செவ்வாய், 27 செப்டம்பர், 2011

Know Your Body - 43


Today's Fact

அநேகமாக நாம் அனைவருமே அடிக்கடி சளித்தொல்லையால் அவதி பட்டிருப்போம். சளித்தொல்லை என்பது உடலில் சேகரிக்கப்பட்டுள்ள நச்சுப்போருட்களின் வெளியேற்றும் முயற்சியே.....(நீரும் காற்றும் கலந்தது).......அதனை மருந்துகள் கொடுத்து அமுக்க முற்பட்டால் நச்சுதேக்கம் பலவாறாக வெளிப்படும் (தோல் நோயாக), மேலும் மருந்துகள் உடலின் எதிர்ப்பு சக்தியையும் அழித்துவிடும். எனவே எளிய முறையில் சளித்தொல்லையை சரியாக்கும் வழியினை ஆராய்வோம்....

Most of you would have encountered the effects of "Cold" in your daily life. Cold is a simple form of the body's fight to eliminate toxins secreted inside our body. If we just help body to get it eliminated, we will not catch cold for a longer duration. If you try to subside it by taking medicines, the toxins will try to erupt in some other form, and also you may frequently catch cold.


Today's Tips

1.      காலையில் பசுமை குடிநீர் எடுத்துக்கொள்ளலாம்.
பசுமை குடிநீர் செய்முறை : ஒரு தம்ளர் நீரை நன்கு கொதிக்க விடவும். அதனை அடுப்பிலிருந்து எடுத்து, ஒரு கையளவு முருங்கை இலைகளை அதில் போடவும். (குச்சிகளுடனும் போடலாம்)......ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடல் கழித்து வடிகட்டி குடிக்க வேண்டும். குடிக்கும்போழுது நின்று நிதானித்து சுவைத்து குடித்தல் நலம். எவ்வளவுக்கு எவ்வளவு நிதானமாக குடிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் உடல் நலன் சரியாகும்.


2.
சளி பிடித்த நேரங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமைத்த உணவை தவிர்த்து விடலாம்...சமைக்காத இயற்கை உணவுகளான பழங்களை நன்கு உண்ணலாம்.


3.
உடலின் மொழியை புரிந்து அதன் படி நடந்தால் சீக்கிரமே நிவாரணம்  பெறலாம்....அதாவது அசதியாக
இருந்தால் , தூக்கம் வந்தால் தூங்கி  ஓய்வு எடுக்க வேண்டும்.  இந்த நேரத்தில் உடலை அதிகம் வருத்தி வேலை செய்யாதிருத்தல் நலம்.....

 
இதனை கடைப்பிடித்தாலே சளி விரைவில் வெளியேறி உடல் சுகம் பெறும்....

We will see some tips to combat cold today.

1. Taking Green juice early in the morning (with drum stick leaves).

Method to prepare Green juice :Pour a tumbler water in an utensil and let it boil. After it boils, take it away from the stove, put some drumstick leaves (along with the little sticks as well), and leave it aside for 5 to 10 minutes. The water would turn to slight green in colour. Drink it sip by sip. You can also add one drop of castor oil to it, to ease out the release of toxins.

2. Reduce cooked food as far as possible, and take natural food instead. (Fruits)

3. Listen to what the body stays, whether to lie down or take rest, and do not over strain.



வால் மிளகை நுணுக்கி (ஒன்றிரண்டு போதும்) தேனுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல நிவாரணம் பெறலாம்.... காட்டமாக இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு நுணுக்கி (தோல் தொண்டையில் சிக்காமல்) கொடுத்தல் நலம்......நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.....10 -20 கிராம் வாங்கினாலே நிறைய நாட்கள் உபயோகத்திற்கு வரும் (நமக்கு தான் உடல் சீக்கிரம் சரியாகிவிடுமே....)

Taking grinded "vaal milagu" with honey removes cough/cold very soon........ It has a very good mint taste, and that lasts for hours (as told by Sowmi). If given for children, it should be ground very nice, so that the skin of the vaal milagu does not irritate their throat.  It will be available in "Country medicine" shop nearby your locality. Even if you buy 10-20 gms, it will come for long (as our disease will get cured instantly)


கடைசி மரமும் வெட்டுண்டு ...  
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!


