வியாழன், 23 செப்டம்பர், 2010

இட்லி, தோசை உணவா சாவக்கேடா?

இட்லி-தோசை உணவா? இல்லை சாவக்கேடா?

நாம் சாப்பிட்ட உணவு சீரணமாக, உணவின் தன்மையைப் பொருத்து 3 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரத்துக்கும் மேலாக உடல்க் கருவிகள் உழைக்க வேண்டியுள்ளது. இதில் நமது அறிவுக்கான தேவை-முயற்சி எதேனும் உள்ளதா?

அனைத்து வேலைகளையும் உடல் தன்னியல்பாகச் செய்கிறது. நாம் செய்யும் – செய்ய வேண்டிய ஒரே வேலை உணவைச் சுவைத்துச் சாப்பிட வேண்டியது தான். இதை ஒழுங்காகச் செய்தால் உடல் மற்ற அனைத்துச் சீரன வேலைகளையும் சீராகச் செய்து முடித்து உடலுக்கு ஊட்டத்தைத் தருகிறது.

உணவின் தேவையையும், நீரின் தேவையையும் பசியாக, தாகமாக மென்மையாக நம் அறிவுக்கு நம் உடல் உணர்த்துகிறது. அதுபோல ஈற்றுணவுக் கழித்தலுக்காகவும், கழிவு நீர் வெளியேற்றத்துக்காகவும் ஆன உணர்வினையும் மிக மென்மையாக நம் அறிவுக்கு உடல் உணர்த்துகிறது.

மேலும் நாம் உண்ணும் உணவை நமக்கு-நமது உடலியற்கைக்குப் பொருந்தியதா? இல்லையா? என்பதையும் சுவையின் மூலம் நமது அறிவுக்குத் தெரிவிக்கிறது நம் உடல். 

உணவினை நன்கு மென்று, சுவையறிந்து சாப்பிடும் போது தான் உமிழ்நீர் சுரக்கும் இதையே சான்றோர் அமுதம் என்கின்றனர். இந்த அமுதம் கலந்து வயிற்றுனுள் சென்றால்த் தான் உணவும், நீரும் சீரணமாகும். அவ்வாறு இல்லையேல் நஞ்சாகும்.

இதையே,

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்க்கும
களிபேர் இரையான்கண் நோய்.

என்றார்கள் நம் முன்னோர்கள்.

சாப்பிடும் போது உணவு உமிழ்நீருடன் கலந்து எந்த துன்பமும் இல்லாமல் தொண்டையில் இறங்க வேண்டும். – ஈற்றுணவுக் கழிப்பின் போது கழிவுகள் நம் முயற்சியில்லாமல் வெளியேற வேண்டும். இதுவே மேற்கூறிய குறளின் வழி.

தற்போது ஆங்கில மருத்துவம் படித்த மருத்துவர்கள் ஒருவேளை உணவை 5 ஆகப் பிரித்து மணிக்கொருமுறை சாப்பிடக் கூறுகிறார்கள். அதைச் சிந்தித்துப் பார்ப்பதையே மறந்து போன மனிதர்கள்! வழிகெடுகிறார்கள்.

பெரியவர்கள் ‘ஒரு வேளை உண்பான் யோகி இருவேளை உண்பான் போகி என்பர் மூன்று வேளை உண்பவர்கள் உடலுக்கும், உயிருக்கும், பிறருக்கும் துரோகி என்பர் பல வேளை உணவெடுக்கும் இவர்களை எப்படி அழைப்பது?.

திருக்குறள் தன் மருந்து எனும் அதிகாரத்தில வரும் 6 பாடல்கள் உணவு உணபதைப் பற்றியதாகத்தான் உள்ளது. ‘வாயும், வயிறும் நன்றாயிருந்தால் நோயும், நொடியும் இல்லைஎன்பது படிக்காதவர் மொழி.

கடும் பசியில், களைப்புடன் உணவருந்துபவர்கள் இரண்டு வாய் உணவு சாப்பிட்டதுமே களைப்பு நீங்கி, உணவின் சுவையை பற்றிப் பேசுவது எவ்வாறு? மீண்டும் சத்தி பெற்று உழைக்கச் செல்வது எப்படி? உறுதியாக அப்பொது சப்பிட்ட உணவிலிருந்து சத்தியை பெற வாய்ப்பில்லை.

பசியோடு நன்கு சுவைத்துச் சாப்பிட்ட உணவு, உமிழ்நீரோடு கலந்து வயிற்றில் இறங்கும்போது- அதற்கு முன்பே நாக்கில் உள்ள சுவைச் சத்தியால் கணிக்கப்பட்டு, வயிற்றுக்கு வரும் உணவின் தரமும், அளவும், தன்மையும் மண்ணீரல் அறிகிறது உடன் வெவ்வேறு வகையான உணவினை சீரனிக்கத் தேவையான உடல்க் கருவிகள் அனைத்தையும தூண்டிச் சத்தியளிக்கிறது. இந்த சத்தியைப் பயன்படுத்தியே நாம் வேலைகளையும் செய்கிறோம்.

இந்த சீரணத்துக்கு அடிப்படையான வேலை. சுவைத்துச் சாப்பிடாதவர்களிடம் நடக்காது உமிழ்நீர் கலவாது வயிற்றினுள் செல்லும் உணவு நீண்ட நேரம் சீரணமாகாது. வயிற்றினுள் கிடப்பதால் புளிப்பேறி வயிற்றினுள் 2 நாள் மூடிவைத்த உணவு எப்படி மாறுமோ அப்படி ஆகி விடுகிறது. பலன் புளித்தேப்பம், வாயுத் தொல்லைகள்,வயிற்றில் கல்லைப் போட்டது போல துன்பம், நெஞ்சுக் கரிப்பு, ...

தலைப்புக்கு வருவோம். இட்லி, தோசை மிக மென்மையானது இது சுவைப்பதற்காக வாயில் காத்திருப்பதில்லை. அது பொதுவாகச் சேரும் கடும் கார, கடும் புளிப்புச் சட்னிகளுடன் கலந்து அல்லது சட்னி, சாம்பாரில் நனைந்து, உடன் வயிற்றில் இறங்கி விடுகிறது. அது போதுமான அளவு சுவைக்கப் படாததால் சீரனிக்கப் படுவதில்லை.

வயிற்றுனுள் நீண்ட நேரம் கிடக்கிறது. அங்கு மீண்டும் தன் நொதித்தல் வேலையைத் தொடர்கிறது. மாலையில் கரைத்து வைக்கும் மாவு மூடியைத் தள்ளிக்கொண்டு பொங்கி வருவது போல் நமக்குள்ளும் செய்கிறது, காலையில் உண்டது மாலை வரை உடல்க்கும் மனதுக்கும் மிகத் துன்பம் தருகிறது.

