வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

நலம் தரும் உடனடி உணவு







நம் வீட்டுப் பெண்கள் அஞ்சரைப் பெட்டியில் அனைத்து நோய் தீர்க்கும் ஆற்றல் பெற்ற வீட்டு மருத்துவர்கள். பெண்கள் மீண்டும் தன் நிலை உணர்ந்து விழிப்படைந்தால்- கேடு தரும் உடனடி உணவுகளும், மசாலாக்களும் கடைவீதியில் இருந்து மறைந்து விடும்.

குழம்புப் பொடி

மிளகாய் வற்றல் - நான்கு குவளை
து. பருப்பு - அரை குவளை
க. பருப்பு - கால் குவளை
உ. பருப்பு - அரை குவளை
மல்லி - ஒரு குவளை
மிளகு - மூன்று சிறு கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிறு கரண்டி
வெந்தயம் - நான்கு சிறு கரண்டி
உப்பு - தேவையான அளவு
சட்டியைக் காய வைத்து சிறிது எண்ணெய் விட்டு ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும்..பிறகு ஒவ்வொன்றையும் அரைத்து கலந்து கொள்ளவும். இதனை சோறு, இட்டளி, தோயை ஆகியவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.


கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை - ஒரு குவளை
உ. பருப்பு - நான்கு சிறு கரண்டி
க. பருப்பு - நான்கு சிறு கரண்டி
மிளகாய் வற்றல் - நான்கு
இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
புளி - சிறிது
தேங்காய் துருவல் - அரை குவளை
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதனை சோறு, இட்டளி, தோயை ஆகியவற்றுடன் வைத்து சாப்பிடலாம்.

வேப்பம்பூ பொடி
வேப்பம் பூ - ஒரு குவளை
மல்லி விதை - ஒரு குவளை
மிளகாய் வற்றல் - 10 அயிரை(கிராம்)
மிளகு - 10 அயிரை
காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும்..பிறகு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
பயன்- பித்தம் அமைதி பெறும். வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் தொலையும்.

பொட்டுக்கடலைப் பொடி
பொட்டுக்கடலை - ஒரு குவளை
மிளகாய் வற்றல் - 10
தேங்காய் துருவல் - அரை குவளை
புளி - சிறிது
உப்பு - நான்கு சிறு கரண்டி
பூண்டு - பத்து பற்கள்
முதலில் பொட்டுக்கடலையை இடித்து சலித்துக் கொள்ளவும். உரலில் மிளகாய் வற்றல், உப்பு, புளி இடித்து பின் தேங்காய் துருவல் சேர்த்து இடிக்கவும். பின் எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். இதை சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

எள் பொடி
வெள்ளை எளை - ஒரு குவளை
மிளகாய் வற்றல் - நான்கு
மிளகு - சிறு கரண்டி
காயம் - சிறிது
உப்பு - இரண்டு சிறு கரண்டி
இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும் பிறகு ஒன்றாக எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதனை சோற்றுடன பிசைந்து சாப்பிடலாம்.
இந்த கலவையை நீர் விட்டு மைய அரைத்தால் அது எள் துவையலாகும்.
இனிப்பு வகைகள்


கேழ்ப்பை உருண்டை
கேழ்வரகு மாவில் திட்டமாக நீர் ஊற்றி பிசைந்து அடையாக தட்டி தோயைக் கல்லில் சுட்டெடுத்து கொள்ளவும் தேவையான அளவு வறுத்த வேர்க்கடலை, வெல்லம் கலந்து இடித்து அல்லது கலக்கியில்(மிக்ஸி) அரைத்து உருண்டையாக பிடித்து எடுத்துக் கொள்ளவும்.
எள் உருண்டை
எள்ளை இலோசாக வறுத்து வெல்லம் சேர்த்து இடித்து உருண்டை பிடித்துத் தரலாம்.

பொரி அரிசி உருண்டை
அரிசியை வறுத்து பொடிக்கவும். உடைத்த கடலையை பொடி செய்து இவற்றுடன் வெல்லம் கூட்டி கலக்கவும்.சிறிது வெந்நீர் மாவில் விட்டு பிசைந்து உருண்டையாக்கித் தரவும்.

முளைவிட்ட பாசிப்பருப்பு
பாசிப்பருப்பை முன்னிரவே ஊறவைத்து மறுநாள் காலை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்து விட்டால், மாலைக்குள் நன்றாக முளைத்து விடும்.அதனை எடுத்து அப்படியே சாப்பிடலாம். பிள்ளைகளுக்கு வெல்லம் சேர்த்துத் தரலாம்.

