வியாழன், 24 மார்ச், 2011

இன்றைய அனுபவம்.


இன்றைய அனுபவம்.


இன்றைய அனுபவம்.

நேற்று தோழி வாசுகியிடம் பேசிய போது, மச்சமுனி வலைப் பூவில் சாமீ. அழகப்பன் ஐயா எழுதிய; வர்ம மருத்துவ அனுபவங்களை படித்த்து பற்றி பேசினார். ‘தமிழவேள் நீங்களும் அது போல எழுதினால் படிப்பவர்களுக்கு பயன் படுமே எழுதுங்கள் என்றார். நான் இதே தொழிலாக இருக்கிறேன். நான் என்னிடம் உடல் நலம் வேண்டி வரும் நபர்கள் பற்றிய குறிப்புகளே வைத்துக் கொள்வதில்லை. காரணம் என்னவெனில், மனித அறிவில் - மாற்றம் ஒன்று தான் நிரந்தரமானது. நான், நிகழ்காலத்தில் நடப்பைச் சந்திக்க வேண்டுவதால் மனதின் பதிவுகளை ஏற்படுத்த விரும்புவதில்லை.

உதாரணமாக, சிறுநீர் பைக் கற்களுடனோ, கடும் மூட்டு வலிகளுடனோ, பல ஆண்டுகளாக இருந்த உடல் உபாதைகளைப் பற்றிய மனித அறிவுடன் - அவை தனக்கிருப்பதை உறுதி செய்த மருத்துவ அறிக்கைகளுடன் மருத்துவம் பார்க்க வருகிறார்கள். நாம் அவர்களிடம் மனித அறிவின் கீழ்மையை விள்க்கி, இறைஞானத்துடன் செயல் படும் உடல் இயக்கம் மற்றும் அதன் தேவைகளுக்கு உதவ கூடிய மன நிலை குறித்து, நாம் இறையச்சத்துடன், நமது நலம் நாடிச் சிந்தித்து பெற்ற இறைஞானங்களை அடிப்படையாகக் கொண்டு வழிகாட்டுகிறோம்.

நோய்களுக்கு துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம். குளியல், பசி, தாகம், தூக்கம், நல்ல நட்பு, உறவு போன்ற அடிப்படைத் தேவைகளைப் புறக்கணிப்பதும், இவற்றை மனித அறிவால் - பணத்தால் பெற்றுவிட முடியும் என இறைவனைப் புறக்கணிப்பதுமே ஆகும். இதை விளக்கி அவர்களது பழக்க வழக்கங்களை சிந்தனை முறைகளை சீர்படுத்த இறைவழியிலான வாழ்க்கை முறைகளை விள்க்குகிறோம்.

இறைவழியிலான வாழ்க்கை முறை என்பது, இறைவன் நமக்காக –மனிதர்களின் நன்மைக்காகக்  கொடுத்துள்ளவற்றை இறைவனுக்கு நன்றி உணர்வுடன், இறையச்சத்துடன் அளவு முறைப்படி, முழுமையாக வாழ்க்கையைச் சுவைப்பதே ஆகும்.
நாம், நமது நலம் நாடி நமக்கும், பிறர்க்கும் நன்மையை நாடுவதால் நம்மிடம் மருத்துவம் பார்க்க வருபவர்க்கும்– இறைவழியில் நன்மையை நாடினால் நலம் கிடைக்கும், சுகம் பெற வேண்டும என்ற எண்ணத்தொடு வருபவர்களுக்கு நாம் நம் மனதில்; மருத்துவர் என்ற நிலையிலிருந்து விலகி, எல்லாம் இறைச்செயல் என்றுணர்ந்து இறைவனிடம் பொறுப்பை ஏற்படுத்துவதால்; அவர்கள் மனம் திருந்தி இறைவனிடம் நன்மையை நாடியதற்க்கு கூலியாக இறைவன் அவர்களுக்கு நற்சுகத்தை தருகிறான். உடலும், மனமும் நலம் பெறுகிறார்கள்.

அந்த வினாடியில் இருந்து  அவர்களது உடலும் மனமும் சுகம் பெற ஆரம்பிக்கிறது. அவர்களது பொறுமையின் காலத் தவனைக்கேற்ப  விரைவில் முழு சுகம் பெறுகிறார்கள். இதனால் தான், நான் மருத்துவம் பார்க்க வருபவர்களைப் பற்றிய குறிப்பெதுவும் எழுதி வைப்பதில்லை.

இறைவழியில் சுகம் பெற வேண்டும் என நினைத்த மாத்திரத்திலேயே ஒருவர் சுகம் பெறுகிறார் என்பதே உண்மை.

இன்றைய அனுபவம் எழுத வேண்டிய தேவையை உணர்த்தியது.
இன்று காலை 6 மணியளவில், வீட்டின் சமையலறையில் இருந்து பலத்த சத்தம் தொடர்ந்து எனது துணைவி பரணியின் அலறல் சத்தம் நான் ஓடிச்சென்று பார்த்தபொது, தனது கால் பெருவிரலைப் பிடித்த படி துடித்துக் கொண்டிருந்தாள் பரணி. கழுவும் தொட்டியின் பக்கவாட்டில் இருந்த jஎடை மிகுந்த கடப்பா கல் நேராக கால் பெருவிரலில் நகத்தின் அடிப்பகுதியில் விழுந்து இரத்தப் பெருக்கையும், கடும் வலியையும் உண்டாக்கி இருந்தது. பாவம்; ஏற்கனவே சில காலமாக அந்த விரலில் ஏற்பட்டிருந்த புண் அப்பொழுது தான் ஆறி இருந்தது. இரண்டு தினம் முன் வரை அந்த புண்ணால் துன்புற்றுக் கொண்டிருந்தாள்.

அந்த கொடுமையான காட்சி என்னை மறக்கச் செய்தது. இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து துன்பத்தைக் நீக்கி அருள மனம் வேண்டியது. அதே நேரத்தில் மனைவியின் மேலிருந்த பாசமும், பயமுமாக நான் மனசஞ்சலங்களுக்கு ஆளாகி இருப்பதையும் உணர்ந்தேன். இறைவனிடம் பொறுப்புகளை ஓப்படைத்தால் வலி குறைந்து சுகம் கிட்டும் என்பதை அறிந்தும்,  சிறிது நேரம் திகைத்துப் போயிருந்தேன். நேற்று இரவு தான் அந்த பக்கவாட்டுக் கல் லெசாக அசைந்த்தை கேட்டு அது விழுவதற்கு வாய்ப்பில்லை; நாளை நன்கு ஒட்டி விட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். அதைத் தொடாத நிலையிலேயே அது இப்படி சரியாக அதே கால் பெருவிரலில் விழுந்தது மிக விந்தையான துயரம். பக்கத்து வீடுகளில் இருந்து சத்தம் கேட்டு ஓடி வந்தனர். ஆளாளுக்கு பலவாகப் பேசத் தலைப்பட்டனர். பிறகு தான், மலர் மருந்தான rescue remedy சிறிது கொடுத்தேன்  அதன் பின்னர் எதுவும் மருந்துகள் வேண்டாம். நான் மூலிகை பறித்து வருகிறேன் இரத்தம் வருவது குறைந்துவிட்டது, தடுக்க வேண்டாம் நொறுங்கிய கற்களின் துணுக்குகள் இருப்பின் வெளியேறட்டும் என கூறிவிட்டு கிளம்பினேன்.

மோட்டார் சைக்கிளில் பாதை ஓரங்களில்  பார்த்தவாறு சென்றேன். சிறிது தூரத்தில் கினற்றுப் பாசாண் எனும் வெட்டுக்காயப் பச்சிலை கிடைத்தது. சிறிது எடுத்து வந்தேன். காயத்தில் சாறு பிழிந்து விட்டேன். சுற்றியிருந்தவர்களில் சிலருக்கு அந்த மூலிகை பற்றி தெரிந்திருந்தது. என்னை அறியாத ஒருவர் ஆன்டிபாடிக் ஊசி போட்டுவிடுங்கள் என்றார். நான் பதில் சொல்வதற்கு முன்பே பக்கத்து வீட்டம்மா தேவையில்லை இந்த வெட்டுக்காயப் பச்சிலையே இரத்தம் வருவதைக் குறைத்து  மிக விரைவாகக் காயத்தை ஆற்றிவிடும் என தான் கண்ட அனுபவத்தைக் கூறியதை கவணித்தேன். அந்த நேரம் எனது நண்பர் ஹைதர் முகமதுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்த்து அவரது குழந்தைக்கு கடும் தலைவலி, சுரம் இருப்பதாக கூறினார்.

பக்கத்து வீட்டார் பரணிக்கு ஆறுதல் கூறிவிட்டு கலைந்தனர். பரணி அவளது பெற்றோர் வீட்டுக்கு சென்று இருப்போம் குழந்தைகளுக்கு சமையல், பள்ளிக்கு அனுப்புவது, மற்ற வேலைகளுக்கு அது தான் வசதியாக இருக்கும் என்றாள். குழந்தைகளும் பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு அம்மாவுக்கு உதவப் போவதாக கூறினர்.
நான் எனது துணைவியையும், குழந்தைகளையும் அவள் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, நண்பர் ஹைதர் முகமது வீட்டுக்குச் சென்றேன். அவரது குழந்தையைச் சோதித்த போது குடல்வால்ப் பகுதி அழற்சி காரணமாகத் தான் சுரமும், வயிறு மற்றும் தலை வலிகளும் இருப்பதைக் கண்டேன்.

சிகிச்சைக்குப் பிறகு வலியும், சுரமும் குறைந்தது. கைகளில் குடல்வால்  பகுதியில் ஏற்படும் தொல்லையைச் சரிசெய்யும் அழுத்தப் புள்ளியை எப்படி இயக்குவது என தொட்டுக் காட்டினேன். இரண்டொரு நாள் அந்த இடத்தில் சில விநாடிகள் தொட்டுவந்தாலே முழுமையான சுகம் கிடைக்கும் என்று அனுபவங்ளைக் கூறினேன். 
                             நண்பர் ஹைதர் முகமது

நண்பர் ஹைதர் இறைவழி வாழ்வில் நல்ல அனுபவங்களையும், அத்தாட்சிகளையும் பெற்றவர். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே, எந்த மருந்துகளும் பயன்படுத்தாதவர். தன்னுடைய தேவைகளுக்கு இறைவனை ஒருவனையே நம்பி இருப்பவர். பத்தாண்டுகளுக்கு முன் டாக்டர் சகோதரர்களை சந்தித்து இறைவழி மருத்துவம் பெற்ற பின், அது வரை அவர் உடல் உபாதைகளாலும், ஆங்கில மருத்துவம் என்ற மனித அறிவின் கேடான சிகிச்சைக் கொடுமைகளாலும் அடைந்த துன்பங்களில் இருந்து  முழுமையாக விடுபட்டவர்.

