திங்கள், 28 பிப்ரவரி, 2011

மக்கள் போராட்ட திசைவழி’ மாறல் வேண்டும



  ‘மக்கள் போராட்ட திசைவழி மாறல் வேண்டும்
-தமிழியம். பறம்பை அறிவன்   27-02-11
அரசின் பிடியிலும், அரசின் சார்பு அமைப்புகளின் கட்டிலும் மக்கள் உள்ளனர். அரசை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகளும் கூட அரசின் பெரும் பணமுதலாளியக் கொள்கையை எதிர்க்கும் வலுவன்றி உள்ளன. அவைகளின் ‘நோக்கம்மக்கள் நல வாழ்வு என்று கூறப்படினும், அரசின் அமெரிக்க, பன்னாட்டுக் கொள்கைகளால் உருவாகி வரும் ‘உயர் தொழில் நுட்பம்என்ற பெயரில் மரபு சார்ந்த்தும தீங்கற்றதுமான விளைப்பு (உற்பத்தி) களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்க்கும் திறனற்று உள்ளனர்.

தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் என்பதில் அரசு நிறுவன ஆதரவு என்பது நல்லதா? விளைப்பு (உற்பத்தி) யில் மக்கள் நலம் என்பது முதன்மையாதல் வேண்டும் என்பது தேவையா? நிறுவன் எதிர்ப்புக்கு முன் அதன் விளைப்பின் (உற்பத்தியின்) விள்வுகளால் ஏற்படும் நன்மை தீமை பற்றிய கவனம் வேண்டும்.

‘மருந்துகுழந்தைகளுக்குத் ‘தடுப்பு ஊசி மருந்துஎன தரப்படுவன, குழந்தைகளுக்கு இயற்கையான தடுப்பாற்றலைக் கெடுப்பனவாக உள்ளன. இம் மருந்தும், ஊசியும் தவறானவை. இவற்றைக் கண்டுபிடித்து ‘உலகம் எங்கும் பரப்ப  அரசுகளைப் பன்னாட்டு முதலாளிய அமைப்புகள் கட்டாயப் படுத்துகின்றன. தனியார் (பெருமுதலாளிகள்) களுடன் கூட்டு வைத்துள்ள அரசு, தன் நிர்வாக வசதி கருதியும், தன் ‘அரசியல் முகவர்கள் நலன் கருதியும் ‘ உற்பத்தியை, நிர்வாகத்தைத் தனியார் துறைக்கு மாற்றுகிறது. இதில் ‘மக்கள் நலம்‘,  ‘குழந்தைகள் நலம் எங்கே உள்ளது?

எனவே, போராட்டத்தின் அடிப்படையில் உள்ள குறையைச் சிந்திப்பது நல்லது... யாருக்காக! மக்களைத் திரட்டுகிறோம் என்று கருதிப்பார்ப்பது தேவையாகும்! 

நூறு ஆண்டுகளுக்கு முன் பிரான்சு நாட்டுப் பேராசிரியர் அன்டாயின் பிச்சாம்ப் கண்டுபிடித்த நுண்ணுயிரி மூலம் கிருமியியல் (bacteriology) துறை தோன்றியது இந்த நுண்ணுயிரிக் குறிப்பைக் கொண்டு பிரஞ்சுக்காரரான லூயி பாயிசிட்டர் என்ற மருந்து விற்பனையாளர் உத்தியில் உருவானதே தடுப்பூசி. இவரே நுண்ணுயிரிகளால் கேடு எதுவும் விளைவதில்லை என்று தமது மரண வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். (-தமிழ் வாணன் நூல்)

குழந்தை பிறக்கும் போது எவ்வகை நோய் எதிர்ப்பாற்றலும் இல்லாமல் தான் பிற்க்கிறது. ஆனால், எதிர்ப்பாற்றலை உருவாக்கிக் கொள்ளும் பண்புகளை ஏந்தியே பிறக்கிறது.’’ எனவே, தடுப்பூசித் திட்டம் மக்களை – தமிழர்களை வஞ்சிக்கும் ஏற்பாடுதான் என மருத்துவர் சு.வீரபாகு விரிவாக விள்க்கியுள்ளார்.
எனவே, தடுப்பூசி மருந்து குழந்தைகளைக் காப்பது என்று ஆங்கில அடிமைகள் பரப்பிவரும் பொய்களை அப்படியே நம்பி மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்பவர்களிடம் நாம் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

‘மக்கள்திரள் பெரும் போராட்டம்‘ என்ற பேரில் தமிழக அரசோடு பேரம் பேசும் முயற்சியில் இறங்கியுள்ளவர்கள் தான் இந்தியக் கூட்டாளியாகவுள்ள தமிழக ஆளுங்கட்சிகளிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

மக்களின் உயிர்வாழ்க்கையை உயிர்சூழல் உயிர்ம நேயம் உள்ளவர்களால் மட்டுமே காக்க இயலும். இவர்களே உண்மையான, மனிதநேயம் உள்ளவர்கள். தமிழீழத்தில் நடந்த தமிழினப் படுகொலையை ஞாயப்படுத்தியவர்களும், அதைத் தடுக்கும் அதிகாரம் இருந்தும் கரவாக கண்டுகொள்ளாமல் இருந்தவர்களும் ‘குழந்தைகள் பேரால் புலம்புவது, அக்கறையால் அன்று. மருந்து வணிக ஆதாயம் கருதியே. தேவைகளை உருவாக்கி, மருந்துகளைச் சந்தைக்குக் கொண்டுவரும் ‘மக்கள் பகைவர்களின் கூட்டாளிகள் மக்கள் பேரால் போராட முயல்வது வழக்கமாகி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவது ‘தமிழ் தேசியர்களுக்கும் பிற தேசிய மக்களுக்கும் உள்ள பொறுப்பாகும்.

இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதை விட இந்திய தரகுமுதலாளிகளுக்கு ஆதரவான போராட்டம் என்பது வெட்டவெளிச்சம். எதிர்மருத்துவ (அலோபதி)க்கு ஆதரவாக என்பது, தேசிய மருத்துவ நலங்களுக்கு’ (தமிழ், ஆயுர்வேத, ஓமியோ மருத்துவங்களுக்கு) எதிரான என்றாகி விடும்.
தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் என்கின்ற ‘எதிர் மருத்துவம்ஏற்படுத்திவரும் கேடுகளை மக்கள் நல மருத்துவர்கள் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இது ஒரு பாலாக ‘நஞ்சைஅரசு தருவதா, தனியார் தருவதா என்று பேசி மக்கள் நலனை மறப்பது வெறும் கட்சி அரசியலாகி விடுகிறது. யார் தந்தாலும், உற்பத்தி செய்தாலும் ‘நஞ்சை ஏற்பது அறிவீனம். மேலும் சொல்லப்போனால். அக்குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவது குற்றத்திலும் குற்றமாகும்!

மக்கள் நலனைத் தீர்மானிக்கும் ‘மக்கள் நல இயக்கம் தேவை. அது தமிழ் தேசிய நோக்கில் மட்டுமே தெளிவான முடிவுகாண இயலும்! இன்றை ‘இந்திய அரசு எதிர்ப்பு- இந்திய ‘காங்கிரசு எதிர்ப்பு மட்டுமன்று, இந்திய தரகு பெருமுதலாளிகளின் எதிர்ப்பும் ஆகும்! இதனை அடிப்படையான ‘தமிழ்த் தேசமக்கள் நலனுடன் எண்ணீப்பார்த்து, இந்தியத்துடன் சிக்கிச் சீரழியும் தேசிய இன மக்களின் எழுச்சிக்கான போராட்டமாக்கப் பெறல் வேண்டும்.
இந்த வகையில் ‘தமிழ்த் தேசிய மக்களின் நலவாழ்வு இயக்கம் செயல்படுதல் வேண்டும்!
இந்திய அரசின் பன்னாட்டுக் கொள்கையை எதிர்ப்பதாக்க் காட்டிக் கொண்டு அதன் ‘ஆளுங்கட்சியோடு கூட்டனி வைத்துக் கொள்வதும், பதவிக்காக ஒட்டுண்ணி அரசியல் நடத்துவதும் இந்தியவியல் கட்சிகள் தன்மையாவதால், அவை ‘தரகு முதலாளியத்துடன் மறைவாகவோ, நேரடியாகவோ உறவு கொண்டு ‘தேசிய இன நலன்களைப் புறக்கணிக்கின்றன.

சென்னை கிண்டியில் உள்ள B.C.G. -VL,  குன்னூரில் உள்ள பாசுட்டர் நிறுவனம், இமாச்சல் பிரதேசத்தில் கசௌலிய்ல் உள்ள CRI ஆகிய பொதுத்துறை திறுவனங்கள்தான் நூற்றாண்டுகளுக்கு மேலாக நோய்தடுப்பு மருந்துகளை (vaccine/anti-Rabies/-Tetanus) மிக்க குறைந்த விலையில் தயாரித்து அளித்து வந்த்து.
இது இந்தியக் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கே பயனளித்து வந்த்து. இந்த மூன்று நிறுவனங்களையும் மூட அரசு முயன்ற போது வலுவான மக்கள் போராட்டத்தின் (strong Strong Cvic  Moverment)மூலமாக அதைத் தடுத்தோம்’’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தலைவர்கள் – அமைப்புக்ள் சிந்திக்க...

‘குழந்தைகள் உயிருடன் விளையாடாதேஎன்று மக்களைத் திரட்டி நடத்தும் இப்போராட்டம், ‘குழந்தைகளை ஆங்கில எதிர் மருத்திவத்தில் ஆயுள் முழுதும் வைத்து வளர்த்து ஆளாக்க நினைப்பதாகும். நோய் குடியிருக்கும் குடிமக்களை உருவாக்கும் இந்த மருத்துவத்தை எதிர்க்காமல் ‘அரசு எதிர்ப்பு என்பது பொய்யானது- குழந்தைகளைச் சொல்லி ‘மலிவான வாக்குவங்கிக்கு அலையும் போலி அரசியலாகும்.
kமருத்துவச் சிந்தனை ;

27. 02. 2011 ஞாயிறன்று தமிழகம் முழுவதும் உள்ள 66 இலக்கம் குந்தைகளுக்கும் ‘போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாகச் செய்தி (தினமணி 28-02-2011 சென்னை) கூறுகிறது. போலி(யோ) ச் சோட்டு மருந்து ‘இயற்கையான குழந்தைகளின் நோய்எதிர்ப்பாற்றலைத் தடுத்துச் செயற்கையான எதிர்விளைவை  உண்டாக்கக் கூடியது. சென்னையில் மட்டும் 4,51,077 குழந்தைகளுக்கு இச் சொட்டு மருந்தைத் தமிழக அரசு தந்துள்ளது. இதனை அரசு செய்தால் நன்மை, தனியார் செய்தால் தீமை என்று பார்பது முற்போக்கானது என்று கருதப்படுகின்றது. மாற்று மருத்துவச் சிந்தனையாளர்கள் இதுபற்றிக் கருத்துச் சொல்வது காலத்தின் கட்டாயம் ஆகும்!

