ஞாயிறு, 25 மார்ச், 2012

இவ்வளவு தான் உலகம்


அகிலம் உங்கள் கையில் உருட்டுங்கள், உங்களை விரியுங்கள்.

Scroll your mouse......
It’s awesome Try this!


நன்றி,
தோழி மாலினி



செவ்வாய், 13 மார்ச், 2012

Know Your Body - 56வேப்பம் பூவில் செய்த மலர் மருந்து


Know Your Body - 56

Energy Healing....

"What is always speaking silently is the body."

-- Norman Brown
Dr.Thamizhavel

A Quick Learner at a Camp...

Practising Softly as told....
Solar plexus correction....
With friends in a Camp
March 2, 2012, ஒரு  6 மணியிருக்கும் .....அண்ணன் அழைத்தார்கள்....."என்ன மகீ.........ஒரே மேஜிக் எல்லாம் செய்றீங்க"...என்று உற்சாக குரலில் கூற....நானும் என்னவென்று யோசிக்க.....காலையில் வள்ளிக்கு  (அவர்களின் சித்தி மகள்) சிகிச்சை அளித்ததை பற்றி கூறினார்கள்......அவளுக்கு அம்மை போட்டிருந்ததால், இரண்டு நாட்களாக ஒரே எரிச்சல்,உடல் சோர்வு, படுத்த படுக்கையாக இருக்க....(நல்ல வேளையாக அம்மைக்கு நமது மக்கள் இன்னும் மருத்துவமனை செல்லும் பழக்கம் கொள்ளவில்லை)......வலி தாங்காமல் மருந்து கடைக்கு சென்றதாகவும், அவர்களும் அப்படி மருந்து எதுவும் கிடையாது (வாழ்க ஆங்கில மருத்துவம்) என்று கூற என்ன செய்வது என்று தெரியாமல் எனக்கு போன். நானும் மரு.தமிழவேள் அவர்களிடம் வேப்பம் பூவில் செய்த மலர் மருந்து இருக்கும்.தபாலில் அனுப்ப சொல்கிறேன் என்று கூறினேன்....அவர்களின் வீடு திருவொற்றியூர் என்பதால், மேடவாக்கம் வரை அலைய வேண்டாமே என்று.......ஆனாலும் வள்ளியின் கணவருக்கு போன் செய்து, இறை வழி மருத்துவத்தை விளக்கி, போன் செய்து மருத்துவரிடம் பேசுமாறு கூறினேன்.......அவளால் பேச முடியாது என்று கூறினார்...பரவாயில்லை, அவள் பேச தேவையில்லை, போன்-ஐ காதில் வைத்தால் போதும் என்றேன்.......அதன் படி செய்ய, அடுத்த நிமிடம், இறை வழி மருத்துவத்தால் அவள் உடன் எழுந்து உட்கார்ந்திருக்கிறாள் ....மேலும் தலை முதல் கால்  வரை ஒரு குளிர்ந்த காற்று செல்வது போல் இருந்த அனுபவத்தையும் கூறியிருக்க, உடனே, தானே மருத்துவரையும் பார்த்து மருந்து வாங்கி வர கிளம்பி விட்டாராம்.......பல நாட்களாக கடையை அடைத்து மனைவி குழந்தைகளை கவனித்து வந்த இனிய கணவர் அவர்...எனவே அவருக்கு மருத்துவரை கண்டு மிகுந்த மகிழ்ச்சி....மேலும் இறை வழி மருத்துவம் என்றால் என்ன என்ற விளக்கத்தையும் அறிந்து சென்றார்.

It was around 6 in the evening. My brother called me and told in a exuberant voice...."What Magi......you are all doing magic or what !!!....." He referred to the treatment given by Dr.Thamizhavel to his cousin sister, who was down with small pox. In the morning he had called me and asked what is the remedy, since they were not getting any medicine from nearby medical shop. I told him that there is flower medicine made from the Neem flower and I will ask the doctor to send the same by courier. However, I called his cousin's husband for the address and apprised him of the "Healing" method of treatment, and gave the Doctor's number. He said his wife was not in a position to talk, and I told him, she need not talk, just hold the phone near her ears. He just did as I said and after the Distant Healing given through phone, she immediately responded, by sitting down and also told that she felt a cold breeze running from her head to toe after the phone call.......Feeling good about the treatment, he immediately came to get the flower medicine from the doctor, by his two wheeler, from thiruvotriyur to medavakkam, and also got further info about the healing......