மருதமலை சித்தமருத்துவர் சுப்பிரமணியன். இட்லி, தோசை சாப்பிடுவோரை வயிற்றில் சாராயம் காய்ச்சுபவர் என அழைப்பார் உண்மைதான். தற்போது வேலையில் எளிமை கருதி, பல நாட்களுக்கான மாவை அரைத்துச் சவப் பெட்டியில்(பிரிஜ்) வைத்துவிடுகிறார்கள். அதைவிட புத்திசாலிகள் கடையில் விற்கும் 6 ரூபாய்ப் பொட்டலத்தை வாங்கித் தக்காளிச் சட்னி, கடைப் பொடியுடன் உணவைத் தள்ளுகிறார்கள். 

சில நாட்களில் மூன்று வேளையும் இட்லி, தோசை பொடியுடன், 2 நாட்களுக்கு முன் அரைத்து வைத்த சட்னியுடனும் பயன்படுத்தும் குடும்பங்களை பெருவாரியாகப் பார்க்கிறேன்.

15 ஆண்டுகளுக்கு முன் வரை இட்லி, தோசை விழாக் காலங்களில் செய்யும் உணவாக இருந்த்து. அதைப் பணக்காரர்கள் உணவு என்றும் கூறுவார்கள். சீரணக் கோளாறுகளை, நீரிழிவை (சர்கரைப் பிணியை) வாத நோய்களை பணக்கார நோயென்றே மக்கள் அழைப்பார்கள் கருத்தில் கொள்க.

இட்லி, தொசை இல்லாத அந்தக் காலத்திலேயே மாப்பண்டம் தவிர் என்றனர் பெரியோர். முன்பு நம்மிடம் இருந்தது தொட்டாலே கைமணக்கும் நம்முடைய அரிசி. இப்பொழுது நாம் பயன்படுத்துவது நஞ்சுள்ள, சொத்தையான, சக்கை அரிசி!?..

இந்த குப்பைக் கல்வியைப் படிக்கச் செல்லும் தன் பிள்ளைகளுக்கு, மதிய உணவாக இட்லி, தோசையைக் கொடுத்தனுப்பும் தாய், தந்தையர் மாலையில் அவர்கள் சரியாகச் சாப்பிடாமல் கொண்டுவரும் இட்லியை சிறிது சுவைத்துப் பார்த்தால் நல்லது. மாட்டேன், நான் அதை-மிஞ்சியதை அடுத்த நாள் உப்புமாவாக்கித் தான் தருவேன் என்றால்,, அது உங்கள் விருப்பம்.

நோயாளிகளை –நோய் சமூகத்தை உருவாக்க யாருக்கும் உரிமை இல்லை.     

புதன், 22 செப்டம்பர், 2010

எளிய உணவுத் தொகுப்பில் உள்ள நடைமுறையில் இல்லா வார்த்தைகளுக்கு விளக்கம்



M Maheswari

 to me
show details 1:44 PM (18 hours ago)
தங்களது சமையல் குறிப்பில், கீழ்கண்ட வார்த்தைகளுக்கு - பொருள் (சாதாரண பெயர்) வேண்டுகிறேன்




௧. பச்சை உருளங்கடலை        -
௨. சிறு மணகம் (ஏலக்காய் ?)  -
௩. பல்லனிப்பழம்
௪. சாற்றுக்கனி (எலுமிச்சங்கனி-யை தனியாக கொடுத்துள்ளீர்கள்)
௫. செங்கோழுப்பை
௬. கற்பழப்பருப்பு
௭. கொட்டைகரந்தை
௮. முட்டைகீரை ..


முடிந்தால் - கீரை , பூ மற்றும் thangaL குறிப்பில் உள்ள  நாட்டு மருந்துகளின் படங்களையும் தங்கள் வலைப்பதிவில்  போடவும்...


நலமுடன்
மகேஸ்வரி


பச்சை உருளங்கடலை        - பச்சைப் பட்டானி
 சிறு மணகம் (ஏலக்காய் ?)  -  ஏலக்காய்
 பல்லனிப்பழம் -மாதுளை
 சாற்றுக்கனி ) -சாத்துக்குடி
 செங்கோழுப்பை- பப்பாளி
 கற்பழப்பருப்பு- பாதாம் பருப்பு
 கொட்டைகரந்தை- கரந்தை வகையைச்சார்ந்த மூலிகை தெளிவான படமும், விளக்கமும் பின் விரிவாகத் தருகிறேன்.
 முட்டைகீரை - முட்டைக்கோசு
  இன்முள்ளங்கி- கேரட்
-இடுகைகளிலும் நடைமுறைச் சொற்களை அடைப்புக்குறிகளில் சேர்த்து விடுகறேன்.
மகேஸ்வரி தங்கள் கருத்துக்கள் அனைவருக்கும் நன்மை தரும். தொடருக.

      

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பெருக இவ் வையகம்

எனது அனுபவம் - உங்களது வலைபதிவிற்காக...
X
Inbox
X

Reply

M Maheswari

 to me
show details 5:26 PM (3 hours ago)
எனது அனுபவம் - உங்களது வலைபதிவிற்காக...

27th மார்ச் 2010 முதல்  ஏப்ரல் வரை விடுமுறை எடுத்திருந்தேன்...எனது இடது கை முறிவின் காரணமாக......
"......நாம் என்ன தவறு செய்தோம், ஏன் இந்த சோதனை , எத்தனை பேரை நம்ப வேண்டியிருக்கிறது, ஒரு சிறு வேலை கூட செய்ய முடியவில்லையே என்றெல்லாம் எண்ணி சோர்ந்து போனேன்....அப்பொழுது தான் அலுவலக தோழி (இந்த கை கட்டுடன் அலுவலக விருந்து ஒன்றில்) ஒருவர் கூறினார் : (அவருக்கும் இதே நிலை இருந்தது) - "ஏன் இப்படி இருக்கிறோம் என்று எண்ணாதே...எல்லாம் நன்மைக்கே என்று எண்ணிக்கொள். நன்றாக ஓய்வு எடு....நிறைய புத்தகங்கள் படி.....விட்டு போன வேலையை எல்லாம் முடிக்க கடவுள் கொடுத்த இடைவெளியாக நினைத்துக்கொள்...... "

