ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

இறை வழி மருத்துவ முகாம்





இலவச அக்குபங்சர்  மற்றும்  இறை வழி  மருத்துவ முகாம்
பதஞ்சலி   ஹெல்த்  சென்டர்

இடம் : RC கோயில், புதியமுத்தூர், தூத்துக்குடி
நாள்  :  17 மார்ச் 2012 ,  சனிக் கிழமை

நேரம் : காலை 11 மணி முதல்
                                 மதியம் 3 மணி நேரம் வரை.....


    ஒருங்கிணைப்பாளர்:   Fr. தனசேகர்  0948618055  புதியமுத்தூர்

            இடம் : பத்திரகாளியம்மன் நடுநிலைப் பள்ளி , மாப்பிள்ளையூரணி.....

நாள்  :  18 மார்ச் 2012 ,   ஞாயிற்றுக்  கிழமை

நேரம் : காலை 10 மணி முதல்
                                 மதியம் 2 மணி நேரம் வரை.....

   ஒருங்கிணைப்பாளர்:  சுந்தரபாண்டியன்    9942809109 மாப்பிள்ளையூரணி.....


      சிகிச்சை தொடர்பான கேள்விகளுக்கு....
      மரு.G.சரோஜினி MD (Acu)  8122482382
      பதஞ்சலி   ஹெல்த்  சென்டர்
               62 தந்தி ஆபிஸ் ரோடு
      தூத்துக்குடி 2
             மரு. ராஜம் MD (Acu)      9788844224
     மரு. யோகராணி MD (Acu )     9894023705

  •               எந்த நோயாக இருந்தாலும், சில நிமிடங்களில் குணமாகிவிடும்
  •               திரும்ப வராமலிருக்க "நலமாய் வாழ" படித்து அதன்படி நடந்தால் போதும்...
  •               மருந்து மாத்திரையில்லாத  மகத்தான மருத்துவம்....
  •               எந்த மருத்துவ அறிக்கைகளும் எடுத்து வர தேவையில்லை....
  •               நாடிபார்த்துசிகிச்சைதரப்படும்....

   அனைவரும் வருக.....உடல்  நலம்.பெறுக.....


கழுத்து வலியை குறைக்க Know Your Body - 55


Know Your Body - 55
Eat well Live well

Love Wrap
SI3

"The purpose of relationships is not happiness, but transformation."
-- Andrew Schneider
Web for throat pain
SI3 fist closed...on the heap
may be needled for quick relief.....
அறிவோம்

இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய  கதை .... ஒரு  மாணவன் , காட்டிற்குள் தவக்கோலத்தில் ஒரு முனிவர் அமர்ந்திருக்க, அவர் மேலே, பயமின்றி பறவைகள்  மிருகங்கள் இருப்பதை கண்டு,  தானும்  மிகுந்த  முயற்சி  செய்தானாம் . ...ஆனால் எவ்வளவு முயன்றும்  பறவைகள்  அவன்  மேல்  உட்காரவே  இல்லை .... மிகுந்த  மனக்கவலையுடன்,  குருவிடம்  காரணம்  கேட்க, விலங்குகள், பறவைகளுக்கு  உனது  மன  அதிர்வுகள்    புரியும் ....சலனமற்ற மன நிலையுடன் இருந்தாலே அவை  அமரும் என்று கூறினாராம். சென்னையில் 10 வருடங்களுக்கு  முன்னர்  நிகழ்ந்த  நில நடுக்கத்தின்  போது  , நாங்கள்  உணரும்  முன்னர்  அனைத்து  பறவைகளும்  கிரீச்சிட்டு  பறந்தது  நினைவுக்கு  வந்தது ....முதல் நடுக்கத்தை உணரும்போது எனது தங்கையின் வயிற்றிலுள்ள சிசு தான் குதிக்கிறதோ என எண்ணினோம்.....(அதற்கும் தெரிந்திருந்ததோ ?) அடுத்த நடுக்கத்திற்கே வெளியில் ஓடி வந்தோம்.....

அறிவை தேடுவதாக எண்ணி நமது இயற்கையான , மெல்லிய,  அழகிய நுண்ணறிவை இழக்கிறோமோ ....அது இருந்தால் உடல் நோயை கண்டறிய எந்த மருத்துவ சாதனங்களும் தேவைப்படாதே....