அவரது இறையனுபவங்களை பின் விரிவாகக் கூறுகிறேன். பின் வீட்டுக்கு திரும்பிய போது பரணி மிகக் கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எனது அத்தையார் இப்போதைக்கு வலியைக குறைக்கவாவது ஆங்கில மருத்துவத்தைப் பயன் படுத்த வேண்டும் எனச் சொல்ல ஆரம்பித்திருந்தார். பரணியும் எதாவது செய்யுங்கள் என தாங்கமுடியாமல் கதறும் நிலைக்கு வந்திருந்தாள்.

எனது மனம் இது போன்ற சூழ்நிலையை எதிர்பார்த்து முன்னேற்பாடாக இருந்ததால், என் மனம் சலனத்துக்குள்ளாகி முழுமையாக இறைவனிடம் பொறுப்பை ஒப்படைக்க - இறைவழி மருத்துவம் செய்ய முடியாத நிலையில் நான் இருப்பதை உணர்ந்தேன். நான் மனித அறிவுக்கு பலியாகும் முன் இதிலிருந்து விடுபடும் வழியை இறைவனிடம் நாடினேன். நன்மையாக, டாக்டர் பஸ்லூர் ரகுமானிடம் பேசலாம் என  முடிவு செய்து அவரது எண்ணை தொடர்புகொண்டேன். அவர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கூறியது பதிவு செய்யப்பட்ட பதில்.

அவருக்கு முயற்சி செய்ததே ஆறுதலாக இருந்த்து, எனக்கு. பின், நண்பர் ஹைதர் முகமதை அழைத்தேன், கைபேசியில். அவர் தனது கடைக்கு செல்லும் நேரம் அது. வீட்டுக்கு வந்து செல்ல முடியுமா?  எனக் கேட்டேன். ஏற்கனவே தாமதமாகி விட்டதால் வாடிக்கையாளர்களிடம் இருந்து பல தொலைபேசி அழைப்பு வந்து விட்டது என்றவர், என்ன விசயம் என்றார். அப்பொழுது தான் பரணிக்கு காலில் அடிபட்ட செய்தியைக் கூறினேன். உடன் வருவதாய்க் கூறியவர் சில நிமிடங்களில் வந்தார். அவர் வரும் வரை பிற மனிதர்களின் வார்த்தைகள், நிலமையைச் சிக்கலாக்கி விடக்கூடாது என நிணைத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். பரணி வேதனையின் உச்சத்தில் துடித்துக்கொண்டு இருந்தாள். எனது அத்தையோ, வலியை மட்டும் குறைக்க ஏதாவது செய்யலாமே என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

வலியைக் குறைக்க ஆங்கில மருத்துவத்துக்குப் போவதைப் போல கேடு வேறில்லை என சொல்லிக் கொண்டிருந்தேன். நண்பர் ஹதர் முகமது வந்துவிட்டார். உடன் காயம் பட்ட இடத்தின் மேலே அரையடி தூரத்தில் கையை வைத்த படி அவருள்ளத்துள் இறைவனிடம் வேண்டிக்கொண்டார். வலியின் கடுமையைத் தான் உணருவதாக கூறினார். அடுத்த விநாடி பரணி வலி நீங்கிவிட்டதாக கூறினாள். என் துணைவியின் முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த வலிக்குறிகள் மறைந்து, அவள் மனஅமைதி மற்றும் சுகமான புத்துணர்வு பெற்றதை என்னால் உணர முடிந்த்து. நான் என்னுள் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். மூலிகை சாறு விட வேண்டுமா என கேட்டதற்கு தேவையில்லை இறைவன் சுகப்படுத்துவான் என்றார் நண்பர் ஹைதர் முகமது.

இந்த அனுபவம் எங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணம், எங்களுக்கு மேலும் இறைஞானங்களை – புரிதலை தருவதற்குத் இறைவன் விரும்புவதால்த் தான் என நானும் என் துணைவியும் உணர்ந்து மனம் சமாதானமடைந்தோம்.

பல ஆயிரம் பேர்களுக்கு இறைவழியில் சுகம் காண இறைவனிடம் வேண்டி நலம் பெற்றிருப்பினும், நான பிறரின் இறைவழி மருத்துவத்தை பெற்ற – பார்த்த முதல் அனுபவம் இது.

எல்லாம் இறைச்செயல். இறைவனுக்கு நன்றி.

தோழி வாசுகி மற்றும் நண்பர்களின் விருப்பத்துக்கிணங்கி, அதன் தேவையை உணர்ந்து தொடர்ந்து அனுபவப் பதிவுகளை எனது சமூக கடமையாக எண்ணி பதிவு செய்கிறேன்.

அன்பை மறவா,
       தமிழவேள் நளபதி
              Siddhahealer.blogspot.com

திங்கள், 21 மார்ச், 2011

வர்ம மருத்துவம்-மர்ம மருத்துவம்


வர்ம மருத்துவம்-மர்ம மருத்துவம்


வர்ம மருத்துவம்-மர்ம மருத்துவம்.

இறைஞானங்களை அடிப்படையாக கொண்ட சித்த மருத்துவத்தின் சிறப்பு பிரிவு. தனக்கென-துல்லியமாக நோயறியும் சிறப்பு முறைகளைக் கொண்டது. இறைவழி மருத்துவத்துக்கு மிக நெருக்கமானது வர்ம மருத்துவம். நமது உடலின் 20க்கும் மேலான சத்தியோட்டங்கள் குறித்து பேசுகிறது வர்ம மருத்துவம். பல ஆயிரம் வர்மத்தளங்களையும், அவற்றுடன் இயைந்து செயல்படும் சத்தி நிலைகளையும் பற்றி விரிவாகப் பேசுகின்றன வர்ம ஏடுகள். 8000-க்கும் மேற்பட்ட வர்ம இடங்களையும் அதனுடன் தொடர்புள்ள சத்திகளையும் தற்போதுள்ள ஏடுகள் மூலம் தொகுத்துள்ளார் எனது ஆசான்.திரு.ந.சன்முகம்  ஒவ்வொரு வரம இடத்தையும் 38 வகையாக இயக்கும் நுட்பம் அறிந்தவர் அவர். அவரது-அவரைப்போன்ற மனித நேயமுள்ளவர்களின் விருப்பத்தாலும், இறையருளாலும் உலகம் வர்ம மருத்துவத்தை மதித்து அதன் பலன்களைப் பெறும் நாட்கள் வந்து விட்டது.

எனக்கு வர்ம மருத்துவத்தில் ஆசான்.ந.சன்முகம் அடிப்படை கல்வி தந்துள்ளார். இறைவழி மருத்துவம் இறையருளால் சித்தியாகி இருப்பதால் வர்மத்தளங்களை தொடாமலே இறையருளால் வேதசத்தியைத் தூண்டி - பயன்படுத்தி-நோய்களை நீக்கி சுகமளிக்க இயலுகிறது.

இங்கு எழுதுவதன் நோக்கம்; பலர் எiன்னிடம்  இறைவழி மருத்துவம் எனும் சிறப்பு நிலையை கற்க விரும்புகிறார்கள் அவர்கள் முதலில் அக்குபஙசர் பின் வர்ம மருத்துவம் ஆகியவற்றை கற்பதன் மூலம் எளிதில், பிறருக்கு உதவ்வேண்டும் என்ற தனது விருப்பத்தையும், தேவையையும் சீர்செய்து பின், இறையருளால்; தனக்குள் இருக்கும் இறையாற்றலை - தனக்கும், பிறர்க்கும் நன்மையாகப் பயன்படுத்தலாம். 

தகுதியுள்ளவர்களுக்கு எனது உதவி உறுதியாகக் கிடைக்கும்..


அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
thamizhavel.n@gmail.com
கைபேசி. 93458 12080, 94447 76208.

வெள்ளி, 18 மார்ச், 2011

ஜப்பானியர் மேல் பரிதாபம் காட்ட நேரமில்லை உலகுக்கு.

ஜப்பானியர் மேல் பரிதாபம் காட்ட நேரமில்லை நமக்கு - உலகுக்கு.





மனித அறிவின் கீழ்மையின் அடையாளமே நவீன அறிவியல் உயர் தொழில்நுட்பம் இது மனிதன் தன் பெருமைக்காக அடைய வேண்டிய எல்லா கேடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

மரபுவழியான நலவாழ்வு முறைகளை உயர்ந்த பண்புகள் மற்றும் ஒழுக்க நெறிகளைக் கொண்ட ஜப்பானியர்கள் தற்போது வசதிகளே வாழ்க்கை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு காரணம் அவர்களது பெருமையும்,அதன் பரிசான போரும், அவர்களுக்கு புணர்வாழ்வளிக்க வந்த அன்னிய சக்திகளுமே ஆகும்.

இப்பொழுது, அவர்கள் கண்ட வளர்ச்சிகள் தனது பக்க‍‍ ‍விளைவுகளை‍ ‍ காட்டுகிறது.

வெடிக்க காத்திருக்கும் பல அணு உலைகளை தங்கள் மடியில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் ஜப்பானியர்கள். அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப்பட்டு பயனில்லை.



வல்லரசுக் கனாவில் வறண்டு போயிருக்கும் நமது சக இந்திய மக்களுக்கு விழிப்பு தந்து, நாமும் விழிப்படைந்து சிந்திப்போம் நமது மற்றும் நமது குழந்தைகளின் வாழ்வை மையாமாக வைத்து!


இப்பொழுது ஜப்பானின் மீது பரிதாபத்தைக் காட்டும் உலக நாடுகளும் அதன் அதிகார வர்க்கமும் இன்னும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பரிதாபத்துக்குரியவர்களாக்கி விடுவார்கள் தங்கள் நாட்டு மக்களையும் ஜப்பானியர்களையும். தங்கள் கொள்ளை  குறையாமல் நிலைக்கவே இவ்வளவு அறிவியல் வேடமும் போடுகிறார்கள்.




தனிப்பட்ட முறையில் நாம் இறைவனிடம் நமது பெருமைகளுக்காக மன்னிப்புக் கேட்டு நமது நன்மைகளுக்கும், நமது மன அமைதிக்குமாக இறைவனை நாடுவோம்.


அதனைத் தரும் வகையில் இறைவன் நமக்கும், பிறருக்கும் -ஜப்பானியருக்கும் நன்மை செய்வான்.