அப்படி படிக்கும்பொழுது தான் மாலினி கொடுத்த "உங்கள் நலம் உங்கள் கையில்:" என்ற தேவேந்திர வோரவின் புத்தகத்தை படிக்க நேர்ந்தது....வெகு நாட்களாக ரத்னா எங்களை "Acupuncture " படிக்க எங்களை அழைத்ததும் நினைவுக்கு வர....இப்படி தான் பதஞ்சலி உடல் நல மையம் வந்து சேர்ந்தோம்....சிறு வயதில் எங்கள் வீட்டில் அண்ணி (17 ஆவது வயதில் திருமணம்) - தானும் மருத்துவராக விரும்பியதும் மனதில் ஓடியது. அது மட்டும் அல்ல, சமீப காலமாக அண்ணனும், அக்காவும் (சர்க்கரை மற்றும் குடல் புண்) -  "Acupuncture " - சிகிச்சை எடுத்து முன்னை விட (நோய் வாய் படும்போது இருந்ததை விட) நலமாக இருப்பதையும் கண்கூடாக கண்டவுடன், மேலும் நம்பிக்கை...........


ஜூன் 2010 -ல் "Diploma in Acupuncture " (Certificate Course by Planning Commission, Indian Government) - சேர்ந்தோம், நானும் கற்பகம் அண்ணியும்............15 நாள் விடுமுறையில் வந்த புவனாவும் இபடிப்பை முடித்து விட்டாள் ...

எனது அனுபவம்....,

இப்பயிற்சியில் சேரும் வரை -  கர்பப்பை நீர்கட்டிக்காக homeo மருந்துகள் எடுத்து வந்தேன்.....அந்த கட்டி எப்பொழுதாவது சிக்கலான நிலையில் இருக்கும்பொழுது, சில நேரங்களில் தாங்க முடியாத வலி வரும்.

ஒரு  நாள் வகுப்பிலேயே அந்த வலி வர , மருத்துவர் தமிழவேள் "Healing (இதன் தமிழ் வார்த்தை - "இறை வழி மருத்துவம் !!!)" கொடுத்து  ஐந்து நிமிடத்தில் அந்த வலியை நீக்கினார்...

பிறகு எனது  நாடி பார்த்து மருத்துவர் தமிழவேள் அவர்கள் கூறிய படி அவற்றை நிறுத்தினேன். எனது வலது கால் பெருவிரல் நகம் மிக கருத்திருந்தது... மற்றும் இடது கை பேரு விரல் நகத்திலும் லேசான கருப்பு கோடுகள். இது நீண்ட நாளாக அருந்திய மருந்தின் விளைவு எனவும், உடலில் நச்சு பொருள்களின் தேக்கத்தை குறிக்கிறது எனவும் கூறினார்.....எனவே இரு கால் பேரு விரல்களிலும் ஒரு சொட்டு விளக்கெண்ணை விட்டு வருமாறு கூறினார்....ஒன்றரை மாதத்தில் , புதியதாக வளரும் நகம் இந்த கருப்பு நிறமின்றி மற்ற நகத்தை போல வளர ஆரம்பித்தது.

ஒரு சில மன உபாதைகளால் 6 வருடத்திற்கு முன் வந்திருந்த மூலம் திரும்ப அதிகமாக வர ஆரம்பித்திருந்தது...ஒரு வகுப்பிற்கு முன்னர் மருத்துவர் ரத்னா - மூன்று இடங்களில்  (UB and kidney points) ஒரு பத்து நிமிடம் needle போட, இரண்டே நாளில் அதிலிருந்து நிவாரணம் பெற்றேன்.

பிறகு - இருவர் கூறிய படி - சிறு சிறு வாழ்க்கை முறை மாறுபாட்டால் - நிறைய தொந்தரவுகளில் இருந்து விடுதலை....நான் கடைபிடிப்பவை....
 I WANT TO BE THE CHANGE I WANT TO SEE........

  • தினமும்  இரு  முறை தலைக்கு குளித்தல்...(குளியல் என்றாலே தலைக்கு தான் - தமிழவேள் கருத்துப்படி ..) 
  • வாரம் ஒரு நாளாவது என்னை தேய்த்து - சீயக்காயுடன் குளிப்பது (எப்பொழுதுமே எனக்கு ஷாம்பூ பிடித்ததில்லை - அதை போட்டால் உடல் சூடாவது போன்ற உணர்ச்சி வரும்....இந்த வகுப்புகளுக்கு வர ஆரம்பித்த பிறகு தான் தமிழவேள் கூறினார் - ஷாம்பூ-வில் "bleaching powder - ல் போடும் சேமிகள் கலப்பதாக  - நல்ல வேளை இவ்வளவு நாள் என் முடி தப்பித்தது....
  • சோப்பை அறவே நீக்கி தமிழவேள் கூறிய பொடிஉபயோகிக்க ஆரம்பித்துவிட்டோம் (நான் , எனது கணவர், மற்றும் எனது பெண் - மகனை இன்னும் மாற்ற வேண்டும்... பச்சை பயிறு, வெட்டி வேர், விலாமிச்சை வேர், பூலங்கிழங்கு, கஸ்துரி மஞ்சள் இவை சேர்ந்தது......(இதற்கு முன்னர் சோப்பையும் பொடியும் மாற்றி மாற்றி உபயோகித்து வந்தோம்- இப்பொழுது பொடி மட்டும் )
  • தமிழவேள் கொடுத்த "வீட்டு மருத்துவர்களுக்கான  குறிப்பின் படி இப்பொழுது எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை " பருப்பு இட்லி, பச்சை பயிறு இட்லி, நேப்பரிசி இட்லி மற்றும் அவல் உணவுகள்..." இவற்றுடன் நாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சிறு தானிய உணவு வகைகள்  (கம்பு பொங்கல், கேழ்வரகு தோசை / அடை..) ....இந்த வாரம் விடுமுறையில் இருப்பதால், இட்லி-தோசை மாவே அரைக்காமல் - வாரம் முழுவதும் இட்லி தோசையை  தவிர்த்து பிற உணவு வகைகளின் பயன்பாடு.....பச்சை பயிறு இட்லி இப்பொழுது மகளுக்கு பிடித்து விட்டது.. ....பிடிக்காத மகனுக்கு அதை தோசை/ அடை போன்று செய்து அதன் மேல் "பனீர்" (பாலாடை கடி) வைத்ததும் பிடித்து விட்டது.....இந்த குறிப்புகளையும் எனது அலுவலகத்தில் பலருக்கும் கொடுத்துள்ளேன்.. (முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு)
  • அடுத்து, மருத்துவர் பாஸ்லூர்  ரஹ்மான் அவர்கள்  எழுதிய "மருந்தினால் வரும் நோய்கள்" புத்தகமும் எனது அலுவலகத்தில் இப்பொழுது மிகவும் பிரபலம். எனது புத்தகமே இன்னும் எனது கைக்கு வரவில்லை.
  • அண்ணி எடுத்து சென்ற புத்தகம் அவர்கள் மகளின் கல்லூரியில் சுற்றில் இருப்பதாக கூறினார்கள்......
  • எனது அலுவலகத்தில் இருந்து இது வரை இருவரின்  குடும்பம் இந்த இயல் / இறை வழி மருத்துவ முறையை நோக்கி திரும்பிஇருக்கிறது......இன்னும் பலரும் எனது அனுபவம் கேட்டு வர இருக்கின்றனர்....
  • வெகு நாள் கழித்து, மனம், வாக்கு செயல் ஒத்து செய்யும், முழு மனிதர்களின் பிடியில் நமது உடல் நலனை ஒப்படைத்த மகிழ்ச்சியில்... I WANT TO BE THE CHANGE I WANT TO SEE........