புடலங்காய் பாற்கன்னல்(பாயாசம்)
புடலங்காயை வெட்டி உள்ளே உள்ள சடை மற்றும் விதைகளை நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்த்தும் புடலங்காய் துண்டுகளை சேர்த்து வேகவிடவும். வெந்த்தும் வெல்லம் பொடித்துச் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். விரும்பினால் இதோடு பால் சேர்க்கலாம். வறுத்த முந்திரிப்பருப்பு, சிறுமணகம்(ஏலம்) சேர்க்கவும்,



அவல் உணவு வகைகள்
அவல் சோறு
அவல் - நான்கு குவளை
பச்சை உருளங்கடலை(பச்சைப் பட்டானி) - நான்கு குவளை
உருளைக்கிழங்கு துருவல் - ஒரு குவளை
இஞ்சி - இரண்டு அங்குலம்
பச்சை மிளகாய் - ஆறு
மஞ்சள் தூள் இரண்டு சிறு கரண்டி
பெருங்காயம் இரண்டு சிறு கரண்டி
சீரகம் இரண்டு சிறு கரண்டி
மல்லி விதை தூள் இரண்டு சிறு கரண்டி
மிளகு இரண்டு சிறு கரண்டி
துண்டு செய்த மல்லிக்கீரை - ஒரு குவளை
முந்திரி பருப்பு - அரை குவளை
மஞ்சைப் பழம் - இரண்டு
நெய் -நான்கு சிறு கரண்டி உப்பு தேவைக்கேற்ப . மஞ்சள் தூள், பெருங்காயம், சீரகம், மல்லி விதை தூள், மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு இவற்றை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு துருவல், பச்சை உருளங்கடலை ஆகயவற்றோடு அரை குவளை தண்ணீரும் சேர்த்து புரட்டிப், புரட்டி கால் மணி நேரம் வேக விடவும். வெந்த்தும் அவலைக் கொட்டிக் கிளறி அடுப்பை விட்டு இறக்கி முந்திரிப் பருப்பு, துண்டு, துண்டாக வெட்டிய மல்லிக்கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
அவல் நார்ப் பொருள் நிரம்பிய நல்ல உணவு. மலச்சிக்கல் தீர்க்கும் அருமையான மருந்து. எப்பொழுதும் முளைவிட்ட கார் அவலையே பயன்படுத்துங்கள். சிற்றுண்டியாக பயன்படுத்தலாம்.
நீரிழிவு பிணியாளர்களுக்கு அரிசி சோற்றுக்கு மாற்றான உணவாக அமையும். தேவைப்பட்டால் சிறிது வெல்லம் கலந்து சாப்பிடலாம். அல்லது சிறிது உப்பு கலந்தோ, கலவாமலோ சாப்பிடலாம்.

பலவகை அவல் உணவு செய்முறைகள்

இனிப்பு அவல்
முளைவிட்ட கைகுத்தல் அவல் கையளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போடவும். பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தூள் செய்து சேர்க்கவும். அவல் மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு ஊறவைக்கவும். உண்ணும் நேரத்தில் துருவிய தேங்காய்ப்பூ தூவி பரிமாறவும்.

சிறப்பு இனிப்பு அவல்
தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து அதில் உலர் கொடிமுந்திரி, பேரீச்சம் பழத்துண்டுகள், கற்பழவிதை, முந்திரிப்பருப்பு துண்டுகள் கலந்து வைத்து உண்ணவும். சுவையோ சுவை மிக அருமையாய் இருக்கும். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.விருந்தினர்கள் பாராட்டி உண்பார்கள்.

பால் அவல்
தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து உண்ணலாம். சர்க்கரை பிணியாலர்களுக்கு மிகவும் நல்லது. ஊறின உடனே உண்ணலாம். சர்க்கரை கலவாத ஏனைய முறைகளை நீரிழிவு பிணியாளர்கள் பயன்படுத்தலாம்.

எள் அவல்
ஊறவைத்த அவலுடன் வெள்ளை எள், தேங்காய் பூத் துருவல்,சிறிதளவு வெல்லம் கலந்து உண்ணவும். இதன் மணம் நம்மைக் கவரும், கை, கால வலிகள் இருந்தால் உடனே நீங்கிவிடும்.

நெல்லி அவல்
ஊறவைத்த அவலுடன் முன் கூறியவாறு எள்ளுக்கு மாற்றாக நெல்லியைத் துருவிக் கொட்டி கலந்து உண்ணலாம்.

காய்கறி அவல்
ஊறவைத்த அவலுடன் பச்சைக் காய்கறிக் கலவை மிளகு, சீரகத்தூள் கலந்து உண்ணலாம்.

அவல் கன்னல்
தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து அதில் உலர் கொடிமுந்திரி,சிறிதாய் நறுக்கிய வாழைப் பழத் துண்டுகள்,சிறு மணகம் ஆகியவற்றை போதுமான அளவு கலந்து நன்கு ஊறிய பின் சாப்பிடவும்.

புடலங்காய் அவல்
புடலங்காயை வெட்டி உள்ளே உள்ள சடை மற்றும் விதைகளை நீக்கிவிட்டு தூய்மை செய்து அவ்விடத்தில் கார அல்லது இனிப்பு அவலைத் திணித்து அடைக்கவும், அப்படியே சாப்பிடத் தரலாம். ஆவியில் வேகவைத்தும் தரலாம். செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.