செவ்வாய், 15 மார்ச், 2011

இரத்தம் ஏற்றப்பட்டால் மரணமே கதி! -ஆய்வு அறிக்கை.


எச்சரிக்கை! இரத்த தானம் பெறுவோருக்கு மரணம் காத்திருக்கிறது!
‘ஹெல்த் டைம்கட்டுரையை உறுதிப்படுத்துகிறது தினமலர்!
அக்டோபர் 21. 2007 அன்று வெளியான தினமலர் நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியான செய்தி கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது, ‘அதிர்ச்சி’’ என்ற தலைப்பில் வெளியான செய்தியின் முக்கிய சாராம்சங்களாவன;
- .இரத்த தானம் பெறுவோர் மரணமடைவார்கள்.
- இரத்த தானம் பெறுவோர் மரணமடையும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- இரத்த தானம் சேகரிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் இரத்தம் கெடுகிறது.
- இரத்த தானம் பெறுவோரின் மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு, இருதய செயலிழப்பு.
- இரத்தம் உயிர் காக்கும் என்ற எண்ணம் தவறாக கற்பிக்கப்பட்டதாகும்.
மருந்துகள் எந்த அளவுக்கு விசமோ, அதைப் போன்றே இரத்த தானத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக இரத்த தானம் பெறுவோரின் மரணத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனால், இது குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை மறைமுகமாக ஆய்வுக்ள நடத்தினார்கள். இப்பொழுது இந்த மரணத்தைத் தவிர்ப்பதற்காக வேறு ஒரு வழிமுறையைக் கையாண்டு இதில் ஒரு சொற்ப காலம் ஆங்கில மருத்திவத்தின் உதவாக்கரைத்தனத்தைத் தொடரலாம் என்ற ஒரு வழியை வைத்துக் கொண்டு இப்பொழுது ஆராய்ச்சியாளர்கள் இவ்விதமாகக் கூறுகிறார்கள்.
இரத்த்த்தில் நைட்ரிக் ஆக்சைடு (nitric oxide) என்ற ஒரு இரசாயனப் பொருள் இருக்கிறது. அது இரத்த்த்தில் உள்ள ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்குள் எடுத்துச் சென்று அவ்வுறுப்புகளின் செல்கள அவற்றை உபயோகப்படுத்த உதவி செய்கிறது. இந்த நைட்ரிக் ஆக்ஸைடு இரத்தம் தானமாகப் பெற்ற 3 மணி நேரத்தில் வெளியேறி விடுகிறது. எனவே, அந்த இரத்தம் மாரடைப்பு மரணம் என்ற அளவுக்கு கேடுகளை விளைவிக்கக் கூடியதாக அமைந்து விடுகிறது.
எனவே இப்பொது நைட்ரிக் ஆக்ஸைடை தானமாகப் பெற்ப்பட்ட இரத்தத்தில் உட்செலுத்திய பிறகு அந்த இரத்த்த்தை ஏற்றுவது குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்’’.
வாசகர்களே, 5 வருடங்களுக்கு முன்பே ஆங்கில மருத்துவம் தெரிந்து வைத்திருந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்தார்கள். ஏனென்றால், இரத்தம் ஏற்றுவது தான் ஆங்கில மருத்துவத்தின் இன்றைய பிழைப்பு. அதுவும் இல்லையென்றால் ஆங்கில மருத்துவமே அழிந்து போகும். எனவே, நயவஞ்சகமாக ஆங்கில மருதுவத்தை வைத்தே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் வேறு ஏதாவது ஒரு வழியைக் கொண்டு மக்களிடம் வரும் வரையில் அந்தச் செய்தியை வெளியிடுவதாக இல்லை. இப்பொழுது நைட்ரிக் ஆக்ஸைடு  என்ற இன்னுமொரு உதவாக்கரைத்தனத்தைக் கொண்டு மருத்துவச் செய்தியாக, ஆராய்ச்சியின் வெளிப்பாடாக ஆக்கியிருக்கிறார்கள். எனினும் வாசகர்களே, நீங்கள் அறிய வேண்டும் அவர்கள் கூறும் நைட்ரிக் ஆக்ஸைடு இறப்பைத் தவிர்க்காது. இரத்த தானம் பெறுவோர் மரணம் அடைவதைத் தடுக்க முடியாது.
மரணம் இறுதியாக நிகழக் கூடிய ஒரு பக்கவிளைவாகும் (complication or severe reaction ). எனவே இறுதியான நிகழ்வுக்கு முனபாக ஆரம்ப நிகழ்வுகள் இருக்கின்றன. ஆரம்ப முதல் இறுதி வரையிலான பக்கவிளைவுகள் என்ன என்பதை நாம் தெளிவாக உணர்ந்து அறிந்து செயல்பட வேண்டும்.
இறுதியான பக்கவிளைவு மரணம் என்றால், அதனுடைய ஆரம்பகால பக்கவிளைவுகள் எந்த அளவுக்கு மனித உடல் நிலையை படிப்படியாகச் சீர்குலைத்து, சித்திரவதைக்குள்ளாக்கி, இறுதியில் குற்றுயிரும் குலையுயிருமாக மனிதர்களை நாசப்படுத்தி பின்னர் மரணத்தை ஏற்படுத்த வேண்டும்?
எனவே இப்பொழுது நமக்கு தெளிவாகப் புரிய வேண்டும். இரத்த தானம் யார் பெறுகிறார்களோ, அவர்கள் மரணிக்கும் வரையிலான நோய்கள் அனைத்திற்கும்  சாக்கடைக்கு நிகரான இந்த இரத்தம் தான் காரணம் என்பதை.
வாசகர்களே, நீங்கள் மீண்டும் நிணைவுக்கூர்வதற்காகவும், இரத்தத்தின் கேடுகள் பற்றி முழுமையான ஞானங்களைக் கொண்டு பூரணத்துவம் அடைந்தவர்களாகவும், உங்கள் வாழ்க்கையிலும் சரி, உங்களைச் சார்ந்தவர்களூடைய வாழ்க்கையிலும் சரி இரத்த தானம் என்ற பேச்சே கூடாது என்று நீங்கள் திருந்துவதற்காகவும் ஹெல்த் டைமில் வெளியான கட்டுரையை மீண்டும் இங்கு பிரசுரிக்கிறோம். வார்த்தைக்கு வார்த்தை இதில் உள்ள உணமைகளை நீங்கள் சிந்தித்தறிந்து செயல்பட இது எங்கள் மீதுள்ள ஒரு சமுதாயக் கடமையாகும்.
இரத்தம் என்பது என்ன? இரத்தம் என்பது உடலை இயக்க்க் கூடிய சக்தியின் பொருள் வடிவம் கொண்ட ஒரு அமைப்பு இரத்தமாகும்.
இரத்த்த்தில் இருப்பவை என்ன? ஒரு மனிதனுக்குத் தேவையான மூச்சுக்காற்று, நூரையீரல்கள் மூலமாக இதயத்திற்கு செலுத்தப்படுகிறது. அங்கிருந்து உயிரோட்டம் பெற்று, உயிர் மூச்சாக உடலெங்கும் செலுத்தப்படுகிறது, சுற்றுப்பெறச் செய்யப்படுகிறது.
இருதயத்தில் நிகழ்வது என்ன?
மூச்சானது இதயத்திற்குள் இரத்தம் மூலமாக அடங்கும் பொழுது, ஒரு மனிதனின் இருதயத்தில் இருக்கும் எண்ணங்களுடன் அந்த மூச்சு கலக்கிறது. நன்மைகளும், தீமைகளும் மூச்சுக் காற்றுடன் கலக்கும் போழுது அந்தப் பொழுதில் ஒரு மனிதனுடைய கெட்ட எண்ணங்கள் மிகுதியாய் இருக்குமானால், கெட்ட மூச்சுக் காற்றாக மாறுகிறது. இது மனிதனுடைய உடல் நிலையில், உடல் உறுப்புகளின் இயக்க நிலையில் பாதகமான சூழ் நிலையை ஏற்படுத்துகிறது. ஆதாவது, கெட்ட சக்திகள் உடல் உறுப்பின் ஒவ்வொரு செல் அணுவையும் சூழ்கின்றன. எனவே உயிரோட்டம் அங்கு இல்லை. சம்மந்தப்பட்ட உறுப்புகள் பலவீனமடைந்து, இயக்கத்தின் நிறைவுகளில் தடுமாற்றங்களும், தட்டுப்பாடுகளும் உருவெடுக்கின்றன. குறைகள் அதிகமாகின்றன.
எனினும், உண்மையான அதாவது இயற்கையான உறுப்புகளின் செயல் பாடுகள் நிச்சயமாக மேலோங்குவதற்கான பிரயத்தனங்கள் நிகழும் அதே சமயம் கேடான சூழல்கள அதனைச் சுற்றிலும் இருக்கிறது.
அதாவது, கெட்ட எண்ணங்களின் காரணமாக இரத்தம் கெடுக்கப்பட்டு விட்ட உயிர்ச்சக்தியால் சூழ்ந்திருக்கிறது. இவ்விரண்டுக்கும் நடக்கும் போராட்டத்தில் ஒவ்வொரு உறுப்பின் உயிர்ச் சக்தியும் மிகப் பெரும் இடர்பாடுகளுக்கு உள்ளாகிறது. இதுவே, அவ்வுறுப்பின் இன்னல்கள். இவற்றை நாம் நோய் அறிகுறிகளாக உணர்கிறோம்.
ஒரு நோயின் அறிகுறிகளை உணர்கிறோம் என்றால், அந்த நோயின் தன்மைகளை அறியக் கூடிய உயிர்ச் சக்தி இன்னும் நம் உடலில் இருக்கிறது என்பது பொருளாகும். நம் உணர்வுகளில் இன்னும் உயிர் இருக்கிறது என்பது பொருள். எனவே, உயிர் என்பதன் பொருள் கேடுகள் தீண்டப்படாத உயிர்ச் சத்தியாகும். இருதயத்தில் உள்ள தீமைகளின் கேடுகளே உயிர்ச்சக்தியைப் பாழாக்குகின்றன. அணு அணுவாகச் சிதைக்கின்றன.