Regards
Maheswari






Know Your Body - 42


Today's Fact

இருதயத்தில் திடீரென வலிகள் தோன்றுவதில்லை....முதலில் இடது கை தோள்பட்டையிலிருந்து வலி ஆரம்பிக்கும். இதற்கு காரணம் இருதய சக்தி ஓட்டத்தின் முதல் புள்ளி அக்குளில் இருப்பதே ஆகும்.....


The pain in the heart starts with a sharp steep pain right from the armpit. The reason for the pain starting here is , H1, the first point in the Heart Meridian starts from the armpit.

Today's Tip
இருதய படபடப்பு மற்றும் மூச்சுத்திணறலுடன் கூடிய வலி இருந்தால் P6  என்னும் இருதய மேலுறையின் ஆறாவது புள்ளியை தூண்ட வேண்டும்.... லேசான தொடல் அல்லது, ஒரு அரை சுன் (சுன் அளவையை பற்றி அறிய, படத்தை பார்க்கவும்) மேலே நிறுத்தினால் கூட போதுமானது....நன்கு ஆழ்ந்து கவனித்து செய்யும்போது விரலை பின்னோக்கி இழுப்பது போல தோன்றும். அத்துடன் சிகிச்சையை நிறுத்தி விடலாம்...இந்த புள்ளியில் சிகிச்சை அளித்தால் மார்பு அடைப்பு, மூச்சடைப்பு, (ஆஸ்த்மா) , ஆஞ்சினா , படபடப்பு , தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மட்டுமல்லாமல், நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், மறதி போன்றவையும் குணமாகும்...


When there is a palpitation, coupled with pain in the arm shoulders, uneasiness etc., press the point P6 (the 6th point in the Pericardium meridian). Instead of press, the index finger tip(flat) can even be placed at a distance of 1/2 cun (see picture for measurement of cun). You would feel a repelling force (for the finger)
  

Pressing this point regulates Qi (Vital Energy)  flow from the torso to the arm and vice versa. It also Opens and relaxes the chest, chest tightness, asthma, angina, palpitations.Insomnia a/or other spirit disorders of an excess or deficient nature, mania, nervousness, stress, poor memory.Nausea, seasickness, motion sickness, vomiting, epigastric pain. Offers good cure for Carpal Tunnel Syndrome as well..

Regards
Maheswari

கடைசி மரமும் வெட்டுண்டு ...
கடைசி நதியும் விஷமேறி...
கடைசி மீனும் பிடிபட ...
அப்போதுதான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாதென்று ...!

Know Your Body - 41


Today's Fact

பாரம்பரிய மருத்துவ முறைகளை கை கொள்ள நினைப்போர் கூட பயப்படுவது, இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு மட்டுமே. அதிலும் குறிப்பாக "மாரடைப்பு" வந்தால் என்ன செய்வது என்பதே பலரது கவலையாகவும் இருக்கும்.....அதைப்போக்க இனி வரும் பாகங்களில் இருதயத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்....

மரு. பாஸ்லூர் ரஹ்மான் மற்றும் ஹெக்டே இருவருமே மிக அழகாக இருதயம் வேலை செய்வதை பற்றி விளக்குகிறார்கள்.  மாரடைப்பு வந்ததும்  இருதயம் முன்பிருந்ததை விட பல மடங்கு (25) வலிமை பெறும். நவீன மருத்துவம் 24 ,32 ,48 ,72 மணி நேரங்கள் என்று கொடுத்து ICU வில் வைத்து பாதுகாப்பது கூட உடல் தன்னாலே தனது நிலைக்கு திரும்புவதை கணக்கு வைத்துதான்....அதனால் தான் அவர்களால் எவ்வளவு வீரியமான மருந்து கொடுத்தாலும் எந்த நேரத்திற்குள் உடல் தன்னிலையடையும் என்பதை கூற முடியவில்லை.....

Even those who wish to undergo traditional treatment, are only afraid of heart related disorders. The fear for heart attack is inherent in one and all. Let us overcome this fear by knowing more about the heart.