குழந்தைகள் உயிரோடு விளையாடும் அரசின் போலி(யோ) சொட்டு மருந்து குறித்துப் பேசாமல் இதனை அரசுத்துறை உற்பத்தி (விளைப்பு) ஆக்குதல் வேண்டும் என்பது பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு இந்திய முதலாளிகளுக்கும் துணை போவதாகும்,,! இந்திய அரசுக் கொள்கையின் அடிப்படைத் தவறுகளை எதிர்ப்பதற்க்கு மக்களை அணி திரட்டாமல் இந்திய அரசு எதிர்ப்பு என்பது தேர்தலில் பதிவிப் பங்கீடு பெற அல்லது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர என்ற குறுகிய தன்னல நோக்கம் கொண்டதென்றே தெரியலாம்!

தேர்தல் களத்தில் ஆளும் கட்சி எதிர்ப்பு, எதிர்க்கட்சி எதிர்ப்பு என்பது ‘பதவி நாற்காலி யில் அமர்வதற்கான ‘இசை நாற்காலிப் போட்டி யாகவே உள்ளது.

எனவே குடிநாயகத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் இத் தேர்தல் திருவிழாவில் காணாமல் போகும் ‘குழந்தைகள் ஆகிவிடுதல் கூடாது என்பதே நம் வேண்டுகோள் ஆகும்.

                  -தமிழியம். பறம்பை அறிவன்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

நீயா? நானா? விவாதம் பற்றி...

விஜய் தொலைக்காட்சியில் நீயா? நான? பார்த்தேன். சித்த மருத்துவத்தை மக்கள் ஏன் நாடுவதில்லை. அதன் சிறப்புகளை மக்கள் தெரிந்து கொள்ள வழி என்ன என விவாதித்தனர். இது குறித்த எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மேற்கண்ட விவாத்தில் கலந்துகொண்டவர்களில் பொரும்பான்மையோர் தங்களுடைய நோக்கம் லேகியம் விற்பதாகவோ, இரசமணி எனும் பெயரில் ஈய மணி விற்பவர்களாகவோ இருந்தது கண்டேன்.
பொதுமக்கள் சார்பாக கல்ந்து கொண்டவர்களும் பொதுவாக தமக்கோ பிறர்க்கோ நன்மை நாடுபவர்களாக இல்லை. வீண் பெருமையையும், தங்கள் அறியாமையையும் ஊரறியச் செய்ய வந்தவர்களை போன்றிருந்த்து அவர்கள் பேச்சு.
சிறப்புப் பேச்சாளர்கள் இவர்களுடைய சிறந்த பிரதிநிதிகள் என்பதை – மிகத் தெளிவாக தங்கள் அறியாமையை -பொறுப்பின்மையை வெளிப்படுத்தினர்.
மொத்தத்தில் இப்பொழுதுள்ள மருத்துவர்கள், மக்கள், மக்களுக்கு வழிகாட்டுபவர்கள் நன்மையை நாடுபவர்களாக இல்லை என்பதை இந் நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டியது.

சித்த மருத்துவத்தின் குறைகளாக பொதுமக்கள் சார்பாக குறிப்பிடப் பட்டவை சில. (எனக்கு ஞாபகத்தில் இருந்த்தை எழுதுகிறேன்.)
  1. மருந்துகள் குப்பிகளில் அடைக்கப் பட்டு ஆங்கில மருந்துகள் போல எடுத்தேன் போட்டுக்கொண்டேன் என இருந்தால் நல்லது.
  2. பல்வேறு இடங்களில் பல்வேறு மூலிகைகளை ஒரே விதமான நோய்க்குப் பயன்படுத்துவது குழப்பத்தை தருகிறது.
  3. ஒவ்வொரு இடத்திலும் விலை வித்தியாசம் உள்ளது.
  4. நோய் பற்றிய விபரங்களைச் சேர்த்து வைப்பது இல்லை.
  5. விரைவில் நோய் குணமாவதில்லை.
  6. எல்லா இடங்களிலும்  மருத்துவமனைகள் இல்லை.
  7. உண்மையான மருத்துவர்களை அடையாளம் காண முடியவில்லை.
-          என்பன போன்றவற்றை குறையாகக் கூறினர்.
இதற்கு மருத்துவர் பகுதியில் இருந்து வந்த பதில்,
  1. இப்பொழுது பல்வேறு மருந்து நிறுவனங்கள் மருந்துகளைக் குப்பியில் அடைத்து விற்பனை செய்கின்றன. அவற்றைத் தான் நாங்கள் எழுதித் தருகிறோம்.
  2. இப்பொது ஒரே விதமான மருந்துகள் மஞ்சள் காமாலைக்குக் கூட 50க்கு மேற்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது வாங்கிப் பயன்படுத்துங்கள்.
  3. அரசு மருந்து செய் நிலையங்களில் இருந்து வரும் மருந்துகளை பயன்படுத்தலாம். விலை சரியாக இருக்கும்.
  4. நோய் பற்றிய விபரங்களை நாங்கள்லாம் முறையா சேர்த்து வைக்கிறோம் என்றனர் சிலர்.
  5. இது பற்றி விளக்கம் சொல்லவில்லை. ஏற்றுக் கொண்டதாகக் கருதலாம்.
  6. எல்லா கிராம மருத்துவ மனையிலும் சித்த மருத்துவர் வேண்டும் என்ற கருத்துக்கு கைதட்டல் தான் பதில்.
  7. உண்மையான மருத்துவர்னா கிரேடு 1 (பி.எஸ.எம்.எஸ் போன்ற படிப்பு முடித்தவர்) கரேடு 2 (70.களில் சிறிது காலம் கொடுத்த சில ஆர் எம்,பி கள்) இவர்கள் மட்டும் தான் சித்த மருத்துவர்கள் மற்றவர்கள் எல்லாம் பொலிகள். முன்பு பாரம்பரிய மருத்துவர்கள் எல்லாம் எழுதிவைத்ததை புத்தகமாக்கி விட்டார்கள். அதை பாடமாக்கி விட்டோம் இதற்கு மேல் அவர்கள் (பாரம்பரிய மருத்துவம்) தேவை இல்லை என விள்க்கமும் கொடுத்தனர்.
என்னுடைய புரிதலின் படி இவர்கள் சொல்வது அல்ல சித்த மருத்துவம்,
சித்த மருத்துவம் என்பது மிக எளிமையானது. எளிய மக்களுக்காக சான்றோர்களால் தொகுத்து, எளிமையாக்கிக் கொடுக்கப்பட்ட இறைஞானங்களை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை முறையே சித்த மருத்துவம்.