Reflex point for thyroid imbalance
Point No.8 is the Reflex point for correcting thyroid imbalance in the body........Press this twice a day for 30 seconds...It is enough to give a soft touch, concentrating on the point.

தைராய்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள தினமும் இருமுறை, ஒரு முப்பது வினாடிகள் புள்ளி 8-ஐ அழுத்தினால் போதும்......அப்புள்ளியில் கவனத்தை வைத்து மென்மையாக அழுத்தினாலே நல்ல பலன் இருக்கும்..


Regards
Maheswari

ஞாயிறு, 4 மார்ச், 2012

கடன் அட்டை வசதியும் உண்டு



மருத்துவர்கள் நல மையம் வழங்கும்

கட்டண மருத்துவ சிகிச்சை முகாம்....

(கடன் அட்டை வசதியும் உண்டு)




முன் குறிப்பு : சிந்திக்க தெரிந்தவர் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்...ஏனெனில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற நேரம் இல்லை......

நேரம் இரவு 11 -12 ........அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும்....

                       அனைத்து நகரங்களிலும்.....கண்டிப்பாக காசற்றவரும் கிராமவாசிகளும் வரவேண்டாம் எனக்கேட்டுகொள்ளப்படுகிரார்கள் 

மருத்துவ முகாமின் சிறப்புகள்....
  • வந்த நோய்கள் மட்டுமின்றி இனி வர இருக்கும் நோய் பற்றிய அறிமுக படம் திரையிடப்படும்
  • கடைக்கு சென்று மருந்து வாங்கும் தொந்தரவு இனி இல்லை...உங்கள் வீடு தேடி வரும். மொத்த பதிவுகளுக்கு சலுகையும் உண்டு...
  • மருந்து கட்டணங்களுக்கு வருமான வரி விலக்கு உண்டு....
சிகிச்சை அளிக்கப்பட இருக்குன் நோய்களின் அறிமுகம்....
  1.      இது நிறைய பேருக்கு அதிர்ச்சியை அளிக்கலாம்.....ஆனால் கவனித்து படியுங்கள்......உங்கள் உடல் நலனில் உள்ள அக்கறையினாலே பல ஆய்வுகள் செய்து, WHO பரிந்துரையின் பேரிலேயே இதை அளிக்கிறோம்....
  2.     அனைவருக்கும் சர்க்கரை நோய் பற்றி தெரிந்திருக்கும். ஏற்கனவே போதிய விழிப்புணர்வு கொடுத்தாகி விட்டது.....ஆனால், நம் உடம்பில், உப்பு, துவர்ப்பு, புளிப்பு, கசப்பு போன்ற நோய்களும்...உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு....இவை பற்றிய ஒரு அறிமுக முகாமாகும் இது.....
  3. இந்த முகாமில் கலந்து பல்வேறு அளவை முறைகளை கண்டு பிற்காலத்தில் வரும் நோய்களுக்கு இப்பொழுதே தடுப்பு முறைகளை அறிந்திடுங்கள்....
உப்பு:

நம் உடம்பில் உப்பு சரியாக 10 mg அளவு மட்டுமே இருக்க வேண்டும்....இது கூடினாலும் குறைந்தாலும் அது நோயாக கருதப்படும்....இதை தவிர்க்க உப்பு சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்....தவிர்க்கப்பட வேண்டியவை

1.iodine கலக்காத சாதாரண உப்பு

2. கரும்பு வெல்லம் (அதிலும் சிறிது உப்பு சத்து உள்ளது)

3.பனை வெல்லம் (மிகுந்த கேடுடையது)

புளிப்பு:
புளிப்பு சத்தானது ஒரு உடலுக்கு 40 mg மட்டுமே தேவை. இந்த அளவில் மாற்றம் இருந்தாலும் அது "புளிப்பு" நோயாகவே கருதப்படும்...எனவே கீழ்க்கண்ட உணவுகளை தவிர்க்கவும்

1. எலுமிச்சம்பழம்

2. சாத்துக்குடி

3. மாங்காய் 

துவர்ப்பு:





துவர்ப்பு சத்தின் சரியான அளவு 100 mg . அது கூடாமலும் குறையாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.....