பின்னும் சிலரின் சந்தேகங்கள்../ கேள்விகள் ..எனது பதில்கள்....மருத்துவர் தமிழவேள் அவர்களையும் இதற்கு தகுந்த பதில்கள் அளிக்க விழைகிறேன்...

  1. நீங்கள் உண்மையிலேயே எங்கள் உடல் நலனில் அக்கறையுடன் சொல்லுகிறீர்களா.அல்லது இந்த Acupuncture " - சிகிச்சையை "propoganda " செய்கிறீர்களா..? ........எனது சமீப அனுபவத்தில் உணர்ந்த நல வழிகளையே எல்லோருக்கு சொல்கிறேன்....நான் எந்த ஒரு முறையையும்  propoganda - செய்யவில்லை... எந்த ஒரு முறைக்குள்ளும் மாட்டி கொள்ளகூடாது என்று நினைக்கிறேன்.......இயல்பான , இயற்கையான முறைகள் அது, சித்தா , homeo , acupuncture , acupressure , இறைவழி மருத்துவம், என எதுவாக இருந்தாலும், நமது உடல் நலனில் உண்மையான அக்கறையோடு செய்யப்பட்டால் அதை ஏற்றுகொள்ள நமது ஈகோ -வை (ego ) விட்டு , முற் சாயவை (prejudice ) விட்டு கொடுத்தாவது  முயல வேண்டும்..... உண்மையிலேயே நமது உடல் நலத்தில் அக்கறை கொண்டு, குறைந்த dosage -ல் மருந்துகள் அளிக்கும் பல ஆங்கில மருத்துவர்களையும் நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால் அச்சமயத்திலும், ஒருவருடைய auto immune system - தான் அந்நோய் விலக உதவியிருக்கும் என்று இப்பொழுது உணர்கிறேன். தமிழவேள் அடிக்கடி கூறுவது போல..."விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் கொண்டாட வேண்டும்., உண்மையான உடல் நலம் விழைய....
  2. blood test , blood pressure checking, diabetic test , புற்று நோயை கண்டு பிடித்தல், க்ஸ்-ரே போன்றவற்றால் தானே நோய்களை அறிய முடிகிறது......அவற்றை அலோபதி மருத்துவ முறை தானே கொடுக்கிறது.........உண்மை. போல தோன்றுகிறது.....இது போன்ற டெஸ்ட்-களை தப்பி தவறி எடுத்தாலும், சிகிச்சை எடுக்க மற்ற முறைகளுக்கு சென்று விடுங்கள்....ஆங்கில மருத்தவம், நோயை கண்டு பிடித்து சொல்வதாக மட்டுமே சொல்கிறது., ஆனால் நிச்சயமாக cure - இல்லை...control செய்வதாக கூறுவார்கள். அதனால் வரும் பின் விளைவுகளோ பல சமயங்களில்  நோயை விட மோசமானதாக இருக்கும்....உதாரணத்திற்கு சாதாரண சளி தொல்லைக்கு அவர்கள் கொடுக்கும் மருந்துகள் வயிற்று புன்னை  உண்டாகுகிறது........சளியை அதன் போக்கிலேயே வெளியேற விட்டு விட்டால் கண்டிப்பாக நீண்ட நாள்களுக்கு மீண்டும் சளி பிடிக்காது....  வேண்டுமெனில் சளியை வெளியேற்ற கை மருந்துகளை எடுத்துகொண்டால்  போதும்......இந்த டெஸ்ட்-களின் மூலமாக கண்டு பிடிப்பதாக சொல்வதும் மாயை தான்.....எனது கை முறிவிற்கு எடுத்த சிகிச்சை - க்ஸ்-ரே இல்லாமலேயே ஆரம்பித்தும், முடிந்தும் விட்டது....அலுவலக விடுப்பிற்காக எக்ஸ்-ரே எடுக்க போன இடத்தில ஆங்கில மருத்துவர் (ortho ) - nut -bolt - surgery   இல்லாமல் சரி செய்யவே முடியாது என்று சொன்னதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது....அவர் என்னை சென்னையிலிருந்து மும்பைக்கு விமானத்தில் அழைத்து செல்கிறாராம், நான் நடந்து தான் செல்வேன் என்று அடம் பிடிக்கிறேனாம்.... bone setter - அலெக்ஸ்- இடம் சொன்னதற்கு  - நடக்கும் பொது விழுந்தாள் அடி படாது, விமானத்தில் இருந்து விழுந்தாள் எலும்பு கூட மிஞ்சாது என்றார்.....இப்பொழுது நிறைய ஆங்கில எலும்பு  முறிவு மருத்துவர்களே அவரிடம் பல பேரை அனுப்புவதாகவும் கூறினார..  அப்பொழுதான் செங்கல்பட்டு அலுவலகத்திற்கு  ரயிலில் சென்ற பொது சில ஆங்கில மருத்துவர்களின் நட்பில் , அவர்களே  homeo மருந்துகள்  எடுப்பது தெரிய வந்தது...போங்கப்பா உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம்.....அதுவும் அவர்களின் நான்காவது வருட படிப்பில் "Pathology " என்னும் படிப்பில் எல்லா மருந்துகளின் பின் விளைவுகளை படித்த பின் மருந்துகளின் மேல் வெறுப்பு வருவதாக கூறுவார்கள்.........மருத்துவர் பாஸ்லூர்  ரஹ்மான் சொல்வது போல ஆங்கில மருத்துவம் நோய்க்கு பெயர் மட்டும் தான் வைக்கிறது, தீர்வு கொடுப்பதில்லை....கழுத்து வலியை "spondilitis " என்கிறது,  ஆனால் மற்ற மருத்துவ முறைகள் நோயின் ஆரம்பத்தை கண்டு பிடித்து உண்மையில் தீர்த்து வைக்க உதவுகிறது....