செய்வோம் 
கழுத்து வலியை குறைக்க, 7ஆம் புள்ளியை அழுத்தவும்...இப்புள்ளி கட்டை விரலின் அடிப்பாகத்தில் உள்ளது....
மேலும் SI3 என்ற புள்ளியும் அதற்கு உகந்தது....உள்ளங்கையை மடிக்கும்பொழுது, கூம்பு போன்று வருவதே SI3 ஆகும்....இதை லேசாக அழுத்திக்கொண்டிருந்தாலே  போதும்....கழுத்து வலி பறந்து விடும்...

KNOW
This is a fable told by Ramakrishna Paramahamsa. There was one seeker of Gnana in the forest, who , amazed by a Guru sitting calm, with so many  birds/animals around him, worked hard to achieve the same. But he did not succeed. When asked his Guru, he was told that animals and birds can sense your vibrations so sharp that since your inner mind is not so relaxed (perhaps he was tensed about achieving the status of that Guru), they are unable to sit or come near you. In this context I remember the earth quake that jolted Chennai around 10 years back. I remember very clearly that birds screeched, shouted and flew off enmass just before we could all feel the earth quake. Wondering why we , claiming to be having six senses and always striving for more knowledge lack these sharp sensations that are felt by animals and birds. May be they are one with the Nature and they get to know Nature's behaviour better...... As my sister was carrying then, we first thought the baby was bouncing (may be it was....) only for the next jolt we ran out.....If we have that soft or micro skill, none of us would need any scanning instruments for diagnosis of any disease......

FOLLOW
For neck pain you press the 7th point , the lower end of the thumb. As we have seen in classical acupuncture, the point SI3, which is the distal point for face/neck aches, can also be pressed. Locatoin : If you close your fist, the point can be located right on the heap.......
Go Slow.......Be Healthy..........
Email Marketing Powered by MailChimp

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

நம் உடலை அறிவோம் Know Your Body - 54



Know Your Body - 54
Eat well Live well

 

 

 
Love Wrap
Calendula
Web for throat pain

இன்று ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது தங்கை , மகனுடன் (6 வயது) இரு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது கீழே விழுந்ததில், நல்ல சிராய்ப்பு.....கிட்டத்தட்ட தீக்காயம் போல இருந்தது. வேகமாக சென்ற வண்டியாதளால், கீழே விழும்பொழுது தரையில் முகம், கை கால் எல்லாம் நன்றாக உரசி, பெரும் வெப்பத்தினால் காயமாகியிருந்தது  ........ மகனுக்கும் கட்டை விரலில் நன்கு வெட்டி இரத்தம் கொட்டியது.  அருகிலுள்ளவர்கள் மருத்துவமனை செல்ல சொல்லியும் சரி என்று வீட்டிற்கு வந்து விட்டார்கள். . மரு. தமிழவேள் அவர்கள் "வெட்டு காய  பச்சிலை பிழிந்து", ஹீலிங் மற்றும் CS 7, பூசணி போன்ற மலர் மருந்துகளை அளித்து சென்றார்....18 நாட்கள் ஆகியுள்ளது. ஒரு மூன்று முறை ஹீலிங் கொடுத்திருப்பார், மற்றும் காயம் ஆற ஆற "இரண தீர்வை" எண்ணெய் மட்டுமே உபயோகித்து வந்தார்கள்....இப்பொழுது இருவருமே, ஒரு சிறு தழும்பு கூட இல்லாமல் குணமாகி வருகிறார்கள்.  அதிலும் மகனின் வெட்டுக்காயமும் சரியானது தான் பெரிய ஆச்சரியம் . தையல் போட்டிருந்தால் கூட இவ்வளவு அழகாக குணமாகி இருக்காது...(எப்படியும் தையல் போட விட்டிருக்க மாட்டான் முன்பொரு முறை ஊசி போட வந்த மருத்துவரையே காலால் உதைத்து விரட்டி விட்டான்...மருந்து, சிரப் என்று எவ்வளவோ கஷ்டப்படு த்தியிருக்கிறோம்....(எப்படியும் குடிக்க மாட்டான் ) அவனுக்கு பல முறை இதே போன்ற வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது, ஆனால் இதை போன்ற மென்மையான முறையில் இவ்வளவு சீக்கிரம் ஒரு முறை கூட குணமானதில்லை.......வாழ்க இயற்கை....வளர்க இயற்கை மருத்துவர்கள் / மருத்துவம்.......