மூச்சக்காற்றானது முதன்முதலில் இருதயத்தை அடைகிறது என்பதை மறவாதீர்கள். அங்குதான் உங்கள் கேடான எண்ணங்கள், நன்மையான  எண்ணங்கள் மூச்சுக்காற்றுடன் கலக்கின்றன. அங்குதான் உங்கள் வாழ்க்கையின் வீழ்ச்சியும் மேன்மையும் கலக்கின்றன. கேடான எண்ணங்கள் அதிகம் இருக்குமானால் உடல்நலக் கேடும், நன்மையான எண்ணங்கள் அதிகம் இருக்குமானால், உடல் உறுப்புக்ளின் வன்மையும், வலிமையும் கொண்ட இயக்கத்திற்கும் அடிப்படைக் காரணங்களாக அமையும். இவ்விரண்டு கேடுகளும் மனதில் இருக்கும் வரையில் இவ்விரண்டு சக்தியின் இடையில் பெரும் போராட்டம் நிகழும். இதை நாம் அறிய மாட்டோம். இது இரத்தக்கொதிப்பாக மாறும். இந்த இரத்தக் கொதிப்பு உறுப்புக்ளுக்குள் நிகழும் பொழுது, குறிப்பிட்ட உறுப்புக்ளில் வலியும், வேதனையும், வீக்கங்களும், இயக்கக் குறைபாடுகளும் பெரும் வேதனைகளை ஏற்படுத்தும்.
இந்த வேதனைகளைத் தான் நோய்கள் என்று பல்வேறு பெயரகளைக் கொண்டு ஆங்கில மருத்துவம் அழைக்கிறது ஆயிரக்கணக்கான நோய்கள் என இவர்கள் பெயரிட்டிருந்தாலும் இவையனைத்துக்கும் காரணம் மேலே சொல்லப்பட்டிருக்க்க் கூடிய ஒரே உண்மை தான். ஆதாவது கெட்ட எண்ணங்களும், நல்ல எண்ணங்களும் கலந்திருக்கும் பொழுது, இயற்கையின் விதிப்படி  இரத்த்தில் உயிரோட்டம் நிலைப்பதற்காக, உயிர்ச் சக்தி தன்னுடைய இயற்கை விதிப்படி உயிர்ச் சக்தியின் எதிர்சக்தியாக இருக்க்க் கூடிய கெட்ட எண்ணங்களையும், அதன் சக்தியையும அழிப்பதற்காக எதிர்த்து நடத்தும் போராட்டத்தின் விளைவு நோய்களும் நோய் அறிகுறிகளும் ஆகும்.

இரத்த ஓட்டத்தின போது இரத்த நாளங்களில் நடக்கக் கூடிய இந்த போராட்டம்  இரத்தக் கோதிப்பை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள; மயக்கம், தலை சுற்றல், வாந்தி, கண்பார்வைக் கோளாறுக்ள, பயம், கோபம் போன்றவை. இதே போராட்டம் இரத்தம் சென்றடையும உறுப்புகளிலும் நிகழுமானால், இதன் அறிகுறிகளாவன; சம்மந்தப்பட்ட உறுப்புக்ள் தன் இயக்க நிலையில் பலவீனமடைகின்றன, உறுப்புகள் பெரிதாகின்றன, வீக்கமடைகின்றன, அதன் செயல்பாடுகள் தாறுமாறாக மாறி, பின் பலவீனமடைந்து குறைபாடுள்ளதாக ஆகி, உடல் வேதனைகளை உருவாக்குகின்றன.

எந்த ஒரு சூழ்நிலையிலும் மனிதன் பலவீனமான மனதையே கொண்டிருக்கிறான். உறுதி குறைந்தவனாகவும், தெளிவற்றவனாகவும், குழப்ப நிலையிலுமே இருக்கிறான்.

அவனது ஒவ்வொரு காரியமும், பேச்சும், எண்ணமும் நாளைய வாழ்வு பற்றிய நம்பிக்கைக் குறைபாடுடையதாக இருக்கின்றன.
இதன் காரணமாக, மனிதர்களை வஞ்சித்து வாழக் கூடிய, அனைத்து நயவஞ்சகத் தன்மையையும் கொண்டு மட்டுமே வாழமுடியும் என்ற சமுதாயக் கேடான, துரோகமான வாழ்க்கையையே அடிப்படைத் தேவையாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் ஒவ்வொரு மனிதனும்.

நம்மில் ஒவ்வொருவரும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதன் காரணமாய் கெட்ட எண்ணங்கள் நம் உயிர்மூச்சை வெகுவாகப் பாதித்து, உயிர்மூச்சை நெருக்கடிக்குள்ளாக்கி ஏற்க்குறைய செத்துவிட்ட, அல்லது குற்றுயிரும் குலைஉயிருமாக நம்மை ஆக்கிக் கொண்டுவிட்டதே ஆகும். எனவே, ஒரு நோய்க்கான உறுதியான காரணம் மனநிலைக் கோளாறுகளே என்பது உலகறிந்த உண்மை. இப்பொழுது உயிர்ச் சக்திகள் ஆதாவது, உயிரோட்டம் கொண்டு உயிரளிக்கக்கூடிய சக்திகள் உயிருக்குப் பாதகமான கெட்ட சக்திகளாக இதயத்தில் கொண்டுள்ள கெட்ட எண்ணங்களின் காரணமாக மாற்றப்பட்டு விட்டன என்பதை உறுதியாக அறிவோமாக. இந்த கெட்ட எண்ணங்கள் கெட்ட சக்தியாக ஒவ்வொரு உறுப்பினுடைய செல் அணுக்களையும் அடையும் பொழுது, செல் அணுக்கள் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகின்றன.

இதன் காரணமாக ஒவ்வொரு செல் அணுவிலிருந்தும் கழிவுகள் மிகுதியாக வெளியேறுகின்றன. இவை மிக கெட்ட கழிவுக்ளாகும்.இந்த கழிவுகள இரத்த்த்தில் கலந்து வியர்வை நாற்றங்களாகவும், கண்ணில் ஊளைகளாகவும், மூக்கில் சளிகளாகவும் மார்பகங்களிலும நுரையீரல்களிலும் கட்டியான கோழைகளாகவும சிறுநீரகக் கழிவுகளாகவும் எந்நேரமும் சுற்றுப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவே ஒரு மனிதனுடைய இரத்தமாகும். இந்த இரத்தம் ஒரு கழிசடை. அந்த மனிதனுக்கே இது கேடானது. அந்த மனிதனுடைய இதயத்தில் இதற்க்கு எதிரான சக்திகள் உருவாக வேண்டும் அதாவது, நல்லெண்ணங்கள் கெட்ட எண்ணங்களுக்கு மாற்றாக உருவாக வேண்டும். நல்லெண்ணங்களை இருதயத்தில் நிலைத்திருக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள் அடியோடு நீக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நிலை எந்த மனிதனிடமும் இல்லை. எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனுடைய இரத்தம் சிறுநீர் எந்த அளவுக்குக் கேடானதோ, அந்த அளவுக்கு, அதைவிட மோசமாகலாம்.
மனிதனுடைய இரத்தம் ஒரு சாக்கடைக்குச் சமமானது என்பதை அறிய வேண்டும். சாதாரணமாக நாம் ஒரு கெட்ட மனிதனைப் பார்த்து இவ்விதமாக விமர்சிப்போம், ’’உன் உடம்பில் இரத்தம் ஓடுகிறதா? அல்லது சாக்கடை ஓடுகிறதா?’’ இது சாதாரண வார்த்தை அல்ல சத்தியத்தின் அடிப்படையாக கொண்ட வார்த்தையாகும். இது கேலிக்குரிய வார்த்தையுமல்ல, எனினும் கேள்வி ஞானத்துடன் கூடிய எச்சரிக்கையைக் கொண்டுள்ள வார்த்தையாகும்.

இப்பொழுது இத்தகைய இரத்தத்தை நாம் சற்று கவணிக்க வேண்டியிருக்கிறது. இதில், மனிதனுடைய உயிர்வாழ்க்கைக்கு கேடான எண்ணம் இருக்கிறது, அதற்க்கு எதிராக வாழ்க்கைக்குரிய ஆதாயமும் இருக்கிறது. இவ்விரண்டுக்குமிடையே ஒன்றுக்கொன்று போராட்டம் என்ற தன்மையை மேற்கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தால் அவன் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது. ஒரு முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அவனது இருதயத்தில் நண்மையான பாதை மேலோங்கினால்; அவனது வாழ்வில் நோயற்ற வாழ்வும் அமைதியும் இருக்கிறது. மாறாக தீமையின் பாதை மேலோங்கினால்; நோயும், பெருங் கேடும், வேதனையும் அவனது எதிர்காலமாக இருக்கும்.

மேற்சொன்னதில், மனிதர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் நிலையைக் கொண்டவர்க்ள தாம். இந்த நிலையில் இவர்கள் இரத்த தானம் என்ற பெயரில் தன்னிடம் இருக்கக்கூடிய மிகக் கேடான சாக்கடையைத் தானம் செய்கிறார்கள். இதன் காரணமாக, இவர்களுடைய கேடு மேலும் அதிகமாகிறது. முதலில் யார் சாக்கடையை தானம் செய்கிறார்களோ, அவர்களது கேடு எவ்வாறு அதிகமாகிறது என்பதையும், பின்னர் இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் இந்தச் சாக்கடை யார் உடம்பில் ஏற்றப்படுகிறதோ அவர்களது நிலை என்ன என்பதையும் நாம் பார்க்க இருக்கிறோம்.

இரத்த தானம் என்ற பெயரில் இரத்தம் ஒருவருடைய உடலை விட்டும் நீக்கப்படும் பொழுது நாம் இப்பொழுது அறிய வேண்டும், அந்த இரத்தத்தில் கெட்ட எண்ணங்களுக்கு எதிரான நல்ல எண்ணங்களை இருந்தால், அந்த நல்ல எண்ணங்கள்,  அவரது கெட்ட எண்ணங்களை நீக்கhhக்கூடிய அந்தவொரு காரியத்தில் ஈடுபட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும். இது ஒன்று தான் அவர்களுக்கென நல்ல காரியம் அவர்களுடைய உடலில் நிகழ்வதாகும். ஆனால் அந்த நல்ல காரியங்கள் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றன. எனவே, தன் வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை அறவே இழந்த நிலையில், ஏதோ நடமாடுகிறோம் என்ற பிணம் போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டால் போதும், அல்லது அரிசி கொடுத்துவிட்டால் போதும், அல்லது இரண்டும் சேர்த்துக் கொடுத்தால் போதும் ஒவ்வொரு வேளைக்கும் இரத்தத்தைக் கொடுத்துவிட்டு சாப்பாட்டுக்கு வாங்கிச் செல்வார்கள். இந்த அளவுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து விட்டவர்கள், அல்லது தங்களுக்கு அபிமானமானவர்கள், தங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாய் இருப்பவர்கள் என்ற அடிப்படையில் அவர்க்ள் கட்டளைக்கு இணங்கி தங்கள் உயிரைக்கூட துச்சமாக மதிக்கக் கூடிய அளவுக்கு இறைவன் அளித்த அந்த மகத்தான பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோ, உள்ளச்சமோ கூட இல்லாமல், இரத்தத்தை தானம் செய்கிறோம்! என்ற எண்ணத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் தானம் செய்வார்கள்.
இதில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், அவர்களது இரத்தத்தில் போதுமான உயிர்சக்தி இல்லையென்பதாகும். ஒன்று, அவர்கள் பிறரைச் சந்தோஷப்படுத்துவதற்காகவும், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் வாழ்பவர்கள். அல்லது தங்கள் வாழ்வில் நம்பிக்கை இழந்து விட்டவர்கள் இவர்கள் இரத்தத்தில் மன பலவீனமும், உடல் கேடுகளும் இருக்கின்றன. அறியாமையும் குடிகொண்டுள்ளது. மேலும் தீமையான கழிவுகள் அனைத்தும் மிகுதியாக இரத்தத்தில் கலந்துள்ளது.