அவல் இன்னுருண்டை
வெல்லம், சர்க்கரை கலவாத முழுமையான இனிப்பு உருண்டை. எள், வேர்க்கடலை உலர் கொடிமுந்திரி, பேரீச்சம்பழம் அனைத்தையும் உரலில் இடித்து, உருண்டையாய்ப் பிடித்து வைக்கவும். குழந்தைகள் விரும்பிச் சுவைப்பார்கள். சக்கரைப் பிணி உள்ளவர்களும் இதனைச் சாப்பிடலாம்.

அவல் உப்புமா
ஊறவைத்த அவலுடன் எலுமிச்சம் பழச்சாறு அளவாய் கலந்து மிளகு, சீரகம் சேர்த்து உண்ணவும். வேகவைத்த குறுநொய் உப்புமாவை விடச் சுவையாய் இருக்கும். மாலை நேரங்களில் சிற்றுண்டியாய் செய்து சாப்பிடலாம்.

உலர் அவல் கலவை
தூய்மை செய்த அவலுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை,நாட்டுச் சக்கரை தேங்காய்ப்பூ கலந்து சாப்பிடலாம். எதேனும் கொறிக்க நினைப்பவர்க்கு இது ஏற்ற திண்பண்டம். மலச்சிக்கலுக்கு கைகண்ட மருந்து.

சுண்டல் அவல்
ஊறவைத்த அவலுடன் முளைவிட்ட பச்சைப்பயறு, வேர்கடலை அல்லது கொண்டைக்கடலை திட்டமான அளவில் கலந்து சாப்பிடச் சுவையாக இருக்கும். இடைவேளை உணவாக பயன்படுத்தலாம். ஊட்டமான உணவாக விளங்கும். காரச் சுவைக்கு மிளகு, சீரகத்தூள், இனிப்புச் சுவைக்கு வெல்லம் கலந்து கொள்ளவும்.

பழச்சாறு அவல்
பல்லணிப் பழம்(மாதுளை),கொடிமுந்திரி, சாற்றுக்கனி(சாத்துக்குடி) இவற்றில் ஏதேனும் ஒரு சாறு அவலில் ஓர் அங்குலம் மேலாக நிற்கும் அளவிற்கு தளும்ப ஊற்றி அரை மணி நேரம் ஊற விடவ்ம். சுவைக்கு தேவைப்படின் வெல்லம் சேர்க்கலாம். மற்றபடி எதுவும் கலக்காமல் உண்பது நலம்..அவலைச் சாப்பிடும்போது அதில் ததும்பி நிற்கும் சாற்றையும் ஒரு கரண்டியால் குடித்துக் கொண்டு சாப்பிட சுவை மிகும்.

மாம்பழ அவல்
மாம்பழம் கிடைக்கும் காலங்களில் ஊறவைத்த அவலுடன் மாம்பழத்தை சின்னச் சின்னதாய், செதில் செதிலாய் நறுக்கிப் போட்டு கலந்து சாப்பிடுங்கள். சுவையைப் பற்றி கூற வேண்டியதூ இல்லை.. பிள்ளைகள் விட மாட்டார்கள்.

செங்கொழுப்பை(பப்பாளி) அவல்
ஊறவைத்த அவலுடன் செங்கொழும்பைப் பழத்தை சிறு துண்டுகளாய் நறுக்கி போட்டு கலந்து உண்ணலாம். அல்லது பழத்தை நெடுக்காக பாதியாக வெட்டி அதனுள்ளிருக்கும் விதை மற்றும் வித்தினை அகற்றி அதில் ஊறின அவலைப் போட்டு ஒரு கரண்டி கொண்டு அவலையும் பழத்தையும் சுரண்டி கலந்து சாப்பிடலாம்.

கற்பழப் பருப்புப்(பாதாம் பருப்பு) பால் அவல்
கற்பழப் பருப்பை நான்கு எடுத்து சிறிது நீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறிய பின் அந்நீரை அப்புறப் படுத்திவிட்டு பருப்பை மட்டும் மைய அரைக்கவும். அதனுடன் நீர் சேர்த்தால் பாலாகிவிடும். பாலை அவலில் ஊற்றி வெல்லம் கலந்து ஊறியபின் சாப்பிட அருமையாய் இருக்கும்.

மிளகு நீர் அவல்
வீட்டில் உணவுக்காக செய்யும் மிளகு நீர் அல்லது தக்காளி நீர் தூய்மை செய்த அவலில் தளும்ப ஊற்றி ஊறவைத்து அரைமணி கழித்து சாப்பிடலாம்.
உங்கள் சிறப்பு நலம்காக்கும் கைப் பக்குவத்தை- வீட்டு மருத்துவரே உங்கள் விருந்தினருடனும், பிற வீட்டு மருத்துவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்வோம்...