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

தேனில் நஞ்சிட்டவர்கள் யார்?

மனிதர்களுக்கு இயற்கை தந்த அருமருந்து தேன். நலம் நாடுவோரும், நலம் வேண்டுவோரும் உணவாய் மருந்தாய்க் கொள்வது தேன்.


சித்த மருத்துவர்கள் தம் மருந்துகளை விரைவில் உடலில் சேர்க்கத் தேனைப் பயன்படுத்துவர்.


தேனிலும் தங்கள் விசத்தைக் கலந்துவிட்டனர். ஆன்டிபயாடிக் எனும் உயிர்க்கொல்லி இரசாயனங்களைக் கலந்த்தால் பெரிய வணிக நிறுவனங்கள் தயாரித்து விற்கும் தேனில் நஞ்சுள்ளது என்பதை நேற்றைய சன் செய்திகளில் கேட்ட போது மிக அதிர்ச்சியாக இருந்த்து.


 தொடர்ந்து உயிர்க் கொல்லி கலந்த தேனை சாப்பிட்டவர்க்கு புற்று நோய் போன்ற கடுமையான பெரிய நோய்களுக்கு ஆளாவார்கள் இது செய்தி. சரி உயிர்க் கொல்லியையே (ஆன்டிபயாடிக்)  மருந்தாக தொடர்ந்து சாப்பிடும் மடையர்களுக்கு (அவர்கள் குழந்தைகளுக்கு)  என்ன வரும்?.


பணவெறி பிடித்த வணிகர்கள் கலப்படம் செய்கிறார்கள் என்பது சீரனித்துப் போன செய்தி. ஆனால் தேனிலும் குழந்தை உணவுகளிலும் (பிஸ்கட், சத்துமாவுகள், தின்பன்டங்களில்,உணவில்,குடிக்கும் தண்ணீரில்)  உயிர்க்கொல்லிகளை கலப்பவர்களை என்ன சொல்வது???...


இந்த கொலைத் தன்மையுள்ள ஆங்கில மருத்துவத்தை-ஆங்கில அறிவை இன்னும் புரிந்து கொள்ளாத மனிதர்களை எப்படி அழைப்பது? 

வியாழன், 16 செப்டம்பர், 2010

குளியல் நல்லது

குளியல் நல்லது.

வாழ்வா? வசதியா? தொடர்கிறது.

நம் குழந்தைகளுக்கு தறபோதய நவீன உலகில் கிடைக்காதது - நம் பனத்தால் வாங்கித்தர இயலாதது மிக சில தான்.அவற்றுள் சில; அவர்களின் உடல் நலம், மன நலம், அவர்களின் தாத்தாகளும், தந்தைகளும் அனுபவித்த இளம் பருவ சுதந்திரம் போன்றவை தான்.

நடைமுறையில் எவ்வளவுக்கெவ்வளவு நாம் வசதி படைத்தவர்களாய் இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மேற்ண்ட தேவைகள் நமது குழந்தைகளுக்கு அன்னியமாகிப் போகிறது.

நமது பிள்ளைகளுக்கு நல்ல தூக்கம், கழிவுகளை வெளியேற்றல், குளியல், சுவைத்துச் சாப்பிடுதல், பிற குழந்தைகளுடன் விளையாடுதல், இயற்கையை சுவைத்தல் (இரவு வானத்தை நட்சத்திரத்தை பார்ப்பது போன்ற) போன்ற தேவைகள் மிக ஆடம்பரமாக, நினைத்துப் பார்ப்பதே சுமை என்றாகிப் போனது. சிலருக்கு! (உடல் நலம் பேணும்! பெற்றோரைப் பெற்ற குழந்தைக்கு) எல்லாம் கடமைக்கு நேரத்துக்கு செய்ய வேண்டிய கட்டாயமாகிப் போனது.

மரபுவழி சித்த மருத்துவர் எனும் என் அனுபவத்தில்.

பரமக்குடியில், என் பையன் எவ்வளவு நேரம் படித்தாலும் நல்ல மதிப்பெண் வாங்குவதில்லை. அவன் அப்பா கடுமையாய் அடிக்கிறார், எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, உதவ முடியுமா? என 13 வயது பையனை அழைத்து வந்தார் அவனது தாய்.
பையனை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். கால்களின் பெருவிரல் நகங்கள் கடுமையாய் சிதைந்து போய் இருத்து அவற்றை சுற்றிலும் உள்ள தோல் அழுகிப்போய் இருந்த்து. அடுத்த விரல் நகமும் பாதிக்கப் பட்டிருந்த்து. கைவிரல் நகங்களும் கருத்துப்போய் மேடுபள்ளமாக அதனடிப்பகுதித் தோல் புண்ணாகி இருந்த்து. மேலும் நாடி ஆய்வுக்குப் பின் கேட்டேன்,  இவன் உடல் முழுமையும் கடும் எரிச்சலும், வலியும் இருக்கிறது மேலும் வாயும் உணவுப்பாதையும்,  வயிறும் புண்ணாகிப் போயுள்ளது நீங்கள் கொடுத்த எதிர்முறைய மருந்துகள் தான் காரணம் என்றேன்.

அவன் தாய் அதன் பின்தான் அவன் பழக்கங்களை பொருத்திப் பார்த்துவிட்டுக் கூறினார், ஆமாம் டாக்டர் அவன் அதிக நேரம் குளியலறையில் தான் கிடப்பான். பள்ளிவிட்டு வந்தவுடன் பையைத் தூக்கிப் போட்டுவிட்டு நீர்க் குழாய்க்கடியில் உட்கார்ந்து விடுவான். சிறு வயதிலிருந்தே எங்கள் வீட்டிலும் பிறர் வீடுகளிலும் உள்ள மாத்திரை மருந்துகளை எடுத்துத் தின்றுவிடுவான் இதற்காகவே புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளுவான் என்றார்.