இது தனியுடைமை ஆக்க முடியாதது. வணிகர்களின் சார்பற்றது. நம் நாட்டு மக்கள் அனைவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாத வகையில் அவர்களது உணவோடும், உணர்வோடும் வாழ்க்கை நெறிகளோடும் பின்னிப் பிணைந்துள்ளது சித்த மருத்துவம்.
மனிதர்க்கு வரும் எந்த ஓர் நோயையும் நம் வீடுகளில் சமையலுக்குப் பயன்படும் பொருள் மற்றும் நமது வீட்டைச் சுற்றியுள்ள மூலிகைகளைப்  பயன்படுத்தியே முழுமையாகத் தீர்க்க இயலும் வகையில் ஆழ்ந்த, விரிந்த அறிவை உடையவர்கள் நம் நாட்டு மக்கள்.

நோயணுகாவிதிகளை தான் உள்ள சூழலுக்குத் தகுந்த்து போல் உருவாக்கி தனது வாரிசுகளுக்குப் பழக்கப் படுத்தியுள்ளார்கள் நம் மக்கள்.

பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பல்வேறு மூலிகைகளை, மருத்து செய் முறைகளைப் பயன் படுத்துவது நமது மக்களின் சிறப்பு அறிவியல் அனுபவ அறிவின் விரிவை அல்லவா குறிக்கிறது.
பல்லாயிரம் கோடி முதலீட்டில் மொத்தமாக தயாரிக்கும் மருந்துகள் வெளி வருவதற்க்கு முனபே அம் மருந்துகள் வியாபாரம் குறையால் காப்பதற்க்கான முறைகளையும், அந்த வியாபாரத்தால் வரும் புதிய நோய்களால் தமது வளத்தைப பெருக்கும் வழிகளைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் தற்கால அறிவியலாளர்கள உழைக்கிறார்கள் தவிர மக்கள் நலம் காக்க இல்லை என்பது சிறிது சிந்திப்பவர்களுக்கு கூட தெரிந்துவிடும்.

இந்த மனித நேயமற்ற வணிகர்களின் சரக்கை மக்கள் தலையில் கட்டுவதற்கான அனைத்து நுட்பங்களையும் கல்வியென கற்றுள்ள இந்த  ஆங்கில மருந்து வியாபார உதவிகள் (மருத்துவர்கள்!) தங்களது நடிப்பாலும், உத்திகளாலும் மக்களின் மருத்துவ அறிவை மழுங்கடிப்பதையே தங்கள் வியாபாரத்துக்கு அடிப்படை என மிக நன்றாக அறிந்துள்ளார்கள்.

இந்த வணிக உதவிகளை நம்பி தாங்கள் சிந்திப்பதை விட்ட மனிதரகளிடம் இருந்து எண்ணெய் குளியலில் ஆரம்பித்து இப்போது குளிப்பதையே கூட தடுத்துவிட்டனர். இவர்கள் வருமானத்திற்காக தம்மை நோயாளிகளாக்குவதை உணரா பேதைகள் இந்த படித்த மேதைகளின் வாக்கை வேத வாக்காக எண்ணி கெட்டழிந்தும் பின் இதனால் வரும் நோய்களுக்கும் இவர்களையே சரணடைகிறார்கள்.

உமிழ்நீரைத் தான் அமுதம் என்பர் சான்றோர். இந்த அமுதம் கலவாது வயிற்றுள் செல்லும் எதுவும் முறையாக சீரணமாகாது. தண்ணீருக்கும் உணவுக்கும் இது விதி எனும் போது மருந்துகளுக்கும் அது தானே விதி.
இதையறிந்த முன்னோர்கள் உடல் நலத்துக்கான மருந்துகளை தகுந்த அனுபானங்களில் (துணை மருந்துகளில்) கலந்து சுவைத்து உண்ணுத்ல் வேண்டுமென்றார்கள்.
எந்த மருந்தும் நேரடியாக நோயைத் தீர்க்காது மருந்துகள் நமது உடலின் தற்காப்பு ஆற்றலைத் தூண்டி விடுக்ன்றன அவ்வளவு தான் மருந்துகளின் தேவை. துணை மருந்துகள் உடலின் எந்தப் பகுதியில் ஆற்றல் தூண்டப்பட வேண்டும் என்பதை உடலுக்கு அறிவிக்கத்தான் பயன்படுகிறது. இது தெரியாத குமரி மைந்தர் ரொம்பத்தான் கோப்பட்டுக் கொள்கிறார். அவருக்கு கொஞ்சம் நல்ல எண்ணம் இருந்தாலும் சித்த மருத்துவத்தை முன்னேற்ற இவ்வளவு அவ சரம் கூடாது உடம்பு கெட்டுடும் ஐயா.