நமது மரபு வழி பண்பாட்டு உணவுகள் எளிய செய்முறைகள

தேனீர், குளம்பி போன்ற குடிப்பான்கள் உடல் நலத்துக்கு கேடு. அத்துடன் வெள்ளைச் சர்க்கரை கலந்து குடிப்பது மிக கேடு தரும். பெப்சி, கோக்,7 அப் போன்றவை தரும் கேட்டினை அனைவரும் அறிவோம். 


மாறாக என்ன இருக்கிறது? ... 


கீழ் காணும் நமது குடிப்பான்கள் சுவையுடன் புத்துணர்வையும், உடல் மன நலத்தையும் அள்ளித் தரும். சுவையுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.


குளிர் குடிப்புகள்

1.வெள்ளரிக்காய் - 2
மாங்காய் இஞ்சி - சிறு துண்டு

இரண்டையும் சாறு எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை பழச்சாறு ஓரிரு சொட்டு
உப்பு வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
குளிர்ந்த பானை நீர் சேர்த்து பயன்படுத்தலாம்.

2.நன்னாரி, வெட்டிவேர்-சம அளவு போட்டு இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பனை வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

3.கற்றாழைச்சோற்றை நன்கு கழுவி மசித்து அதனுடன் தண்ணீர், பனைவெல்லம் கலந்து குடிக்கலாம்.

4.முந்தய நாள் சோற்று நீரில சிறு கரண்டி வெந்தயம் போட்டு ஊற வைத்து மறுநாள காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் வயிறு குளுமையடையும், வயிற்றுப்புண் தீரும்.

5.தேன் எலுமிச்சை சாறு ஒவ்வொன்றும் அரை சிறுகரண்டி சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க ஒற்றைத் தலைவலி தீரும்.

6. நன்னாரி, விளாமிச்சம் வேர், கருங்காலிப்பட்டை, சந்தன சிறாய் இவற்றை சம அளவு சேர்த்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பனைவெல்லம் தேன் சேர்த்து குடிக்கலாம். உடல் சூடு தாகம் தணியும்.

7. கருவாப் பூ(கிராம்பு) - 10 கிராம்
சிறு நாகப்பூ - 20 அயிரை
சிறு மணகம்(ஏலக்காய்) - 40 அயிரை
மிளகு - 80 அயிரை
திப்பிலி - 160 அயிரை
சுக்கு - 320 அயிரை
நாட்டு அமுக்குரா - 640 அயிரை
பனை சக்கரை - 1280 அயிரை
ஒரு நாளைக்கு 5 அயிரை அளவு நீரில் போட்டு காய்ச்சிக் குடிக்கவும்.
பயன்- எட்டு வகை வயிற்றுப் புண்கள், வெட்டை, விக்கல் நீங்கும்.
மஞ்சள் பிணி(காமாலை) வந்தவர்க்கு ஊட்டமும், வலுவும் அளிக்கும். இரவு உணவுக்குப்பின் குடித்தால் நல்லுறக்கம் கிடைக்கும்.

8.கருந்துளசி விதையை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் அதில் பனைவெல்லம் அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.

சூடான குடிப்புகள்

1. ஆவாரை
தழை நீர் வகைகளில் ஆவாரையும் ஒன்று. குளம்பிக் கொட்டையை கொதிக்க வைப்பதற்கு மாறாக, ஒரு கரண்டி ஆவாரம் பொடியும், ஒரு குவளை தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து தேவைக்கு ஏற்ப பாலில் பனைவெல்லம், தேன் கலந்து குடிக்கலாம். இது 4 பேருக்கு ஆகும்.
பயன்-
இதை காலை மாலை குடித்து வர சர்கரை பிணி தீரும். ஆவாரை கண்டவரை சாவு நெருங்குவது இல்லை.

2. தாமரைப்பூ
தாமரைப்பூ, செம்பரத்தை, மருதம்பட்டை, சுக்கு, மிளகு, ஏலம், தான்றிக்காய், கருவாப்பட்டை, துளசி இலை அனைத்தையும் நிழலில் உலர்த்தி காய வைத்து நன்றாக பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறு கரண்டி போட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்துப் பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
பயன்- இதயத்துக்கு இதமளிக்கும், படபடப்பு, மூச்சுத் தினறல், குருதிக் கொதிப்பு , குருதியில் மிகுந்த கொழுப்பு, இதய நோய் குணமாகும்.

3. தொண்டை புகைச்சல், இருமல் குடிப்பான்
சாற்றுப்பூடு - 100 அயிரை
திப்பிலி - 50 அயிரை
சிற்றரத்தை - 25 அயிரை
இவற்றை பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொழுது அரை சிறுகரண்டி அளவு சூடான பாலில் தண்ணீரில் போட்டு குடிக்கவும்.

4, அடுக்குத் தும்மல் குடிப்பான்
ஈயேச்சக்கீரை, துளசி இரண்டையும் சம அளவு கலந்து குடிப்பான் செய்து குடிக்கலாம்.