அவன் உடல் நிலையை நீண்டகாலமாக அவன் வீட்டுப் பெரியவர்கள் அறியாது இருந்துள்ளனர். தங்களின் கனவுகளின் சுமையை இந்த குழந்தையின் தலையில் எற்றியுள்ளனர். தங்களுக்குத் தெரியாத-தங்களின் சக்திக்கு மீறிய ஆங்கில வழிக் கல்வி - தாங்கள் இழந்த்தைத் தங்கள் குழந்தை மூலம் ஈடு செய்கிறார்களாம். அதிக சத்துணவு, மூளையை வளர்க்கும் சத்து மாத்திரைகள், விடுமுறை எடுக்காது பள்ளி செல்ல சுர மாத்திரைகள், வலி மாத்திரைகள், சிறப்புத் தனிப்பயிற்சி வகுப்புகள்; இன்று இவை எல்லாமும் சேர்ந்து அந்தச் சிறுவனின் உடலை நாசமாக்கி உள்ளன.
இப்போதய நிலையில் இவனால் உறுதியாகப் படிக்க முடியாது எனவே ஒரு ஆண்டு ஓய்வெடுத்து உடலை சரிசெய்த பின் சுமையைக் குறைத்து (ஆங்கில வழியிலிருந்து தமிழ்வழிக்கு (தாய் மொழிக்கு), எளிய பள்ளிக்கு மாற்றக் கூறினேன்) மாற்றிப் படிக்க வைக்கும்படி கூறினேன்.

சென்னையில், வங்கி அதிகாரி ஒருவர் தன் மூன்று குழந்தைகளை அழைத்து வந்தார். மூத்தவள் பொறியியல் மூன்றாம் ஆண்டு, இரண்டாவது பையன் உடல் நிலை காரணமாக கல்லூரி படிப்பை நிறுத்தியிருந்தான். இளைய பெண் மேல்நிலை முதலாம் ஆண்டு.
மூவரின் உடல்நிலையும் மிக பாதிக்கப்பட்டிருந்த்து. பார்வைக் குறைவு, கடும் உடல்வலி, கடும் மாதவிடாய் கோளாறுகள், தலைவலி, தலைநீரேற்றம், கண்வலி-எரிச்சல், மனஅமைதியின்மை, சளி, இருமல், உடல் கருத்துப் போதல், பொடுகு, முடிஉதிர்தல், மலச்சிக்கல், மூலம், உடல் அரிப்பு, புண்கள், வயிற்றுவலி, நாளெல்லாம் தூக்க கலக்கம் இது போன்ற நிலை. இவர்கள் தாயின் நிலையும் இது தான்.

நோய்க்கான காரணங்களை ஆய்ந்த போது, சரியாகத் தூங்குவதில்லை (இரவு நீண்ட நேரம் விழித்துப் படித்தல் 12-1 மணி வரை), தினமும் தலைக்கு குளிக்காத்து (7-10 நாளுக்கு ஒரு முறை குளிப்பது), கழிவுகளை வெளியேற்றுவதில் முறையின்மை (2-3 நாட்களுக்கொரு முறை), உணவை சுவைத்து சாப்பிடாமை, போன்ற அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்த்தே நோய்க்கான அடிப்படைக் காரணம் என்று அறிய முடிந்த்து. இவர்கள் தாய்க்கு; யாரும் உதவுவதில்லை, அன்பாகப் பேசுவதில்லை, வேலை பளு தாள முடியவில்லை, சரியான தூக்கம் இல்லை இதனால் கடும் சோர்வு, படபடப்பு, நடுக்கம், தலைவலி, மூட்டுவலிகள், உடல் எரிச்சல் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே தூங்கிவிட்டார்.

இவர்கள் தொல்லைகள் தீர வேண்டுமானால், இரவு மணி 9 முதல் அதிகாலை 3 மணி வரை கண்டிப்பாக ஓயவெடுக்க-தூங்க வேண்டும். காலை 6 மணிக்குள் பச்சைத் தண்ணீரில் நன்கு தலைக்கு குளிக்க வேண்டும். சூடாக்காத- மண் பானைத் தண்ணீரைத் தாகம் அறிந்து குடிக்க வேண்டும். மூண்று வேளையும் உணவுக்கு முன் நன்கு பழுத்த இனிப்பான பழங்கள் சாப்பிட வேண்டும். உயிராற்றலுக்கு எதிரான எதிர்முறைய (அலோபதி) மருந்துகளை உடன் நிறுத்த வேண்டும், இரவு 8 மணிக்கு மேல் கண்களுக்கு வேலை தரக் கூடாது (படிக்க, தொலைக்காட்சி-கணினி பார்க்கக் கூடாது).

எனது எளிய சொதனை முறைகளால், நான் அவர்கள் உடல நிலையை கணித்துக் கூறியதும், பின் இறைவழி மருத்துவத்தால் உடனடியாக அவர்கள் உடல் மனத் தொல்லைகள் குறைந்து புத்துணர்வைப் பெற்றதாலும், தூரத்திலிருந்தும் கூட இறைவழி மருத்துவ உதவி பெற முடியும் எனும் புரிதலாலும் தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ள ஒப்புக்கொண்டனர்.

இதுவரை அவர்களது நடைமுறை வாழக்கை;

காலை 6 மணியை ஒட்டி எழுவது உடன் அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டே தேனீர், உடலைக் கழுவிவிட்டு, அம்மா எரிச்சலுடன் தலை பின்னும் போதே வயிற்றில் அல்லது சிறிய டப்பாவில் கிடைத்த்தை நிரப்பிக்கொண்டு 6.45க்கு வரும் கல்லூரி வாகனத்தைப் பிடிக்க ஓட்டம்.
பின் மீண்டும் இரவு 7மணிக்கு மேல் வீடு (டியூசன், சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு) உடலைக் கழுவிவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்து எதையாவது கொறிப்பது. பின் எழுத்து வேலை (வீட்டுப்பாடம் அல்லது ரெக்கார்டு ஒர்க்). பின் 11 மணிக்கு இரவு உணவு பின் மீண்டும் ஆசிரியர் கொடுத்த எழுத்து வேலையை பொருத்து 1 அல்லது 2 மணிக்கு மேல்த் தான் தூக்கம். இரவில் படிக்காதீர்கள், காலையில் படிக்கலாம் என்று சொன்னால் நாங்கள் எங்கே படிக்கிறோம் எழுத்து வேலைக்கே நேரம் போதவில்லை என்று கூறி வருந்துகிறார்கள்.

இது பொதுவாக மாணவர்களின் அன்றாட வாழ்க்கை

குறிப்பாக 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுடைய நிலை மிகப் பரிதாபம். அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகளும் உண்டு. விடுமுறை என்பதே கிடையாது இவர்களுக்கு.
இந்த மரண வேதனைகளுடன் - கல்லூரிக் கணவுகளுடன் பள்ளிப் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறுபவர்கள், அதிக பணம் கொடுத்துச் சிறப்பு பாடப் பிரிவுகளில் சேர்ந்தால அவர்களின் நிலை சொல்லி மாளாது. நீங்களே சிறிது கவணித்துப் பாருங்கள் கல்லீரல் கெட்டுப் போன உங்கள் பிள்ளைகளை.