1. வாழைப்பழத்தின் தோல்

2.நெல்லிக்காய்  (அதிலும் பெரிய நெல்லி கூடவே கூடாது)....ஆனால் பூச்சி மருந்துகள் போட்ட ஆப்பிள் சாப்பிடலாம்....உங்கள் வயிற்றிலிருக்கும் பூசிகளும் இறந்து விடும்...மெழுகு பூசிய ஆப்பிள் மேலும் நல்லது...உங்கள் வயிற்றிற்கு மிகவும் நல்லது, அந்த மேழுகுப்படலம் உங்கள் வயிற்றில் படிந்து உங்கள் வயிற்றின் உள் பாகத்தை "அசிடிட்டி"-இலிருந்து காக்கும்.

3. மாதுளம்பழம்....

கசப்பு

கசப்பின் அளவு கூடாமலும் குறையாமலும் பார்த்துக்கொண்டால் வாழ்நாள் முழுக்க இருதய நோய் இல்லாமல் வாழலாம்..அதன் சரியான அளவு 300 mg .  தவிர்க்க வேண்டிய உணவுகள்.

1. வேப்ப இலை (வாயிற்று பூச்சிக்காக குழந்தைகளுக்கு கூட கொடுக்கும் தாய்மார்கள் கவனிக்க...பின்னாளில் உங்கள் குழந்தைகள் இருதய நோய்க்கு ஆளாகலாம்...)
2. பாகற்காய் (சர்க்கரை நோயாளிகள் மட்டும் ஒரு கிலோ சாப்பிடலாம்)

இவை தவிர பல உணவுகளையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்...முழு தகவலுக்கு, அந்தந்த நோய் பெயரிலிருக்கும் வலைப்பக்கத்தை பார்க்க....(உதாரணம், www .புளிப்ப்பு.com ......).......நாங்கள் ஏதேனும் உணவுப்பொருளை விட்டிருந்தால் நீங்களாகவும் தெரிவிக்கலாம், அடுத்த பதிவில் சேர்த்து விடுவோம்......


மேற்கண்ட நோய்களுக்கு, எலி, மற்றும் பன்றியிடம் சோதனை செய்து பல அருமையான மருந்துகளை வெளியிட்டிருக்கிறோம்...முகாமில், முன் பதிவின் பேரில் அவை கிடைக்கும்....ஒரு குடியகத்தில் இருக்கும் பல பேர் ஒன்றாக பதிவு செய்தால், சலுகை விலையில் மருந்துகளை உங்கள் வீட்டிற்கே அளிக்கிறோம்.........போக்குவரத்து செலவு தனி......

பல நோய்கள் கொண்டவர்க்கு நிறைய உணவு வகைகளை தவிர்க்க சொல்வதால் பசி இருக்கலாம், எனவே உணவுக்கு மாற்றாக எங்களிடம் இணைபொருட்களும் உள்ளன. அவையும், powder மற்றும் capsule வடிவத்தில் கிடைக்கும். இவற்றை இரண்டு மணி நேர இடைவெளியில் உட்கொள்ளலாம்....அப்பொழுது பசியையே உணர  மாட்டீர்கள்.......நீரில் சேர்த்து குடிக்கவும் சில இணை பொருட்கள் உள்ளன.......அலுவலகம், வீடு என எங்கிருந்தாலும் வசதியாக உண்ணலாம்.....


ஏற்கனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பல பழங்கள் மற்றும் இனிப்பு உணவுகளை, தவிர்க்க சொல்வதையும் நினைவில் கொள்க.....அவர்கள் அதனுடன் சேர்ந்து இந்த உணவுபபட்டியலையும் தவிர்க்க வேண்டும்...


IT  துறையில் இருந்து வரும் நோயாளிகளுக்கு மற்றும் பெரிய பதவியிலிருக்கும் அரசு , தனியார் அதிகாரிகளுக்கு  சிறப்பு சலுகைகள் உண்டு..... ...கண்டிப்பாக காசோலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் , கடன் கிடையாது.....


* இந்த விளம்பரம் (சர்க்கரை) நோயாளிகள் என்று நினைத்து அவ்வப்பொழுது தங்களை சோதனை  செய்து கொண்டு மருந்து மாத்திரைகள் உட்கொண்டுவரும் எனது நட்பு மற்றும் சுற்றத்தார் வட்டத்திற்கு சமர்ப்பணம்......

Regards
Maheswari
கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(செவ்விந்திய கவிதை..நன்றி தினமணி 
...)