதி போன்றவற்றைப் பற்றிய புரிதலின் அடிப்படையில் அமைந்ததா? இல்லை, பெருமையின் அடிப்படையில் கண்மூடித்தனமான விருப்பமா?
நம்மைச் சுற்றி அறியாமையில் உள்ளவர்களால் சிறு வயதிலிருந்து நமக்குள் திணிக்கப்பட்ட விருப்பமா? நம்மை ஆளும் வணிகர்கள் கூட்டம் அவர்கள் தேவைக்காக நம்மீது திணித்த விருப்பமா?
அறிவுக்காக
நமது அடிப்படைத் தேவைகளை எளிதாகப் பெற மற்றும் மேன்மையுற பெற உதவுவதே அறிவு. அடிப்படைத் தேவைகள் என்பது; பசி,தாகம், தூக்கம், ஓய்வு, கழிவு நீக்கம், நட்பு, உறவு, அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், அமைதி,போன்றவையே. இதை எளிதாக பெற்றுக் கொடுப்பதே.கல்வி-  அறிவியலாகும்.
இந்த அடிப்படைத் தேவைகளை நமக்கு அன்னியமாக்குவது எப்படி அறிவாகும் எப்படி அறிவியலாகும்.
இந்த தேவைகளைப் பெற தடையாக இருப்பது அழிவு அதை சொல்லித் தருவது அழிவியலாகும்.
வருமானம்
வாழ்க்கை வேறு வசதி வேறு. நாம் ஈட்டும் வருவாய் நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை பெற உதவினால் அது நன்று. அதைவிடுத்து நமது அடிப்படைத் தேவைகளுக்கு எதிராக மாறினால் அவை வருமானமல்ல செலவீனமே ஆகும்.
பெரும்பாலான பணம் படைத்தவர்கள் அவர்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத பரிதாபகரமான ஏழைகளாக இருக்கிறார்கள்.
பணம் அல்லது செல்வம்; அதை ஈட்டும் முறையே அது வருமானமா? இல்லை செலவீனமா? என்பதை முடிவுசெய்து விடுகிறது.
மற்றவர்களின் நன்மை
தன்னலத்தைப் பேணாதவன் பிறருக்கு சுமையே. அறிவுள்ளவர்களின் சுயநலமென்பது பொதுநலமே. தனது அடிப்படைத் தேவைகளை உணர்ந்தவர்களின் சுயநலம் எப்போதுமே எல்லோர்க்கும் நலம் தரும்.
தன்னை உணராத தனது தேவையை உணராத பதர்களின் பொதுநலம் என்பது அவர்களுக்கும் பிறர்க்கும் அழிவைத் தான் தரும்.
தியாகம், சகிப்புத் தன்மை என்பது எப்போதும் அடிமைகளைச் சுரண்ட ஆள்பவர்களும், ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்தும் மோசமான ஆயுதம்.
வேறு வழியில்லை கிடைத்த மதிப்பெண்ணுக்கானது
தேர்வு, போட்டி அடிப்படையிலான கல்விமுறை ஒரு மாணவனின் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தாது. மதிப்பெண் எடுத்தவர்களை விட மதிப்பெண் எடுக்காதவர்களை தாழ்வாக பார்ப்பது தவறு.
மனப்படாம் செய்து ஒப்பிக்கும் கல்வி முறை நமது படைப்பாற்றலை அழித்து அடிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டது.
வாழ்வில் வெற்றிபெற்றவர்கள் தனது அடிப்படைத் தேவைகளை எளிதில் பெறக் கற்றவர்களே. அதற்கு தற்போதய கல்வி உதவாது.
பெருமைக்காக
பெருமைக்காக செய்யும் எதுவும் கேடானதே. இதனால் யாருக்கும் பயனில்லை.
உண்மையில் நமது இயல்பை பெருமைக்கான முயற்சிகள் அழித்துவிடும்.
நமது தேவைகளின் அடிப்படையிலேயே தேடல்கள் இருக்க வேண்டும்.
பொழுது பொக்கு
வாழ்க்கையை வாழ அறியாதவர்களே பொழுதுபோக்கை விரும்புபவர்.
இந்த பதர்களாலேயே இப்பொழுது கோமாளிகளும் கூத்தாடிகளும் ஆள்பவர்களாக இருக்கிறார்கள். தான் வாழ விரும்புபவன் பிறர் ஆட்டபாட்டங்களில் கிறங்கி தன்னிலை இழக்க மாட்டான்.
பிறர்  பாடுவதையும், ஆடுவதையும், வாழ்வதையும் ஊடகங்களில் கண்டுமகிழ்பவர்கள் தன் வாழ்வின் கொண்டாட்டங்களை அறியமாட்டார்கள். இவர்கள் இரசிகர்களாயும், விசிறிகளாயும், தொண்டர்களாயும், பக்தர்களாயும் போலி முகங்களுக்கு அடிமைப்பட்டு தன்னையும் தான் வாழும் சூழலையும் வீணாக்குகிறார்கள். இவர்கள் வாழவிரும்புபவர்களைப் பார்த்து பொறாமையால் வெம்பி போகிறார்கள்.
இந்த வாழ்க்கை வாழ்வதற்கே. முழு ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் வாழ்பவர்களுக்கே வாழ்க்கை.
அவசரம் வேண்டாம்.
அவசரம் என்றால் கெட்ட மூச்சு என பொருள். இது நன்மை தராது. பொறுமையும் அமைதியும் நன்மை தரும்.
மேற்படிப்பு என வலையில் மாட்டிக்கொண்டு பின் வாழ்நாள் முழுதும் மனம் வெம்பாமல் சிறிது பொறுமையாக நமது வாழ்வை உறுதிப் படுத்தலாம்.
சிந்தித்துப் பழகுவோம்
நமது இயல்புக்கு பொருந்திய நமது அடிப்படைத் தேவைகளை முழுமை செய்கிற கல்வியைத் தேட நேரம் ஒதுக்குவோம்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆனாலும் குற்றமில்லை. நமது தேவைகளை நாம் அறியவும் அதை பெறும் வழியை நாம் அறியவும் பயிலுவோம்.
வாழ்வியலைக் கற்போம்
இந்த கல்வி பல்கலைக் கழகங்களில் கிடைப்பது அரிது. கிடைத்தால் பயன்படுத்தலாம். இல்லையேல் அது இருக்கும் இடம் தேடிச் சென்று கற்றுக்கொள்வோம்.
இயற்கையிடம் கற்றுக் கொள்வோம்.
நன்மையை நாடுபவர்களுக்கு இறைவன் இறைஞானங்களாக வழிகாட்டுவான்.
நன்மையை நாடி வாழும் மக்களிடம் சென்று வாழ கற்றுக் கொள்வோம்.
இவர்கள் உடல் நலமுடனும், மனநலமுடனும், மகிழ்ச்சியாகவும், சமாதானத்துடனும், பிற மனிதர் மற்றும் இயற்க்கையுடன் கூட்டாகவும், வாழ்கிறார்கள்.
இந்த உலகில் வாழத் தெரிந்த மனிதர்கள்  தம் வாழ்வை வாழ்கிறார்கள் அவர்களைத் தேடி நாமும் எளிய வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொள்வோம்.