உடலில் ஏதாவது தொல்லை என்பது நமக்குள் தற்காப்பு ஆற்றல் நோய் சூழலை நீக்க இயங்க ஆரம்பித்து விட்டது என்பதற்க்கு அடையாளமே. ஆங்கில மருந்துகள் அனைத்தும் நமது உடலின் தற்காப்பு ஆற்றலை அழிப்பதன் மூலம் அத்தகைய துன்பங்களை நாம் அறியாமல் தடுக்கிறது. ஆதாவது நமது உடல் நோய்ச் சூழலில் இருந்து விடுபடுவதைத் தடுத்து (ஆங்கில மருந்து எனும் கொடிய விசத்தை தனிக்க) நமது மதிப்பதற்கரிய தற்காப்பு ஆற்றல் திசைதிருப்பி விடப் படுகிறது. அல்லது அழிக்கப்படுகின்றது.
இந்த விசத்தை நேரடியாக கொடுத்தால் உடல் ஏற்றுக் கொள்ளாது. எனவே தான் குப்பியில் கட்டி உள்ளே போடுகிறார்கள். நேரடியாக இரத்தத்தில் ஊசி வழியே திணிக்கிறார்கள்.

உடல் ஆற்றலுக்கு உதவும் சித்த மருந்துகளுக்கு இம் முறை (குப்பி, ஊசி) உதவாது.

இந்த விவாத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் சித்த மருந்துக் கம்பெனிகளுக்கு உதவிகளாகத் தான் நடந்து கொள்ளக் கற்றவர்கள். தங்கள் மரபுவழி மருத்துவ அறிவை மக்கள் பயன்படுத்தினால் வணிகம் பாதிக்கும் என அஞ்சுபவர்களாகத் தெரிகிறது.
மக்கள் பகுதியிலிருந்தவர்கள் கூறிய அனுபவ மருந்துகள் இவர்களை தூங்க விட்டிருக்காது, ‘இவ்வளவு விபரம் தெரிஞ்சிருக்கிறதால தான் மக்கள் நம்மட்ட இவங்க வரலை’ என புரிந்து கொண்டிருப்பார்கள்.

மக்கள் தமது மருத்துவ அறிவை மதித்து நமது மரபுவழி வாழ்க்கை நெறிகளைக் கைக் கொண்டால் தான், அவர்களுக்கு உதவும் சித்த மருத்துவர்களுக்கு வாழ்வு ஆங்கில மருந்து வணிகர்களின் உத்திகளைப் பயன்படுத்தினால் தாழ்வு தான் நிச்சயம்.

எந்த கம்பெனி மருந்து விலை குறைவு என தேடி திரிவதை விட்டு விடுங்கள்.
நாம் நமது மக்களின் மரபுவழி மருத்துவ அறிவைப் பெருக்கிக் கொள்வதும், உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள கூடியது என அறிந்து உடல் அடையாளம் காட்டும் தேவைகளுக்கு உதவுவதும். உடலின் தற்காப்பு ஆற்றலின் செயல்களைப் புரிந்து கொள்வதும். நோயணுகா விதிகளைப் பயில்வதும் செலவற்ற- நோயற்ற நல வாழ்வுக்கு வழி.

இதைவிட எளிய வழி படைப்பாற்றலை அதனருளால் உணர்ந்து இறைவழியில் நடப்பதே ஆகும்.

நேற்று தினமணியில் கை விரல் ரேகையை வைத்த உடன் நோயாளியின் மருந்தெடுத்த-தூன்ப வரலாற்றை-பணம் செலவழித்த பெருமையைக் காட்டும் மென்பொருள் தயாரித்துள்ளதாக செய்தி பார்த்தேன். மகிழ்ச்சி.

விருந்தும் மருந்தும் மூன்று நாள் என வந்தவர்கள் நாம். மாற்றம் தான் நிலையானது என்பது அறிவோம். நாடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, நோயாளி தனது துன்பங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவர்கள் துன்பத்திலிருந்து விடுவித்துவிடக் கூடிய - அவர் சொல்லி முடிக்கு முன் குணப்படுத்தக் கூடிய நுட்பங்களை இறைஞானங்களாக பெற்ற சித்தர்களுக்கு பஞ்சமில்லை இந்த நாட்டில் அறிவீர்களா? இறைவழியில் பல்லாயிரம் பேர்களுக்கு தொடர்ந்து வினாடிகளிகளில் சுகம் அளிக்க முடிந்தவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும் கொம்பன் யார்? இவர்களுக்கு டாக்குமன்டேசன் எதற்கு.

நம் மக்களிடம் ஓர் நம்பிக்கை உள்ளது. சித்த மருத்துவர்களெல்லாம் ஆரோகயமாக இருப்பார்கள் வாழ்க்கையை அமைதியாகவும் முழுமையாகவும் வாழ்வார்கள் என்றும் கூறுவார்கள். உண்மைதான் தான் சான்றோர்களிடம் கற்றுக் கொண்டதைத் தான் கடைப்பிடிப்பதால், சாகாக் கல்வியை கற்க முணைவதாலும் அவர்கள் தேடலில் கிடைத்த பலனைப் பொறுத்து அவர்கள் வாழ்வு அமைதியாக அறிகிறோம்.