This is a sharing session. I wish to narrate the experiences of my sister and her son (6 yrs). They had a mishap around 18 days back, while riding a two wheeler. The vehicle skidded at the turning, and they both fell down, dragging for a while on the road, with high speed. The boy had a cut in the thumb , with blood oozing and both had "fire burn" like injuries on face, hand and leg., where they were dragged. Though the onlookers advised them to go to hospital, they came home and sought the help of Dr. Thamizhavel. He extracted the "Calendula" on the injured parts and gave healing to reduce pain, some flower medicines (CS 7 and Poosani) for quick recovery. One more external application was only "Ranatheervai oil", prepared by Dr.Thamizhavel himself......My sister's son never co-operates to go to an allopath, even in previous incidents, he tried kicking the doctor, while he came to stitch his cut, and it was left and healed. Also he never takes medicines/injections or syrups (How natural are kids), whatever we do.....So this method suited him the best. Now both are fine, and it is to be noted that not a single scar is left behind, as they heal.......Thanks to Nature, Natural Doctors and Natural Medicine.......

Go Slow.......Be Healthy..........
Email Marketing Powered by MailChimp

வியாழன், 9 பிப்ரவரி, 2012

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியது குறித்து நண்பர் சாதிக் கூறுவது

Not only  we are saying......Many have started saying this....

Go through thils link.......http://www.darulsafa.com/Health/way2eat.htm

நமது சிகிட்சையில் பின்பற்றவேண்டியவை

  •    ஒருவரது உடலில் வரும் நோய் எதனால் வந்தது? என்ன மருத்துவம் எடுப்பது? அந்த நோய் மற்றும் எந்த நோயும் உடலில் வராமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள என்ன கடைபிடிக்க வேண்டும்? என்பதைத் தெரிந்து கொண்டால், சுகமான, நிம்மதியான இறைவன் நாடினால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
  • .
  • 1. உணவு:

  • சாப்பிடுவதற்கு முன் கை, கால் மற்றும் முகம் கழுவ வேண்டும். மலம், ஜலம் இருந்தால் அதையும் அகற்றிவிட்டு அமரவும். உண்டபின்பு உடனே மலம், ஜலம் கழிக்கக் கூடாது (அப்படியிருந்தால் அது நோய்).
  • சாப்பிடும்போது "பிஸ்மில்லாஹ்" சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
  • பசித்தால் மட்டும் சாப்பிட்டால் போதும் (பசித்து புசி).
  • முதலில் இனிப்பு சாப்பிட்டுவிட்டு, உணவு உட்கொள்ளவும். (இனிப்பு சாப்பிட்டபின்பு நீர் அருந்தக்கூடாது).
  • சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும்,பின்பும், இடைவெளியிலும் நீர் பருகக்கூடாது. சாப்பிட்டு அரை மணிநேரம் கழிந்தபின் நீர் அருந்தலாம்.
  • உணவு உட்கொள்ளும் நேரம் மட்டும் வாயைத்திறந்து, உணவை மெல்லும் போது வாயை அடைத்துக்கொண்டு நன்றாக உமிழ்நீருடன் சேர்த்து மென்று விழுங்கவேண்டும்.
  • சாப்பிடும்போது புத்தகம் படிக்கவோ, டிவி பார்ப்பதோ, பேசுவதோக் கூடாது. சாப்பாட்டிலே முழு கவனமும் இருக்க வேண்டும்; ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும், முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவே சாப்பிடவும்.
  • தரையில் அமர்ந்து சாப்பிடவும்.
  • டீ, காஃபி குடிக்கக் கூடாது, சுக்குகாஃபிக் குடிக்கலாம்.
  • சீனி, புளி, பொடி உப்பு, மைதா (avoid white poisons) எடுக்கவேண்டாம்.
  • .
  • 2. குடிநீர்:

  • தாகம் எடுத்தால் மட்டும் நீர் பருகவும் அதுவும் உட்கார்ந்து மெதுவாகக் குடிக்கவும்; உமிழ்நீருடன் சேர்த்து (வாயை அடைத்துக்கொண்டு) குழைத்துக் குடிக்கவும். அதுவே ஜீரணத்திற்கு இலகுவாகும்.
  • நீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக்கூடாது. உயிர் சத்துக்கள் அழிந்துவிடும். மினரல் வாட்டர், பாட்டில் தண்ணீர் குடிக்காதீர்கள். மண்பானையில் நீர் வைத்து 2மணிநேரம் கழிந்தபின்பு அதைக்குடிக்கவும்.
  • சிறுநீரை அடக்கிவைத்துக்கொண்டு நீர் பருகக்கூடாது; சிறுநீர் கழித்த பின்பு நீர் அருந்தலாம். அதுவே ஆரோக்கியம்.
  • நீரை நின்றுக் குடிக்கக்கூடாது (ஆண்மைக்குறைவு ஏற்படும்). அன்னாந்து மடமடவெனக் குடிக்கக்கூடாது; மெதுவாக சப்பிக்குடிக்க வேண்டும்.
  • பருத்திதுணியில் நீரை வடிகட்டி குடிக்கலாம். மற்றும் செம்புகாசு அல்லது செம்புத்தகடு நீரில் போட்டுவைத்து அரைமணிநேரம் கழிந்தபின்பு குடிக்கலாம். மொட்டைமாடியில் வெயிலில் வைத்தும் நீரைக் குடிக்கலாம்.
  • .
  • 3. காற்று:

  • .நமது வீட்டில் எப்போதும் காற்றோட்டம் நன்றாக இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கும்போது ஜன்னல்களை பாதுகாப்பான முறையில் திறந்து வைத்து சுத்தமானக் காற்று உள்வந்து, அசுத்தக் காற்று வெளியில் போகிறமாதிரி அமைத்துக் கொள்ளவும்.
  • கொசுவலை பயன்படுத்தவும்; கொசுவர்த்தி, ஆல் அவுட் (அப்படியென்றால் நாமும் சேர்ந்து அவுட் என்று மறைமுகமாகக் கூறுவது) பயன்படுத்தாதீர்.
  • காலையில் நல்ல மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

  • 4.ஓய்வு (தூக்கம்):
  • .
  • உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6மணிநேரம் நன்றாக தூங்கவேண்டும்.
  • வடக்கே தலைவைத்து படுக்கக்கூடாது.
  • இரவு 11-3மணிவரை ஒருவர் கண்டிப்பாக தூங்கவேண்டும்; 11மணிக்குப் பிறகு விழித்திருப்பவர்களுக்கு கண்பிரச்சினை மற்றும் பித்தம் சம்பந்தமான நோய்கள், தசைப்பிடிப்புகள் வர வாய்ப்பிருக்கு.
  • இரவில் பல் விளக்கிவிட்டு படுக்கவும்.
  • மனதிற்கும், புத்திக்கும் வேலைகொடுப்பவர்கள் கண்டிப்பாக ஓய்வு எடுப்பது அவசியம்.
  • வாரத்தில் 2தினம் எண்ணை தேய்த்து குளிப்பது உடலுக்கு சிறந்தது.
  • .
  • 5. உழைப்பு:
  • .
  • உழைப்பிற்கேற்ற உணவு உட்கொள்ள வேண்டும்.
  • தினமும் நமது எல்லா மூட்டு இணைப்புகளும் அசைவு கொடுக்கிற விதத்தில் உழைக்கவேண்டும். (5 நேரமும் ஒழுங்காக தொழுதாலே போதும்).
  • AC-ஐ 37ºC-ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • செருப்பின்றி காலை, மாலை நடக்கலாம். Reflexology points நன்றாக வேலை செய்யும்.
  • இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிணநீர் (lymphatic) ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும் (அம்மிக்கல், உரல், ஆட்டுகல் எங்கே?) உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிண்நீரோட்டம் நன்றாக இருக்காது. இதுவே பல நோய்களுக்கும் காரணம்.
            மேற்கூறியபடி கடைபிடித்தால், நாம் உடல் ஆரோக்கியமாக வாழலாம் இறைவன் நாடினால்.. நமது உடலிலே அனைத்து நோய்களுக்கும் தீர்வு இருக்கு.
         மேலதிக விபரத்திற்கு:
  • அக்குபங்சர் மருத்துவர் சாதிக், MD(Acu). ATAMA's KK.Dist Organiser.
  • ஸஃபா அக்குபங்சர் சிகிட்சை மையம்.
  • ஃபிதௌஸியா அரபிக்கல்லூரி வளாகம்,
  • பறக்கை ரோடு, கோட்டார்.PO.
  • நாகர்கோவில் - 629002.
  • கன்னியாகுமரி மாவட்டம்.
  • கைபேசி: +91-9443389935; +91-8903489935
  • மின்னஞ்சல்: acusafa@gmail.com



Regards
Maheswari
 
கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

(செவ்விந்திய கவிதை..நன்றி தினமணி 
...)