The famous Cardiologist B M Hegde and Dr Fazlur Rahman , offer very good explanation about what happens after a heart attack. The heart becomes stronger than before (25 times !!!) . Doctors usually give a 24 hr, 32 hr, 48 hr or 72 hr period about the criticality of the patient in ICU (after a heart attack), which is proof enough that they are waiting for the patient himself to return to normalcy (by themselves), irrespective of the quality/potency of the drugs administered.


Today's Tip
இருதய படபடப்பு/ அடைப்பு சிறுநீரகத்தின் சக்தி ஓட்ட குறைபாட்டினால்  (kidney failure) நிகழுமானால், H3 (Water point) என்ற புள்ளியை அழுத்தினால், சிறுநீரகமும் இருதயமும் ஒரு சேர பலம் பெறும்.

கையை முக்கால் பாகம் மடக்கும்போது வரும் கோட்டின் ஓரத்தில் (உள்பக்கம்) வரும் புள்ளி H3 ஆகும்.


If the palpitation/heart disorder is due to non-functioning or poor functioning of Kidney, then pressing H3, the water point and 3rd point in the Heart meridian would ensure proper functioning of kidney.
Location of point: Fold your hand to 3/4 ths, the crease ending (inside the body) locates the point H3.


Regards
Maheswari


வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சுகம் பெற எளிய வழி - அமுதம் பெருக்கி

சுகம் பெற....

எனது மருத்துவ அனுபவத்தில், நான் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக, சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி பலரும் குணம் பெறுவதை கண்டிருக்கிறேன்.அவற்றில் சில எளிய முறைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நஞ்சு நீக்கி அல்லது அமுதம் பெருக்கி:

இது பெயருக்கேற்றார் போல் உடலில் தேங்கியுள்ள அனைத்து நஞ்சுக்களையும் மென்மையாக வெளியேற்றக் கூடியது.

.இதில் கலந்துள்ள மூலிகைகள் நாம் சாப்பிடும் உணவில் உள்ள எஞ்சிய நஞ்சுகளின் (வணிகர்கள் நிலத்தில் கொட்டும் நஞ்சினால் உணவுப்பொருள்களில் தேங்கும்) பாதிப்புகளை நீக்கி வெளியேற்றுகிறது.

அதேபோல, உமிழ் நீரை அறுசுவைகளையும் சீரணிக்கத் தக்கதாக தேவையான அளவு சுரக்கச் செய்கிறது. உமிழ் நீரையே அமுதம் என்கின்றனர் சான்றோர். உமிழ் நீரே சீரணத்துக்கு அடிப்படை.

உடலில் வரும் அனைத்து நோய்களுக்கும் காரணம், உடல் செல்களுக்கு போதிய ஆற்றல் இல்லாமையே. செல்களுக்கு ஆற்றல் தருவது உடல் உணவிலிருந்தும், நீரிலிருந்தும், காற்றிலிருந்தும், விண்ணிலிருந்தும் உடல் பிரித்தெடுக்கும் எரிசத்தியே. இந்த எரிசத்தி நமது உடலினால் மிக நுட்பமாகlத் தயாரிக்கப்பட்டு, பலத்த தரச் சோதனைக்குப் பின் தரமானதாக அறிவது பயன்படுத்தப்படுகிறது – எஞ்சுவது சேமித்து வைக்கப்படுகிறது. இது தேவையான போது உடலினால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது
பொருந்தாத உணவினாலோ, சுவைத்து உண்ணாததாலோ, உணர்வுகளின் பாதிப்பினாலோ, அல்லது உடல் சீரண உறுப்புகளின் பலவீனத்தாலோ தரமற்றதாக முடியும் எரிசத்தி- உடல் செல்களுக்கு ஏற்றதல்ல என்பதால்; உடல் அதைப் புறக்கணித்துக் கழிவுகளாக உடலை விட்டு வெளியேற்றுகிறது.

இந்த வகையில் உடலின் சீரணத்தை முறைப்படுத்தி, கழிவுகளையும் வெளியேற்றி நஞ்சுநீக்கி என்ற அமுதம் பயன் படுகின்றது.