இரத்த தானத்திற்காக இவ்வகையிலான இவர்களுடைய இரத்தம் உறிஞ்சப்படும் பொழுது அவர்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச உயிர்ச்சக்தியும் இல்லாமல் ஆகி விடுகின்றன. மீண்டும் மீண்டும் அவர்களிடம் இருக்கும் இரத்தம் அவர்களை விட்டு நீக்கப்படும் பொழுது அவர்களது உடல்நலக் கேடு  எந்த அளவுக்கு மோசமாகும் என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒரு முறை இரத்தம் எடுக்கப்படும் போழுது சுமார் 300 மில்லி எடுக்கப்படுகிறது. ஆதாவது பதினைந்தில் ஒரு பாகம் உடலை விட்டும் நீக்கப்படுகிறது. எனவே, பதினைந்தில் ஒரு பாகம் உயிர்ச்சக்தி உடலை விட்டு நீக்கப்படுகிறது. இதன் விளைவு கேடான எண்ணங்களும், தீய சக்திகளும், உடல்நலக் கேடுகளை உருவாக்கும் சூழ்நிலைகளும் பல மடங்கு அதிகமாகின்றன. ஒவ்வொரு உறுப்பாக இதன் பாதிப்பு என்ன எனபதைப் பார்ப்போம்.

மூளை

மூளைச்சோர்வு தவிர்க்க முடியாததாகும். வேலைகளில் ஈடுபடும் தன்மைகளில் மாற்றம் நிகழும், சுறுசுறுப்பின்மை, மயக்கம், நரம்புத் தளர்ச்சி, படிப்படியாக தூக்கம் மிகுதி, தெளிவின்மையும் குழப்பங்களும் மிஞ்சும், தேவையில்லாத மனச்சஞ்சலங்களும், தூக்கமின்மையும் நாளைய வாழ்க்கையின் கேடுகளாகும்.

தலை

தலைவலி, தலைவலியுடன் சேர்த்து கண்களில் அயர்ச்சி, புருவங்களின் மத்தியில் நெற்றியில் பாரம் போன்ற உணர்வு, காதுகளில் கேட்கும் திறன் குறைந்து வருவது ஆகிய இவை நாளடைவில் தவிர்க்க முடியாததாக ஆகி விடும்.

சைனஸ், மூக்கோட்டம் , மூக்கடைப்பு, தும்மல் போன்றவற்றால் யார் துன்பப்பட்டுக் கொண்டுள்ளார்களோ அவர்கள் இரத்த தானம் செய்தால் அவர்களது நிலை இன்னும் மோசமாகும். பின்னர் இவர்களது நிலையிலிருந்து மீள வழியே இல்லாமல் ஆகி விடும்.

இருதயம்

இரத்த தானத்தின் போது இரத்தம் குறைவதன் காரணமாக இருதய இயக்கம் அதிகமாகும், இரத்த அழுத்தமும், படபடப்பும் இதன் விளைவாக உருவாக இருக்கிறது என்பதை நிணைவில் கொள்ளுங்கள். பொறுமையின்மையும், கோப உணர்ச்சிகளும், ஆத்திரமும், அவசரமும் இவர்களிடம் இருக்குமானால், இனி அது பல மடங்கு அதிகமாகும். பிறர் மீது காரணமின்றி எரிந்து விழுதல் இவர்களது வாடிக்கையாக இருக்கும். இருதய வீக்கமும் இதனது பலவீனத்துக்கும் அடிக்கோலமிடும் என்பதையும் மறந்து விட வேண்டாம்.
பொதுவாக இருதயத்திலிருந்து வெளிப்படும் இரத்துமானது அது இருதயத்திலிருந்து  வெளிப்படுவதற்க்கு முன்னதாகவே உடலின் எந்தெந்தப் பகுதிகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்ல வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு இருதயத் துடிப்பும் நிகழ்கிறது. எனவே, இந்த இயக்கம் தடைபடுகிறது. எனவே உறுப்புகளுக்குத் தேவையான இரத்தம் முறையாக அந்த உறுப்புகளுக்குச் சென்றடையாமல் போகிறது. ஒவ்வொரு உறுப்பாக இதன் காரணமாக பலவீனமடையும். முறையான இரத்த ஓட்டம் சீர்குலைந்ததால் இருதய இயக்கமும் சீர்குலையும்.

நெஞ்சுப்பகுதியில் ஏதோ பிசைவது போல் உணர்வு, திடீரென மயக்கம், படபடப்பு, கோபம், ஆத்திரம் அனைத்தும் இதன் விளைவேயாகும்.
இந்த சமயங்களில் ஆஸ்பத்திரிகளுக்குத் தூக்கிச் செல்வதும் அங்கு இன்னும் அதிகமாக வைத்தியம் என்ற பெயரில் தூக்க மருந்துகள் கொடுப்பதும் காரணம் BP அதிகமாகிவிட்டது என்று கூறுவதும் நாம் நாள்தோறும் வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருக்கும நிகழ்ச்சிகள் தான்.

இரத்த தானம் கொடுப்பவர்களே, நீங்கள் அறிய வேண்டும். உங்களுக்கு இருதய நோய்கள் இருந்தால் இரத்த தானம் கொடுக்க கூடாது என்று கூறுவார்கள் ஏனென்றால், அந்த நேரத்தில் நீங்கள் இறந்தும் போகலாம். இதற்கு காரணம் இரத்த தானம் இருதய நோய்களை அதிகரிக்கும். ஆனால் இருதய நோய்கள் ஏன் உருவாகின்றன என்று காரணம் தெரியாது. ஆங்கில மருத்துவர்கள் இந்தக் கட்டுரையைப் படிப்பதன் காரணமாக இப்பொழுது தான் உணர ஆரம்பித்திருப்பார்கள் என்பதையும் நீங்கள் அறியுங்கள். ஒரு நோயை குணப்படுத்தத் தெரியவில்லை என்றால் அந்த நோயைப் பற்றிய எந்த அறிவும் இல்லை என்பது பொருளாகும். எனவே ஆங்கில் மருத்துவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்து உணர்ந்து தேற வேண்டுமே தவிர, இந்தக் கட்டுரைக்கு அபிப்பிராயம் கூற அவர்கள் தகுதியற்றவர்கள். இருந்தாலும் இந்தக் கட்டுரைக்கு மாற்றுக்கருத்து கொண்டிருப்பார்களேயானால் நிச்சயமாக அவர்களுக்குரிய பதிலளிக்கப்படும். நிச்சயமாக அது ஹெல்த் டைமில் பிரசுரிக்கப்படும். இது மனித சமுதாயத்திற்கான விழிப்புணர்வுக் கட்டுரையாக வேண்டுமென்பதே கட்டுரைக்கான அடிப்படை நோக்கம்.

நுரையீரல்கள்

இரத்தம் காற்றுடன் கலக்கும் அளவு குறைவதின் காரணமாக ஏதோ ஒரு வெறுமை உணர்வை அவர்கள் நெஞ்சங்களில் உணர்வார்கள். எவ்வளவு தான் மூச்சை இழுத்தாலும் சுவாசம் போதுமானதாக இல்லை என்பதை உணர முடியும். அடிக்கடி கொட்டாவி வருதல், அசதியும், தூக்க கலக்கமாகவே இருத்தல், மாடிப்படி ஏறும், இறங்கும் பொழுதோ அல்லது கொஞ்சம் அதிகமாக வேலை செய்து விட்டாலோ சிரம்ம் ஏற்படும், மூச்சு வாங்கும் அடிக்கடி ஓய்வு தேவைப்படுவது போன்ற உணர்வுகள் மாறி மாறித் தோன்றும். இது மிகக் கஸ்டமான வேதனையாகும். போதுமான காற்றின்மை காரணமாகவும், நெஞ்சின் வெறுமை காரணமாகவும் துக்க மனப்பான்மையைக் கொண்டுள்ள மனிதர்களாக மாறிப்போகும் அபாயமும் இருக்கிறது.

இந்த நிலைகளை எல்லாம் ஆங்கில மருத்துவத்தால் ஒருகாலமும் அறியவும் முடியாது, குணப்படுத்தவும் முடியாது. ஏனெனில் இவர்களது ஸ்கேன் ரிப்போர்ட்களில் மூளை சம்மந்தமான, இருதய சம்பந்தமான வரைபடங்களில் இது பற்றிய எந்த விசயமும் அறிய முடியாது.
பொதுவாக மனநிலையை, மனநிலையின் நோயின் அறிகுறிகளை இவர்களின் ஆங்கில மருத்துவ அறிவால் அங்கீகரிக்க கூட முடியாது. எனவே, இரத்த தானம் பற்றிய ஆங்கில மருத்துவத்தின் ஆணவத்தின் காரணமாக அறியாமையின் உச்சியில் நின்று கொண்டு அநியாயமாகப் பேசும் அவர்களின் வார்த்தைகளில் அவர்களின் உபதேசங்களில் எந்த உண்மையும் இல்லை.. ‘இரத்தம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இரத்தம் ஊறிக்கொண்டே இருக்கும் ஊற்றுப் போல. 300 மில்லி இரத்தம் கொடுப்பது பாதுகாப்பானது அதில் எந்த கேடும் இல்லை’’ போன்ற ஆங்கில மருத்துவத்தின் இத்தகைய பேச்சுக்கள் எந்த அளவுக்கு அறியாமையால் விளைந்த நச்சுக்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிய முடியும்.