இந்த நரக வேதனையை பணத்துக்காக - தன் குடும்பத்துக்காக தியாகமென்று அனுபவித்தவர்கள் எவரும் பிற மனிதர்களை நேசிப்பவராகவோ, தன் குடும்பத்தை நேசிப்பவராகவோ, ஏன் தன்னை நேசிப்பவராகவோ இருக்கவே முடியாது. பணத்தை மட்டும் நேசிப்பவராக மட்டும் தான் உருவாகமுடியும். இதற்கு உதாரணம். நம் நாட்டு அதிகார வர்க்கமும், அறிவியலாளர்களும் தான்.

குளியல் என்பதே தலைக்குக் குளிப்பது தான். முதலில் தலையை நனைத்த பின்தான் உடலை நனைக்க வேண்டும். காரணம் உடலில் முதலில் நீர் ஊற்றினால் உடல் வெப்பம் வேகமாகத் தலைக்கேறுவதால் பாதிப்புண்டாகும். குளத்தில் குளிக்கும் பெரியவர்களை கவணித்துப் பார்த்தவர்கள் –குளிப்பவர்கள் ஓரளவு ஆழத்துக்குச் சென்று குனிந்து தலையை அலசிய பின் தான் முழுவதும் மூழ்கிக் குளிப்பார்கள் அப்போது முதுகின் வெப்பத்தை உணர்ந்து பார்த்தவர்கள் அறிவர். தலையில் உள்ள மிக முக்கிய உடல் கருவிகளைத் திடீரென ஏற்படும் உடல் வெப்ப மாற்றத்திலிருந்து காக்க வேண்டியுள்ளது. தலைக்கு தண்ணீர் விடாது. குளித்தால் தலை வெப்பம் குறையாது மேலும் அதிகரிக்கவே சேய்யும். வாரம் முழுவதும் இவ்வாறு செய்துவிட்டு வாரம் ஒரு முறையோ 10 நாட்களுக்கு ஒரு தடவையோ அல்லது வாரத்துக்கு இருமுறையோ குளித்தால் என்னவாகும்? உடல் உள்ளுறுப்புகள் எல்லாம் வெந்து நாறிப்போகும். இதை மறைக்க எத்தனை முயற்சி எடுக்கிறார்களோ அந்தளவு கெடுதி அதிகமாகும! உடல் வியர்வைத் துளைகளை அடைக்கும் சோப்பும், உடல் சூட்டை அதிகரித்து முதுகெலும்பைப் பலவீனமாக்கும்  ஷாம்பு (பிளீச்சிங் பவுடர்களும்), தோலில் வறட்சியை உண்டாக்கும் இரசாயனம் கலந்த சியக்காயும் மேலும் சூட்டை (நோய்களை) அதிகரிக்கும்.

இதனால் தலையில் நீர் அதிகம் உருவாகி தலை நீரேற்றத்தால் தலைவலி, தும்மல், வறட்டு இருமல் போன்றவை உருவாகும் உடன் அதற்கு எதிர்முறைய மருத்துவரிடத்தில் போனால், அவர் சொல்லும் பத்தியம்-10 அல்லது 15 நாளைக்கு ஒரு முறை தான் குளிக்கனும், உடலில் குளிர்ந்த தண்ணீர் படவே கூடாது, சுடுதண்ணீரில் தான் குளிக்கனும் சுடுதண்ணீர் தான் குடிக்கனும், வேண்டுமானால் வாரம் ஒரு முறை துணியைத் சுடுதண்ணீரில் நனைத்து துடைத்துக் கொள்ளுங்கள்.

குளிர்சியான உணவைத் தொடவே கூடாது, பழங்களை உண்ணக் கூடாது, ஆட்டிறைச்சி கூடாது, பிராய்லர் கோழி சாப்பிடலாம் என்று கூறி மளிகைக் கடைச் சிட்டையளவு, வலி நீக்கிகளையும் ஒவ்வாமைக்கான உயிராற்றலை அழிக்கும் மருந்துகளையும் எழுதித் தந்து, முக்கு வளைந்திருக்கிறது எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் அறுவை தேவை என்பர்.அவர்கள் சொல்வதைக்கேட்டவர்கள் கதி அதோகதி தான்.

எனது மருத்துவமனை மாடியில் வேதாத்திரியின் அறிவுத் திருக்கோவில் உள்ளது. அவர்கள் ஆன்மீக கல்விக்கு தற்போது பட்டயம், பட்டம் எல்லாம் தருகின்றனர். அந்த வகுப்புக்கு வந்த இளம் பெண் முன்னதாக வந்த்தால் காத்திருந்தாள்.

அவளாக தன் மனக்குறைகளை கூற ஆரம்பித்தார். தான் ஆன்மீக கல்வி பட்டய வகுப்பில் சேர்ந்து இருப்பதாக கூறியவள் மேலும், எளிதாயிருக்கும் என்று சேர்ந்தேன் அங்கிள், ஆனா வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியலை நானும் 4 நாளா படிக்கிறேன் 3 பக்கத்தைவிட்டு மேலே போகமுடியவில்லை என்றாள்.

நான் எனது தொழில் பழக்கத்தால் அவளைக் கவணித்தேன். நீண்டகாலமாகவே அவளது மண்ணீரல், கல்லீரல், வயிறு பொன்ற முக்கிய உறுப்புகள் அனைத்தும் பலவீனமாக உள்ளதை அறிய முடிந்தது. அதன் விளைவாக பல ஆண்டுகளாக அதிக வியர்வை உடல் எரிச்சல், தசை, நரம்பு பலவீனம், கடும் சோர்வு, கழுத்துப் பிடிப்பு, தோள் மற்றும் கை மூட்டுகளில் வலி, மூச்சிறைப்பு, தலைநீரேற்றம், தலைவலி, மலச்சிக்கல், மூலம் போன்ற பல தொல்லைகளால் ஏற்பட்ட மன உழைச்சல் ஆகியவற்றால் துன்பம் அடைகிறாள் என்பதை முதல் பார்வையிலேயே உணர முடிந்த்து.