மூளை, குடல் தூய்மை குடிப்பான்

கொட்டைக்கரந்தை இலையைப் பறித்து நிழலில் காயவைத்து, அரைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பயன்- இதனை காலை, மாலை இரு வேளை குடித்து வர மூளைக்கும், உடலுக்கும் நல்லது.


நீரழிவுக் குடிப்பான்

நாவற்பட்டை -50 அயிரை
வெந்தயம் -50 அயிரை
பொடுகுதலை -50 அயிரை
கடுக்காய -50 அயிரை
நெல்லிக்காய் -50 அயிரை
தான்றிக்காய் -50 அயிரை
நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். கால் சிறுகரண்டி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.

வல்லாரை குடிப்பான்
வல்லாரை - 100 அயிரை
மருதம்பட்டை - 50 அயிரை
துளசி - 50 அயிரை
சாற்றுப் பூடு - 50 அயிரை
கருவாப் பட்டை(லவங்கப் பட்டை)- 50 அயிரை
தாளிச இலை - 50 அயிரை
நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். கால் சிறுகரண்டி அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.

நீர் கட்டு, வீக்கத்திற்கு குடிப்பான்
பத்து மூலம் வில்வ வேர், முன்னை வேர், பெருவாகை வேர், குமிழ் வேர், பாதிரி வேர், மூவிலை வேர், ஓரிலை வேர், கண்டங்கத்தரி வேர், நெரிஞ்சில் வேர் ,  நீர் முள்ளி, வாழைப்பூ, மூக்கிரட்டை இதனை நிழலில் உலர்த்தி காயவைத்து கருக்கு நீர் செய்து வடிகட்டி குடிக்கலாம்.

பயன்- கை, கால், உடல் நீர் கட்டு, வீக்கத்திற்கு, உடல் வலி ,இருமல், இரைப்பு, சளி போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.

உடல் நலத்துக்கான எளிய உணவுச் செய்முறைகள்











வீட்டு மருத்துவர்களுக்காகத் தொகுத்துத் தருவது.





பருப்பு, காய்கறி இட்டளி






பாசிப்பருப்பு - ஒரு குவளை
கடலை பருப்பு - ஒரு குவளை
இவற்றை இரண்டு மணி நேரம் ஊறவைத்து இட்டளி மாவாக அரைத்துக் கொள்ளவும். தேவையிருப்பின் இந்த மாவில் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
வெங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி -.சிறிது
சீரகம் - சிறுகரண்டி
உப்பு, எண்ணை - தேவைக்கேற்ப
சட்டியில் தேவையான எண்ணையை ஊற்றி காய்ந்த்தும், சீரகம், வெங்காயம் நறுக்கிய காய்கறிகள், மிளகுத் தூள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து வதக்கி, இதனை இட்டளி மாவில் கலந்து இட்டளித் தட்டில் ஊற்றி ஆவியில் வைத்து எடுத்து வெந்ததும் இத்துடன் கொத்துமல்லி துவையல் வைத்து சாப்பிடலாம்.
சர்க்கரை பிணி உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

நெப்பரிசி(சவ்வரிசி) இட்டளி
புழுங்கல் அரிசி கால் குவளை
பச்சரிசி - கால் குவளை
உ. பருப்பு - ஒரு குவளை
நெப்பரிசி - கால் குவளை
இவற்றை இரண்டு மணி நேரம் ஊறவைத்து இட்டளி மாவாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவில் சிறிது தயிர் சேர்த்து உடனடியாக இட்டளித் தட்டில் ஊற்றி ஆவியில் வைத்து வெந்ததும் எடுத்து சாப்பிடலாம்.

பருப்பு இட்டளி
உளுந்தம் பருப்பு - 200 அயிரை(கிராம்)
பாசிப்பயறு - 200 அயிரை
எடுத்து தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து, அரைத்து எடுத்துக் கொள்ளவும். கைப்பிடி அளவு கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து அரைத்த மாவுடன் சேர்த்து பிசையவும்.தேவையான அளவு உப்பும் மிளகுத்தூளும் சேர்த்து இட்டளி சுடவும்.

அடை / தோசை வகை
1. கேழ்வரகு மாவு அல்லது அரிசி மாவு அல்லது சோளமாவு அல்லது குச்சிக்கிழங்கு மாவு
2
.முடக்கறுத்தான் அல்லது தூதுவளை அல்லது முசுமுசுக்கை அல்லது வல்லாரை கீரை ஒரு கைப்பிடி
இதில் ஏதாவது மாவை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். ஏதாவது ஒரு கீரை வகையை எடுத்து நன்றாக கழுவி நன்றாக சிறு சிறு துண்டுகளாக அரிந்து மாவுடன் பிசைந்து கொள்ளவும். மிளகுத்தூள் ப.மிளகாய் சிறு சிறு துண்டாக நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து சூடாக சுட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

முடக்கறுத்தான் அல்லது தூதுவளை அல்லது முசுமுசுக்கை அல்லது வல்லாரை கீரை தோயை, அடை

இவற்றில் ஏதாவது ஒரு கீரை ஒரு கைப்பிடி தோசை மாவில் நன்கு அரைத்துக் கலந்து மிளகு சேர்த்து அந்த நேரத்துக்கு சுடுகிற மாவில் கலந்து சுட்டு சாப்பிடவும். இதற்கு தேங்காய் அல்லது வெங்காயத் துவையல் நன்றாக இருக்கும்.