இரத்தம் ஊறுவது இயற்க்கைக்கு ஒப்பான தேவைகளுக்கு மட்டுமே. இரத்த அணுக்கள் அதன் திரவங்கள் ஒன்று சேர்ந்து இரத்தமாக மாறுவதற்கும் காலத்தவணைகள் உண்டு. இரத்த அணுக்கள் படிப்படியாக உறுதிபெற்று, அதன் இயக்கத்தில் உச்சநிலை அடைந்து பின்னர் இரத்த அணுக்கள் மரணிக்கும் நிலையை அடைகின்றன. மனித உடலில் உருவாகிக்கொண்டிருக்கும் இரத்தம் ஒரு புறமிருக்க, அதே சமயம் அழிந்து கொண்டிருக்கும் இரத்தமும், அதன் அணுக்களும் மண்ணீரலால் ஜீரணிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக இரத்தம் பிறந்து, அது அழியும் வரை அதன் காலத் தவணை 90 முதல் 120 நாட்களாகும் இரத்தம் அழிவதற்க்கு முன் அதன் இரத்த செல் அணுக்களும் அதன் திரவமும் கூட பலவீனமடையும், நோய்வாய்ப்படும். இரத்த்த்தில் மனிதனின் உடலில் உள்ள அனைத்துக் கழிவுகளும் அதனுள் சதா சர்வ நேரமும் சேர்க்கப்படுவதாலும், அவற்றை நீக்குவதற்காக சிறுநீரகங்கள் 24 மணி நேரமும் இயங்கி வர வேண்டியிருப்பதாலும், எந்த ஒரு நேரத்திலும் இரத்தம் ஓர் சாக்கடையாக இருக்கிறது. இரத்த தானம் பெறுவோர் நன்றாக நிணனவில் கெள்ளட்டும் தங்கள் உடலில் ஏற்றப்படுவது இரத்தமல்ல; அது ஒரு சாக்கடை.

சாக்கடையை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ள நோயாளிகளின் இரத்த நாளங்களினுள் ஏற்றும் போது நோயாளியின் எதிர்ப்பு சக்தியானது இந்த சாக்கடையை எதிர்க்கும் சக்தியாக வேகமாக மாறுகிறது. ஒவ்வொரு இரத்த அணுவையும் அதன் திரவத்தையும் அழிக்கிறது. சாதாரணமாக ஒருவரது சொந்த இரத்தம் 4 மாதங்கள் உயிர்வாழுமானால், பிறர் இரத்தம் உடலில் ஏற்றப்பட்டால் 10 நாட்களுக்குள் அவை அழிக்கப் பட்டுவிடும். ஏனெனில், அது உடலுக்கு ஒவ்வாதது. உடலின் எதிர்ப்பு சக்திகள் முதலில் இரத்த்த்தை அழிக்கும். இவ்விதமாக உடலின் ஒட்டு மொத்தமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்திகள் அணி திரளும் பொழுது
இரத்தத்தை ஏற்றிக்கொள்ளும் நோயாளியின் கழிவுகளாக அவரது சொந்த இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சுகளை எதிர்த்தும் எதிர்ப்பு சக்தி உருவாகின்றன. அதன் விளைவாக இரத்தம் ஏற்றிய முதல் 2 முதல் 4, 5 நாட்களுக்கு ஏதோ உடல் தெம்பாக இருப்பது போன்று உணருவார்கள். இரத்தம் ஏற்றிய ஒரு வாரத்திற்க்குள்ளாகவே நிலமை முன்பிருந்ததை விட மோசமாகும்.
எந்த ஒரு நோயாளியும் இரத்த சம்பந்தமான நோயாளியாகட்டும்; இருதய சம்பந்தமான நோயாளியாகட்டும்; எந்த ஒரு உறுப்பிலும் நோய் முற்றி ஆபரேஷன் நிலைக்கு ஆளாக்கப்பட்டு, இரத்தம் ஏற்றப்பட்ட நோயாளியாகட்டும்; இவர்களின் நோய்களிலிருந்தோ அல்லது அதன் பின் விளைவுகளிலிருந்தோ ஒரு போதும் குணப்படுத்தப்பட்டதோ, காப்பாற்றப்பட்டதோ இல்லை.

வயிறு

இரத்த தானத்தின் போது வயிறும் பலவீனமடைகிறது. அஜீரணம் தலைதூக்கும் உட்கொண்ட உணவுகள் முறையாக செரியாமையின் காரணமாக பெரும்பாலும் உடலுக்கு ஒவ்வாததாக மாறுகிறது.
இரத்தம் ஏற்றப்பட்ட சில நாட்களுக்கு பசி உருவாகுவது போன்று இருக்கும். ஆனால், பின்னர் முன்பை விடவும் அஜீரணம் மோசமாகும் இதற்கான காரணம் மேலே சொல்லப்பட்டது தான்.

மண்ணீரல்

வயிற்றில் எந்த அளவுக்கு ஜீரணம் முறையாக நடைபெற்றதோ அந்த அளவுக்கு மட்டுமே தான் மண்ணீரல் இயங்கும். மண்ணீரலின் முக்கிய வேலை இரத்த சுத்திகரிப்பு ஆகும். புதிய இரத்த்தை உருவாக்குவதும், பழைய இரத்தத்தை அழிப்பதும் இதன் செயல்பாடுகளில் உள்ளது.
இரத்த தானத்தின் போது எந்தளவு இரத்தம் கொடுத்தீர்களோ, அந்த இரத்தத்தில் அழிக்கப்படக் கூடிய இரத்த செல் அணுக்களும் நிறைய இருக்கின்றது.  இந்த பழுதடைந்த செல் அணுக்களை ஜீரணிப்பதற்காக மண்ணீரல் முழுமையான தகுதியில் இருக்கும் பொழுது, அதே சமயம், இரத்த தானத்தின் பொழுது இரத்தம் உடலை விட்டு வெளியேறும் தருணம், மண்ணீரலின் இயற்கையான இயக்கத் தன்மை  கெடும். அது உருவாக்கும் புதிய இரத்த செல் அணுக்கள் வலிமையில் மிகவும குறைந்ததாக இருக்கும். இதன விளைவாக மிகவும் களைப்பாக உணர்வார்கள், உணவு சாப்பிட்டாலும் போதிய தெம்பு கிடைக்காது.
இரத்த தானம் கொடுப்பவர்களின் நிலை இதுவென்றால் இரத்த தானம் பெறுபவர்களின் நிலை என்னவாக இருக்கும்  என யோசித்துப் பாருங்கள். ஆம். மண்ணீரல் கெட்ட இரத்த்த்தை அழிக்கும் தன் இயற்கை இயங்கும் திறனில் செயலிழக்கும்; மேலும், புதிய இரத்த அணுக்களை உருவாக்கும் செயலிலும் பாதிப்புக்குள்ளாகும். இரத்த சோகை நாளடைவில் உருவாகி உடல் மொத்தமாக மந்தத் தன்மை ஏற்படும். மூளைச் சோர்வும், பலவீனமும், உடல் அசதியும், அயர்ச்சியும்; பின்னர் அதைத் தொடர்ந்து உருவாகும் எண்ணற்ற நோய்களுக்கு இதுவே காரணமாக அமையும். இந்த நோய்களுக்கு மருத்துவமும் ஆங்கில மருத்துவத்தில் கிடையாது. சாதாரணமாகவே எந்த நோய்க்கும் காரணம் கண்டறிய முடியாமல் ஸ்கேன் வரை செய்து பார்த்துத் திணறிக் கொண்டிருக்கும் மருத்துவம் ஆங்கில மருத்துவமாகும்.
இந்த நிலைமையைக் கொண்டிருக்கும் இம் மருத்துவம் ஒருவருடைய உடலில் மருந்துகளையும், இரத்தத்தையும் ஏற்றிய பின்னர் ஏறபடும் பின்விளைவுகளையா அறியப் போகிறது? பின்னர் வைத்தியமுமா? இன்றுள்ள பெரும்பாலான நோய்கள் இரத்த தானத்தின் விளைவாகவும், இரத்தம் ஏற்றப்பட்டதன் விளைவகவும் தான் என்பதையாவது இம் மருத்துவம் அறிந்து வைத்திருக்கறதா என்றால் அதுவும் இல்லை.
ஏனைய மருத்துவங்கள் எல்லாம் நோய்களைப் பற்றி கையளவாவது அறிந்து வைத்திருக்கின்றன. ஆனால ஆங்கில மருத்துவம் நோய்களைப் பற்றி அறிந்து வைத்திருப்பதெல்லாம் கைவிரல் நக நுனிகளின் அளவு தான்!

கணையம்

உணவு எந்த அளவு வயிற்றில் ஜீரணமாகிறதோ, மண்ணீரலிலிருந்து எந்த அளவு கெட்ட இரத்தம் நீக்கப்பட்டு, நல்ல இரத்தம் உருவாகிறதோ, அவற்றின் தன்மையைப் பொறுத்தே ஜீரணம் அமைகிறது.  ஜீரணத்தின் இறுதியில் உண்டாகும் எரிசக்தி குளுக்கோஸ் ஆகும். ஜீரணம் முறைகேடாக இருக்குமானால் இறுதியில் உண்டாகும் எரிசக்தி குளுக்கோஸ்  மிகத் தரம் குறைந்ததாக இருக்கும் மிகத் தரம் குறைந்த குளுக்கோஸ்  இரத்தத்தில் இருக்குமானால் அது உடலுக்கு பாதகமானதாகும். எனவே, உடலைப் பாதுகாக்க அந்த எரிபொருள் – குளுக்கோஸ் உடலால் உபயோகப்படுத்தப்படக் கூடாது. எனவே, இன்சுலின் இயற்கையாகவே தரம் கெட்ட குளுக்கோஸைப் புறக்கணிகிறது; எனவே, இன்சுலின் சுரப்பானது சுரக்காது. கணையம் இன்சுலினை வெளிப்படுத்தாது. இது டயாபடீஸ் என்ற சூழ்நிலையாகும். ஆனால், ஆங்கில மருத்துவம் இந்த உண்மையை அறியாமையின் காரணமாக , இன்சுலினை வலுக்கட்டாயமாகச் சுரக்கச் செய்யக்கூடிய ஆபத்தான மருந்துகளைக் கொடுத்து கணையத்தின் இயற்கையான இயங்கும் திறனை நாசமாக்கி விடுகிறது. இன்னும் மோசமாக, இன்சுலின் சுரக்காவிட்டால் என்ன? எங்களிடம் இன்சுலின் ஹார்மோன்கள் இருக்கின்றன; நாங்கள் ஊசி மூலமாகக் கொடுப்போம் என்று செயல்பட்டார்கள். அதன் விளைவு? இன்று நோயாளிகளின் மரபணுக்களும் கூட சேதமடந்து விட்டன. எனவே, இன்று குடும்பம் குடும்பமாகச் சீரழிந்து நாடு முழுவதும் டயாபடீஸ் நோயாளிகளாக மாறி விட்டார்கள். நிச்சயமாக இரத்த தானம் கொடுப்பவர்கள் இந்த நோய் நாளடைவில்  உருவாவதிலிருந்து இன்று தங்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும். உலகத்திலேயே இந்தியா இரண்டாவது மிகப் பெரும்பாலான டயாபடீஸ் நோயாளிகளைக் கொண்டிருக்க கூடிய தேசம் என்று அசிங்கமாக ஊர் முழுவதும் பறையடித்துக் கொண்டிருக்கக் கூடிய கெட்ட சூழ்நிலை உருவாகி விட்டது. இது இந்தியாவுக்கு இழிவும் வேதனையுமாகும். இந்த நிலை நமக்கு எதனை அறிவிக்கிறதென்றால், அறிவற்ற ஆங்கில மருத்துவம் நம் நாட்டை விட்டும் ஒழிய வேண்டும்; களையெடுக்கப்பட வேண்டும் என்பதையே. இன்னும், இந்திய மருத்துவங்கள் எல்லாம் உலக அரங்கில் தலையெடுக்க வேண்டும் என்பதும் தான்.
ஆங்கிலேயர்களின் மருத்துவமான ஆங்கில மருத்துவம் பொது அறிவற்றது. எந்த அளவுக்கு இந்த மருத்துவம் விள்ங்காதது என்றால், இவர்கள் தங்களை டயாபடீஸ் ஸபெஷலிஸ்ட் என்று கூறுவார்கள். ஆனால், அந்த நோய்க்கான காரணத்தை அறிய மாட்டார்கள். அதனைத் தடுக்க சக்தியும் பெற மாட்டார்கள். டயாபடீஸைக் குணப்படுத்துவது என்பதோ இவர்களுடைய மருத்துவத்தில் நடக்கவே நடக்காத காரியம் ஆனாலும், தாங்கள் போலிகள் என்று கூறுவதற்குப் பதிலாகச் சிறப்பு மருத்துவர்கள் எனக் கூறிக் கொள்வார்கள் எனவே இவர்கள் இந்த கட்டுரையைப் புரிந்து கொள்ளச் சக்தி பெற மாட்டார்கள்.