எனது குருநாதர்களில் ஒருவரான புலவர் அப்துல் மஜீது 105 வயதுக்கு மேல் நல்ல உடல் மற்றும் மனநிலையில் இறையாற்றலுடன் ஒன்றி வாழ்ந்தவர். அவரது கடைசி நாட்களில் அவரைச் சந்தித்த போது (நான் அவரைச்சென்று பார்க்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே பேச முடியாத நிலையில் உள்ளதாக கூறினர்)

அவர் மரணப் படுக்கையில் இருக்கிறார் என்ற உணர்வு எனக்கோ அவருக்கோ இல்லை. அழகிய ஆரோக்யமான கண்கள் சிரிக்கும் கண்கள் சுற்றியிருப்பவர்கள் நான் இறந்து கொண்டிருப்பதாக நிணைக்கிறார்கள் நான் அடுத்த நிலை அடைந்துவிட்டேன் இவர்களுக்காக இப்படி ஓர் நடிப்பு என என்னுடன் பேசி சிரித்தது. அவரது உதட்டிலும் புன்னகை. நான் எப்பொழுதும் பார்த்திருந்த புலவரை விட மிக அழகாக உணர்ந்தேன். பக்கத்தில் அவர் துணைவியாரும், மகளும், என் உடன் வந்த நண்பர் முருகேசனும் அறியாத பல விசயங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.

நேரம் போனதே தெரியவில்லை. புலவர் மகன் கனடாவில் இருந்து வரவில்லை. அவன் வராத குறையை மருத்துவ வாரிசான நீ வந்தது நீக்கிவிட்டது அவர் இனி மகிழ்ச்சியாக பிரிந்து செல்வார் என்றார் அவரது துணைவியார். பிறகு அவர்களுக்காக புலவரை வாயால் பேச வைக்க விரும்பினேன்.

அவரிடம் ஐயா நீங்கள் மருத்துவ ஞானங்களை முழுமையாக அளித்தீர்கள் ஆனால் ஞான மார்க்கத்தில் எனக்கு நேரடியான பயிற்சிகள் கொடுத்ததில்லை. ஆனாலும் பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல் பல இறையனுபவங்களும் இறைவழி மருத்துவ ஞானமும் கிடைக்க பெற்றுள்ளேன்.
இந்த விசயத்தில் எனக்கு உங்கள் நேரடியான தீட்சை தேவை என்றேன். இறையருளால் எல்லாம் பெறுவாய். இறையனுபவங்களில் நிலைத்து நில் என்றார். பின் சில மருத்துவ குறிப்புகளும் தந்தார். அவரது கடைசிக் காலம் என்பதை மறந்து விடைபெற்று வந்தேன். பிறகு என்னிடம் பேசிய பின் முடிவு வரை ஏதும் பேசவில்லை என்றனர். அது முடிவல்ல அவர் இருத்தலின் புதிய பாய்ச்சலாக உணர்கிறேன்.

நேற்று ஹெல்த் டைம் பழைய இதழில் தினத்தந்தியில் வந்த சேதியைப் படித்த ஞாபகம் வருகிறது. ஒரு நெடிய ஆய்வின் படி சாதாரண மனிதர்களை விட ஆங்கில மருத்துவர்கள் பத்து ஆண்டுகள் முன்னதாக செத்து விடுகிறார்கள் என்பதே அந்த ஆய்வின் முடிவு. ஆதாவது ஆங்கில மருத்துவர்களின் சராசரி ஆயுள் காலம் சாதாரண மணிதர்களை விட பத்து ஆண்டுகள் குறைவாம். இது குறித்த தினதந்தி குறிப்பை விரைவில் தேடிச் சேர்க்கிறேன்.

சித்த மருத்துவ துறைகளில் தலைமைப் பொறுப்பில் உள்ள பலரின் கடைசிக் காலங்கள் ஆங்கில மருத்துகளின் பக்கவிளைவாலும், அறுவைகளாலும் கோரமானதாக அமைவதை பார்க்க முடிகிறது. தனது மருத்துவ அடிப்படைக்கும் ஆங்கில மருத்துவ அடிப்படைக்கும் கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள ஒற்றுமை தான் என உணராதவர்களாகவே சாகிறார்கள்.
இதை கேட்கும் போது ஒரு விசயம் ஞாபகம் வருகிறது. முன்பு நவீன விவசாயத்தை அறியாத மரபுவழி விவசாயிகள் இரசாயன உரத்தை தங்கள் நிலங்களில் பயன்படுத்துவதில்லை. அதிகாரிகள் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம் இவர்களை ஏமாற்றி வழிக்கு கொண்டுவர விவசாயிகளின் அனுமதி இல்லாமலே நமது படிப்பாளிகள் இரவு நேரத்தில் பயிரில் யூரியாவை தூவிவிட்டு வந்துவிடுவார்களாம் வந்து பார்க்கும் விவசாயிகள் பச்சை அதிகரித்துள்ளதால் இது நன்மையோ என எண்ணி இவர்களது வலையில் விழுந்து அழிந்து போன கதைகளை வேளாண்மை சித்தர் நம்மாழ்வார் கூறிக் கேட்டுள்ளேன்.