பருப்பு அடை தோயை வடை
மூக்குக் கடலை - 250 அயிரை இரவே ஊறவைத்து விடவும்.
ப. மிளகாய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - .சிறிது
மூக்குக் கடலையை நன்கு கழுவி அரைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் சிறு சிறு துண்டாக நறுக்கி அதனுடன் கலந்து தேவைக்கேற்ப உப்பு கலந்து கெட்டிப் பதமாக அரைத்து அடை தட்டிக் கொள்ளவும். தோசையாக சாப்பிடுபவர்கள் சிறிது தயிர் சேர்த்து செய்து கொள்ளவும். பிள்ளைகளுக்கு கொடுப்பதானால் வடையாகவும் சுட்டுக் கொடுக்கலாம்.

வாழைப்பூ வடை
வாழைப்பூ - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு மூடி
பொட்டுக்கடலை - ஒரு குழம்புக்கரண்டி
வெங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஐந்து
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - .சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்க
அரிசி - ஒரு குழம்புக்கரண்டி
மிளகாய் வற்றல் - எட்டு
வாழைப்பூவை நரம்பெடுத்து தூய்மை படுத்திக் கொள்ளவும். சிறு சிறு துண்டுகி, தண்ணீரில் வேகவைக்கவும். உரலில் தேங்காய் துருவல்,பொட்டுக் கடலை, மிளகாய் வற்றல், ப.மிளகாய் எல்லாம் போட்டு ஆட்டவும். சின்ன வெங்காயம், ப.மிளகாய், மல்லிக்கீரை,கறிவேப்பிலை, உப்பு, அரிசி மாவு எல்லாம் கலந்து போதுமான தண்ணீர் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டிக் கொள்ளவும்.

முடக்கறுத்தான் துவையல்
முடக்கறுத்தான் ஒரு கைப்பிடி வதக்கிக் கொள்ளவும்.
காய்ந்த வற்றல் மிளகாய், மல்லி விதை சீரகம்,மிளகு, உ. பருப்பு பூண்டு ஐந்து பற்கள் இவற்றை ஒவ்வொன்றும் சிறு கரண்டி வீதம் எடுத்து பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவுடன் அதனுடன் முடக்கறுத்தான், புளி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
குறிப்பு புளிக்குப் பதிலாக புளிய இலையை பயன்படுத்தலாம்.

தூதுவேளை துவையல்
தூதுவளை            - ஒரு கைப்பிடி
வெங்காயம் - சிறிதளவு
இரண்டையும் சிறிதளவு நெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
மல்லி விதை, சீரகம் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
புளி ஒரு கொட்டை தேவைக்கேற்ப உப்பு கலந்து அரைத்துக் கொள்ளவும்
பயன்-
சளி, மண்டையில் நீரேற்றம் முதலியவற்றை குணமாக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும்.

பீர்க்கங்காய் துவையல்
பீர்க்கங்காய் தோல் - ஒரு கைப்பிடி
காய்ந்த வற்றல் மிளகாய், மல்லி விதை சீரகம்,மிளகு, உ. பருப்பு பூண்டு ஐந்து பற்கள் இவற்றை ஒவ்வொன்றும் சிறு கரண்டி வீதம் எடுத்து பொன்னிறமாக வறுத்து அதனுடன் உப்பு கலந்து அரைத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காய் துவையல்
ஆவியில் வேக வைத்த இரண்டு கத்தரிக்காய் காய்ந்த வற்றல் மிளகாய், சீரகம்,மிளகு, உ. பருப்பு பூண்டு ஐந்து பற்கள் இவற்றை ஒவ்வொன்றும் சிறு கரண்டி வீதம்  எடுத்து பொன்னிறமாக வறுத்துசிறிது புளி கூட்டி அரைத்துக் கொள்ளவும்.

வெண்டைக்காய்த் துவையல்
வெண்டைக்காய் நான்கு - நன்கு எண்ணையில் பொரித்துக் கொள்ளவும்.
காய்ந்த வற்றல் மிளகாய், சீரகம் ,மிளகு, உ. பருப்பு பூண்டு ஐந்து பற்கள் இவற்றை ஒவ்வொன்றும் சிறு கரண்டி வீதம் எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது புளி கூட்டி அரைத்துக் கொள்ளவும்.