கல்லீரல்

உணவில் உள்ள உணவுச் சத்துக்கள் முறைகெட்ட ஜீரணத்தின் காரணமாக நஞ்சுக்களாகவும் மாறும். இவ்விதமாக நஞ்சுக்களாக மாறிய உணவை உடலை விட்டு நீக்கக் கூடிய மிக முக்கியமான வேலையைச் செய்யக் கூடிய உறுப்பாகும் கல்லீரல். இரத்த தானம் செய்யும் பொழுது கல்லீரலின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. எனவே, நச்சுக்கள் இரத்தத்திலேயே தங்கி விடுகின்றன. இவ்வாறு இரத்தத்தில் சுற்றிக் கெண்டிருக்கும் நச்சுக்கள இரத்த தானத்தின் போது அவை நீக்கப் படாத நிலையில் பாட்டிலில் சேகரிக்கப்பட்டு விடுகின்றன.
இரத்த தானத்தின் போது அனைத்து நச்சுக்களும் பிரித்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு விடுகின்றன என்பதைப் பார்த்தோம். இப்பொழுது, இரத்தம் ஏற்றப்படுகிறாரகளே, அவர்களுடைய கேடுகள் என்ன என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. எனினும், விள்க்கமாகச் சொல்லுவது சமுதாயத்தின் நன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ள கடமையாகும்.

யார் இரத்தத்தைத் தன் உடலுக்குள் ஏற்றிக் கொள்கிறார்களோ, மேலே சொன்ன அனைத்துக் கேடுகளையும் தன் உடலில் அனுமதிக்கிறார்கள். அதுவும், நேரடியாக உயிரோட்டம் மிக்க தன் சொந்த இரத்தத்தையும சாகடிக்க கூடிய விசங்களை இரத்தத்தினுள் அiனுமதிக்கிறார்கள்.
இரத்தம் உடலினுள் செலுத்தப்படும் பொழுது ஒருவரது சொந்த இரத்தம் உருவாவது உடனடியாக தடுக்கப்படுகிறது. இன்னும் இரத்தம் அதனுடைய முழுமையான தன்மையில் உருவாகாமலேயே போய் விடுகிறது. மேலும், இரத்தம் ஏற்றப்பட்ட நோயாளிகளின் கல்லீரல் மிகப் பெரும் துன்பத்துக்குள்ளாக்கப்படுகிறது. காரணம் இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்ள் அனைத்தையும் நீக்க வேண்டியது கல்லீரலின் கடமையாக இருக்கிறது. அளவுக்கதிகமான நச்சுக்கள் கல்லீரலை அடையும் போது கல்லீரல் சோர்வடைகின்றன, பலவீனமடைகின்றன. இன்னும் கல்லீரல் ஜுரத்தின் தன்மையடைகின்றது. இரத்த அணுக்கள் சிதைக்கப்பட்டு மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கும். நாளடைவில் நோயாளியின் சொந்த இரத்த அணுக்களும் அளவுக்கதிகமாக சிதைக்கப் படும்.எனவே, அதனுடைய நச்சுக்கள் அதற்கு பாரமாக அமையும். எந்த நேரமும் இவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் தோன்றலாம். பிறகு, அது மறையாது. மஞ்சள் காமாலை நோயிலேயே அவர்கள் இறப்பார்கள்; மேலும், கல்லீரல் செயலிழப்பால், கல்லீரல் கட்டிகள், கல்லீரல் புற்று நோய்களால் இறப்பார்கள்.

கல்லீரல் செயலிழப்பின் காரணமாக இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்கள் நீக்கப்படவில்லையானால் அந்நச்சுக்கள் அனைத்தும்  சிறுநீரகங்ளை அடையும் இந் நிலையின் பொது தான் இரத்தத்தில் கல்லீரலால் சுத்தப்படுத்தப்படாத நச்சுக்கள் சிறுநீரகங்களை பதம் பார்க்க ஆரம்பிக்கிறது.

சிறுநீரகங்கள்

எந்த அளவுக்கு மேற்சொன்ன நச்சுக்கள் இரத்தத்தில் சுற்றுப் பொற்றுக் கொண்டிருக்கன்றனவோ, அந்நச்சுக்கள் சிறுநீரகங்களை பழுதடையச் செய்கின்றன. சிறுநீரகங்களை பழுதடையச் செய்யக்கூடிய அளவுக்கு இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மிக மோசமானவைகளாகும் இரத்த தானத்தின் காரணமாகவும் இரத்தம் பெறுவதன் காரணமாகத்தான் பெரும்பாலான மக்கள் இன்று அதிகமதிகமாக சிறுநீரகச் செயலிழப்பால் நாசமாகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆங்கில மருத்துவத்துக்கு ஏன் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன? சிறுநீரக பாதிப்பால் ஏன் அதிகமதிகமாக இறந்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் தன்னால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுவிட்டால் எதுவும செய்ய இயலவில்லை என்று இன்றளவும் தெரியாது; என்றும் தெரியப் போவதுமில்லை.
இது மட்டுமல்ல, கணையப் பகுதியில் இதே பாதிப்பின் காரணத்தின் அடிப்படையில் தான் ஏராளமான மக்கள் இன்று டயபாடிஸினால் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள். அதே காரணத்தினால் சிறுநீரகங்கள் கெட்டு ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வாசகர்களே, இரத்த தானம் கொடுப்பவர்களுடைய இரத்தம் எந்த அளவுக்கு நச்சு என்பதை நீங்கள் இந்த கட்டுரையைப் படிப்பதிலிருந்து அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆனாலும், ஆங்கிலமருத்துவ மேதாவிகள் எதிர்க் கேள்வி கேட்பார்கள். இரத்தம் ஏற்றுவோரெல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள் என்று. நீங்கள் அறிய வேண்டும். எந்த ஒரு நோய்க்கும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அறுவைச் சிகிச்சை அறையை விட்டு நோயாளி வெளிவந்து விட்டாலே ஆபரேசன் சக்ஸஸ் என்று கூறுபவர்கள் இவர்கள். அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் என்னென்ன நோய்கள், என்னென்ன கஸ்டங்கள் இந்த ஆபரேசன் காரணமாக விளைந்து சொல்லொனாத் துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்; இன்னும் இறந்தும் இருக்கிறார்கள்; இன்னும் இறந்து கொண்டும் இருக்கிறார்கள்; இன்னும் இறப்பை எதிர்நோக்கி குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் இவர்கள் எந்தக் கவலையும் கொள்ளாதவர்கள் தாம். எனவே, இவர்கள் மேற்சொன்ன கேள்வியைக் கேட்பவர்களே. அவர்கள் கேள்வியில் ஆச்சரியம் இல்லை.
மேலும் ஆங்கில மருத்துவம் கேட்கும், சர்ஜரியின் போது எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோமே? என்று. இன்னும், ஆக்ஸிடென்டில் இரத்தம் அதிகம் வெளியேறிவிட்டால் இரத்தம் கொடுத்துத் தானே காப்பாற்றுகிறோம்?

வாசகர்களே, நீங்கள் முக்கியமான விஷயத்தை அறிய வேண்டும் விபத்துக்குள்ளாகிறவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்பத்திரியில் அனுமதி செய்யப்பட்டு இறக்கிறார்கள். அவர்களில் பலர் பல நாட்கள் வைத்தியம் என்ற பெயரில் வைத்தியம் அளிக்கப்பட்டும இறக்கிறார்கள். இன்னும் பலர் மூளையில் அடிபட்டிருந்தால், ஜடமாகவும், கை,  கால்களில் எலும்பு முறிந்திருந்தால் அங்கஹீனத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் டயாபடீஸ், கல்லீரல் பித்தப்பை சம்பந்தமான நோய்கள், சிறுநீரகக்கோளாறுகளால் அவதிப்பட்ட நிலையில் வாழ்க்கையை வெறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலிருந்து சொல்லப்பட்டதைத் தவிர, வேறு எதுவுமாக இருக்க முடியாது.

சாதாரண தலைவலி, சைனஸ், மூக்கடைப்பு போன்றவற்றிலிருந்து கூட நிவாரணம் இல்லாத்தற்கு காரணம், ஆங்கில மருத்துவத்தின அறிவின்மையே. பிரசவத்தின் போது ஆபரேஷன் செய்கிறார்கள் இரத்தம் ஏற்றுகிறார்கள். இதன் காரணமாக, மண்ணீரல் சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் போன்றவை நோய்வாய்படுகின்றன.