எல்லாச் செல்வமும் வாழ விரும்புபவர்களுக்கானது.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com


 


ஞாயிறு, 11 மே, 2014

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

  • இனிக்கும் செய்தியல்ல!
ந.கீர்த்தனா
தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?

முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,  நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன.  வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''

''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
-- 

Regards
Maheswari
கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(செவ்விந்திய கவிதை..நன்றி தினமணி 
...)

வியாழன், 1 மே, 2014

சுவைப்பதே புரிதலைத் தரும்

இறைவழி -மறைவான வழி இது நம் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

எனக்கு -  நான் உணர்ந்ததைச் சிறிது  சொல்கிறேன். சிறிது சுற்று வழியாக இருக்கலாம்.

நாம் சாப்பிட்ட உணவு முழுமையாகச் சீரணமாகப் பல மணி நேரம் ஆகலாம். உண்ட உணவைப் பொருத்தது அது இதில் நமது அறிவுக்கு வேலை எதுவும் இல்லை.

பசியைப் போலவே, தாகம், தூக்கம், நல்லநட்பு, நல்லுறவுகள், அமைதி, நிம்மதி போன்ற எதையும் நம் நமது அறிவால் பணத்தால்ப் பெற முடியாது.

 நமது அறிவின் இயலாமைக்கு நல்ல உதாரணம் தற்போதய நவீன அறிவியல் உயர் தொழில் நூட்பமே-அதன் மருத்துவ முறையே. நம் உடலைக் காக்கும் படைப்பாற்றலின் சத்திகளைப் பற்றிய முழுமையான புரிதல் மனித அறிவுக்கு எட்ட முடியாததே. ஆயினும், நம் முன்னோர்களாகிய சித்தர்களின் தன் முனைப்பில்லாத விழிப்புணர்வால் இருபதுக்கும் மேற்பட்ட சத்திகள் நம் உடலில் இயங்குவதாக- உடலையும் உயிரையும் இயக்குவதாக தம் எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார்கள்.

'இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்' என்பது உணர்ந்தோர் மொழி.
தாம் படைத்த யாவற்றிலும்  படைப்பாற்றலின் முழுமையான கூறுகள் உள்ளது. இதையே முன்னோர் 'அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும்'  என்றனர்.

நான் கடந்த 15 ஆண்டுகளாக  மரபுவழி மருத்துவம் -பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி  பலரது உடல் மனத்துன்பத்தை தீர்க்க உதவியுள்ளேன. கடந்த 7 ஆண்டுகளாக நிணைத்தால் சுகம் தரும் இறைவழி மருத்துவத்தில் இருக்கிறேன். உடல் மன நோய்கள் தீர மருந்துகளோ, மனித முயற்சிகளோ தேவை இல்லை என்பது என் முடிவு. இதுவரைப் பல ஆயிரம் பேருக்கு இறைவழியில் சுகம்பெற வழிகாட்டியிருக்கிறேன்.

தனது அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து, படைப்பாற்றலுக்கு நண்றியுணர்வுடன், வாழ்க்கையைச் சுவைப்பதே இறைவழி. இதற்கு வழிகாட்டுவதும், உடன் துன்பங்களை நீக்கி நம்பிக்கையூட்டி  உதவுவதுமே இறைவழி மருத்துவம்.

இறையச்சத்தோடு எனக்கும்பிறர்க்கும் நண்மையையே நாடிய எனக்கு இறையாற்றலின் கொடையாகவே இறைவழி மருத்துவ ஞானம் கிடைத்ததாக உணர்கிறேன்.

என்னைப்போல இறைவழி மருத்துவம் செய்யும் மருத்துவ சகோதரர்களின் (மருத்துவர்.பஸ்லூர் ரகுமான் அவர்களின்) கருத்தும் அதை ஒட்டியதே என அறிகின்றேன்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

நண்பரே இனிப்பைப் பற்றி வார்த்தைகளில் கேட்பதை விட சுவைப்பதே புரிதலைத் தரும்.

நானும் உதவக் காத்திருக்கிறேன்.