இந்த மருந்தில் உள்ள மூலிகைகள் மற்றும் செய்முறை;
1.       அவுரி             - 1 பங்கு (உதாரணம் 20 கிராம்)
2.       அதிமதுரம்         - 2 பங்கு (40 கிராம்)
3.       அமுக்கரா         - 1 பங்கு
4.       மிளகு             - 1 பங்கு
5.       கடுக்காய்          - 1 பங்கு
6.       தான்றிக்காய்       - 1 பங்கு
7.       விளாமிச்சம் வேர்  - 1 பங்கு
8.       நன்னாரி           - கால் பங்கு (5 கிராம்)

இவற்றை தனித்தனியே கைபார்த்துப் பொடிசெய்து பின் சேர்த்து வைத்துக் கொள்க.

-   இந்த மருந்துக்கான அடிப்படை எனது ஆசான்களில் ஒருவரான சாமீ. அழகப்பனால் எனக்கு கிடைத்தது. இது அவரது தாத்தாவின் முறை இதை அவர் பாசாணங்களின் முறிவுக்கும், கடிநஞ்சு முறிவுக்கும் பயன்படுத்தி வந்தார்.

-   இதில் சிறு மாறுதல்கள் செய்து நான், அனைத்து நோய்களுக்கும் முதல் மருந்தாகப் பயன்படுத்துகிறேன். இதில் கிடைத்த நன்மைகளின் சிறப்புக் கருதி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

-   இந்த மருந்தை மட்டுமே பயன்படுத்தி சில வகைப் புற்றுநோய்கள், மூலம், கடும் தோல் நோய்கள், பலவகையான சுரங்கள் போன்றவற்றை முழுமையாகக் குணமாக்கிய அனுபவம் பல உண்டு.

-   பொதுவாக என்னிடம் சிகிச்சை பெற்ற அனைவருக்கும் இதன் சிறப்பு தெரியும்.

-   முன்பு, உணவுக்குப் பின் இதை பயன்படுத்தினேன். தற்போது பெற்ற அனுபவத்தால் இதை தொடர்ந்து சிறிதளவு உணவுக்கு முன் பயன்படுத்துவதால் மிகச் சிறப்பான பலனைப் பெற முடிகிறது.

-   நோயுள்ளவர்கள் பயன்படுத்தினால் அந் நோய்கள் சுகம் தந்து மறையும். நலமானவர்கள் பயன்படுத்தினால் எந்த நோயும் அணுகாது.

பயன்படுத்தும் முறை

உணவுக்கு முன் பழங்கள் உண்பது சிறப்பு. இயலாத நிலையில் அமுதம் பெருக்கியை உணவுக்கு முன் பயன்படுத்தலாம். 
பழங்கள் உணவுக்கு முன் உண்பவர்கள் அமுதம் பெருக்கியை உணவுக்குப் பின் பயன்படுத்துக.

மூன்று வேளையும் உணவுக்கு முன் அல்லது பின் ஒரு சிட்டிகை அளவு. (இரண்டு விரலால் எடுக்கும் அளவு) நாக்குக்கு அடியில் இட்டு சுவைக்கவும். நன்கு உமிழ் நீர் சுரக்கும். இதில் மருந்து கரைந்து முழுவதும் மறைந்தபின், உணவை வாயைமூடி சுவைத்துச் சாப்பிட்டால் போதும். 

இத்துடன் அடிப்படை நோயணுகா விதிகளையும் கடைப்பிடித்தால் எல்லா சுகமும் உங்களுக்கே.

நண்பர்களே செய்து பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின், கேளுங்கள் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நீங்கள் சுகம் பெற்ற அனுபவங்களை இங்கு பதிவு செய்தால் – பிறரிடம் பகிர்ந்து கொண்டால் எல்லோரும் நலம் பெறுவர்.

செய்முறை மிக எளிதே. தானே செய்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் என்னிடம் கேட்டால் செய்து அனுப்பி வைக்கிறேன்
.
தொடர்பு முகவரி.

ந. தமிழவேள், மரபுவழி நலவாழ்வு மையம், எண்;31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600054.

கைபேசி-93458 12080, 94447 76208.

Email: thamizhavel.n@gmail.com

அன்பை மறவா,
தமிழவேள நளபதி.