கொத்துமல்லி துவையல்
கொத்துமல்லி, புளி, தேங்காய் வில்லை, வரள்மிளகாய் உ. பருப்பு இவற்றை வறுத்து அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
பயன்-
பித்தம் நீங்கும் உடல் சூடு தணியும்,கல்லீரலுக்கு வலு சேர்க்கும்.

ஈயெச்சக்கீரை(புதினா) துவையல்
ஈயெச்சக் கீரை - ஒரு கட்டு நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்துமல்லி, - ஒரு கட்டு
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - ஐந்து பற்கள்
வற்றல் மிளகாய் - தேவையான அளவு
தேங்காய் வில்லை - இரண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - சிறிதளவு
உளுந்தம் பருப்பு - சிறு கரண்டி
எல்லாவற்றையும் நன்கு அரைத்த பின், வறுக்கும் சட்டியில் சிறு கரண்டி எண்ணை வார்த்து காய்ந்த வற்றல் மிளகாய், கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளித்து, கீரை கலவையை போட்டு கிளறி நீர் சுண்டியதும் இறக்கிக் கொள்க.

கொள் துவையல்
கொள் பெரிய கரண்டி அளவு எடுத்து வறுத்துக் கொள்ளவும்.
புளி-நெல்லிக்காய் அளவு
காய்ந்த வற்றல் மிளகாய்,
சீரகம்,
மிளகு,
உ. பருப்பு
பூண்டு ஐந்து பற்கள்
இவற்றை ஒவ்வொன்றும் சிறு கரண்டி வீதம் எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது புளி கூட்டி அரைத்துக் கொள்ளவும்.எல்லாவற்றையும் நன்கு அரைத்த பின், வறுக்கும்சட்டியில் சிறு கரண்டி எண்ணை வார்த்து காய்ந்த வற்றல் மிளகாய், கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, சீரகம், தாளித்து சேர்த்து கொள்ளவும்.

பூக்கள் கூட்டு
தாமரைப்பூ - சிறிது
முளரி - சிறிது
ஆவாரம்பூ - சிறிது
காய்ந்த வற்றல் மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல்
உப்பு
நல்லெண்ணெய்.
வறுக்கும் சட்டியில் சிறு கரண்டி எண்ணெய் ஊற்றி மைய அரைத்த விழுதை அதில் போட்டு வதக்கி சிறிய அளவு நீர் சேர்த்து அதனுடன், தாமரைப்பூ, முளரி(ரோஜா), ஆவாரம்பூ பூக்களையும் சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுத்து சாப்பிடலாம்.

ஆவாரம்பூ கூட்டு
கடலை பருப்பு கால் குவளை
இஞ்சி - சிறிதளவு
வெங்காயம் - சிறிதளவு
கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை சிறு துண்டாக நறுக்கியது.
பூண்டு ஐந்து பற்கள் அரைத்த விழுது
காய்ந்த வற்றல் மிளகாய், சீரகம்,மிளகு மல்லி விதை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
உப்பு, நல்லெண்ணெய் தேவையான அளவு
ஆவாரம்பூ 100 அயிரை தூய்மை செய்த்து.
சட்டியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து, கடலை பருப்பு சேர்த்து நன்றாக மைய வேக வைக்கவும்.. அத்துடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, வறுத்து பொடி செய்து வைத்துள்ளதையும் சேர்த்து கிளறி அத்துடன் ஆவாரம்பூ சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ளவும்.

கரிசலாங்கண்ணி கூட்டு
கரிசலாங்கண்ணி கீரை - ஒரு கைப் பிடி
சிறு பருப்பு - 50 அயிரை
பூண்டு - பத்து பற்கள்
சிறிது கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு,துவரம் பருப்பு காய்ந்த வற்றல் மிளகாய் இவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். சிறு பருப்பை நன்கு மைய வேக வைத்த பிறகு பொடித்து வைத்த்தை அதில் கலந்து நன்றாக எல்லாம் சேர்ந்து கொதி வந்த்தும் தேங்காய் துருவல், உப்பு சேர்ந்து இறக்கிக் கொள்ளவும். பின் சட்டியில் எண்ணெய் ஊற்றி கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, சீரகம் சேர்ந்து, தாளித்து சேர்த்து கொள்ளவும்.

வல்லாரைக் கீரை பொரியல்
சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, , உளுந்தம் பருப்பு, காய்ந்த வற்றல் மிளகாய், வெங்காயம், வல்லாரைக் கீரை சேர்த்து கிளறவும். சிறிதாக தண்ணீர் தெளிக்கவும் வெந்த்தும் மஞ்சள் தூள, மிளகு தூள தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து மசித்து அதனுடன் தேங்காய் துருவலையும் போட்டு கிளறி இறக்கிக் கொள்ளவும்.