முதல் குழந்தை பெற்றெடுத்த நிலையிலேயே தாயின் உடலில் ஊளைச்சதை அதிகமாகிவிடுகிறது. உடலெங்கும் கெட்ட நீர் கோர்த்து உடல் உப்பி விடுகிறது. மகப்பேறு மருத்துவர்களிடம் இதுபற்றிக் கேட்டால் தன் மருத்துவத்தினுடைய அறியாமையின் காரணமாக, ஆனால் அதே சமயம் ஆங்கில மருத்துவ முறையின் பெயர் கெட்டு விடக் கூடாதே என்பதன் காரணமாக முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கப் பெரும் பிரயத்தனம் எடுப்பார்கள். அவர்கள் சொல்லக் கூடிய வேடிக்கையான, கேளிக்கையான பதில் இதோ; ’’ஆபரேஷனுக்குப் பிறகு உடல் குண்டாவதற்கு காரணம், நோயாளிகள் பரிபூரணமாக ஓய்வில் இருக்கிறார்கள், எந்த வேலையும் செய்வதில்லை. பால், பழம் என்று பலவித கவனிப்புகள் ஏன் உடம்பு குண்டாகாது?’’

இவ்விதமாகச் கூறக் கூடிய மக்ப்பேறு மருத்துவ நிபுணர்கள் ஒரு வேளை சாப்பிடக் கூட காசில்லாமல் வேலை செய்தால் தவிர வழியில்லை என்ற நிலையில் குழந்தை பெற்ற மூன்றாவது நாளோ அல்லது ஒரு வாரத்துக்குள்ளோ வேலைக்குத் திரும்புகிறார்களே, அவர்களது உடல் குண்டாவதற்குக் காரணமென்ன? எனவே வாசகர்களே, ஆங்கில மருத்துவம் ஆன்மீகமற்ற ஒரு மருத்துவமாகும. அதற்கு ஒரு நாளும் உண்மை நிலையோ, இயற்கையைப் பற்றியோ
உடல் கூறுகளின் இயற்கையின் தன்மைகளைப் பற்றியோ எதுவுமே புரியாது..

ஒன்று, இவர்கள் பிணத்தைப் பார்த்து மருத்துவம் கற்றுக் கொண்டவர்கள. அல்லது, ஸ்கேன் போன்ற இயற்க்கையின் இயக்கத்தை வெளிப்படுத்த இயலாத வெறும் படங்களை வைத்துக் கொண்டு, ஒரு உறுப்பைப் பார்த்து அது ஒரு தேவையற்ற உறுப்பு என்று குத்திக் குதறி வெட்டி எடுத்து தூரப் போட்டு விடுவார்கள். ஏனென்றால் இவர்களுக்கு உயிருள்ள ஒரு உறுப்பின் இயக்கம் தெரியாது. அதை உயிரோடு இயங்க வைக்கவும் தெரியாது. மாறாக ஒரு உறுப்பு இருக்கும் வரையில்தானே நோய்? அந்த உறுப்பை நீக்கிவிட்டால் என்ன என்ற அடிப்படையில் செயல்படுவது தான் ஆங்கில மருத்துவம்.

இதனை நீங்கள் இன்னும் தெளிவாக உணர வேண்டுமென்றால், கர்பப்பைக் கோளாறுகளுக்காக ஆங்கில மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் போகக் கூடிய நோய்களைப் பார்பீர்களானால, அந்த உறுப்பை நீக்கி விடுவார்கள். ஆப்பரேஷன் சக்ஸஸ்  என்று கூறுவார்கள். இனி உங்களுக்கு தொந்தரவே கிடையாது என்று கூறுவார்கள். ஒரு உறுப்பு இருக்கும் வரையில்தானே நோய்? என்ற அடிப்படையில் இயங்கக் கூடிய ஆங்கில மருத்துவத்தை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அடுத்து வரும் உதாரணத்தையும் கவணியுங்கள்.

தாய்க்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், பிள்ளைக்கும் வருமாம். எனவே, மார்பகப் புற்றுநோய் உள்ள ஒரு தாய்க்கு பெண் குழந்தை பிறந்தால், 7 வயதிற்க்குள்ளாகவே அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் மார்புகளை வெட்டி எடுத்துவிட வேண்டுமாம். இது நவீன மருத்துவத்தின் உயரிய அறிவாம். விஞ்ஞான மருத்துவத்தின் வளர்ச்சியாம். ‘மார்பகம் என்ற ஒரு உறுப்பு இருந்தால்தானே நோய் வரும்? மார்பகத்தை நீக்கிவிட்டால?’’ என்ற ரீதியில் செயல்படும் இந்த ஆங்கில மருத்துவத்தின் அறிவற்ற போக்கை என்னவென்பது? நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் , மார்பகப் புற்றுநோய் உள்ள பெண்ணின் குழந்தைகள் அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படாது. எனவே, புற்றுநோய்களைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒத்துக் கொண்டு, புற்றுநோய்களைப் பொறுத்த வரையில்  ஆங்கில மருத்துவம் மிக போலித்தனமான ஏமாற்று மருத்துவம் என்பதை மக்களுக்கு அறிவிக்காமல், மாறாக, புற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்று கூறிக்கொண்டு திரிகிறார்களே, இவர்களை ஏன் சிறையில் தள்ளுவதில்லை? இவர்களின் வாயை ஏன் அடக்குவதில்லை? இவ்வகை போலிகள் பற்றியும், போலி மருத்துவர்கள் பற்றியும் ஏன் மக்களுக்கு அறிவிக்கவில்லை?

இறுதியாக நாம் ஆங்கில மருத்துவத்தைப் பற்றி அறிய வேண்டியது மனிதன் இருந்தால்தானே அவனுக்கு நோய்கள் என்ற அடிப்படையில், குழந்தை பிறந்த்துமே கொன்று விடுவார்கள். இதற்கு பெயர் கருணைக் கொலை. எப்படி? சிறுமியர்களின் மார்பகத்தில் புற்று நோய் வரலாம் என்ற கேடுகெட்ட யூகத்தின் அடிப்படையில், வந்துவிட்டால் குணமாக்க வேண்டுமே? நம்மால் முடியாதே? நமது ஆங்கில மருத்துவத்தின் பெயர் கெட்டுவிட வேண்டாமே? அதற்கு பதிலாக சிறுமிகளுக்கு மார்பகத்தை எடுத்து விட்டால், தாம் நன்றாக வாழலாமே...! என்ற அடிப்படையில வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவத்தின் மிக்ப் பெரும் கொடுமைதான் இரத்த தானம் என்ற விளம்பரம். மேற்கண்ட கேள்விகளுக்கு ஆங்கில மருத்துவம் உரிய பதில் அளிக்காத வரையில் இரத்த தானம் தடை செய்யப்பட வேண்டும்.

நன்றி
ஹெல்த் டைம்.





திங்கள், 14 மார்ச், 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் 6(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 3)


ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 2) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.
கடுக்காய்க் பருப்பு
கண்பார்வைப் பலகீனம், கண்பார்வை மந்தம், கண்புகைச்சல், கண்ணில் நீர்வடிதல், கண்ணில் நீர் ததும்புதல், திரை கட்டினது போல் தோற்றும் பார்வை முதலிய இந்த ரோகங்களுக்கு கடுக்காய்க் பருப்பை முலைப்பாலில்(தாய்ப்பாலில்) இழைத்து உபயோகித்து வந்தால் மேற்கண்ட ரோகங்கள் தீரும். பார்வையைப் பலப்படுத்த இது சஞ்சீவிக்கொப்பானது.

கடுக்காய்ப் பெருமை

நாம் முன்னர்ச் சொன்ன பாடலில் சொல்லி இருப்பது போல் கடுக்காயின் மகிமை முழுவதையும் எழுதுவதானால் அதிகக் கஷ்டமே!அநுபான(மருந்துடன் சேர்த்து சாப்பிடுவது, இது மருந்தின் வீரியத்தை அதிகரிக்கும், மருந்தின் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துவது ) விஷேஷங்களுடன் இது எல்லா வியாதிகளுக்கும் உபயோகமாம். இதனை எப்போதும் கையாள்பவர்கள் எல்லா வியாதிகளிலிருந்து நீங்கியிருப்பார்கள்.
கடுக்காயை உபயோகிக்கும் விதம்
கடுக்காயை செப்டெம்பர் மாத நடுவிலிருந்து நவம்பர் மத்தி வரையில் கடுக்காய்ச் சூரணத்தைக்(கடுக்காயின் பருப்பை நீக்கி வெறும் கடுக்காய்த் தோலும் கடுக்காய்ச் சதைப்பற்றும் மட்டுமே சூரணம் செய்ய வேண்டும்) கற்கண்டுத் தூளுடன் கலந்துட் கொண்டு வரவேண்டும்.

நவம்பர் மத்திம பாகத்திலிருந்து ஜனவரி மத்திய பாகம் வரையில் சுக்குச் சூரணத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்.(சுக்கை வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பை தடவி கரியடுப்பில் சுட்டு தோலைச் சீவிவிட்டு, பால் ஆவியில்{பசுவின் பாலை ஒரு வாயகன்ற உயரமான பாத்திரத்தில் ஊற்றி பாத்திரத்தின் வாயை ஒரு வெள்ளைத் துணியை அதன் மேல் கட்டி,சுக்குப் பொடியை அதன் மேல் பரப்பி புட்டை அவிப்பது போல் அவித்து நிழலில் உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்} வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்) 

இப்படி சுத்திகரிக்கப்பட்ட சுக்கை யார் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். சுக்கை சுத்தி செய்யாமல் உபயோகித்தால் மூலரோகங்களைத் தூண்டுவதுடன் அல்சர் போன்ற தொல்லைகளையும் அதிலுள்ள சுண்ணாம்புச் சத்து தரும். எனவே மேற்கூறிய முறையில் சுக்கை சுத்தி செய்தே உபயோகப்படுத்த வேண்டும்.

ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கடுக்காயை அரிசித்திப்பிலிச் சூரணத்துடன் மிஸ்ரமித்து (கலந்து) உட்கொள்ள வேண்டும்.

மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரை தேனிற் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

மே மாதம் மத்திம பாகத்திலிருந்து ஜீலை மாத மத்திம பாகம் வரை வெல்லத்துடன் சம்பந்தப்படுத்தி சாப்பிட வேண்டும்.

ஜீலை மாதம் மத்திம பாகத்திலிருந்து செப்டம்பர் மாத மத்திம பாகம் வரையில் உப்புடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். 

இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4)'' என்ற பதிவில் தொடரும்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்