அது போலத்தான் மரபுவழி வாழ்க்கை முறைகளில் இருந்து நம் மக்களை தனது வியாபாரத்துக்குத் திருப்ப ஆங்கில மருத்துவமும் ஊர்த் தலைமைகளில் இருந்த கிராம மருத்துவர்களுக்கு ஆசை காட்டி போலி மதிப்பளித்து மயக்கி உங்களுக்கு இந்த அலோபதி மருத்துவத்தை சொல்லித்தாறோம் சில மருந்துகள் தருகிறோம் நீங்களும் ஊசி போடலாம் என ஆசைகாட்டி மோசம் செய்த்தன் வாயிலாகத் தான்  உள்ளே நுழைந்தது. பிறகு தான் வளர்ந்த பின் இவர்களைப் போலி மருத்துவர் என்றது. படித்த சித்த மருத்துவர்களை தனது தொழில் போட்டியால் போலி மருத்துவர் என கேவலப்படுத்திய ஆங்கில மருத்துவம் இப்போது தனது முகத்திரை நன்கு கிழிந்து சீர் செய்ய முடியாது போனதால் மீண்டும் தாங்கள் நன்மைக்காக வளர்த்த ஆங்கில உடல்தத்துவம் - பாடி அனாடமி படித்த சித்த-ஆயுர்வேத யுனானி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை கையாளலாம் என்று சட்டம் இயற்றியுள்ளது. இது எப்படிச் சரியாகும்?.

சித்தமருத்துவம் இவர்களிடம் இல்லை. அது மக்களிடம் உள்ளது. விழிப்படைந்த மனிதர்களிடம் உள்ளது. அது மீண்டும் உலக மனிதர்களுக்கு பயன் படும் காலம் வந்துவிட்டது.

நண்பர்களே நீங்கள் நேற்று முன்தினம் விஜய் தொலைக்காட்சியில் பார்த்தீர்களா உங்கள் புரிதல் என்ன? கூறுங்களேன்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

எனது கருத்தொத்தவர்கள் எழுதியது உங்களுக்காக

இயற்கையை மனிதன் எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுக்கிறான்,.
விவசாயி ஏன் இவ்வளவு ஏழையாயாக இருக்கிறான் தெரிகிறதா.விவசாயி மனிதர்கள் வாழும் வகைக்கு பாடுபடும் வரையில் அவன் திருவள்ளுவர் மதிக்கும் வண்ணம்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அஃதின்றது 
உழன்றும் உழவே தலை.
என்று மனிதனை வாழ்விக்கும் வண்ணம்  இருந்தவன் சுய நலத்துக்காக உரம் பூச்சி மருந்து கீழ்க்காணும்  ரசாயனங்கள் என உபயோகிக்க ,உபயோகிக்க,மனிதனை வாழ்விக்கும் விவசாயம் மனிதனை கொல்கின்றது.
எனில் விவசாயி வாழ்வானா.

இன்றைய(02-08-2010) தினமலரில் வந்துள்ள செய்தி இது





நன்றி தினமலர்

நீங்கள் சாப்பிடும் திராட்சையை கொத்தோடு பல முறை பூச்சி மருந்தில் முக்கி
எடுக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.

எனது நண்பர் ஒருவர் இந்த திராட்சைகளை கழுவாமல் சாப்பிட்டு,இந்த நஞ்சின் பாதிப்பிற்கு ஆளாகி,  அதன் விளைவாக நீர்த்தடுப்பு உண்டாகி(URINARY ARREST,ETC)  அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்காளாகி அதற்கான மருந்தினை உட்கொண்ட பின் இன்று வரை அதன் சிரமம் அறவே நீங்காது அவஸ்தையுற்று வருகிறார்.
உரக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வேப்பம் பிண்ணாக்குஇயற்கை உரங்கள். 

           மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா குறைந்த அளவிலேயே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

             இருப்பினும் குறைந்த அளவிலான ரசாயன உரங்களின் பயன்பாடேதற்போது நமது இயற்கை வேளாண் விஞ்ஞானிகளால் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஒருகாலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட டி.டி.டி.பி.எச்.சி. பூச்சிக்கொல்லி மருந்துகள்தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. காரணம்டி.டி.டி. மருந்தின் நச்சுக் கழிவுகள்தாய்ப்பாலில் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பல ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுகரைந்து போகாமல் தங்கி விடுவதேமோசமான விளைவுகளுக்குக் காரணம். எனவேதான் இயற்கை உரங்களைப் பயன்படுத்திஉடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காத தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.இயற்கை உரங்களின் பட்டியலில்நுண்ணுயிர் உரங்கள்மண்புழு உரங்கள்வேப்பம் பிண்ணாக்கு போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.

           இயற்கை உரங்களின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில்இயற்கை உரங்கள் என்ற பெயரில்பல போலிஉரங்கள் உலா வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.எள்ளுப் பிண்ணாக்குமணிலா பிண்ணாக்கு ஆகியவற்றில் வேப்பெண்ணெயைத் தெளித்துவேப்பம் பிண்ணாக்கு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.திரவ வடிவில் அசோஸ்பிபாஸ்போமிக்ஸ்பொட்டாஷ் ஆக்டிவாஜிங்க் ஆக்டிவேட்டர் போன்ற இயற்கை உரங்கள் கவர்ச்சிகரமான பொட்டலங்களில் உரக்கடைகளில் விற்பனைக்கு உள்ளன.