செம்பரத்தைப்பூ பச்சடி
செம்பரத்தைப்பூ - 2
இன்முள்ளங்கி(கேரட்) - 2
முள்ளங்கி - 1
தக்காளி - 1
வெங்காயம் - சிறிதளவு
முட்டைக்கீரை, - சிறிதளவு
செங்கிழங்கு(பீட்ரூட்) - சிறிதளவு
வெள்ளரிக்காய் - 1
அனைத்தையும் பொடியாக நறுக்கி தயிர் சேர்த்து, மிளகுத்தூள், எலுமிச்சம் பழச்சாறு சில சொட்டுக்கள், தேவையான அளவு உப்பு கலந்து உட்கொள்ளவும்.

கண்டந்திப்பிலி மிளகுச் சாரம்
கண்டந்திப்பிலி சதகுப்பை ,மல்லி விதை ,மிளகு சீரகம் ஒரு சிறுகரண்டி அளவு எடுத்து, வறுத்து பொடி செய்து அத்துடன் பத்து பெரிய பூண்டு பற்கள் சேர்த்து அரைக்கவும். பிறகு இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, கொத்துமல்லி அரைத்த விழுது,புளி நீர், தக்காளி பெரியது இரண்டு அனைத்தும் சேர்த்து கொதி வந்த்தும் பருப்பு நீர் சேர்த்து ஒரு கொதி வந்த்தும் இறக்கவம்.
பயன்
அசதி, உழைத்த களைப்பு தீரும்.

முடக்கறுத்தான் சாரம்
சதகுப்பை ,மல்லி விதை ,மிளகு சீரகம், திப்பிலி இவற்றை வறுத்து கொள்ளவும்.. பத்து பெரிய பூண்டு பற்களையும், முடக்கறுத்தானையும் வதக்கி எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சீரகம் வெடித்த்தும், கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, புளி கரைத்த நீர், அனைத்தும் சேர்த்து ஒரு கொதி வந்த்தும் இறக்கவும்.
பயன்- உடல் வலி, மூட்டு வலி, தசைப் பிடிப்பு, வளி சிக்களுக்கு நல்லது.

வெந்தய சாரம்
அரிசி கழுவிய நீர் சட்டியில் எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், வெங்காயம், கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். எலுமிச்சை அளவு புளி ஊற வைத்து வடிகட்டிய நீர், மிளகாய்த் தூள், வெந்தயப் பொடி ஒரு தேக்கரண்டி போட்டு இறக்கவும்.



மேலும் தொகுத்துச் சோதித்துத் தருகிறேன். உங்கள் முறைகளையும் பகிர்ந்து கொள்க.தொடர்க...

ஆயுதம் செய்வோம் - உலக மாந்தர் நலம் நாடி...

சித்தர்களாகிய நம் முன்னேர்களால் பண்பட்ட தமிழ் குமுகம்- தம் உயிரையும் உடலையும் காக்க வல்ல,  உணவு, உடை, இருப்பிடம், பழக்க வழக்கங்கள், உணவு என எல்லாத் தேவைகளையும் முறைப்படுத்தி வைத்திருந்து.


கால மாற்றத்தால், பழுத்த மரம் தான் கல்லடிபடும் எனும் உண்மைக் ஏற்ப, நம் தமிழ் குமுகம் தம் நிலையிலிருந்து இழிந்த காலம் இது. காரணம் மனித நேயமில்லா பண்படாத மனிதர்களின் இழிந்த அறிவை-அறிவியலை புரிந்து கொள்ளாது தான்.


உலக மாந்தர் அனைவரும் நலம் பெற படைப்பாற்றல் விரும்புவதால், மனித அறிவின் கேடான் போக்கை நவீன அறிவியல் மூலம் நிறுவிக் காட்டி மாந்த குமுகத்தை நல்வழிப் படுத்தவே- படைப்பாற்றல் மனிதனுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளது.


உலக மாந்தர்கள் நலம் பெற, நமது மரபுவழி வாழ்க்கை முறைகளும் நுட்பங்களும் நன்மையை நாடுவோர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
உலகில் உள்ள- தமிழினம் போல் பண்பட்ட-பாதிக்கப்பட்ட சமூகங்கள் தம் இழப்புகளையும், துன்பங்களையும் இறைவிருப்பமாக- நன்மையாக கருதித் தாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.


மனித குல எதிரிகளின் ஆயுதங்களை நாம் பயன் படுத்த இயலாது. பயன்படுத்தினால் நமக்கு நன்மை தராது. நமக்கான ஆயுதம் விழிப்புனர்வுடன் கூடிய அன்பு மட்டுமே. இந்த விழிப்புணர்வெனும் ஆயுத்தை எதிரிகள் பயன் படுத்தினால் நமக்கும் நன்மையே.


'இன்னாசெய் தாரை ஒறுத்தல அவர்நாண 
நன்னயம் செய்து விடல்' 


எனும் சித்தர் வாக்குக் கேற்ப,


 நமது படிப்பினைகள் போதும். நமது நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் முன்னோர்கள் தொகுத்துத் தந்துள்ளனர் அவற்றைத் தம் நலம் நாடும் உலக மாந்தருடன் சேர்ந்து, பகிர்ந்து கொள்வோம்.