பல ஆண்டுகளாக பல எதிர்முறைய மருத்துவர்களால் சோதனைகள், மருந்து மாத்திரைகள் என அலைக்கழிக்கப்பட்டு கடைசியில் மன நோயாளி என முடிவு செய்துவட்டார்களே என்ற வருத்தம் அவள் பேச்சில் தொனித்த்து.

அன்றாட உணவு மற்றும் பழக்கங்களைக் கேட்டேன். அவளது எதிர்முறைய சிறப்பு நரம்பியல் நிபுனருடைய ஆலோசனைப்படி 15 நாளைக்கு ஒரு முறை தான் சுடுநீரில் குளிப்பதாக்க் கூறினாள். பழங்கள் எதையும் சாப்பிடக் கூடாதென கூறியுள்ளதாகவும், குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து வருவதையும் கூறினாள்.

மேலும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அஞ்சல் வழியில் இளம் கலைப் பட்டம் படிப்பதாகவும், இடையில் இந்த பட்டயப் படிப்பும் படிக்கிறாள். வேலைக்கு பேருந்தில் போகும் போதுதான் படிக்க நேரம் கிடைக்கிறது என்றும் கூறினாள். அவளிடம் தன் உடல் குணமாக வேண்டும் எனும் விருப்பம்-நம்பிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது காரணம் அவளுக்குத் தெரிந்த – பார்த்த ஆங்கில மருத்துவம் தான். சுகமாக-நலமாக முடியும் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

ஆங்கில மருத்துவர்கள் வார்த்தைகளையும், மருந்துகளையும், அவர்கள் சோதனை முறைகளையும் புறம்தள்ளிவிட்டு நமக்கு நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினால் சில நாட்களிலேயே உன்னால் முழுமையான நலம் பெறமுடியும் என்று கூறினேன்.
அதற்கு உடனடி அடையாளமாகவும், நம்பிக்கை உண்டாக்கவும் சில வினாடிகளுக்குள் உங்கள் உடல் தற்காப்பு சத்தியை இறைவழி மருத்துவத்தால் சீராக்கி உடன் உடல்வலிகளை நீக்கி, மனதுக்குப் புத்துணர்வு  உண்டாக்குகிறேன் என்றேன்.

அந்த நேரத்தில் அவளது ஆசிரியர் வந்தார். அவரும் எனது நெருங்கிய நண்பரே. என்ன நண்பரே உங்கள் மாணவி இவ்வளவு மோசமான உடல் நிலையில் இருக்கிறாள் நீங்களும் உடல்நலம் குறித்து அறிந்தவர்தானே, அவளுக்கு புத்திமதி சொல்லக்கூடாதா? என்று கேட்டேன் ஆங்கில மருத்துவர்கள் 15 நாளைக்கு ஒருமுறை சுடுநீரில் தான் குளிக்க வேண்டும் என்று கூறியதையும், அதை அவள் பின்பற்றியதால் அவளுக்கு வந்த உடல், மனத் தொல்லைகளையும் கூறினேன்.

அதற்கு அவர் இது என்னுடைய வேலை இல்லை என்றார். நீங்களே சொல்லவில்லை என்றால் யார் இவளுக்கு சொல்வார்கள் என்று கேட்டேன் ‘எல்லாம் இறைவன் பார்த்துக கொள்வான் என்றார். அப்போது அவரிடம் கோபம் கொண்டாலும் புரிந்து கொண்டேன் உண்மையைச் சொன்னால் அவர்களது பெருமையும், பிழைப்பும் நிலைக்காது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்ணிடம் அந்த நண்பர் உபதேசித்துக் ‘கொண்டிருந்தார் மூலாதாரத்தில் இருக்கும் குன்டலினியை தட்டி எழுப்பி முதுகுத்தண்டு வழியே மேலேற்றி புருவ மையத்தில் அமர்த்த வேண்டும் என்று.

வித்தாற்றலே அற்றுப் போன வெட்டை மனிதர்களால் ஆன்மீக கூடாரங்கள் நிறைந்துள்ளதை பல்வேறு நிலைகளிலும் பார்க்கமுடிகிறது. இவர்கள் தங்களிடம் இல்லாத வித்தாற்றலை மேலேற்றுவது எப்படியோ?

உண்மையில் ஆன்மீகமானது உடல்நலமும், மனநலமும் உள்ள விழிப்புணர்வும், விடுதலை வேட்கையும் கொண்ட மனிதர்களுக்கானதே. தன் வீட்டாருடனும், தனது இயற்கையுடனும் இயைந்து வாழத் தெரியாத அனாதைகளுக்கானது அல்ல. 

சித்தர் வழியில்

சித்தர் வழியில்...

        வீட்டு மருத்துவர்

சித்தர் வழியில் தமிழ் என்பது மொழி, இனம், நாடு மட்டுமல்ல, அது கலை, பண்பாடு, நாகரீகம். உணவு, உடை, வாழ்வியல், உறவு, உணர்வு, உயிர்ப்பு, மனம், மெய், மருந்து, அறிவு, ஆற்றல்,ஆளுமை என எல்லாமுமானது

மாந்தர்களுக்கு, சித்தர்கள் அருளிய, தமிழர் மரபு வழி வாழ்வு இந்த உலகத்தை அழிவிலிருந்து காக்க வல்லது. சித்தர்கள தம் அரிய படைப்பை காக்கும் பொறுப்பை வீட்டு மருத்துவர்களாம் பெண்கள் கையில் அளித்துள்ளார்கள.

 இன்று வரை, இந்த ஆணாதிக்க வணிக அறிவியலின் அழிவு தரும் கொடும் வாழ்க்கை முறைகளில்  இருந்து நம்மை மறைமுகமாக காத்து வருபவர்களும் நமது வீட்டு மருத்துவர்களாம் பெண்களே.

ஆணாதிக்க வனிக அறிவியலின் கொடுமையான வாழ்க்கை முறையால் அனாதைகளான இன்றைய பாட்டிகளிடம் நல்லறிவுப் புதையல் உள்ளது. நாம் நமது வீட்டு மருத்துவர்களின் சிறப்பை உணர்ந்து, மதிப்பளித்து அவர்களுடன் இணைந்து, நம்மரபை மீட்டெடுக்க வேண்டிய கடமை  அனைத்து மாந்தர்களுக்கும் உள்ளது. மறந்தால், பயனில்லா கிழம் என்று நம்மை கூப்பிட நமது பேரக்குழந்தைகள் இருக்க மாட்டார்கள்..

நம் மரபு வழி வாழும் முறைகளை கற்று, வாழ்ந்து, பகிர்ந்து நலம் பெறுவோம்.

வீட்டு மருத்துவர்க்காக மரபுவழி நலவாழ்வு மையம்