            பன்னாட்டு நிறுவனங்களும்உள்ளூரில் சிறிய அளவில் குடிசைத் தொழில்போல் பலரும் இந்த இயற்கை உரங்களைத் தயாரித்துபயிர் வளர்ச்சி உரங்கள்இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற பெயரில் விற்கிறார்கள். ஒரே இயற்கை உரம்பயிர்களுக்கு பல்வேறு சத்துகளை அளிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள்.இவற்றைத் தயாரிப்பதற்கான அனுமதியை பெறரூ.300 கட்டணம் செலுத்திவேளாண்மைப் பல்கைலக்கழகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே.ரசாயன உரங்களுக்குத் தரக் கட்டுப்பாடு உள்ளது. அதற்கான சட்டங்களும் உள்ளன. நுண்ணுயிர் உரங்களில் ஒரு கிராமில் ஒரு மில்லியன் நுண்ணுயிர்கள் இருக்க வேண்டும் என்று தரக் கட்டுப்பாடு உள்ளது. அதேபோல் மண்புழு உரங்கள்நகர கம்போஸ்டு உரங்களுக்கும் தரக் கட்டுப்பாடு உள்ளது. 

                    எனவே உரக் கட்டுப்பாடு அலுவலர்கள்அடிக்கடி உரக்கடைகளில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிதரம் குறைவாக இருந்தால் அத்தகைய உரங்களை தயாரித்தோர்விற்பனை செய்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.ஆனால் சந்தையில் விற்பனையாகும் ஏனைய இயற்கை உரங்களுக்கு எந்தத் தரக்கட்டுப்பாடும்அதற்கான சட்டங்களும் இல்லை என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். இதனால் விளம்பரங்களை நம்பி இந்த இயற்கை உரங்களை வாங்கிப் பயன்படுத்தினால் பாதிக்கப்படுவது விவசாயிதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குப்பையில் இருந்து  மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்து வரும் பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி இதுபற்றிக் கூறுகையில்,

            ""மாதம் முதல் டன்கள் வரை தயாரித்து விற்பனை செய்கிறோம். காய்கறிச் செடிகளுக்கும்நிறுவனங்களில் புல்வெளிகள் அமைப்போரும் இந்த உரத்தை விரும்பி வாங்குகிறார்கள். அதிக அளவில் பயன்படுத்த இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.ஆனால் இயற்கை உரங்கள் என்ற பெயரில் பல டானிக்குகள்பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. புதுவை மாநிலத்தில் இத்தைகைய இயற்கை உரங்களை அதிகம் தயாரிப்பதாக அண்மையில் என்னை சந்தித்துத் தெரிவித்தனர். ஆனால் அவற்றின் தரம் பற்றி யாருக்கும் தெரியாது'' என்றார்.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

                  ""இயற்கை உரங்களுக்கு தரக் கட்டுப்பாடு சட்டங்கள் கொண்டுவர வேண்டும். குறைந்தபட்சம் வேளாண் அலுவலர்களின் பரிந்துரைப்படி விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடாவது இருக்க வேண்டும்'' என்றார் அவர்.

இதில் பெரிய அவஸ்தையாக அமெரிக்காவின் மான்சாண்டோ அதன் தற்கொலை விதைகளை அறிமுகப்படுத்த இந்திய விவசாயிகளையும் (விவசாய கல்லூரி பேராசிரியர்களையும்) அவர்களுக்கு சாதகமாக பேசி செயல்பட விலைக்கு வாங்கி வருகிறது.ஒரு முறை விதைத்து விளைந்து வரும் ,விதைகளை மறுமுறை விதைத்தால் விளையாது.

அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தபோதும் ,இந்தியா அசரவில்லை,ஏனெனில் விவசாயம் நமது முதுகெலும்பாக இருந்த்தது.எனவெ இந்தியாவின் மீது மறை முகமாக இந்த மலட்டு விதைகளை  விவசாயிகள் மூலம் ,விதைக்க ஏவி வருகிறது.

ஏற்கெனவே மலடாகி வரும் மனிதனுக்கு மலட்டு விதைகள்.இதில் ஏதாவது
மனிதனின் உற்பத்திக்கு பங்கம் வருமா,பாதகம் வருமா.இந்த பிரச்னை நாட்டுப்
பிரச்சினை அல்ல.எனது வீட்டுப் பிரச்சினை.நாளை எனது மருமகனோ,மகனோ ஆண்மை உள்ளவனாக இருப்பானா.இது இந்த மாதிரி விதைகளையும்,பூச்சி மருந்துகளையும்,உரங்களையும் போட்டு பயிர் செய்யும்
விவசாயிக்கும் உள்ள பிரச்சினை.



இதனுடன் மகரந்த்தச் சேர்க்கை உறும் எந்த தாவரமும் மலடாகும்.இத்தகைய
சித்த வைத்தியத்திற்கு மூலாதாரமாக  உள்ள தாவரங்களைக் குறி வைத்து  ஏவி உள்ள இந்த தந்திரமான போரை சித்தர்களின் நோக்கில் மிக கடுமையாகப்
பார்க்கிறார்கள்.

இவ்வளவுக்கும் காரணமாக உள்ள விவசாயிகள் அப்பிராணிகளாக(INNOCENT)
என்னால் மட்டுமல்ல ,சித்தர்களாலும் கருத்தப்படாததாலும் ,அவர்கள் தங்கள் நிலையில் சுயநலமில்லாது சரியாக செயல்படாவிட்டால் அவர்கள் சந்ததி மட்டுமல்ல இந்தியாவில் யாருடைய சந்ததியுமே எதிர்காலத்தில் இருக்காது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சித்தர்கள் சும்மா இருப்பார்களா.அவர்கள் தூண்டுதலினால் அல்லவோ இந்தக்கட்டுரையே

நன்றி

சாமீ அழகப்பன்